Friday, September 28, 2012

முக்கியத்துவம் அடைந்துவரும் வீரிய ஒட்டு மக்காச்சோளப்பயிர்

மக்காச்சோளப்பயிர் ஏற்கனவே சாகுபடியில் இருந்தது. சாதாரண ரகம் சாகுபடியில் இருந்தது. இதன் தட்டைகள் கறவை மாடுகளுக்கு கொடுக்கப்பட்டு வந்தது. மக்காச்சோளக் கதிர்கள் உலர்த்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஏக்கர் சாகுபடியில் சுமார் ரூ.7,000 வரை லாபம் கிடைத்து வந்தது.
தற்போது தஞ்சைப்பகுதியில் வீரிய ஒட்டு மக்காச்சோளம் நெல் சாகுபடியுடன் செய்யப்படுகின்றது. நெல் சாகுபடியைத் தொடர்ந்து செய்யப்பட்டதால் நிலவளம் பாதிக்கப்பட்டு வந்தது. இப்போது ஒரு போகம் வீரிய ஒட்டு மக்காச் சோளத்தையும் மற்றும் ஒரு போக நெல் சாகுபடி விவசாயிகள் செய்யத் துவங்கிவிட்டனர். வீரிய ஒட்டு மக்காச் சோளத்தை மாற்றுப்பயிர் என்று சுந்தரம் கூறுகிறார். (யார் இந்த சுந்தரம்? தினமலரைத்தான் கேக்கனும்)
தஞ்சாவூர் பகுதியில் விவசாயத்திற்கு வேலை ஆட்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. மக்காச் சோள சாகுபடி இதனால் பாதிக்கப்படுவது இல்லை.
  • இதற்கு தேவைப்படும் வேலை ஆட்கள் மிகவும் குறைவு.
  • சாகுபடியில் இயந்திரங்கள் உதவுகின்றன.
  • இயந்திரங்கள் மூலம் உழவு, விதைப்பு மற்றும் அறுவடை செய்யப்படுகின்றது.
  • வீரிய ஒட்டு மக்காச் சோளத்தை மிகக் கொடிய பூச்சி, நோய் தாக்குவது இல்லை.
மிகவும் கெட்டியான மண், அதில் வடிகால் வசதி இல்லாத நிலத்தை விட்டு மண் நல்ல வடிகால் வசதியுள்ள இடத்தில் விவசாயிகள் வீரிய ஒட்டு மக்காச் சோளத்தை சாகுபடி செய்கிறார்கள்.
மக்காசோளம்
மக்காசோளம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் எள், உளுந்து சாகுபடி கணிசமான லாபத்தைக் கொடுத்துவந்தன. இப்பயிர்களைவிட வீரிய ஒட்டு மக்காச்சோளம் அதிக பலனைத் தருகின்றது. காரணம் எள், உளுந்து சாகுபடியில் பூச்சி, வியாதி தாக்கினால் அவைகளை அழிக்க செலவு மிக அதிகம். தஞ்சாவூரில் சரியான நேரத்தில் கால்வாயில் நீர் வந்தால் குறுவைப்பயிரை சாகுபடி செய்வார் கள். தண்ணீர் வராத நிலையில் வீரிய ஒட்டு மக்காச்சோளத்தை சாகுபடி செய்தவர்கள் நல்ல வருவாய் பெற்றனர்.
வடிமுனை தண்ணீர் கிடைத்ததால் வீரிய ஒட்டு மக்காச்சோளத்தில் நல்ல வருவாயினை விவசாயிகள் பெற்றனர். தமிழகத்திற்கு மக்காச் சோளத் தேவை அதிகம். விவசாயிகள் வெளி மாநிலங்களிலிருந்து அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. தற்போது மக்காச்சோளத்தை தாங்களே சாகுபடி செய்ய இயன்றதால் விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
விளைச்சல் 2 2லீ டன். கிலோ ரூ.12 வீதம் வரவு-30,000.00. நிகர லாபம் – 17,700.00
தரமான வீரிய ஒட்டு மக்காச்சோள விதைகள் கம்பெனிகாரர்கள் விவசாயிகளுக்கு கொடுத்தார்கள். இதனால் விதை கிடைக்காத நிலை தோன்றவில்லை.
வீரிய ஒட்டு மக்காச்சோளத்தின் வயது 100-110 நாட்கள். கோடையில் விவசாயிகள் மார்ச் 15 முதல் ஏப்ரல் 15க்குள் சாகுபடி செய்யலாம். குறுவை சாகுபடி சமயம் மே 15 தேதியில் இருந்து ஜூன் 7ம் தேதி வரை சாகுபடி செய்யலாம். இம்மாதிரியான அனுபவங்கள் விவசாயிகளுக்கு மக்காச்சோளத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும்.
மானாவாரி சாகுபடியில் பலன் தந்த மக்காச்சோளம்:
சேலம், நாமக்கல், தர்மபுரி போன்ற மாவட்டங்களில் விவசாயிகள் மானாவாரியில் மக்காச்சோளம் சாகுபடி செய்தனர். நல்ல பலன் கிடைத்ததால் மக்காச்சோளம் விவசாயிகளால் விரும்பப்படுகிறது. விவசாய அதிகாரிகள் விவசாயிகளை ஊக்குவிக்கின்றனர். கிருஷ்ணகிரி, ஓசூர், பாகலூர் இங்கெல்லாம் அதிக நிலப்பரப்பில் விவசாயிகள் மக்காச்சோளத்தை பயிரிடுகின்றனர். இப்பகுதிகளிலும் மக்காச்சோளம் முக்கியத்துவம் அடைந்து வருகின்றது.
முக்கியத்துவத்தைப் பற்றி பேசும்போது மக்காச்சோளக் கதிர்களை மக்கள் வேகவைத்து சாப்பிடுவதைப்பற்றியும் பேச வேண்டும்.தள்ளுவண்டியில் ரோட்டில் மக்காச்சோளக் கதிர்களை விற்பதைப் பார்த்தோம். திடீரென்று இந்த காட்சி மாறி வருகின்றது. தற்போது குளிர்சாதன வசதி கொண்ட பெரிய கடைகளில் மக்காச்சோளத்தை பலவிதமாக தயாரித்து விற்று வருவது ஆகும். இச்சூழ்நிலையில் நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் மக்காச்சோள சாகுபடி அதிகரிக்கக் கூடும் என்பதாகும். இதை மனதில் கொண்டுதான் சுந்தரம் மக்காச்சோளம் சீக்கிரம் தமிழகத்தில் ஒரு மாற்றுப்பயிர் ஆகக்கூடும் என்கிறார்.
தினமலர் செய்தி
எஸ்.எஸ்.நாகராஜன்
திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த விவசாயி சுந்தரம்

No comments: