Friday, March 29, 2013

நெய் சேர்ப்பதன் பயன்கள்

நெய் சேர்ப்பதன் பயன்கள்

நெய் சேர்ப்பதன் பயன்கள்
தினமும் உணவில் நெய் சேர்ப்பதால் ஏற்படும் பலன்கள். உடல் ஆரோக்கியம் பெற ஏழு விளக்கங்கள் கீழே.
• தினமும் நெய் சேர்ப்பது உடல் நலம் மற்றும் மன நலனுக்கு உகந்தது, இதனால் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
• உடலில் உள்ள கெட்டச் சத்துக்களை வெளியேற்றவும், கண் பார்வையை அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் நெய் உதவுகிறது.
• வெண்ணெய்யை விட உருக்கப்பட்ட சுத்தமான நெய்யில் கொழுப்பு குறைவாக உள்ளதால், வேகமாக செரிக்கும்.
• நெய்யை பிரிட்ஜில் வைக்க வேண்டியதில்லை, அதை கைபடாமல் வெளியில் வைத்திருந்தாலே நீண்ட காலத்துக்கு கெடாது, அதனால் நெய்யில் மாற்றம் ஏற்படாது.
• நெய் சாப்பிடுவது மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும், செரிமானத்தை ஊக்குவிப்பதால் நாம் எடுத்து கொள்ளும் உணவில் எடை குறையாமல் சமநிலையில் வைக்க உதவும்.
• விட்டமின் ஏ, டி, இ, கே ஆகியவை நெய்யில் உள்ளதால் உடலில் ரத்தத்ததை சுத்தப்படுத்தி ரத்த சுழற்சியை மேம்படுத்தும்,
•  உடல் செயல்பாட்டுக்கு சில கொழுப்பு சத்துகள் தேவை, அதை நெய் சாப்பிடுவதால் பெறலாம். தினம் நாம் உணவில் நெய் சேர்த்து உடல் ஆரோக்கியம் பெறலாம்.

"பேரீச்சம்பழம்"

"பேரீச்சம்பழம்"

மருத்துவக் குணங்கள்:

இயற்கையின் கொடையான பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.

இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இது ஆப்பிரிக்கா, அரபு நாடுகளில் மட்டுமே அதிகம் விளைகின்றது.

வெப்பம் அதிகமுள்ள பாலைவனப் பகுதிகள் இதன் வளர்ச்சிக்கு ஏற்றதாகும். இதற்கேற்ற தட்ப வெப்ப நிலை நம் நாட்டில் இல்லாததால் இங்கு விளைவதில்லை.
இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும்.
அரபு மக்களின் உணவுப் பொருட்களில் இதுவே முக்கிய இடம் பெறுகின்றது.

ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது.

சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம். இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.

பொதுவாக உலகிலுள்ள குழந்தைகளில் 42 சதவீதம் பேர் கண் பார்வை கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

குழந்தைகளுக்கு பேரீச்சம் பழத்தை தேனுடன் ஊறவைத்து காலை மாலை என இருவேளையும் கொடுத்து வந்தால் குழந்தையின் உடல் தேறி, வலுவுடனும், புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாகவும் காணப்படுவார்கள்.

பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.

சளி இருமலுக்கு பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும்.

நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.

பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்.
எலும்புகளை பலப்படுத்தும்.

இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.

முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும்.

புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும்.

பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் வரவே வராது.
இவ்வாறு சத்துக்கள் நிறைந்த பேரீச்சம் பழத்தை தினமும் உண்டு வந்தால் தீராத நோய்களும் நம்மை விட்டு நீங்கிச் சென்று விடும்.

Wednesday, March 27, 2013

மிளகாய் – உயர் விளைச்சல் வேண்டுமா?

மிளகாய் – உயர் விளைச்சல் வேண்டுமா?

மிளகாய்ச் சாகுபடியில் உயர் விளைச்சல் பெற சரியான ரகங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
  • கோ-1,
  • கோ-2,
  • கே-1,
  • கே-2,
  • எம்.டி.யு.-1,
  • பி.கே.எம்.-1,
  • பாலூர்-1
ஆகிய ரகங்களைத் தேர்வு செய்யலாம்.
Bird Chillis

விதை நேர்த்தி

ஒரு கிலோ விதைக்கு திரம் அல்லது காப்டான் 2 கிராம் என்ற அளவில் விதைகளுடன் கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து பின்னர் விதைக்க வேண்டும். மேலும், அசோஸ்பைரில்லம் 400 கிராம் கலந்து விதை நேர்த்தி செய்வதால் தழைச்சத்தின் தேவையை 25 சதம் வரை குறைக்கலாம்.
குழித்தட்டு முறையில் நாற்றங்கால் மூலம் நல்ல தரமான நாற்றுகளைப் பெறலாம். நோய், பூச்சி தாக்குதல் இல்லாத நாற்றுகளைப் பெறுவதற்கும் சிறந்த வழியாக இருக்கும். அடியுரமாக தொழு உரம் 25 டன், யூரியா 30 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 60 கிலோ, மூரியேட் ஆப் பொட்டாஷ் 20 கிலோ இட வேண்டும். மேல் உரமாக 30 கிலோ யூரியாவை முறையே 30, 60, 90ஆவது நாள்களில் இட வேண்டும்.
green Chilli

பயிர் ஊக்கிகள்

பூக்கள், பிஞ்சுகள் உதிர்வதைத் தடுக்கவும், பூக்கள் விடுவதைத் தூண்டவும், நட்ட 60 அல்லது விதைத்த 100-ஆவது நாளில் ஒரு முறையும், மேலும் 30 நாள்களுக்குப் பிறகு ஒரு முறையும் ஒரு லிட்டர் தண்ணீரில் டிரையகான்டினால் (1.25 மி.லி.) கலந்து தெளிக்க வேண்டும். சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த நட்ட 15ஆம் நாள் முதல் ஒரு லிட்டர் தண்ணீரில் மீத்தைல் டெமான் (2 மி.லி.) கலந்து 15 நாள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீரில் நனையும் கந்தகம் 2 கிராம் கலந்து தெளிக்க வேண்டும்.
காய் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த டைத்தேன் எம் 45 என்ற மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 2 கிராம் அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
இதன் மூலம் மிளகாயில் உயர் விளைச்சலும், கூடுதல் லாபமும் பெறலாம்.

அத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள்…

அத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள்…

அத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள்...
அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்கும். 1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.
உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.
2 மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.
3. நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
4. போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும்.
அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம்.
5.தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சிகரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது. அத்தி பழத்தில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால் ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருக்கிறது.
மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.. இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவிலும் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன.
இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். 

Wednesday, March 20, 2013

ஆண்டுக்கு 16 லட்சம்... பட்டியில ஆடு... பெட்டியில பணம்


ஆண்டுக்கு 16 லட்சம்... பட்டியில ஆடு... பெட்டியில பணம்

கவலையில்லாத வருமானம் தரும் கலப்பினம்!
காசி.வேம்பையன்
ஆண்டுக்கு 16 லட்சம்... பட்டியில ஆடு... பெட்டியில பணம்

கவலையில்லாத வருமானம் தரும் கலப்பினம்!
காசி.வேம்பையன்

கால்நடை

பளிச்... பளிச்...

ஒரு வருடத்தில் 45 கிலோ எடை.
வருடத்துக்கு 450 குட்டிகள்.

சிறு மற்றும் குறு விவசாயிகளாக இருந்தாலும் சரி... பெரு விவசாயிகளாக இருந்தாலும் சரி... அவர்களுக்கு ஆபத்து நேரங்களில் கை கொடுப்பது கால்நடை வளர்ப்புதான். அதிலும் குறைந்த முதலீடு, குறைந்த பராமரிப்பில் அதிக லாபம் ஈட்டிக் கொடுப்பது ஆடு வளர்ப்புதான். தற்போது விவசாய நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள் எல்லாம் சுருங்கிக் கொண்டே வரும் சூழ்நிலையில், 'கொட்டில் முறை ஆடு வளர்ப்பு’ விவசாயிகளிடையே பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தலைச்சேரி மற்றும் போயர் ஆடுகளைக் கலப்பினம் செய்து, கொட்டில் முறையில் வளர்த்து வருகிறார், விழுப்புரம் மாவட்டம், திருநந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன்.

பிஸியோதெரபியிலிருந்து ஆடு வளர்ப்புக்கு!

''எங்கப்பா, பால் பண்ணை வெச்சுருந்தார். அதனால, எனக்கு சின்ன வயசுல இருந்தே கால்நடை வளர்ப்புல ஈடுபாடு அதிகம். ஆனா, சூழ்நிலையால பிசியோதெரபி படிச்சுட்டு வேலைக்குச் சேர்ந்தேன். அதுல கிடைச்ச வருமானம்... திருப்தியா இல்லை. அதனால, தொழிலை மாத்தலாம்னு யோசிப்பதான், 'ஆடு வளக்கலாம்'னு தோணுச்சு. உடனே அது சம்பந்தமான விஷயங்களைத் தேடி அலைய ஆரம்பிச்சேன். அப்போதான் கொட்டில் முறை பத்தியும், கலப்பினங்களைப் பத்தியும் தெரிஞ்சுக்கிட்டேன். உடனே ஆடு வளர்ப்புல இறங்கிட்டேன்' என்று உற்சாகமாக ஆரம்பித்த வெங்கடேசன், தொடர்ந்தார்.

அதிக எடைக்கு போயர் ஆடுகள்!

'போயர் ரக ஆடுதான் சீக்கிரமாவே அதிக எடைக்கு வந்துடும்னு சொன்னாங்க. அதனால மகாராஷ்டிரா மாநிலத்துல இருந்து ஒரிஜினல் போயர் ரகத்துல 18 பெட்டைகளையும், 2 கிடா ஆடுகளையும் வாங்கிட்டு வந்தேன். அதோட தலைச்சேரி, சிரோஹி, கன்னியாடு, கொடியாடு ரக பெட்டைகளையும் வாங்கினேன். ஒவ்வொரு இனத்தோடயும் போயர் கிடாக்களைக் கலப்பு செஞ்சு பாத்ததுல, தலைச்சேரி இனத்தோட கலப்பு செஞ்சு பிறந்த குட்டிக மத்ததுகளவிட சாதுவாவும் ஆரோக்கியமாவும் இருந்துச்சு. அதோட ஒரே ஈத்துல மூணு குட்டிக வரைக்கும் பிறந்துச்சு. அதனால மத்த இனங்களையெல்லாம் ஒதுக்கிட்டு, 100 தலைச்சேரி பெட்டைகளை மட்டும் வாங்கினேன். இப்போ போயர் கிடா, தலைச்சேரி பெட்டைகளை மட்டும் கலந்து கலப்பினக் குட்டிகளை பெருக்கிட்டிருக்கேன். தனியா, சுத்தமான போயர் ரகத்தையும் பெருக்கிட்டிருக்கேன்.

அறிவியல் முறையில் ஆடு வளர்ப்பு!

எங்கிட்ட இருக்குற எல்லா ஆடுகளையும் பத்தி கம்ப்யூட்டர்ல பதிவு பண்ணி வெச்சுடுவேன். ஆட்டோட வயசு, எத்தனை முறை குட்டி போட்டிருக்கு, எத்தனை குட்டிக, எப்போ கிடாவோட சேர்த்தோம், என்னென்ன வைத்தியம் பார்த்திருக்கோம்னு அத்தனைத் தகவலும் பட்டணைத் தட்டுனவுடனே கிடைச்சுடும். அதனால ஒழுங்கா குட்டி ஈனாத, அடிக்கடி நோய் தாக்குற ஆடுகளையெல்லாம் கழிச்சு, நஷ்டத்தைக் குறைச்சுட முடியுது. வருமானமும் கூடுது.



பராமரிப்பு எளிது!

இப்போ என்கிட்ட போயர் இனத்துல 12 கிடா, 24 பெட்டை; தலைச்சேரி இனத்துல 106 பெட்டை; கலப்பினத்துல 94 ஆடுகள்னு மொத்தம் 236 ஆடு இருக்கு. இதுபோக மொத்தமா 40 குட்டிகளும் இருக்கு. இந்த ஆடுகளுக்காக 5 ஏக்கர் நிலத்துல கோ-4, கோ-3, கோ.எஸ்.எஃப்-29, சவுண்டல் (சூபாபுல்), கல்யாணமுருங்கை, கிளரிசீடியானு பசுந்தீவனங்களையும் வளர்த்துக்கிட்டிருக்கேன். கொட்டில் முறைங்கறதால பெரிசா பராமரிப்பு வேலைகள் கிடையாது. ரெண்டு பேர்தான் மொத்தப் பண்ணையையும் பராமரிச்சுட்டிருக்காங்க' என்ற வெங்கடேசன் வளர்ப்பு முறைகளைப் பற்றி பாடமே நடத்த ஆரம்பித்துவிட்டார் இப்படி-

தீவனம்தான் முதலில்!

''ஆடு வளர்ப்பில் இறங்கலாம் என்று தீர்மானித்த உடனேயே, முதலில் பசுந்தீவனங்களை வளர்க்க ஆரம்பித்துவிட வேண்டும். ஓரளவுக்கு தீவனங்கள் தயாரான பிறகு, நாம் வளர்க்கப் போகும் ஆடுகளின் எண்ணிக்கை, நம்மிடமுள்ள இட வசதி, பொருளாதார வசதி ஆகியவற்றுக்கேற்ப ஆடுகளுக்கான கொட்டிலை அமைத்துக் கொள்ளலாம். ஒரு ஆட்டுக்கு, சராசரியாக 20 சதுர அடி இடம் இருக்க வேண்டும். பொதுவாகக் கொட்டிலின் அகலம் 25 அடி அளவில் வைத்துக் கொள்வது நல்லது. நீளத்தைத் தேவையான அளவுக்கு அமைத்துக் கொள்ளலாம். தரையில் இருந்து நான்கு அடி உயரத்தில் கிழக்கு-மேற்காக நீளவாக்கில் கொட்டிலை அமைக்க வேண்டும். ஆடுகளின் கால்கள் சிக்கிக் கொள்ளாத அளவுக்கு இடைவெளி கொடுத்து, மர ரீப்பர்கள் மூலம் கொட்டிலின் அடிப்பகுதியை அமைத்துக் கொள்ள வேண்டும்.

வேறு வேறு இடங்களில் வாங்க வேண்டும்!



தாய் மற்றும் 20 நாட்கள் குட்டி; 20 நாட்கள் முதல் 3 மாத வயது; 3 மாதம் முதல் 6 மாத வயது; 6 மாத வயதுக்கு மேல் உள்ள ஆடுகள்; இளம் சினையாடுகள்; முற்றிய சினையாடுகள்; கிடாக்கள் என ஆடுகளை ஏழு வகைப்படுத்தி தனித்தனியாகப் பிரித்து அடைப்பது முக்கியம். அதனால், இந்த ஏழு வகைக்கும் தேவைப்படும் வசதிகளை சரிவர செய்து கொள்ள வேண்டும். பிறகு, ஆடுகளை வாங்கி வந்து வளர்க்க ஆரம்பிக்கலாம்.

போயர் கிடாக்களை ஒரு பண்ணையிலும், தலைச்சேரி பெட்டைகளை வேறு பண்ணையிலும் வாங்க வேண்டும். முடிந்தளவுக்கு வெவ்வேறு பண்ணைகளில் ஆடுகளை வாங்கி வருவது நல்லது. அப்போதுதான் மரபணு குறைபாடுகள் இல்லாத குட்டிகளை உருவாக்க முடியும்.

பொலி கிடாவுக்கு 2 வயது இருக்க வேண்டும்!

ஆறு மாத வயதுக்கு மேல் பெட்டைகள் பருவத்துக்கு வரும். இடைவிடாமல் கத்திக் கொண்டும் வாலை ஆட்டிகொண்டே இருப்பதை வைத்தும் பருவத்துக்கு வந்ததைத் தெரிந்து கொள்ளலாம். அந்த நேரத்தில் இனப்பெருக்க உறுப்பில் வழவழப்பான திரவமும் வெளிப்படும். பருவ அறிகுறி தெரிந்த 12 மணி நேரத்தில் கிடாவைச் சேர்த்துவிட வேண்டும். பொலி கிடாவுக்கு இரண்டு வயது இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இரண்டு வருடத்துக்கு ஒரு முறை கிடாக்களை மாற்றிவிட வேண்டும். பருவத்துக்கு வரத் தாமதமாகும் பட்சத்தில், கிடாக்களை அருகில் கட்டி வைத்தால், பெட்டை ஆடுகள் விரைவில் பருவத்துக்கு வந்துவிடும்.

குட்டி ஈன்ற ஆடுகளையும் இதுபோல அடுத்த மூன்று மாதங்களிலேயே பருவத்துக்கு வர வைத்து விடலாம். ஆடுகளின் சினைக் காலம் 8 மாதங்கள். ஓர் ஆடு, இரண்டு ஆண்டுகளில் மூன்று முறை குட்டி ஈனும். போயர் கிடாவுக்கும் தலைச்சேரி பெட்டைக்கும் பிறக்கும் கலப்பினக் குட்டிகள், ஆரம்பத்தில் இரண்டரை கிலோ முதல் மூன்றரை கிலோ வரை எடை இருக்கும். 3 மாதங்களில் 10 கிலோ முதல் 12 கிலோ வரை வந்துவிடும். 6 மாதங்களில் 25 கிலோ வரையும் ஒரு வருடத்தில் 45 கிலோ வரையும் எடை வந்து விடும்.

20 நாட்கள் வரை மட்டும்தான் தாயுடன்!

குட்டிகள் பிறந்து 20 நாட்கள் வரை தாயுடனே இருக்க விடலாம். அதற்கு மேல் குட்டிகளைத் தனியாகப் பிரித்து தீவனங்களைச் சாப்பிடப் பழக்க வேண்டும். பால் குடிக்கும் நேரத்துக்கு மட்டும் தாயுடன் சேர்க்க வேண்டும். மூன்று மாத வயது வந்தவுடன் பெட்டைகளையும் கிடாக்களையும் தனித்தனியாகப் பிரித்து வளர்க்க வேண்டும். அதேபோல வயது வாரியாகவும், இளம் சினையாடுகள், முற்றிய சினையாடுகள், குட்டி ஈன்ற ஆடுகள் எனவும் தனித்தனியாகப் பிரித்து வைக்க வேண்டும்.

வயதுக்கேற்ப தீவனம்!

வேலிமசால், முயல்மசால், கிளரிசீடியா, சவுண்டல் போன்ற இலை வகைத் தீவனங்களில் 60 சதவிகிதமும், கோ-4, கோ-3, கோ.எஃப்.எஸ்-29 போன்ற புல் வகை தீவனங்களில் 40 சதவிகிதமும் இருக்குமாறு கலந்து நறுக்கி ஆடுகளுக்கு பசுந்தீவனமாகக் கொடுக்க வேண்டும். 20 நாள் வயதான குட்டிக்கு, ஒரு நாளைக்கு அரை கிலோ அளவில் பசுந்தீவனம் கொடுக்க வேண்டும். 3 மாத வயதுடைய குட்டிகளுக்கு ஒரு நாளைக்கு 3 கிலோ வரை பசுந்தீவனமும், 100 கிராம் அடர் தீவனமும் கொடுக்க வேண்டும்.

3 மாதத்துக்கு மேல் வயதுள்ள குட்டிகளுக்கு ஒரு நாளைக்கு 5 கிலோ பசுந்தீவனமும் அரை கிலோ அடர் தீவனமும் கொடுக்க வேண்டும். நன்கு வளர்ந்த ஆடுகளுக்கு

5 கிலோ பசுந்தீவனம் மற்றும் அரை கிலோ அடர் தீவனத்தோடு... தினமும் ஒரு கிலோ அளவுக்கு கடலைக்கொடி, சோளத்தட்டை போன்ற உலர் தீவனத்தையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும். குட்டிகளுக்குப் பால் கொடுக்கும் ஆடுகள் மற்றும் பொலி கிடாக்களுக்கு அடர் தீவன அளவைக் கூட்டிக்கொள்ள வேண்டும்.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம்!

வெக்கை மற்றும் துள்ளுமாரி ஆகிய நோய்கள் வராமல் தடுக்க, ஆண்டுக்கு ஒரு முறையும், கோமாரி மற்றும் ஜன்னி ஆகிய நோய்கள் வராமல் தடுக்க ஆண்டுக்கு இரண்டு முறையும் தடுப்பூசி போட வேண்டும். மூன்று மாத வயது வரை குட்டிகளுக்கு 20 நாட்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும். அதன் பிறகு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்''

வளர்ப்பு முறைகளைப் பற்றிச் சொன்ன வெங்கடேசன், நிறைவாக வருமானம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

''இதுவரைக்கும் கொட்டில், தாய் ஆடுகள்னு மொத்தம் 25 லட்ச ரூபாய் முதல் போட்டிருக்கேன். நல்ல முறையில பண்ணையைப் பராமரிச்சா... இந்தப் பணத்தை ரெண்டு வருஷத்துல எடுத்துட முடியும். ஒரு ஈத்துக்கு ரெண்டுல இருந்து மூணு குட்டிங்க வரைக்கும் கிடைக்கும். எப்படியும் ரெண்டு குட்டிக்குக் குறையாது. எங்கிட்ட இருக்குற தலைச்சேரி, கலப்பினம், போயர் எல்லாம் சேர்த்து 150 தாய் ஆடுகள் மூலமா... ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை, சராசரியா 900 குட்டிங்க கிடைக்குது. வருஷத்துக்கு சராசரியா 450 குட்டிங்கனு வெச்சுக்கலாம்.

குட்டிகள ஆறு மாசம் வரைக்கும் வளர்த்து, உயிர் எடைக்கு கிலோ 250 ரூபாய்னு விக்கிறேன். ஆறு மாசத்துல ஒரு ஆடு 25 கிலோ வரை எடை வந்துடும். போயர் கலப்பைப் பொருத்து கூடுதல் விலைக்கு வித்துடுவேன். சராசரியா ஒரு ஆட்டுக்கு 5,000 ரூபாய்னு வெச்சிக்கிட்டாலே வருஷத்துக்கு 22 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சுடுது.

பராமரிப்பு, அடர் தீவனம், சம்பளம்னு எல்லா செலவும் போக வருஷத்துக்கு 16 லட்ச ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்குது. ரெண்டு வருஷத்துல முதலீடு கைக்கு வர்றதோட... லாபமும் வர ஆரம்பிச்சுடும்.

சுத்தமான போயர் ஆடுகளுக்கு அதிக விலை கிடைக்கும். அதைக் கணக்குல சேர்க்கல. ஆடு வளர்ப்புல இறங்கினா... முதலீட்டுக்கேத்த அளவுக்குக் கண்டிப்பா வருமானத்தைப் பாத்துட முடியும்'' என்றார் உற்சாகமாக.


--------------------------------------------------------------------------------

அடர் தீவனம் !



கடலைப் பிண்ணாக்கு- 17 கிலோ, தவிடு- 30 கிலோ, கம்பு அல்லது சோளம் போன்ற மாவுச்சத்து மிக்க தானியங்கள் எதுவாக இருந்தாலும்- 50 கிலோ, தாது உப்பு- 2 கிலோ, கல் உப்பு- 1 கிலோ... இவற்றை ஒன்றாக அரைத்தால், 100 கிலோ அடர் தீவனம் கிடைத்து விடும்.

20 நாள் முதல் 3 மாத வயது வரையிலான குட்டிகளுக்கு, 50 கிலோ கடலைப் பிண்ணாக்கு, 50 கிலோ தானியங்களை மட்டும் அரைத்து தேவைக்கு ஏற்ப தீவனமாக கொடுத்தால் போதுமானது.

படங்கள்: எஸ். தேவராஜன்
தொடர்புக்கு
வெங்கடேசன், அலைபேசி: 89034-71006
thanks vikatan+raju sumathra

கால்நடை

பளிச்... பளிச்...

ஒரு வருடத்தில் 45 கிலோ எடை.
வருடத்துக்கு 450 குட்டிகள்.

சிறு மற்றும் குறு விவசாயிகளாக இருந்தாலும் சரி... பெரு விவசாயிகளாக இருந்தாலும் சரி... அவர்களுக்கு ஆபத்து நேரங்களில் கை கொடுப்பது கால்நடை வளர்ப்புதான். அதிலும் குறைந்த முதலீடு, குறைந்த பராமரிப்பில் அதிக லாபம் ஈட்டிக் கொடுப்பது ஆடு வளர்ப்புதான். தற்போது விவசாய நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள் எல்லாம் சுருங்கிக் கொண்டே வரும் சூழ்நிலையில், 'கொட்டில் முறை ஆடு வளர்ப்பு’ விவசாயிகளிடையே பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தலைச்சேரி மற்றும் போயர் ஆடுகளைக் கலப்பினம் செய்து, கொட்டில் முறையில் வளர்த்து வருகிறார், விழுப்புரம் மாவட்டம், திருநந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன்.

பிஸியோதெரபியிலிருந்து ஆடு வளர்ப்புக்கு!

''எங்கப்பா, பால் பண்ணை வெச்சுருந்தார். அதனால, எனக்கு சின்ன வயசுல இருந்தே கால்நடை வளர்ப்புல ஈடுபாடு அதிகம். ஆனா, சூழ்நிலையால பிசியோதெரபி படிச்சுட்டு வேலைக்குச் சேர்ந்தேன். அதுல கிடைச்ச வருமானம்... திருப்தியா இல்லை. அதனால, தொழிலை மாத்தலாம்னு யோசிப்பதான், 'ஆடு வளக்கலாம்'னு தோணுச்சு. உடனே அது சம்பந்தமான விஷயங்களைத் தேடி அலைய ஆரம்பிச்சேன். அப்போதான் கொட்டில் முறை பத்தியும், கலப்பினங்களைப் பத்தியும் தெரிஞ்சுக்கிட்டேன். உடனே ஆடு வளர்ப்புல இறங்கிட்டேன்' என்று உற்சாகமாக ஆரம்பித்த வெங்கடேசன், தொடர்ந்தார்.

அதிக எடைக்கு போயர் ஆடுகள்!

'போயர் ரக ஆடுதான் சீக்கிரமாவே அதிக எடைக்கு வந்துடும்னு சொன்னாங்க. அதனால மகாராஷ்டிரா மாநிலத்துல இருந்து ஒரிஜினல் போயர் ரகத்துல 18 பெட்டைகளையும், 2 கிடா ஆடுகளையும் வாங்கிட்டு வந்தேன். அதோட தலைச்சேரி, சிரோஹி, கன்னியாடு, கொடியாடு ரக பெட்டைகளையும் வாங்கினேன். ஒவ்வொரு இனத்தோடயும் போயர் கிடாக்களைக் கலப்பு செஞ்சு பாத்ததுல, தலைச்சேரி இனத்தோட கலப்பு செஞ்சு பிறந்த குட்டிக மத்ததுகளவிட சாதுவாவும் ஆரோக்கியமாவும் இருந்துச்சு. அதோட ஒரே ஈத்துல மூணு குட்டிக வரைக்கும் பிறந்துச்சு. அதனால மத்த இனங்களையெல்லாம் ஒதுக்கிட்டு, 100 தலைச்சேரி பெட்டைகளை மட்டும் வாங்கினேன். இப்போ போயர் கிடா, தலைச்சேரி பெட்டைகளை மட்டும் கலந்து கலப்பினக் குட்டிகளை பெருக்கிட்டிருக்கேன். தனியா, சுத்தமான போயர் ரகத்தையும் பெருக்கிட்டிருக்கேன்.

அறிவியல் முறையில் ஆடு வளர்ப்பு!

எங்கிட்ட இருக்குற எல்லா ஆடுகளையும் பத்தி கம்ப்யூட்டர்ல பதிவு பண்ணி வெச்சுடுவேன். ஆட்டோட வயசு, எத்தனை முறை குட்டி போட்டிருக்கு, எத்தனை குட்டிக, எப்போ கிடாவோட சேர்த்தோம், என்னென்ன வைத்தியம் பார்த்திருக்கோம்னு அத்தனைத் தகவலும் பட்டணைத் தட்டுனவுடனே கிடைச்சுடும். அதனால ஒழுங்கா குட்டி ஈனாத, அடிக்கடி நோய் தாக்குற ஆடுகளையெல்லாம் கழிச்சு, நஷ்டத்தைக் குறைச்சுட முடியுது. வருமானமும் கூடுது.



பராமரிப்பு எளிது!

இப்போ என்கிட்ட போயர் இனத்துல 12 கிடா, 24 பெட்டை; தலைச்சேரி இனத்துல 106 பெட்டை; கலப்பினத்துல 94 ஆடுகள்னு மொத்தம் 236 ஆடு இருக்கு. இதுபோக மொத்தமா 40 குட்டிகளும் இருக்கு. இந்த ஆடுகளுக்காக 5 ஏக்கர் நிலத்துல கோ-4, கோ-3, கோ.எஸ்.எஃப்-29, சவுண்டல் (சூபாபுல்), கல்யாணமுருங்கை, கிளரிசீடியானு பசுந்தீவனங்களையும் வளர்த்துக்கிட்டிருக்கேன். கொட்டில் முறைங்கறதால பெரிசா பராமரிப்பு வேலைகள் கிடையாது. ரெண்டு பேர்தான் மொத்தப் பண்ணையையும் பராமரிச்சுட்டிருக்காங்க' என்ற வெங்கடேசன் வளர்ப்பு முறைகளைப் பற்றி பாடமே நடத்த ஆரம்பித்துவிட்டார் இப்படி-

தீவனம்தான் முதலில்!

''ஆடு வளர்ப்பில் இறங்கலாம் என்று தீர்மானித்த உடனேயே, முதலில் பசுந்தீவனங்களை வளர்க்க ஆரம்பித்துவிட வேண்டும். ஓரளவுக்கு தீவனங்கள் தயாரான பிறகு, நாம் வளர்க்கப் போகும் ஆடுகளின் எண்ணிக்கை, நம்மிடமுள்ள இட வசதி, பொருளாதார வசதி ஆகியவற்றுக்கேற்ப ஆடுகளுக்கான கொட்டிலை அமைத்துக் கொள்ளலாம். ஒரு ஆட்டுக்கு, சராசரியாக 20 சதுர அடி இடம் இருக்க வேண்டும். பொதுவாகக் கொட்டிலின் அகலம் 25 அடி அளவில் வைத்துக் கொள்வது நல்லது. நீளத்தைத் தேவையான அளவுக்கு அமைத்துக் கொள்ளலாம். தரையில் இருந்து நான்கு அடி உயரத்தில் கிழக்கு-மேற்காக நீளவாக்கில் கொட்டிலை அமைக்க வேண்டும். ஆடுகளின் கால்கள் சிக்கிக் கொள்ளாத அளவுக்கு இடைவெளி கொடுத்து, மர ரீப்பர்கள் மூலம் கொட்டிலின் அடிப்பகுதியை அமைத்துக் கொள்ள வேண்டும்.

வேறு வேறு இடங்களில் வாங்க வேண்டும்!



தாய் மற்றும் 20 நாட்கள் குட்டி; 20 நாட்கள் முதல் 3 மாத வயது; 3 மாதம் முதல் 6 மாத வயது; 6 மாத வயதுக்கு மேல் உள்ள ஆடுகள்; இளம் சினையாடுகள்; முற்றிய சினையாடுகள்; கிடாக்கள் என ஆடுகளை ஏழு வகைப்படுத்தி தனித்தனியாகப் பிரித்து அடைப்பது முக்கியம். அதனால், இந்த ஏழு வகைக்கும் தேவைப்படும் வசதிகளை சரிவர செய்து கொள்ள வேண்டும். பிறகு, ஆடுகளை வாங்கி வந்து வளர்க்க ஆரம்பிக்கலாம்.

போயர் கிடாக்களை ஒரு பண்ணையிலும், தலைச்சேரி பெட்டைகளை வேறு பண்ணையிலும் வாங்க வேண்டும். முடிந்தளவுக்கு வெவ்வேறு பண்ணைகளில் ஆடுகளை வாங்கி வருவது நல்லது. அப்போதுதான் மரபணு குறைபாடுகள் இல்லாத குட்டிகளை உருவாக்க முடியும்.

பொலி கிடாவுக்கு 2 வயது இருக்க வேண்டும்!

ஆறு மாத வயதுக்கு மேல் பெட்டைகள் பருவத்துக்கு வரும். இடைவிடாமல் கத்திக் கொண்டும் வாலை ஆட்டிகொண்டே இருப்பதை வைத்தும் பருவத்துக்கு வந்ததைத் தெரிந்து கொள்ளலாம். அந்த நேரத்தில் இனப்பெருக்க உறுப்பில் வழவழப்பான திரவமும் வெளிப்படும். பருவ அறிகுறி தெரிந்த 12 மணி நேரத்தில் கிடாவைச் சேர்த்துவிட வேண்டும். பொலி கிடாவுக்கு இரண்டு வயது இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இரண்டு வருடத்துக்கு ஒரு முறை கிடாக்களை மாற்றிவிட வேண்டும். பருவத்துக்கு வரத் தாமதமாகும் பட்சத்தில், கிடாக்களை அருகில் கட்டி வைத்தால், பெட்டை ஆடுகள் விரைவில் பருவத்துக்கு வந்துவிடும்.

குட்டி ஈன்ற ஆடுகளையும் இதுபோல அடுத்த மூன்று மாதங்களிலேயே பருவத்துக்கு வர வைத்து விடலாம். ஆடுகளின் சினைக் காலம் 8 மாதங்கள். ஓர் ஆடு, இரண்டு ஆண்டுகளில் மூன்று முறை குட்டி ஈனும். போயர் கிடாவுக்கும் தலைச்சேரி பெட்டைக்கும் பிறக்கும் கலப்பினக் குட்டிகள், ஆரம்பத்தில் இரண்டரை கிலோ முதல் மூன்றரை கிலோ வரை எடை இருக்கும். 3 மாதங்களில் 10 கிலோ முதல் 12 கிலோ வரை வந்துவிடும். 6 மாதங்களில் 25 கிலோ வரையும் ஒரு வருடத்தில் 45 கிலோ வரையும் எடை வந்து விடும்.

20 நாட்கள் வரை மட்டும்தான் தாயுடன்!

குட்டிகள் பிறந்து 20 நாட்கள் வரை தாயுடனே இருக்க விடலாம். அதற்கு மேல் குட்டிகளைத் தனியாகப் பிரித்து தீவனங்களைச் சாப்பிடப் பழக்க வேண்டும். பால் குடிக்கும் நேரத்துக்கு மட்டும் தாயுடன் சேர்க்க வேண்டும். மூன்று மாத வயது வந்தவுடன் பெட்டைகளையும் கிடாக்களையும் தனித்தனியாகப் பிரித்து வளர்க்க வேண்டும். அதேபோல வயது வாரியாகவும், இளம் சினையாடுகள், முற்றிய சினையாடுகள், குட்டி ஈன்ற ஆடுகள் எனவும் தனித்தனியாகப் பிரித்து வைக்க வேண்டும்.

வயதுக்கேற்ப தீவனம்!

வேலிமசால், முயல்மசால், கிளரிசீடியா, சவுண்டல் போன்ற இலை வகைத் தீவனங்களில் 60 சதவிகிதமும், கோ-4, கோ-3, கோ.எஃப்.எஸ்-29 போன்ற புல் வகை தீவனங்களில் 40 சதவிகிதமும் இருக்குமாறு கலந்து நறுக்கி ஆடுகளுக்கு பசுந்தீவனமாகக் கொடுக்க வேண்டும். 20 நாள் வயதான குட்டிக்கு, ஒரு நாளைக்கு அரை கிலோ அளவில் பசுந்தீவனம் கொடுக்க வேண்டும். 3 மாத வயதுடைய குட்டிகளுக்கு ஒரு நாளைக்கு 3 கிலோ வரை பசுந்தீவனமும், 100 கிராம் அடர் தீவனமும் கொடுக்க வேண்டும்.

3 மாதத்துக்கு மேல் வயதுள்ள குட்டிகளுக்கு ஒரு நாளைக்கு 5 கிலோ பசுந்தீவனமும் அரை கிலோ அடர் தீவனமும் கொடுக்க வேண்டும். நன்கு வளர்ந்த ஆடுகளுக்கு

5 கிலோ பசுந்தீவனம் மற்றும் அரை கிலோ அடர் தீவனத்தோடு... தினமும் ஒரு கிலோ அளவுக்கு கடலைக்கொடி, சோளத்தட்டை போன்ற உலர் தீவனத்தையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும். குட்டிகளுக்குப் பால் கொடுக்கும் ஆடுகள் மற்றும் பொலி கிடாக்களுக்கு அடர் தீவன அளவைக் கூட்டிக்கொள்ள வேண்டும்.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம்!

வெக்கை மற்றும் துள்ளுமாரி ஆகிய நோய்கள் வராமல் தடுக்க, ஆண்டுக்கு ஒரு முறையும், கோமாரி மற்றும் ஜன்னி ஆகிய நோய்கள் வராமல் தடுக்க ஆண்டுக்கு இரண்டு முறையும் தடுப்பூசி போட வேண்டும். மூன்று மாத வயது வரை குட்டிகளுக்கு 20 நாட்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும். அதன் பிறகு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்''

வளர்ப்பு முறைகளைப் பற்றிச் சொன்ன வெங்கடேசன், நிறைவாக வருமானம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

''இதுவரைக்கும் கொட்டில், தாய் ஆடுகள்னு மொத்தம் 25 லட்ச ரூபாய் முதல் போட்டிருக்கேன். நல்ல முறையில பண்ணையைப் பராமரிச்சா... இந்தப் பணத்தை ரெண்டு வருஷத்துல எடுத்துட முடியும். ஒரு ஈத்துக்கு ரெண்டுல இருந்து மூணு குட்டிங்க வரைக்கும் கிடைக்கும். எப்படியும் ரெண்டு குட்டிக்குக் குறையாது. எங்கிட்ட இருக்குற தலைச்சேரி, கலப்பினம், போயர் எல்லாம் சேர்த்து 150 தாய் ஆடுகள் மூலமா... ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை, சராசரியா 900 குட்டிங்க கிடைக்குது. வருஷத்துக்கு சராசரியா 450 குட்டிங்கனு வெச்சுக்கலாம்.

குட்டிகள ஆறு மாசம் வரைக்கும் வளர்த்து, உயிர் எடைக்கு கிலோ 250 ரூபாய்னு விக்கிறேன். ஆறு மாசத்துல ஒரு ஆடு 25 கிலோ வரை எடை வந்துடும். போயர் கலப்பைப் பொருத்து கூடுதல் விலைக்கு வித்துடுவேன். சராசரியா ஒரு ஆட்டுக்கு 5,000 ரூபாய்னு வெச்சிக்கிட்டாலே வருஷத்துக்கு 22 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சுடுது.

பராமரிப்பு, அடர் தீவனம், சம்பளம்னு எல்லா செலவும் போக வருஷத்துக்கு 16 லட்ச ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்குது. ரெண்டு வருஷத்துல முதலீடு கைக்கு வர்றதோட... லாபமும் வர ஆரம்பிச்சுடும்.

சுத்தமான போயர் ஆடுகளுக்கு அதிக விலை கிடைக்கும். அதைக் கணக்குல சேர்க்கல. ஆடு வளர்ப்புல இறங்கினா... முதலீட்டுக்கேத்த அளவுக்குக் கண்டிப்பா வருமானத்தைப் பாத்துட முடியும்'' என்றார் உற்சாகமாக.


--------------------------------------------------------------------------------

அடர் தீவனம் !



கடலைப் பிண்ணாக்கு- 17 கிலோ, தவிடு- 30 கிலோ, கம்பு அல்லது சோளம் போன்ற மாவுச்சத்து மிக்க தானியங்கள் எதுவாக இருந்தாலும்- 50 கிலோ, தாது உப்பு- 2 கிலோ, கல் உப்பு- 1 கிலோ... இவற்றை ஒன்றாக அரைத்தால், 100 கிலோ அடர் தீவனம் கிடைத்து விடும்.

20 நாள் முதல் 3 மாத வயது வரையிலான குட்டிகளுக்கு, 50 கிலோ கடலைப் பிண்ணாக்கு, 50 கிலோ தானியங்களை மட்டும் அரைத்து தேவைக்கு ஏற்ப தீவனமாக கொடுத்தால் போதுமானது.

படங்கள்: எஸ். தேவராஜன்
தொடர்புக்கு
வெங்கடேசன், அலைபேசி: 89034-71006
thanks vikatan+raju sumathra

Thursday, March 14, 2013

பூமி வெப்பம் :- நெல்லும், கோதுமையும் வளராது...! உதவிக்கு வரும் சிறுதானியம்!

பூமி வெப்பம் :- நெல்லும், கோதுமையும் வளராது...!
உதவிக்கு வரும் சிறுதானியம்!

உலக வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பூமி சூடாகிக் கொண்டே வருகிறதாம். அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள், 11 மில்லியன் ஆண்டுகளில் இப்போதுதான், பூமியின் வெப்பம் அதிகமாக உள்ளது என்று கண்டுப்பிடித்துள்ளார்கள். இதற்கு மூலக் காரணமாக சொல்வது வாகன புகையும், தொழிற்சாலைகளின் மாசும்தான். நிலைமை இப்படியே போனால், சூடுதாங்காமல் பல தாவரங்கள் இல்லாமல் போகும் என்று விஞ்ஞானிகள் அச்சப்படுகிறார்கள்.

அதில் முதல் வரிசையில் நெல், கோதுமை.... போன்ற நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுப் பயிர்கள்தான் இடம் பெற்றுள்ளன. இதில் ஆறுதலான செய்தியும் உண்டு. அதாவது, நெல், கோதுமை வளர முடியாத அளவுக்கு வெப்பநிலை அதிகரித்தாலும், அந்த சூழ்நிலையிலும் வறட்சியை தாகுப்பிடிக்கும் கம்பு, கேழ்வரகு, சோளம், வரகு.... போன்ற நம் சிறுதானியங்கள் தாக்குப்படித்து வளரும் தன்மையில் உள்ளன என்று விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளார்கள்.
பூமி வெப்பம் :- நெல்லும், கோதுமையும் வளராது...!
உதவிக்கு வரும் சிறுதானியம்!

உலக வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பூமி சூடாகிக் கொண்டே வருகிறதாம். அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள், 11 மில்லியன் ஆண்டுகளில் இப்போதுதான், பூமியின் வெப்பம் அதிகமாக உள்ளது என்று கண்டுப்பிடித்துள்ளார்கள். இதற்கு மூலக் காரணமாக சொல்வது வாகன புகையும், தொழிற்சாலைகளின் மாசும்தான். நிலைமை இப்படியே போனால், சூடுதாங்காமல் பல தாவரங்கள் இல்லாமல் போகும் என்று விஞ்ஞானிகள் அச்சப்படுகிறார்கள்.

அதில் முதல் வரிசையில் நெல், கோதுமை.... போன்ற நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுப் பயிர்கள்தான் இடம் பெற்றுள்ளன. இதில் ஆறுதலான செய்தியும் உண்டு. அதாவது, நெல், கோதுமை வளர முடியாத அளவுக்கு வெப்பநிலை அதிகரித்தாலும், அந்த சூழ்நிலையிலும் வறட்சியை தாகுப்பிடிக்கும் கம்பு, கேழ்வரகு, சோளம், வரகு.... போன்ற நம் சிறுதானியங்கள் தாக்குப்படித்து வளரும் தன்மையில் உள்ளன என்று விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளார்கள்.

Wednesday, March 13, 2013

மருத்துவபயன் நிறைந்த நீரெட்டி முத்து

மருத்துவபயன் நிறைந்த நீரெட்டி முத்து

HYDNOCARPUS PENTANDRA. take oil from the nut of tree. The oil is yellow in color. The oil coating on the tolu apart this disease   can recover the disease. All diseases of the skin oil Can cure.
நீரெட்டி முத்து மரத்தின் கொட்டையிலிருந்து எண்ணெய் எடுப்பார்கள். அந்த எண்ணெய் மஞ்சள் நிறத்தில் இருக்கும். அந்த எண்ணெயை ஆரம்ப தோழு  நோய் உள்ளவர்கள் இதை மேல் பூச்சாகப் பூசினால் நோய் குணமடைவதைக் காணலாம். இந்த எண்ணெய் தோல் சம்பந்தமான எல்லா நோய்களையும்  குணமாக்க வல்லது.
லீகோடர்மா’ என்ற நோயைக் குணப்படுத்தும். இது மன அழுத்தத்தைக் குறைக்கும். உடலில் ஏற்படும் புடைத்த கட்டிகளை குணப்படுத்தும். ஆராத  குடல் புண்களை குணப்படுத்த வல்லது. வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். நாட்பட்ட புண்கள் குணமடையும். வாதம், சுழுக்கு, நெஞ்சுவலி,  கண்நோய் ஆகியவற்றைக் குணப்படுத்தும் டானிக்காகப் பயன் படுத்தப் படுகிறது.
இந்த மரத்தின் வேர் மற்றும் காய்ந்த இலைகளையும் சேர்த்து ஊரவைத்து கசாயமாக்கி உட்கொள்ளும் போது மலேரியா நோய் குணமாகும். சுண்ட  வைத்து அடிச் சாற்றைத் தலைக்கு இட்டால் முடி உதிர்வதைத் தடுக்கும். இதன் பூவிலிருந்து நறுமணத்தைப் பிரித்தெடுத்து வாசனைப் பொருட்கள்  தயார் செய்கிறார்கள்.

நவீன தொழில்நுட்பம்(பயிறுவகைகள்)

நவீன தொழில்நுட்பம்(பயிறுவகைகள்)

          பல்வேறு பயிர்களுக்கான நீர் மேலாண்மை: பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் வறட்சி காலங்களில் பயிர்களுக்கான நீர் மேலாண்மை பற்றிய ஆராய்ச்சி ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் விளைவாக தானிய பயிர்களில் நீர்மேலாண்மை ஆய்வு முடிவுகள் விவசாயிகளுக்கு பயனளிக்கக்கூடியவை.
நெய்பயிர்:
        சம்பா பருவத்தில் பயிரிடப்படும் நெல் ரகங்களுக்கு 1200 மி.மீ. நீர் தேவைப்படுகிறது. இத்தருணத்தில் நடுத்தர வயதுடைய ஐ.ஆர்.20ஐக் காட்டிலும் 20 நாட்கள் முன்பாகவே அறுவடைக்கு வரக்கூடிய ஆடுதுறை 39 ரகத்தினை பயிரிடுவதால் குறைந்த நீர் தேவையில் நிலையான விளைச்சல் பெறலாம். சேற்று உழவின்போது "டிராக்டர்' அல்லது "பவர் டில்லர்' கேஜ்வீல் கொண்டு உழுவதன் மூலம் 20 சதம் வரை நீர் நிலத்தடியில் சென்று வீணாவதைத் தடுக்கலாம். நெல்லுக்கு தொடர்ந்து நீர் பாய்வதைத் தவிர்த்து பாய்ச்சிய நீர் மறைந்தவுடன் 5 செ.மீ. உயரத்திற்கு நீர் பாய்ச்சுவது போதுமானது. இது 5 நாட்கள் இடைவெளியில் அமையும்.

நெல்லில் முக்கிய நீர்த்தேவை பருவங்களை தூர் பிடிக்கும் பருவம், புடைப்பருவம், பூக்கும் பருவம், பால் பிடிக்கும் பருவம் போன்ற பருவங்களில் நீர் பாய்ச்சத் தவறினால் விளைச்சல் வெகுவாக பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ளது.

திருந்திய நெல் சாகுபடியில் நீர் மேலாண்மை: 2-2.5 செ.மீ. உயரம் நீர் கட்டி பின் மண்ணின் மேல்பரப்பில் லேசான கீறல் வெடிப்புகள் தோன்றியபின் மறுபடியும் அதே அளவு நீர் கட்டுதல், மேலும் உருளும் களைக்கருவியைக் கொண்டு நட்டபிறகு 10-12 நாட்கள் இடைவெளியில் 2.5 செ.மீ. நீர் வைத்து நடவு வரிசைக்கு இடையே உபயோகித்தல், இலை வண்ண அட்டையையும் பயன்படுத்தி பயிருக்குத் தேவையான போது மட்டும் 2.5 செ.மீ. நீர் வைத்து மேலுரமாக தழைச்சதை இடுவது அவசியமானது.
சோளம்:
           இறவைச் சோளத்திற்கு 500 மி.மீ. வரை நீர் தேவையுள்ளது. தொடர் வெப்பநிலைக்கேற்றவாறு வளர்ச்சி, பூக்கம் நிலைகளில் கோடைக்காலத்தில் 13-15 நாட்களுக்கு ஒரு முறையும் முதிர்ச்சிப் பருவத்தில் சுமார் 10-12 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சுவதால் 20 விழுக்காடு வரை நீரைச் சேமிக்கலாம். 4-5 இலைப்பருவம், பூக்கும்பருவம், மணி பிடிக்கும் பருவம் ஆகியவை நீர் தேவைப்பருவங்களாகும். ஊடுபயிராக பயறு வகைப் பயிர்களை பயிரிடுவதன் மூலம் நீர் பயன்படுத்தும் திறனை அதிகப்படுத்தலாம். மேலும் மண்ணிலிருந்து நேரடியாக ஆவியாகும் நீரின் அளவை ஓரளவு கட்டுப்படுத்தலாம்.
மக்காச் சோளம்:
       மக்காச் சோளத்திற்கு அதிகப்படியாக சுமார் 550 மி.மீ. நீர் தேவைப்படும். தட்பவெப்ப நிலைக்கேற்ப வாரம் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். முழங்கால் உயரம் பயிர்ப்பருவம், பூ வெளிவரும் பருவம், முடி பிடிக்கும்; முதிர்ச்சிப்பருவம் பயிரின் முக்கிய நீர்த்தேவைப் பருவங்களாகும்.
கம்பு:
    கம்பிற்கு 400 மி.மீ. நீர் தேவைப்படுகிறது. தட்பவெப்ப நிலைக்கேற்ப 10-12 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். தூர் பிடிக்கும் பருவம், பூக்கும் பருவம், கதிர் முற்றும் பருவம் ஆகியன முக்கிய நீர்த்தேவைப் பருவங்களாகும்.
கேழ்வரகு:
                 பயிரின் மொத்த நீர்த் தேவை 500 மி.மீ. ஆகும். வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சுவதன் மூலம் விளைச்சல் பாதிப்பில்லாமல் நீரை சிக்கனப்படுத்தலாம். பூக்கும் பருவம், கதிர் பிடிக்கும் பருவம் ஆகியன முக்கிய நீர்த்தேவை பருவங்களாகும்.
பயறு வகைகள்:
            குறுகிய வயதுடைய உளுந்து, பாசிப்பயறு ஆகியவற்றிற்கு 350 மி.மீ. வரை நீர் தேவைப்படுகிறது. ஆனால் சோயா மொச்சைக்கு மட்டும் 450 மி.மீ. நீர் வேண்டும். விதைப்பு, பூப்பு, காய் பிடிக்கும் பருவங்களில் நீர் பாய்ச்ச வேண்டும். பூக்கும் பருவம் பயிரின் முக்கிய நீர்த்தேவைப்பருவமாகும். (தகவல்: முனைவர் மு.முகமது யாசின், முனைவர் வெ.கி.துரைசாமி, வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பவானிசாகர்-638 451, போன்: 04295-240 244) -டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்
நன்றி:தினமலர்

முலாம் பழச் சாகுபடியில் கூடுதல் மகசூல்!

முலாம் பழச் சாகுபடியில் கூடுதல் மகசூல்!

        தோட்டக்கலை பயிர்கள் சாகுபடிக்கு ஏற்ற தட்பவெப்ப நிலை உள்ள பகுதிகளில் மா, வாழை போன்று முலாம் பழம் சாகுபடியிலும் நல்ல மகசூல் பெறலாம் என்று பாப்பாரப்பட்டியில் உள்ள வேளாண்மை அறிவியல் இணையத்தின் வேளாண் அலுவலர்கள் கூறினர்.

           இதுகுறித்து அவர்கள் கூறியது: தருமபுரி மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்ய ஏற்ற தட்பவெப்ப நிலை உள்ளது. மா, வாழை போன்ற பயிர்களைப் போன்று நல்ல வருவாயைத் தரக்கூடிய முலாம் பழம் சாகுபடியில் விவசாயிகள் இப்போது அதிக ஆர்வம் செலுத்த தொடங்கியுள்ளனர். முலாம் பழம் சாகுபடியில் நவீனத் தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதன் மூலம் நோய், பூச்சித் தாக்குதல்களிலிருந்து பயிரைக் காப்பாற்றலாம்.
            நல்ல வடிகால் வசதி கொண்ட மணல்பாங்கான பகுதி முலாம் பழம் சாகுபடிக்கு ஏற்றது. அமில, காரத் தன்மை 6.5 முதல் 7.5 என்றளவில் உள்ள மண்ணில் நல்ல வளர்ச்சி இருக்கும். மிதமான வெப்பநிலை (23 முதல் 27 சென்டிகிரேட்), மிதமான ஈரப்பதம் கொண்ட கால நிலை முலாம் பழம் சாகுபடிக்கு உகந்தது. மழை, பனி இல்லாத அனைத்துப் பருவத்திலும் முலாம் பழம் சாகுபடி செய்யலாம்.
விதைப்பு, பராமரிப்பு முறை: சாதாரணமாக நேரடியாக விதைப்பு செய்தும், துல்லிய பண்ணைய முறையில் குழித்தட்டு நாற்றாங்காலில் நாற்றுகளை உற்பத்தி செய்தும் நடவு செய்யலாம். விதைப்பிற்கு ரகத்தைப் பொருத்து ஏக்கருக்கு 200 கிராம் முதல் 1 கிலோ வரை விதைகள் தேவைப்படும். துல்லிய பண்ணைய முறையில் ஏக்கருக்கு 6 ஆயிரம் நாற்றுகள் வரை தேவைப்படும்.
               விதைகளை கிலோவுக்கு 10 கிராம் என்றளவில் சூடோமோனாஸ் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். நடவு இடைவெளி 1.5 மீட்டருக்கு 45 முதல் 65 செ.மீ. என்ற அளவில் பராமரிக்க வேண்டும். அடியுரமாக ஏக்கருக்கு 5 டன் தொழு உரம், 16:14:12 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துகளை இட வேண்டும். மேல் உரமாக விதைத்து 30ஆவது நாள் 16 கிலோ தழைச்சத்து இட வேண்டும்.
          துல்லிய பண்ணைய முறையில் அடியுரமாக மணிச்சத்தை இட்டுவிட்டு, தழை, சாம்பல் சத்தை நீர்வழி உரப்பாசனமாக கரையும் உரங்களைப் பயன்படுத்த வேண்டும்.
           நடவு செய்த அல்லது விதைத்த 35ஆவது நாளில் நுண்ணூட்டக் கலவையை லிட்டருக்கு 5 கிராம் என்ற அளவில் தெளிக்க வேண்டும். இதன்மூலம் வடிவற்ற காய்கள், காய்களில் வெடிப்பு போன்று போரான் சத்துக் குறைபாட்டால் உண்டாகும் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். மேலும், ஒரு வாரம் கழித்து பொட்டாசியம் சல்பேட் லிட்டருக்கு 5 கிராம் என்ற அளவில் தெளிப்பதால் பழங்களின் தரம் அதிகரிக்கும்.
            இதுமட்டுமல்லாது நெகிழி நிலப் போர்வை (பாலீதின் மூடாக்கு) அமைப்பதன் மூலம் களையால் உண்டாகும் பாதிப்பு குறையும். மேலும், பாசன நீரின் தேவையும் குறையும். கூடுதல் நன்மையாக பழங்கள் நிலத்தில் படுவதால் உண்டாகும் அழுகல் நோய், நிறமாற்றம் ஆகியவை தவிர்க்கப்படுகின்றன. இந்தப் பயிர் குறுகிய காலப் பயிர். ஆதலால், நெகிழி நிலப் போர்வை இடுவதன் மூலம், ஒரு பயிர் முடிந்தவுடன் அதிலேயே 2 அல்லது 3 பயிர்களைச் சாகுபடி செய்ய இயலும்.
பயிர்ப் பாதுகாப்பு: இந்தப் பயிரில் பழ ஈ தாக்குதல் ஏப்ரல் முதல் மே மாதத்திற்கு பின் அதிகமாகக் காணப்படும். கோடைக் காலத்தில் குறைவாகவும், மழைக் காலத்தில் அதிகமாகவும் இருக்கும். காய்களின் மேலுள்ள தோலைக் கிழித்து தாய் ஈ முட்டையிடும். முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள், காயின் சதைப் பற்றான பகுதியை உண்ணுவதால் அந்த இடத்திலிருந்து பழுப்பு நிறச் சாறு வடியும். புழுக்களால் தாக்கப்பட்ட பகுதி அழுகிவிடும். பாதிப்பு அதிகரிக்கும் போது காய்கள் உதிர்ந்துவிடும்.
                இவ்வாறு தாக்கப்பட்ட காய்களைச் சேகரித்து மண்ணில் குழியெடுத்து அழிக்க வேண்டும். தாக்குதல் உள்ள போது கொடி, கொடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீர் பாய்ச்சி கூட்டுப் புழுவிலிருந்து வளர்ந்த ஈக்கள் வெளிவருவதைத் தடுக்க வேண்டும். கொடிகளுக்கு இடையே உள்ள பகுதியை நன்றாகக் கிளறி விடுவதன் மூலம் கூட்டுப் புழுக்களை கட்டுப்படுத்தலாம். ஒரு லிட்டர் தண்ணீரில் கார்பரில் 50 சதவீதம் நனையும் தூள் 2 கிராம் அல்லது பென்தோயேட் 2 மி.லி. அல்லது பென்தியான் 1.5 மி.லி. அல்லது கார்போசல்பான் 2 மி.லி. என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
பூசணிக்காய் வண்டு: கொடியின் வேர்ப் பகுதியையும், தண்டுப் பகுதியையும் மண்ணிலுள்ள புழுக்கள் தின்று சேதத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், இலைகள், பூக்கள், காய்களையும் தின்று சேதப்படுத்தும். செடியைச் சுற்றியுள்ள பகுதியில் மண்ணைக் கிளறி, செடி ஒன்றுக்கு 50 கிராம் கார்பரில் 50 சதவீத நனையும் தூள் அல்லது 5 கிராம் பிப்ரோனில் குருணை அல்லது 5 கிராம் கார்போபியூரான் குருணை மருந்தை இட வேண்டும்.
அசுவணிப் பூச்சித் தாக்குதல்: இலையின் அடிப் பகுதியில் இளம் மற்றும் வளர்ந்த பூச்சிகள் சாற்றை உறிஞ்சும். இதனால், இலைகள் சுருங்கி மடிப்புகளுடன் காணப்படும். கொடி வளர்ச்சி குன்றி காணப்படும். பூச்சிகள் தேனை கழிவாக வெளியேற்றுவதால், தாக்கப்பட்ட செடியில் எறும்பின் நடமாட்டம் காணப்படும். ஒரு லிட்டர் தண்ணீரில் அசிபேட் 1 கிராம் அல்லது தயோகிளோபிரிட் 1 மி.லி. என்றளவில் தெளிப்பதன் மூலம் இந்தப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
             இந்த பயிரில் சாம்பல் நோய், இலைப்புள்ளி நோய், இலைக் கருகல் நோய், பழ அழுகல் நோய், வாடல் நோய்த் தாக்குதலும் இருக்கும். மேற்கண்ட பூச்சித் தாக்குதல், நோய்த் தாக்குதலிலிருந்து பயிரைக் காத்து கூடுதல் வருவாய் பெறலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: வேளாண் அறிவியல் இணையம், பாப்பாரப்பட்டி, தருமபுரி மாவட்டம். மொபைல்: 99946 72204.

நன்றி:தினமணி

முட்டைக் கோஸ் – சத்துப்பட்டியல்

முட்டைக் கோஸ் – சத்துப்பட்டியல்

முட்டைக் கோஸ் - சத்துப்பட்டியல்
உருண்டு திரண்ட முட்டைக்கோஸ், சத்துக்கள் நிறைந்தது. சீனர்களின் சுறு சுறுப்புக்கு அவர்கள் தங்கள் உணவில் முட்டைக்கோஸை முக்கிய உணவுப் பொருளாக சேர்ப்பது ஒரு காரணம் எனலாம். உலகம் முழுவதும் விளையும் காய்கறிகளில் ஒன்றான முட்டைக்கோஸ் தன்னிடத்தில் அடக்கியுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோம்...
* பல அடுக்கு இதழ்களைக் கொண்டது முட்டைக்கோஸ். பச்சை, பழுப்பு, சிவப்பு என பல நிறங்களில் முட்டைக்கோஸ்கள் விளைகிறது.
* பச்சை முட்டைக்கோஸ் இணையற்ற சத்துக்கள் கொண்டது. குறைந்த கலோரி ஆற்றல் வழங்கக் கூடியது. கொழுப்பும் குறைந்த அளவே உள்ளது. 100 கிராம் முட்டைக்கோஸில் 25 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.
* தயோசயனேட், கார்பினால், லுடின், ஸிசாந்தின், சல்பராபேன், இசோதயோ சயனேட் போன்ற ரசாயன மூலக்கூறுகள் முட்டைக்கோஸில் உள்ளது. இவை பல்வேறு உடற்செயல்களில் பங்கெடுக்கின்றன. குறிப்பாக நோய் எதிர்ப் பொருட்களாக செயல்படுகின்றன. மார்பகம், தொண்டை, குடற் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படும். கெட்ட கொழுப்புகளான எல்.டி.எல். கொழுப்புகளை குறைக்கும்.
* முக்கியமான நோய் எதிர்ப்பொருளான 'வைட்டமின் சி', முட்டைக்கோசில் மிகுந்துள்ளது. 100 கிராம் கோஸில் 36.6 மில்லிகிராம் 'வைட்டமின் சி' கிடைக்கிறது. தொடர்ச்சியாக 'வைட்டமின் சி' உடலில் சேர்த்துக் கொள்வது அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும்.
* தீங்கு விளைவிக்கும் 'பிரீ-ரேடிக்கல்'களை சுத்தப்படுத்தும் தன்மை 'வைட்டமின் சி'-க்கு உண்டு. ஆக்சிஜன் பிரீ ரேடிக்கல்களை உறிஞ்சி அகற்றும் அளவை கணக்கிட்டால், 100 கிராம் பச்சை முட்டைக்கோசானது, 508 மைக்ரான் ரேடிக்கல்களை விரட்டி அடிக்கிறது. சிவப்பு முட்டைக்கோஸில் 2 ஆயிரத்து 252 மைக்ரான் அளவு ரேடிக்கல்களை சுத்தப்படுத்தும் சக்தி கிடைக்கிறது.
* வைட்டமின் பி-5, வைட்டமின் பி-6, வைட்டமின் பி-1 போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும் முட்டைக்கோஸில் நிறைந்துள்ளது. இவை உணர்வுக்கும், இதர உடற்செயல்பாட்டிற்கும் உறுதுணை செய்யக்கூடியவை.
* பொட்டாசியம், மாங்கனீசு, இரும்பு, மக்னீசியம் போன்ற தாதுஉப்புக்கள் முட்டைக்கோசில் உள்ளது. பொட்டாசியம் உடற்செல்கள் மற்றும் சருமம் வளவளப்புடன் இருக்க துணை செய்யும். இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதிலும் பங்கெடுக்கும். மாங்கனீசு, நோய் எதிர்ப்பு நொதிகள் செயல்பட துணைக் காரணியாக விளங்கும். இரும்புத் தாது, சிவப்பு ரத்த செல்கள் உருவாக்கத்தில் பங்கெடுக்கிறது.
* முட்டைக்கோஸில் 'வைட்டமின் கே', நிறைய அளவில் உள்ளது. எலும்பு வளர்ச்சிதை மாற்றத்தில் இது பங்கெடுக்கும். அல்சீமர் மற்றும் நரம்பு வியாதிகளின் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் ஆற்றலும் 'வைட்டமின் கே' -விற்கு உண்டு.

Monday, March 11, 2013

மனித உடலும், தண்ணீரும்

தண்ணீரையும், மனித உடலையும் தனித்தனியாக பிரிக்க முடியாது. மனித உடலில் தண்ணீர் என்பது அவ்வளவு முக்கியமானது. தண்ணீர் தான் ஜீரணத்துக்கு உதவுகிறது. வியர்வையை வெளியேற்றுகிறது. உடலின் பல பகுதிகளுக்கு சத்துக்களை எடுத்துச் செல்கிறது.
உடலின் சேரும் திட மற்றும் திரவக் கழிவுனை வெறியேற்றவும், உடலின் வெப்பநிலையை ஒரே சீராக வைத்துக் கொள்ளவும் தண்ணீர் அவசியம். நமது உடலின் மொத்த எடையில் 60 சதவீதம் அளவிற்கு இருப்பது தண்ணீரில் தான். இதில் இருந்து 5 முதல் 10 சதவீதம் நீர் உடலில் இருந்து வெறியேறினாலே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
இதுவே 15 முதல் 20 சதவீதம் வரை தண்ணீர் இழப்பு ஏற்பட்டால் மரணம் வந்து சேரலாம். ஒரு மனிதன் சாப்பிடாமல் கூட சிறிது நாட்களை ஒட்டலாம். தண்ணீர் குடிக்காமல் 3 நாட்களுக்கு மேல் தாக்குபிடிக்கமுடியாது. உடலில் உள்ள அனைத்து திசுக்களுக்கு ஒரு காதுகாப்பு போர்வை போலவும். மெத்தை போன்றும் தண்ணீர் செயாற்றுகிறது. உடலின் அனைத்து திசுக்களுக்கும் ரத்தத்தின் அடிப்படைக்கும் மூட்டு இணைப்புகளில் உள்ள திரவம்,தண்ணீர்,கோழைவடிதல் போன்றவற்றுக்கும் தண்ணீரே காரணமாக திகழ்கிறது.
உடல் உறுப்புகள் முறைப்படி செயல்படுவதற்கும் உராய்வு எண்ணெய் போன்று தண்ணீர் செயலாற்றுகிறது. நம்முடைய தோலை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்துக்கொள்வதற்கும் உடலில் உள்ள தண்ணீரே பங்காற்றுகிறது.
வயது முதிர்வடையும் போது தோலில் ஏற்படும் சுருக்கங்களுக்கு உடலில் உள்ள தண்ணீரின் அளவு குறைவதே காரணம். ஆகவே தான் பிறக்கும் குழந்தைகளின் உடல்களில் 75 முதல் 80 சதவீதம் அளவுக்கு தண்ணீர் இருப்பதால் குழந்தைகளின் தோல் மென்மையானதாக காணப்படுகிறது.
அதுவே 65-70 வயதான முதியோருக்கு உடலில் தண்ணீர் 50 சதவீதமாக குறைவதால் சுருக்கங்கள் காணப்படுகின்றன. தண்ணீர் குறைவின் காரணமாகவே எலும்பு இணைப்புகளில் பாதிப்பு ஏற்படுவதும் முதுமையில் நிகழ்கிறது. மனித உடலுக்கு தினமும் சராசரியாக 6 முதல் 8 டம்ளர் வரையிலான தண்ணீர் கட்டாயம் தேவை.

மரமஞ்சள் மருத்துவக் குணங்கள்

இம்மரத்தின் பட்டை பருமனாக மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் மரப்பட்டை, இலை மருத்துவக் குணம் உடையது. இதன் இலைகள் கசப்புச் சுவையும், துணைச் சுவையாகக் கார்ப்புச் சுவையுடனும் இருக்கும். வறட்சித் தன்மையும் சூட்டை அதிகரிக்கச் செய்யும் தன்மையும் கொண்டது. ரணம், நீரிழிவு, அரிப்பு ஆகியவற்றைப் போக்கும் குணமுண்டு. தமிழகம் எங்கும் காடுகளில் காணப்படுகின்றது.
மஞ்சள் மருத்துவக் குணங்கள்
மர மஞ்சளின் பட்டையை எடுத்து விழுதாய் அரைத்து ரணங்களில் பூசி வர குணமாகும்.
மரமஞ்சளின் விழுதை நெல்லிக்காயளவு அரைத்து 100 மில்லியளவு பசுவின் கோமியத்துடன் கலந்து காலையில் குடித்து வர சிலேத்தும நோய்கள் குணமாகும்.
மர மஞ்சளை கைப்பிடியளவு எடுத்து சிதைத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி மீண்டும் குடிநீர் நன்றாகக் கெட்டிப்படும் வரை, காய்ச்சி சிறிது தேன் கலந்து முகத்தில் பூசிவர முகத்தில் வருகின்ற தோல் நோய்கள், நரம்புச் சிலந்தி குணமாகும்.
மரமஞ்சளின் சாறில் 200 மில்லியளவு எடுத்து சிறிது தேன் கலந்து 2 வேளை தொடர்ந்து 1 வாரம் குடித்து வர காமாலை குணமாகும்.
மரமஞ்சளை கைப்பிடியளவு எடுத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியளவாகக் காய்ச்சி, அத்துடன் சிறிது தேன் அல்லது அரிசி கழுவிய நீருடன் கலந்து 2 வேளை குடித்து வர வெள்ளை, பெரும்பாடு குணமாகும்.
மர மஞ்சளை இடித்து 10 கிராம் எடுத்து நூறு மில்லியளவு தண்ணீரில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் மூலநோய், சுவையின்மை, கணநோய், கணக்காய்ச்சல், உட்காய்ச்சல் குணமாகும். காய்ச்சலுக்குப் பின்னர் காணப்படும் அயர்வு நீங்கும்.
மரமஞ்சளை நீர்விட்டு அரைத்து தலையில் பற்றிட உடல் சூடு தணியும். மர மஞ்சளை அரைத்து இரத்தம் கட்டிய வீக்கத்திற்கு மேல் பூச குணமாகும்.

மூட்டு வலியை குணப்படுத்த ஆயுர்வேத சிகிச்சை

தினசரி வாழ்க்கையில் நீங்கள் காலை எழுந்திருக்கும் போது முழங்காலை மடக்க முடியாமல் போய்விடுகிறதா? கால் தாங்கலாகத் தான் நடக்க வேண்டியிருக்கிறதா? கடந்த காலத்தில் இப் பிரச்சினை வந்து, தீர்ந்து தீர்த்து தற்போது உறக்கத்தில் யாரோ அழுத்துவது போன்ற உணர்வு வருகிறதா? நீங்கள் நோய் வாய்ப்பட்டிருக்கும் போது பாம்ஸ் மற்றும் தைலம், பாப்பிங் பில்ஸ் ஆகியவை உபயோகிக்கும் போது மட்டும் வலியிலிருந்து நிவாரணம் பெறுகிறீர்களா?

அனேகமாக நீங்கள் மூட்டு வலி நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்கிறார் மகாலிங்கபுரம் ஆயுர்வேத சிகிச்சை நிபுணர் டாக்டர் மகேஸ்வரராவ். பருவ கால மாற்றங்கள் நம் உடலில் சில குறிப்பிடும்படியான மாற்றங்களை ஏற்படுத்தும். குறிப்பாக மழைக்காலம் வந்தாலே பல்வேறு நோய்த் தொல்லைகள் வந்து விடும். மரத்துப்போன மூட்டு இணைப்பில் நடுக்கத்துடன் கால்தாங்கலாக நடக்க வேண்டிய நிலையும் மழைக்காலத்தில் வரும் மோசமான உடல் பாதிப்பாகும்.

உடலில் ரத்த வெள்ளையணுக்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு அரணாக இருக்கின்றன. நோய் எதிர்ப்பு செல்கள், நீண்ட நேரம் உடல் செல்களுக்கும், தீங்கிழைக்கும் மற்ற பொருள்களுக்குமிடையேயான வேறுபாட்டை அறிவதில்லை. இதனால் அவை உடல் செல்களை தாக்க ஆரம்பிக்கின்றன. முழங்கால் மூட்டிலுள்ள சவ்வு இதனால் வீக்கமடைந்து விறைப்பு தன்மை அடைந்து சிவப்பாக மாறும்.

இவற்றுடன் மூட்டு வலியும் ஏற்படுகிறது. மோசமான நோய் பாதிப்பினால் சில நேரங்களில் மூட்டுகள் செயலிழந்து விடுகின்றன. இந்நேரத்தில் இந்நோய் ஒன்றுக்கு மேற்பட்ட மூட்டுகளைப் பாதிக்கிறது. பெரும்பாலும் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு இந்நோய் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மனிதனுக்கு இயற்கையாகவே உற்பத்தியாகி வளரக் கூடியது நகம், முடி, மூட்டுகளுக்கு இடையே உள்ள சவ்வு. இவை மூன்றும் மனிதனின் வளர்ச்சிக்கு ஏற்ப வளரும் தன்மை உடையது. இதில் மிக முக்கிய பங்கு வகிக்கக் கூடியது சவ்வு. இது ஆயுர்வேதச் சொல்லில் ஆமா வாத்தா என்று அழைக்கப்படுகிறது. ஆமா என்றால் பித்தம். வாத்தா என்றால் வாயு என்றும் பொருள்படும்.

மூட்டு வலி வருவதற்கு மிக முக்கிய காரணம் மூட்டுகளுக்கு இடையே ஒரு வித எண்ணெய் திரவம் போன்ற ஒரு பொருள் இருக்கும். அவை மூட்டுகளின் செயல்பாடுகளுக்கு ஏற்ப அவையும் இணைந்து செயல்படும். இந்த வாயுவும், பித்தமும் ஒன்றோடு ஒன்று இணைந்து எண்ணெய் திரவம் போன்ற பொருளை அழித்துவிடும்.

இதன் காரணமாக மூட்டுகள் இரண்டும் ஒன்றுக்கொன்று உரசும். இதனால் மூட்டுகளுக்கிடையே தேய்மானம் ஏற்படுவதால் மனிதனுக்கு மிக கடுமையான மூட்டு வலி ஏற்படுகிறது. இந்த வலியில் இருந்து முழுமையாக விடுபடுவதற்கு பெரும்பாலானவர்கள் அப்போது சூழ்நிலையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு ஏதாவது தற்காலிக வலி நிவாரண மாத்திரைகளை உண்டு தப்பித்துக் கொள்கிறார்கள்.

இதன் காரணமாக கடுமையான மூட்டு வலியில் இருந்து முழுமையான நிவாரணம் அடைய அவர்களுக்கு தெரியவில்லை. அவர்கள் மூட்டு வலியை தொடர்ந்து அடையும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

வழி முறைகள்.........

இந்த கடுமையான மூட்டு வலியில் இருந்து முழு நிவாரணம் பெற முடியும். அதற்கு முழுமையான தீர்வு காண முடியும். இதற்கு நாம் செய்ய வேண்டியது என்னவெனில் ஆயுர் வேத சிகிச்சை மூலம் முழு நிவாரணம் பெற முடியும். தொடர்ச்சியாக 3 மாதம் முதல் 6 மாதம் வரை மருந்து வகைகளை உண்டு வந்தால் இந்த கடுமையான மூட்டு வலியில் இருந்து 100 சதவீதம் முழு நிவாரணம் பெறமுடியும்.

தேய்ந்த மூட்டு சவ்வை புதியதாக உருவாக்க முடியும். ஆயுர்வேத மருந்து வகைகள் புதிய சவ்வை உருவாக்க வழி செய்கிறது. ஆயுர்வேத மாத்திரை மருந்துகளால் எவ்வித பக்க விளைவுகள் இல்லை. இதை சாப்பிடும் போது எவ்வித பத்திய முறைகளும் இல்லை என்கிறார் மகாலிங்கபுரம் அப்பல்லோ ஆயுர்வேதிக் சென்டர் டாக்டர் மகேஸ்வரராவ்.

மூட்டு வலி ஏற்பட காரணங்கள்.........

* கால்மூட்டி அடிக்கடி அழுத்தத்திற்கு உட்படுவதால் முட்டியை சுற்றியுள்ள கப் வடிவிலான சவ்வு காயமடைவது.

* முட்டியின் முன்பகுதியில் வலியிருக்கும். மாடிப்படி ஏறி இறங்கும் போது மற்றும் சாயும் போது வலியின் தன்மை அதிகரிக்கும். ஓட்டப்பந்தைய வீரர்கள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு இவை ஏற்படும்.

* எலும்பில் உள்ள திசுக்கள் கிழிவது அல்லது உடைவது. இதனால் முட்டியின் உள், வெளி பகுதிகளில் வலி ஏற்படுத்தும்.

* சுளுக்கு, மூட்டுக்களை முறுக்குவதால் எலும்புகளை இணைக்கும் தசைநார்களில் ஏற்படும் சிறு சிறு காயங்கள்.

*முட்டியின் சிப்பி இட மாற்றம் அடைவது.

* மூட்டுகளில் நோய் தொற்றுவது.

* மூட்டுகளில் ஏற்படும் காயங்களால் முட்டியினுள் இரத்த கசிவு ஏற்பட்டு வலியை அதிகப்படுத்தும்.

* இடுப்பில் ஏற்படும் குறைபாடுகள் அல்லது கோளாறுகள். இதனால் இடுப்பில் வலி ஏற்படும். இந்த வலி முட்டிப் பகுதிகளில் உணரப்படும். இடுப்பிலிருந்து முட்டி பகுதிக்கு செல்லும் கயிறு போன்ற அமைப்பில் காயம் ஏற்படுதல்.

* அதிக குளிர்ச்சி மற்றும் வெப்பமான கால சூழலில் இருத்தல்.

* குறிப்பிட்ட காலத்தில் மூட்டு இணைப்பு சவ்வு வளராமை மற்றும் சாதா ரணமாக முழங்கால் மூட்டுகள் மீது போர்த்தப்படாமை.

* வழக்கத்திற்கு மாறாக  அதிக உடல் எடை அதிகரிப்பு.

* மோசமான உடல் பாதிப்பு மற் றும் நீண்ட நாள் நோய் வாய்ப்பட்டிருத்தல்.

* ஏதாவதொரு எலும்பு மூட்டு தசையில் ரத்தம் உறைந்து விடு தல்.

*மூட்டு நோய்களை சாதாரணமாக வரும் வலியை வைத்து கண்டறியலாம். காலையில் விழிக்கும் போது அதிக வலியுடன் விறைப்பு தன்மை உடலிலிருந்தால் அதை நோய் அறிகுறி என அறியலாம். வயதானவர்கள் இதனால் அதிகம் இயங்க முடியாது. குளிர் காலங்களில் உடற்பயிற்சி மற்றும் நடக்கும் போது அதிக வலி ஏற்பட்டால் அது நோய் அறிகுறியாகும்.

வலியைக் குறைக்க உதவும் வழிகள்.........

வலியை அதிகப்படுத்தும் செயல்களை தவிர்த்து (உதாரணம்- பழுதூக்குதல்) ஓய்வாக இருந்தல். வலி ஏற்படும் இடத்தில் ஐஸ் கட்டிகளை வைக்கலாம். முதல் நாளில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 நிமிடங்கள் வரை ஐஸ் கட்டிகளை வைக்கவும். முதல் நாளுக்குப்பின் குறைந்தது ஒரு நாளில் நான்கு முறையாவது இப்படி செய்ய வேண்டும்.

கால் முட்டியினை முடிந்தவரை உயரமாக தூக்குவதனால் வீக்கங்களை குறைக்கலாம். மூட்டிகளின் கீழ் அல்லது இடையில் தலையணைகளை வைத்து உறங்கலாம். சுடு தண்ணீரில் 2 கிராம் உலர்ந்த இஞ்சியை கலந்து குடித்தல் மற்றும் மோர் உட்கொள்ளுதல் கபம் மற்றும் வாதத்தைக் குறைக்கும்.

இது செரிமான சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, மூட்டு இணைப்புகளின் வீக்கத்தைக் குறைக்கிறது. சுரைக்காய் போன்று கொடியில் காய்க்கும் கசப்பு காய்கள், வாடாமல்லிகை இலைகள், வேப்பிலைகள், பாகற்காய், கோதுமையில் தயாரிக்கப்பட்ட சப்பாத்தியுடன் பார்லி சேர்த்த உணவு பொருள், ஸ்டார்ச் நீக்கப்பட்ட அரிசி சோறு, கொள்ளு, பியஸ் ஆகியவை உணவு பொருள்களில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பால், தயிர், பன்னீர், பாலாடையுடன் கூடிய கரும்புச் சாறு குறிப்பாக வெல்லம், சர்க்கரை, பருப்பு, மீன் மற்றும் நறுமணப் பொருள் கொண்ட பொருள்களை உட்கொள்ள வேண்டும். தினமும் உடற்பயிற்சி (வாரத்தில் 4 நாள்களுக்கு 30-லிருந்து 40 நிமிடம் வரை நடக்க வேண்டும்) செய்தல் அவசியம். தினசரி வாழ்க்கையில் யோகா மேற்கொள்ள வேண்டும்.

ஒரு மேசை கரண்டி டில் ஆயில், ஒரு மேசை கரண்டி மாட்டு நெய், அரை மேசை கரண்டி இஞ்சி சாறு, அரை மேசை கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு கரும்பு சாறு ஆகியவை சேர்ந்த கலவை வாதத்தைக் குறைக்க உதவுவதோடு, எலும்பு மூட்டு இணைப்பில் வீக்கத்தையும் குறைக்கிறது.

இதற்கு மாற்றாக வெதுவெதுப்பான பாலுடன் ஒரு மேசை கரண்டி விளக்கெண்ணெய் கலந்து இரவில் குடிப்பதால் அதிக செரிமானத்தையும், வாதத்தையும் குறைக்கலாம். 5 கிராம் இஞ்சி கூழுடன் கூடிய ரோஸ்ட், சீரகம், கல் உப்பு, கருப்பு உப்பு, உலர்ந்த இஞ்சி பவுடர் மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றை வெண்ணெயுடன் சேர்த்து உட்கொள்ளுவதால் மூட்டு வலி மற்றும் முதுகு வலி ஆகியவற்றை வெகுவாகக் குறைக்கிறது.

போதுமான நெய் அல்லது எண்ணெய் சேர்த்து உணவு சமைக்கப்பட வேண்டும். பால், சோறு, மட்டன் சூப் மற்றும் இனிப்பு, புளிப்பு அல்லது உப்பு நிறைந்த சத்தான உணவுப் பொருள்களை உட்கொள்ள வேண்டும்

தாகம் தீர்க்கும் தண்ணீருக்கு விலை நிர்யணம் செய்யும் முயற்சியை தடுக்க வேண்டும்

கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதி டெல்லியில் தேசிய நீர் வளத்துறை கவுன்சிலின் 6வது கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய நீர்க கொள்கை 2012 ஏற்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமை வகித்தார். கடந்த 2002ம் ஆண்டில் துவங்கி 10 ஆண்டுகளில் ஒரு வடிவத்தை பெற்றுள்ளது தேசிய நீர் கொள்கை. இதை சற்று  ஆழ்ந்து பார்த்தால் அது நேரடியாகவும் மறைமுகமாகவும் மாநிலங்களின் மீது அதிகாரத்தை செலுத்தும் போக்கை காணலாம். எப்படி மேலே படியுங்கள்:
1. அரசோ அல்லது அரசின் உள்ளாட்சி அமைப்புகளோ இனிமேல் குடிநீர், பாசன நீரை வழங்காது. இதை செய்யப்போவது தனியார் அல்லது  பன்னாட்டு வர்த்தக நிறுவனம்தான்.
2. மளிகை போல் தண்ணீரும் ஒரு வணிகப் பொருள். இது ஆறு நீர், நிலத்தடி நீர், பாசன நீர் என்று எதுவாக இருந்தாலும் விலை உண்டு.
3. வீட்டு பயன்பாடு, விவசாயம், தொழில் என்று தண்ணீர் பயன்பாட்டை நிர்வாகம் செய்ய தண்ணீர் ஒழுங்காற்று ஆணையம் அமைக்கப்படும்.
4. தண்ணீர் பயன்படுத்துவோர் சங்கங்கள் அமைத்து அவரவர்கள் தங்களுக்கு என்று ஒதுககீடு செய்யப்பட்ட தண்ணீரை  நிர்வகித்து கொள்ள வேண்டும்.
5. மின் கட்டணத்தை உயர்த்துவது, இலவச மின்சாரத்தை ரத்து செய்வது விவசாயத்துக¢கு பயன்படுத்தும் தண்ணீரை முறைப்படுத்துவதும் இதில் அடங்கும்.
6. இவற்றை எல்லாம் விட முக்கியமானது தண்ணீர் வினியோகத்தில் அரசு சேவை வழங்குபவர் என்ற நிலையிலிருந்து சேவையை ஒழுங்குபடுத்துபவர், தண்ணீர் மேலாண்மை நிறுவனங்களுககு தேவையான வசதிகளை வழங்குபவர் என்ற நிலைககு மாறும். இதன் மூலம் சொல்வது என்னவென்றால், தண்ணீர் வினியோக சேவை என்பது சங்கங்களுககோ அல்லது அரசு , தனியார் பங்கேற்பு நிறுவனங்களின் பொறுப்புக¢கு மாற்றப்படும்.
7. நிலச் சொந்தககாரர்கள் வீட்டுமனை உரிமையாளர்கள் தங்களது நிலப் பகுதியில் கிணறு தோண்டவோ, ஆழ்துளை குழாய் கிணறு தோண்டி நிலத்தடி நீரை எடுககவோ அவருக்கு உரிமை இல்லை.
8. தேசிய அளவிலும் மாநிலங்களுக¢கு இடையிலும் ஏற்படும் தண்ணீர் தொடர்பான பிரச்னைகளை விசாரித்து தீர்வு காண மத்திய அரசு நிலையான தண்ணீர் வழக்கு நடுவர் மன்றத்தை உருவாக்கும்.
9. நீர்க் கொள்கை பற்றிய மக்களின் கருத்துக்களை கடந்த பிப்ரவரி 28ம் தேதி வரை மத்திய அரசு இணையதளம் மூலம் பெற்றுள்ளது. இவற்றை பரிசீலித்த பின்னர் நீர்க்கொள்கை பற்றிய மசோதா தயாரிக்கப்பட்டு அமைச்சரவை ஒப்புதல் பெற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.     
உரிமையை பறிக்கலாமா: சமூக ஆர்வலர் பேராசிரியர் எம்.சுப்பிரமணியம் கூறுகையில், அரசியலமைப்பு சட்டம் மாநிலங்களுக்கு வழங்கிய உரிமையை பறிப்பதாக தேசிய நீர்க்கொள்கை உள்ளது. மாநிலங்களின் மீது அதிகாரம் செலுத்தும் நடவடிக்கைதான் இது. இது அமலுக்கு வந்தால், மாநிலங்களில் விவசாயம், தண்ணீர் பயன்பாடு ஆகியவற்றை மத்திய அரசு கட்டுப்படுத்தும். அதன்படியே செயல்பட வேண்டும். நாடு முழுவதும் உள்ள நதிகள், ஆறுகள், ஏரிகள், குளங்கள், ஆழ்துளை கிணறுகள் உள்பட எல்லா நீர் ஆதாரங்களையும் அதன் நேரடி கட்டுப்பாட்டின்கீழ் எடுத்துக் கொள்ளும்.
பல்வேறு மாநிலங்கள் அடங்கிய கூட்டாட்சி தத்துவத்தில் நமது நாடு ஜனநாயக முறையில் செயல்படுகிறது. மாநிலங்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டால் அதை தீர்ப்பதற்கும் அரசியலமைப்பு சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் கொள்கை என்ற பெயரில் தண்ணீரை விலை வைத்து விற்கவும் மாநிலங்களின் உரிமைகளை பறிக்கவும் முயற்சிப்பதை தடுக்க வேண்டியது ஒவ்வொருவரின் சமூக கடமையாகும்.  தண்ணீருக்கு விலையா: தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கத்தின் தலைவர் அ.வீரப்பன் கூறுவதென்ன: தண்ணீரை எந்தக் காலத்திலும் எந்த இடத்திலும், எந்த சூழ்நிலையிலும் விற்பனை பொருளாக மாற்றி தனியாருக்கு தாரை வார்க்க அனுமதிக்கக் கூடாது. இது மக்களுக்கு செய்யும் அநீதி. அரசியலமைப்பு சட்டம் மாநிலங்களுக்கு வழங்கிய உரிமைகளை பறிக்காமல் வழிநடத்திச் செல்லலாம். அதைவிடுத்து தண்ணீருக்கு விலை நிர்ணயத்து பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில் தாரை வார்த்துக் கொடுக்கும் முயற்சியை எந்த காலத்திலும் யாரும் அனுமதிக்கக் கூடாது. நமது நாடு, கிராமங்கள் நிறைந்த ஒரு விவசாய நாடு. தண்ணீருக்கு விலை நிர்ணயம் செய்தால், அது, விவசாயிகளின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போட்டுவிடும். தாகம் தீர்க்கும் தண்ணீருக்கு விலை நிர்யணம் செய்யும் முயற்சியை தடுக்க வேண்டும்.