Friday, September 28, 2012

காரமான மிளகிற்கு வேம் உரம்

காரமான மிளகினை உற்பத்தி செய்ய பல வகையான ஊட்டச்சத்துக்களை நிலைநிறுத்தும் ஊட்டச்சத்துக்களை மண்ணிலிருந்து தாவரங்களின் வேர்கள் எளிதாக எடுத்துக்கொள்ளும் நிலைக்கு, மாறறக்கூடிய நுண்ணுயிர் உரமான வேம் வேர் உட்பூசணம் கண்டுபிடிக்கப்பட்டு மேலும் அவற்றின் செயல் திறன், பயிரின் வளர்ச்சி, இனப்பெருக்கத்தின் மூலம் அறியப்பட்டுள்ளது.
மிளகு - படம் (c) http://mooligaivazam-kuppusamy.blogspot.in/2009/06/blog-post_30.html
மிளகு (c) http://mooligaivazam-kuppusamy.blogspot.in/2009/06/blog-post_30.html
எனவே மிளகுப்பயிரின் வளர்ச்சி, விளைச்சலை அதிகரிக்க மண்ணில் உள்ள மணி, சாம்பல் சத்தைக் கரைத்து பயிர்களுக்கு வழங்கு கின்ற வேர் உட் பூசணத்தை மிளகுக் கொடி நடும்போது ஒரு கொடிக்கு 10 கிராம் இட்டும், காய்க்கின்ற தருணத்தில் ஒரு கொடிக்கு 100 கிராம் வீதம் வேரின் அடிப் பகுதியில் வட்டவடிவ குழி எடுத்து இடுவதன்மூலம் தரமான, காரமான மிளகு விதையினை அறுவடை செய்யலாம்.
வேர் உட்பூசணம் தன்னுடைய நூலிழை போன்ற அமைப்பின் மூலம் பரவி மணிச்ததினை கிரகித்து பயிர்களுக்கு அளிக்கின்றது. வேர்கள் நன்கு வளர்வதால் பயிர்களின் நீர் உறிஞ்சும் திறனை அதிகரிக்கச் செய்கிறது. செடிகளுக்கு வறட்சியை ஓரளவிற்கு தாங்கும் சக்தியைக் கொடுக்கிறது. எளிதான முறையில் செம்பு, துத்தநாக நுண்ணூட்டச் சத்துக்களை செடிகளுக்கு அளிக்கிறது. வேர் உட் பூசணம் இடுவதன்மூலம் 20-25 சதவீத மணிச்சத்து இடுவதைக் குறைக்கலாம். வேர் உட்பூசணம் பயிர் வேர்ப்பகுதியில் வாழ்வதால் நோயை உண்டாக்கும் நுண்ணுயிர்கள் தாக்குதலிலிருந்து பயிரைக் காக்கிறது. மண்ணின் வளமும் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது.


தினமலர் செய்தி -டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

No comments: