Tuesday, August 28, 2012

இயற்கை விவசாய ஆர்வலர்களுக்கு ஒரு நற்செய்தி

இயற்கை விவசாய ஆர்வலர்களுக்கு ஒரு நற்செய்தி



நேற்றைய தினத்தந்தியில் வந்த செய்தி. இந்தியாவில் இயற்கை விளை பொருட்கள் விற்பனை ரூ. 1000 கோடியாக உயர்வு. மேலும் விபரங்கள்.

தனியார் துறையைச் சேர்ந்த “யெஸ் பேங்க்” அண்மையில் ஒரு ஆய்வு மேற்கொண்டது. இவ்வங்கியின் “இந்திய இயற்கை உணவுப் பொருள்கள் சந்தை” என்ற ஆய்வறிக்கையில் நம் நாட்டில் இயற்கையான முறைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் மற்றும் தயாரிப்புகள் பெருகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள் நாட்டில் இச்சந்தை 22 சதம் சராசரி வளர்ச்சி கண்டு வருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இது ஒரு நல்ல அறிகுறி. மக்கள் மத்தியில் இயற்கை விவசாயத்தைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது என்பதற்கு இந்த செய்தி நல்ல ஆதாரம். என்னென்ன பயிர்களில் இந்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதென்றால், தேயிலை, பாசுமதி அரிசி, பருப்பு, பருத்தி, நறுமணப்பொருள்கள், எண்ணை வித்துக்கள் ஆகிய பயிர்களில் ஏற்றுமதி ஆகும் பொருள்கள் இந்த விழிப்புணர்வின் கீழ் வருகின்றன.

ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருள்களுக்கும் நல்ல விலை கிடைக்கும் என்பது தெரியும். அது மட்டுமல்லாமல் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருள்கள் என்றால் நிச்சயம் கூடுதல் விலை கிடைக்கும். இந்த ஊக்கத்தினால்தான் இந்தப் பொருள்களின் உற்பத்தி அதிகரித்து இருக்கிறது.

எப்படியோ, விவசாயிகளுக்குப் பயன் கிடைத்தால் மகிழ்ச்சியே. இந்தியாவில் வசிப்பவர்களுக்கு நேரடியாக இந்த விற்பனை அதிகரிப்பால் பயன் ஏதும் இல்லை. நாம் வழக்கம்போல் செயற்கை விவசாயத்தில் விளைந்த நச்சு கலந்த உணவைச் சாப்பிடுவோம்.

Thanks : சாமியின் மனஅலைகள்

நோய்களை நீக்க வாழை பழத்தை எப்படிப் பயன்படுத்தலாம்

http://senthilvayal.files.wordpress.com/2012/08/ht1410_thumb.jpgநெஞ்சுக்கரிக்கும் போது ஒரு பழம் சாப்பிட்டால் எரிச்சல் நீங்கி விடும். இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத்தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கிறது. கர்ப்பிணிகள் வாழைப்பழம் சாப்பிட்டால் வயிற்றுப் புரட்டலை தடுக்கும். இதிலுள்ள சர்க்கரை ரத்தத்தில் கலந்து வாந்தியைத் தடுக்கிறது.
நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கலைத் தடுக்கும். இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது வாழைப்பழம்.
குடிபோதையை நீக்க சிறந்தது. இதனை மில்க்ஷேக் செய்து தேன் கலந்து பருகினால் வயிற்றைச் சுத்தம் செய்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும். உடலில் நீர்ச்சத்தையும் அதிகரிக்கச் செய்யும். மிக ஆரோக்கியமான, ஒரு கெடுதலும் தராத பழவகை இது. இதில் அதிகமான பொட்டாசியம் இருப்பதால் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு சாப்பிடச் சொல்வார்கள்.
இதில் சோடியம் உப்பு குறைவாக இருப்பதால் ரத்த அழுத்தக்காரர்கள் சாப்பிடலாம். குழந்தைகளின் ஊட்டத்துக்குச் சிறந்தது. கால்களில் ஆடுசதையில் சட்டென்று பிடித்திழுக்கும். இது பொட்டாசியம் குறைவால் வருகிறது. தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் இதைத் தடுக்கலாம்.
பூவன் : இந்த பழத்தை கதலி என்றும் அழைப்பார்கள். மலச்சிக்கல், மூலநோயால் அவதிப்படுவோருக்கு இந்த பழம் மிகவும் நல்லது.
பேயன் பழம் : குடற்புண் தீர்க்கும். வயிற்றுப் புண்ணால் அவதிப்படுபவர்கள் தினம் ஒரு பேயன் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தாலே போதும்.
மலைவாழை : சோகையை நீக்கும். எளிதில் ஜீரணத்தை உண்டாக்கி மலச்சிக்கலைப் போக்குகிறது இந்த மலைவாழை.
ரஸ்தாலி : இதில் மருத்துவ குணங்கள் குறைவு. ஆனால் சுவை அதிகம். செவ்வாழை பலமளிக்கும். மொந்தன் காமாலைக்கு நல்லது.
பச்சைவாழை: வெப்பத்தைக் குறைக்கும். நவரை வாழை கரப்பான் நோயை அதிகப்படுத்தும்.
வாழைப்பழத்தில் எந்த வகையானாலும், அஜீரணத்தைப் போக்குவதுடன், உடலில் தங்கும் தேவையற்ற பொருட்களை வெளிக்கொண்டு வரப் பயன்படுகிறது
தொடர்ந்து இருமல் இருந்து வந்தால் கருமிளகு கால் தேக்கரண்டி எடுத்து பொடி செய்து கொள்ளுங்கள். அதில் பழுத்த நேரந்திரம் பழத்தை கலந்து இரண்டு மூன்று வேளை சாப்பிட்டு வர இருமல் சரியாகும்.
காசநோய் உள்ளவர்கள் அரை கப் தயிரில் வாழைப்பழத்தை பிழிந்து, ஒரு தேக்கரண்டி தேன், ஒரு டம்ளர் இளநீர் ஆகியவை சேர்த்து தினமும் இரண்டு வேளை வீதம் சாப்பிட்டு வர அந்த பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபடலாம். சின்னம்மை, டைபாய்டு, மஞ்சள் காமாலை ஆகியவற்றுக்கு தேனில் வாழைப்பழத்தைப் பிசைந்து தினமும் இரு வேளை வீதம் சாப்பிட வேண்டும்.
பசும்பாலுடன் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டுவர அஜீரணம் சரியாகும். தொடர்ந்து தினமும் 2-3 வேளை இவ்வாறு சாப்பிட்டு வந்தால் மூலநோய் தீரும்.
காய்ச்சல் வருவதுபோல் உணர்ந்தால் ஒரு வாழைப்பழத்தை உடனே சாப்பிடுங்கள்.

How many megapixels does the human eye have???

How many megapixels does the human eye have???

you see things one way, and your camera sees things differently.
So, what is the resolution of the human eye, at which a camera would be able to truly capture an image the way the eye sees it?

The answer is 576MP, the technical breakdown is as follows:

Consider a view in front of you that is 90 degrees by 90 degrees, like looking through an open window at a scene. The number of pixels would be 90 degrees * 60 arc-minutes/degree * 1/0.3 * 90 * 60 * 1/0.3 = 324,000,000 pixels (324 megapixels).

At any one moment, you actually do not perceive that many pixels, but your eye moves around the scene to see all the detail you want. But the human eye really sees a larger field of view, close to 180 degrees. Let’s be conservative and use 120 degrees for the field of view.

Then we would see 120 * 120 * 60 * 60 / (0.3 * 0.3) = 576 megapixels.

The full angle of human vision would require even more megapixels. This kind of image detail requires A large format camera to record.

Therefore, once our cameras reach 576MP, the pictures you take with your camera will look exactly the same as you see them.

ஜன்னல் தோட்டம்

இந்தியாவுக்கும், ஜெர்மனிக்குமான தொடர்புகளை மேம்படுத்தும் வகையில், "இந்தியாவும், ஜெர்மனியும் 2011-12: எண்ணற்ற வாய்ப்புகள்' என்ற தலைப்பில், மும்பை, பெங்களூர் போன்ற மாநகரங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தற்போது, சென்னையிலும், இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்டுள்ளது. நகர மயமாதலின் தாக்கங்களை எடுத்துக்காட்டும் இந்நிகழ்ச்சி, இந்தியாவிலும், ஜெர்மனியிலும் நகரங்கள் எதிர்நோக்கியுள்ள மாற்றங்களையும், சவால்களையும் விளக்குகிறது.

ஜன்னல் தோட்டம்:

நகரங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளை, சமாளிப்பதற்கான பல்வேறு கருத்துருக்கள் முன்வைக்கப்பட்டன. அதில் ஒன்று, ஜன்னல் தோட்டம். ஏற்கனவே, வளர்ந்த நாடுகள் மாடித்தோட்டம் என்ற, நகர விவசாயத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, ஜன்னல் தோட்டங்களை நிறுவினால், கூடுதல் சத்தான காய்கறிகள் வீடுகளிலேயே கிடைக்கும் என்கின்றனர் ஜெர்மானிய வல்லுனர்கள். மாடித்தோட்டம் அமைக்க இயலாதவர்கள், அதற்கு, மாற்றாக ஜன்னல் தோட்டங்களை அமைக்கலாம்.

எப்படி அமைப்பது?

பரு முனையை வட்ட வடிவமாக வெட்டி, அதற்குள், மற்றொரு பிளாஸ்டிக் பாட்டிலின் நுனிப்பகுதியை இணைக்க வேண்டும். இப்போது, இரண்டு பாட்டில்களுக்கும் தொடர்பு ஏற்படும். அதே போல் பத்துக்கும் மேற்பட்ட பாட்டில்களை, இணைக்க வேண்டும். பின், ஒவ்வொரு பாட்டிலிலும், இதற்கென்றே பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள சிறு மண் சத்து உருண்டைகளை இட்டு, அடுத்தடுத்த பாட்டில்களுக்குள் தண்ணீர் செல்லும் வகையில், வடிவமைக்க வேண்டும். பாட்டில்களுக்கு தண்ணீர் செலுத்தும் வகையில், இரண்டு பெரிய கேன்களில் இணைக்க வேண்டும். (பார்க்க: படம்) அதிலிருந்து செல்லும் தண்ணீர், அனைத்து பாட்டில்களிலும், பாயும். அதில் செடிகள் வளர்க்கலாம்.
சத்தான காய்கறிகள்:

ஜன்னல் தோட்டம் அமைப்பதால், வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை நாமே பயிர் செய்து கொள்ளலாம். வயல்வெளிகளில் விரைவில் விளைச்சல் காணவும், அதிக உற்பத்தியை பெருக்கவும் பூச்சி மருந்துகளையும், பல்வேறு நவீன உரங்களையும் இடுகின்றனர். இதனால் காய்கறிகளில் இருக்கும் இயற்கைச் சத்துகள் அருகி வருகின்றன. ஜன்னல் தோட்டம் அமைத்தால், வீட்டிற்கு தேவையான காய்கறிகளை நாமே பயிர் செய்து கொள்ளலாம்.
வீட்டில் மருந்தகம்:

ஜன்னல் தோட்டத்தில் காய்கறி செடிகள் வளர்ப்பவர்கள், மூலிகைச் செடிகளையும் வளர்க்கலாம். குறிப்பாக இந்திய மண்ணுக்கு ஏற்றவாறு, அகத்தி, ஆடுதிண்டாப் பாளை, ஆடாதொடை, இஞ்சி, ஊமத்தை, எலுமிச்சை, துளசி, ஓமவல்லி, கண்டங்கத்திரி, கரிசலாங்கண்ணி, பிரண்டை, கீழாநெல்லி, சிறுகுறிஞ்சான், திருநீற்றுப் பச்சிலை, தூதுவளை, பொன்னாங்கன்னி, மணத்தக்காளி உள்ளிட்ட மூலிகை பயிர்களை வளர்ப்பதன் மூலம், காமாலை, இருமல், காய்ச்சல், கண்புகைச்சல், வாய்ப்புண் போன்ற நோய்களை தவிர்க்கவல்ல பல்வேறு விதமான பயிர்களை வீட்டிலேயே வளர்க்கலாம். பின்விளைவுகள் இல்லாத இயற்கை மருந்துகள் எளிதாக நமது வீட்டு மாடியிலேயே கிடைக்கும். மேலும், வீட்டில் வளர்க்கும் மூலிகைப் பயிர்களின் வாசம் நம் வீட்டிற்கு மட்டுமின்றி, அண்டை வீடுகளுக்கும் வீசுவதால், உடல் சுவாசத்துக்கு ஆரோக்கியம் கொடுக்கிறது.

Saturday, August 25, 2012

தமிழகத்தின் 234 எம்எல்ஏக்களுக்கு தனி மின்னஞ்சல் முகவரி

தமிழகத்தின் 234 எம்எல்ஏக்களுக்கு தனி மின்னஞ்சல் முகவரி



1  Acharapakkam - mlaacharapakkam@tn.gov.in
2  Alandur - mlaalandur@tn.gov.in
3  Alangudi - mlaalangudi@tn.gov.in
4  Alangulam - mlaalangulam@tn.gov.in
5  Ambasamudram -- mlaambasamudram@tn.gov.in
6  Anaicut -- mlaanaicut@tn.gov.in
7  Andhiyur --mlaandhiyur@tn.gov.in
8  Andimadam --- mlaandimadam@tn.gov.in
9  Andipatti----mlaandipatti@tn.gov.in
10 AnnaNagar--- mlaannanagar@tn.gov.in
11 Arakkonam ----mlaarakkonam@tn.gov.in
12 Arantangi-- mlaarantangi@tn.gov.in
13 Aravakurichi --- mlaaravakurichi@tn.gov.in
14 Arcot --- mlaarcot@tn.gov.in
15 Ariyalur --mlaariyalur@tn.gov.in
16 Arni -- mlaarni@tn.gov.in
17 Aruppukottai ---mlaaruppukottai@tn.gov.in
18 Athoor--- mlaathoor@tn.gov.in
19 Attur ---mlaattur@tn.gov.in
20 Avanashi ---mlaavanashi@tn.gov.in
21 Bargur ---mlabargur@tn.gov.in
22 Bhavani---mlabhavani@tn.gov.in
23 Bhavanisagar---mlabhavanisagar@tn.gov.in
24 Bhuvanagiri-----mlabhuvanagiri@tn.gov.in
25 Bodinayakkanur----mlabodinayakkanur@tn.gov.in
26 Chengalpattu-----mlachengalpattu@tn.gov.in
27 Chengam---mlachengam@tn.gov.in
28 Chepauk---mlachepauk@tn.gov.in
29 Cheranmahadevi---mlacheranmahadevi@tn.gov.in
30 Cheyyar---mlacheyyar@tn.gov.in
31 Chidambaram---mlachidambaram@tn.gov.in
32 Chinnasalem---mlachinnasalem@tn.gov.in
33 CoimbatoreEast----mlacoimbatoreeast@tn.gov.in
34 CoimbatoreWest----mlacoimbatorewest@tn.gov.in
35 Colachel---mlacolachel@tn.gov.in
36 Coonoor----mlacoonoor@tn.gov.in
37 Cuddalore---mlacuddalore@tn.gov.in
38 Cumbum---mlacumbum@tn.gov.in
39 Dharapuram---mladharapuram@tn.gov.in
40 Dharmapuri---mladharmapuri@tn.gov.in
41 Dindigul---mladindigul@tn.gov.in
42 Edapadi---mlaedapadi@tn.gov.in
43 Egmore---mlaegmore@tn.gov.in
44 Erode----mlaerode@tn.gov.in
45 Gingee---mlagingee@tn.gov.in
46 Gobichettipalayam---mlagobichettipalayam@tn.gov.in
47 Gudalur----mlagudalur@tn.gov.in
48 Gudiyatham----mlagudiyatham@tn.gov.in
49 Gummidipundi----mlagummidipundi@tn.gov.in
50 Harbour-----mlaharbour@tn.gov.in
51 Harur----mlaharur@tn.gov.in
52 Hosur---mlahosur@tn.gov.in
53 Ilayangudi---mlailayangudi@tn.gov.in
54 Jayankondam---mlajayankondam@tn.gov.in
55 Kadaladi---mlakadaladi@tn.gov.in
56 Kadayanallur---mlakadayanallur@tn.gov.in
57 Kalasapakkam----mlakalasapakkam@tn.gov.in
58 Kancheepuram---mlakancheepuram@tn.gov.in
59 Kandamangalam----mlakandamangalam@tn.gov.in
60 Kangayam---mlakangayam@tn.gov.in
61 Kanniyakumari----mlakanniyakumari@tn.gov.in
62 Kapilamalai----mlakapilamalai@tn.gov.in
63 Karaikudi----mlakaraikudi@tn.gov.in
64 Karur----mlakarur@tn.gov.in
65 Katpadi----mlakatpadi@tn.gov.in
66 Kattumannarkoil---mlakattumannarkoil@tn.gov.in
67 Kaveripattinam---mlakaveripattinam@tn.gov.in
68 Killiyoor----mlakilliyoor@tn.gov.in
69 Kinathukadavu---mlakinathukadavu@tn.gov.in
70 Kolathur---mlakolathur@tn.gov.in
71 Kovilpatti---mlakovilpatti@tn.gov.in
72 Krishnagiri----mlakrishnagiri@tn.gov.in
73 Krishnarayapuram---mlakrishnarayapuram@tn.gov.in
74 Kulithalai----mlakulithalai@tn.gov.in
75 Kumbakonam---mlakumbakonam@tn.gov.in
76 Kurinjipadi---mlakurinjipadi@tn.gov.in
77 Kuttalam---mlakuttalam@tn.gov.in
78 Lalgudi---mlalalgudi@tn.gov.in
79 MaduraiCentral---mlamaduraicentral@tn.gov.in
80 MaduraiEast---mlamaduraieast@tn.gov.in
81 MaduraiWest----mlamaduraiwest@tn.gov.in
82 Maduranthakam----mlamaduranthakam@tn.gov.in
83 Manamadurai----mlamanamadurai@tn.gov.in
84 Mangalore----mlamangalore@tn.gov.in
85 Mannargudi----mlamannargudi@tn.gov.in
86 Marungapuri-----mlamarungapuri@tn.gov.in
87 Mayiladuturai----mlamayiladuturai@tn.gov.in
88 Melmalaiyanur---mlamelmalaiyanur@tn.gov.in
89  Melur---mlamelur@tn.gov.in
90  Mettupalayam---mlamettupalayam@tn.gov.in
91  Mettur---mlamettur@tn.gov.in
92  Modakkurichi---mlamodakkurichi@tn.gov.in
93  Morappur---mlamorappur@tn.gov.in
94  Mudukulathur---mlamudukulathur@tn.gov.in
95  Mugaiyur----mlamugaiyur@tn.gov.in
96  Musiri---mlamusiri@tn.gov.in
97  Mylapore---mlamylapore@tn.gov.in
98  Nagapattinam----mlanagapattinam@tn.gov.in
99  Nagercoil---mlanagercoil@tn.gov.in
100 Namakkal---mlanamakkal@tn.gov.in
101 Nanguneri---mlananguneri@tn.gov.in
102 Nannilam----mlanannilam@tn.gov.in
103 Natham-----mlanatham@tn.gov.in
104 Natrampalli----mlanatrampalli@tn.gov.in
105 Nellikkuppam----mlanellikkuppam@tn.gov.in
106 Nilakottai---mlanilakottai@tn.gov.in
107 Oddanchatram---mlaoddanchatram@tn.gov.in
108 Omalur---mlaomalur@tn.gov.in
109 Orathanad---mlaorathanad@tn.gov.in
110 Ottapidaram---mlaottapidaram@tn.gov.in
111 Padmanabhapuram----mlapadmanabhapuram@tn.gov.in
112 Palacode---mlapalacode@tn.gov.in
113 Palani----mlapalani@tn.gov.in
114 Palayamkottai---mlapalayamkottai@tn.gov.in
115 Palladam---mlapalladam@tn.gov.in
116 Pallipattu---mlapallipattu@tn.gov.in
117 Panamarathupatti---mlapanamarathupatti@tn.gov.in
118 Panruti---mlapanruti@tn.gov.in
119 Papanasam---mlapapanasam@tn.gov.in
120 Paramakudi---mlaparamakudi@tn.gov.in
121 ParkTown----mlaparktown@tn.gov.in
122 Pattukkottai----mlapattukkottai@tn.gov.in
123 Pennagaram-----mlapennagaram@tn.gov.in
124 Perambalur----mlaperambalur@tn.gov.in
125 Perambur---mlaperambur@tn.gov.in
126 Peranamallur---mlaperanamallur@tn.gov.in
127 Peravurani---mlaperavurani@tn.gov.in
128 Periyakulam---mlaperiyakulam@tn.gov.in
129 Pernambut---mlapernambut@tn.gov.in
130 Perundurai---mlaperundurai@tn.gov.in
131 Perur---mlaperur@tn.gov.in
132 Pollachi---mlapollachi@tn.gov.in
133 Polur---mlapolur@tn.gov.in
134 Pongalur---mlapongalur@tn.gov.in
135 Ponneri---mlaponneri@tn.gov.in
136 Poompuhar---mlapoompuhar@tn.gov.in
137 Poonamallee----mlapoonamallee@tn.gov.in
138 Pudukkottai----mlapudukkottai@tn.gov.in
139 Purasawalkam----mlapurasawalkam@tn.gov.in
140 Radhapuram---mlaradhapuram@tn.gov.in
141 Rajapalayam---mlarajapalayam@tn.gov.in
142 Ramanathapuram---mlaramanathapuram@tn.gov.in
143 Ranipet---mlaranipet@tn.gov.in
144 Rasipuram----mlarasipuram@tn.gov.in
145 Rishivandiyam----mlarishivandiyam@tn.gov.in
146 Dr.RadhakrishnanNagar----mlarknagar@tn.gov.in
147 Royapuram---mlaroyapuram@tn.gov.in
148 Saidapet---mlasaidapet@tn.gov.in
149 Salem -I---mlasalem1@tn.gov.in
150 Salem-II---mlasalem2@tn.gov.in
151 Samayanallur---mlasamayanallur@tn.gov.in
152 Sankaranayanarkoi---mlasankaranayanarkoil@tn.gov.in
153 Sankarapuram---mlasankarapuram@tn.gov.in
154 Sankari---mlasankari@tn.gov.in
155 Sathyamangalam---mlasathyamangalam@tn.gov.in
156 Sattangulam----mlasattangulam@tn.gov.in
157 Sattur---mlasattur@tn.gov.in
158 Sedapatti----mlasedapatti@tn.gov.in
159 Sendamangalam----mlasendamangalam@tn.gov.in
160 Sholavandan---mlasholavandan@tn.gov.in
161 Sholinghur----mlasholinghur@tn.gov.in
162 Singanallur---mlasinganallur@tn.gov.in
163 Sirkazhi----mlasirkazhi@tn.gov.in
164 Sivaganga----mlasivaganga@tn.gov.in
165 Sivakasi---mlasivakasi@tn.gov.in
166 Sriperumbudur---mlasriperumbudur@tn.gov.in
167 Srirangam---mlasrirangam@tn.gov.in
168 Srivaikuntam---mlasrivaikuntam@tn.gov.in
169 Srivilliputhur---mlasrivilliputhur@tn.gov.in
170 Talavasal---mlatalavasal@tn.gov.in
171 Tambaram---mlatambaram@tn.gov.in
172 Taramangalam---mlataramangalam@tn.gov.in
173 Tenkasi----mlatenkasi@tn.gov.in
174 Thalli---mlathalli@tn.gov.in
175 Thandarambattu---mlathandarambattu@tn.gov.in
176 Thanjavur---mlathanjavur@tn.gov.in
177 Theni---mlatheni@tn.gov.in
178 Thirumangalam---mlathirumangalam@tn.gov.in
179 Thirumayam---mlathirumayam@tn.gov.in
180 Thirupparankundram---mlathirupparankundram@tn.gov.in
181 Thiruvattar---mlathiruvattar@tn.gov.in
182 Thiruverambur---mlathiruverambur@tn.gov.in
183 Thiruvidamarudur---mlathiruvidamarudur@tn.gov.in
184 Thiruvonam---mlathiruvonam@tn.gov.in
185 Thiruvottiyur---mlathiruvottiyur@tn.gov.in
186 Thondamuthur---mlathondamuthur@tn.gov.in
187 Thottiam---mlathottiam@tn.gov.in
188 Tindivanam---mlatindivanam@tn.gov.in
189 Tiruchendur---mlatiruchendur@tn.gov.in
190 Tiruchengode----mlatiruchengode@tn.gov.in
191 Tirunavalur----mlatirunavalur@tn.gov.in
192 Tirunelveli---mlatirunelveli@tn.gov.in
193 Tiruppattur-194----mlatiruppattur194@tn.gov.in
194 Tiruppattur-41---mlatiruppattur41@tn.gov.in
195 Tirupporur----mlatirupporur@tn.gov.in
196 Tiruppur----mlatiruppur@tn.gov.in
197 Tiruthuraipundi----mlatiruthuraipundi@tn.gov.in
198 Tiruttani----mlatiruttani@tn.gov.in
199 Tiruvadanai---mlatiruvadanai@tn.gov.in
200 Tiruvaiyaru----mlatiruvaiyaru@tn.gov.in
201 Tiruvallur---mlatiruvallur@tn.gov.in
202 Tiruvannamalai----mlatiruvannamalai@tn.gov.in
203 Tiruvarur----mlatiruvarur@tn.gov.in
204 TheagarayaNagar----mlatnagar@tn.gov.in
205 Tiruchirapalli-I---mlatrichy1@tn.gov.in
206 Tiruchirapalli-II---mlatrichy2@tn.gov.in
207 Triplicane----mlatriplicane@tn.gov.in
208 Tuticorin---mlatuticorin@tn.gov.in
209 Udagamandalam---mlaudagamandalam@tn.gov.in
210 Udumalpet---mlaudumalpet@tn.gov.in
211 Ulundurpet---mlaulundurpet@tn.gov.in
212 Uppiliyapuram---mlauppiliyapuram@tn.gov.in
213 Usilampatti---mlausilampatti@tn.gov.in
214 Uthiramerur---mlauthiramerur@tn.gov.in
215 Valangiman----mlavalangiman@tn.gov.in
216 Valparai----mlavalparai@tn.gov.in
217 Vandavasi----mlavandavasi@tn.gov.in
218 Vaniyambadi----mlavaniyambadi@tn.gov.in
219 Vanur----mlavanur@tn.gov.in
220 Varahur-----mlavarahur@tn.gov.in
221 Vasudevanallur---mlavasudevanallur@tn.gov.in
222 Vedaranyam---mlavedaranyam@tn.gov.in
223 Vedasandur---mlavedasandur@tn.gov.in
224 Veerapandi---mlaveerapandi@tn.gov.in
225 Vellakoil---mlavellakoil@tn.gov.in
226 Vellore---mlavellore@tn.gov.in
227 Vilathikulam---mlavilathikulam@tn.gov.in
228 Vilavancode---mlavilavancode@tn.gov.in
229 Villivakkam---mlavillivakkam@tn.gov.in
230 Villupuram---mlavillupuram@tn.gov.in
231 Virudhunagar----mlavirudhunagar@tn.gov.in
232 Vridhachalam---mlavridhachalam@tn.gov.in
233 Yercaud---mlayercaud@tn.gov.in
234 ThousandLights---mlathousandlights@tn.gov.in

Thursday, August 23, 2012

தண்ணீரில் நடக்கும் பல்லி

பல்லிகள் நம் வீட்டுச்சுவர்களில் தலைகீழாக நடக்கும். தரையிலும் தனது பூச்சி உள்ளிட்ட இரைகளை துரத்திப் போய் பிடிக்கும். ஆனால் இதே பல்லிகள் தண்ணீரைக் கண்டால் மட்டும் கப்சிப்பாகி விடும்.


  ஆனால் ஒருவகைப் பல்லிகள் தண்ணிரிலும் சர்வ சாதாரணமாக நடந்து பயணிக்கின்றன.
இந்த பல்லியின் நீளம் ரெயில் பெட்டி மாதிரி கொஞ்சம் நீளம். (சுமார் 2 அடி) ஒல்லியான இதன் உடல் வாகும் இது தண்ணீரில் பாய்ந்து செல்ல உதவுகிறது.
எதிரிகளிடம் இருந்து தப்பிக்க வேண்டிய சூழ்நிலை வரும்போது இந்த பல்லிகள் தண்ணிரில் வேகவேகமாக நடப்பதை வழக்கத்தில் வைத்திருக்கின்றன.
இந்தப் பல்லி தண்ணிரில் நடக்கும் ரகசியம், இதன் அகன்ற பின்புற கால்கள். ஒவ்வொரு விரலுக்கும் இடையில் உள்ள ஜவ்வு தண்ணீரில் நேராக நடக்க உதவுகிறது. அப்படி தண்ணீரில் இவ்வகைப் பல்லிகள் நடக்கும்போது தன் பின்னங்கால்களையே பயன் படுத்துகிறது.
மத்திய அமெரிக்காவில் தண்ணீர் கரையோரங்களில், ஏரிகளில், கால்வாய்களில் இந்த பல்லிகள் தண்ணீரில் நடப்பதை முதன்முதலாக பார்ப்பவர்கள் பிரமித்துப் போவார்கள்.
பூச்சிகள், பழங்கள், சிலவகை இலை தழைகள் இந்த பல்லிகளின் விருப்ப உணவு.
ஒரு இரவு நேரத்தில் நடுக்கடலுக்குள் இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் படகில் சென்று கொண்டிருக்க, அவர்களின் எதிரே தூரத்தில் இயேசு கிறிஸ்து கடலில் நடந்து வந்து கொண்டிருந்தார். இதைப் பார்த்ததும் முதலில் அவரது சீடர்கள் தங்களை நோக்கி வரு பவர் இயேசு தான் என்பதை அறியாமல் பயத்தில் அலறினார்கள். பிறகு இயேசு அவர்கள் அருகில் வந்து அவர்கள் பயத்தை போக்கினார் என்கிறது, பைபிள்.
தண்ணீரில் நடக்கும் இந்த பல்லிக்கு `ஜீசஸ் லிசார்டு' என்று பெயர். முந்தின பாராவை படித்ததுமே பல்லிக்கான பெயர்க் காரணம் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

Tuesday, August 21, 2012

ஏலக்காயின் சிறந்த மருத்துவ குணங்கள்!


ஏலக்காயின் சிறந்த மருத்துவ குணங்கள்!

சமையலில் வாசனைக்காக அனைத்து உணவுகளிலும் பயன்படுத்தும் ஒரு பொருள் தான் ஏலக்காய். அதிலும் இந்த ஏலக்காய் இந்திய உணவுகளிலேயே அதிகமாக பயன்படுத்தப்படும். சொல்லப்போனால், அந்த பொருள் பயன்படுத்தாத உணவுகளே இல்லை என்றே கூறலாம்.

மேலும் சிலர் அந்த ஏலக்காய் பிடிக்காது என்பதற்காக அதனை சேர்க்காமல் இருப்பர். ஏனெனில் மசாலா பொருளான ஏலக்காயை உணவில் சேர்ப்பதால் என்ன பயன் என்பது
பலருக்கும் தெரியாது. ஆகவே அதன் உண்மையான மருத்துவ குணம் என்னவென்று சற்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்.

* ஒரு மசாலாப் பொருள் என்பதால், அதை உணவில் சேர்க்கும் போது உடலில் இருக்கும் வயிற்றுத் தொல்லைகள் போன்றவற்றை சரி செய்யும். மேலும் உடலில் செரிமானமும் நன்கு நடைபெறும்.

* ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது மூச்சுக்குழாயில் பிரச்சனை இருப்பவர்கள், அதனை சாப்பிட்டால், சரியாகிவிடும். அதிலும் ஏலக்காயை தேனுடன் கலந்து சாப்பிட்டால் தொண்டை வலி, இருமல் போன்றவை குணமாகும்.

* ஏலக்காயின் முக்கியமான பயன் என்னவென்றால். சூரிய வெப்பத்தால், உடலில் வெப்பம் அதிகம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். மேலும் பக்கவாதம் வராது. அதிலும் வெளியே செல்லும் போது ஏலக்காயை வாயில் போட்டு மென்று சென்றால், வெப்ப அலைகள் உடலை தாக்காமல் பார்த்துக் கொள்ளும்.

* இந்தியாவில் சில இடங்களில் ஏலக்காய் பொடி மற்றும் சந்தனப் பொடியை பேஸ்ட் போல் செய்து, தலை வலிக்கும் போது தடவுவார்கள். மேலும் சிலர் குடிக்கும் டீ-யில் ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைத்து குடிப்பார்கள். இதனாலும் தலை வலி குறைந்துவிடும்.

* ஆயுர்வேத கொள்கையின் படி, ஏலக்காய் உடலில் உள்ள மூன்று தோஷங்களான வாதம், பித்தம், கபம் போன்றவற்றிற்கு சிறந்தது. இவை உடலில் இந்த மூன்றையும் சமநிலையில் வைத்து, உடலை ஆரோக்கியமாக வைக்கிறது என்று சொல்லப்படுகிறது.

ஆகவே இதனை உண்டால் நன்கு ஆரோக்கியமாக வாழலாம். மேலும் அதனை உண்பதால், நல்ல குரல் வளத்தையும் பெற முடியும். ஆகவே இனிமேலாவது ஏலக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்துடன் வாழலாம். பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

நன்றி : மாலை மலர்

தாலி கட்டுவது ஏன்?

தாலி கட்டுவது ஏன்?
-------------------------------
தாலி என்பது மணமகன்,மணமகள் கழுத்தில் கட்டும் மஞ்சள் கயிறு ஆகும்.மஞ்சள் நிறம் இந்துக்களின் புனித நிறம் ஆகும்.மேலும் தாலி என்பது ஒரு பெண்ணுக்கு அடையாள சின்னமாகும்.தலைநிமிர்ந்து நடந்து வரும் ஆடவர்,ஒரு பெண்ணை பார்க்கும்பொழுது,கழுத்தில் தாலியை பார்க்கும் பொழுது இவள் மற்றவருக்கு உரியவள் என ஒதுங்கி போய்விடுவார்.

தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர். ஆயின் தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில் செய்வதால் அல்ல. வெறுமே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி கழுத்தில் முடிச்சுப் போடுவது கூடத் தாலி தான். (இயல் மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல் வற்றவைத்த மஞ்சளுக்குத் தான் விரலி மஞ்சள் என்று பெயர். வ
ிரல் விரலாய் இருக்கும் மஞ்சள் விரலி மஞ்சள். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்கள்.) தாலியின் சூழ்க்குமம் “மஞ்சள், கயிறு, கட்டுதல்” ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே ஒழிய, பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை.

இன்னார் மகன், இன்னார் மகளை இன்னார் சம்மதத்துடன் இன்னார் முன்னிலையில் இந்த நேரத்தில் இந்நாளில் கல்யாணம் செய்துகொள்வதாக அனைவரும் கையொப்பமிட அந்த தாலியினை கயிற்றில் கோர்த்து மணமகளின் கழுத்தில் மணமகன் கட்டியதாக சாஸ்திரம் கூறுகிறது.

தாலி என்பது ஆரியர்களுக்கு பிறகு வந்த பழக்கம் என சிலர் கூறுவர்.ஆனால் அது தவறாகும்.பண்டைய காலத்திலேயிருந்து தமிழர்கள் பின்பற்றிவந்த ஒரு சம்பிரதாயமாகும்.பண்டைய இலக்கியங்களில் இதை மங்கள நாண் என்று கூறப்பட்டுள்ளது.

மாங்கல்ய சரடானது ஒன்பது இழைகளை கொண்டதாகும்.ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குனங்களை குறிக்கிறது.
தெய்வீககுணம்,தூய்மையானகுணம்,மேன்மை,தொண்டுள்ளம்,தன்னடக்கம்,ஆற்றல்,விவேகம்,உண்மை,உள்ளதை உள்ளபடி புரிந்துகொள்ளுதல் போன்ற போன்பது குணங்களும் ஒரு ப்[எண்ணிற்கு இருக்கவேண்டும் என்பதற்காகவே,ஒன்பது சரடு உள்ள மாங்கல்ய நாண் பெண்களுக்கு அணியபடுகிறது.

தேனீக்கள் பற்றிய தகவல் !!!

தேனீக்கள் பற்றிய தகவல் !!!

உலகில் இதுவரை கண்டறியப்பட்ட உயிரினங்களில் ஏறக்குறைய பாதிக்கு மேல் கண்டறியப்பட்ட இனம் பூச்சி(Insect) இனமாகும். இவை இதுவரை ஒரு மில்லியன் எண்ணிக்கை வரை வகைப்படுத்தப்பட்டுள்ளது. இன்றளவிலும் கூட புதிய புதிய வகைகள் கண
்டறியப்படுகின்றன. இத்தகைய பிரமாண்ட எண்ணிக்கையில் அமைந்துள்ள இந்த இனத்தில் மனிதனைக் கடித்து நோயைப் பரப்பி தீங்கை விளைவிக்கக் கூடிய வகைகளும் உண்டு. மனிதனின் இரத்தத்தை உறிஞ்சி வாழக்கூடியவைகளும் உண்டு. மனிதனுடன் போட்டிப் போட்டுக் கொண்டு தாவரங்களை அழித்து பெரும் நாசத்தை ஏற்படுத்தக் கூடிய பல வகைகளும் இருக்கின்றன. இருப்பினும் தேனீக்கள் போன்று மனிதனுக்கு நன்மையே பயக்கக் கூடிய ஈ இனம் வேறு எதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இவற்றால் உற்பத்தி செய்யப் படும் தேன், பல நோய்களுக்கு மருந்தாகப் பயனாகின்றது. இத்தகைய பிரம்மாண்ட எண்ணிக்கையில் அமையப் பெற்ற இந்த இனத்தில் மிக அதிக அளவிற்கு அறியப்பட்டவைகளில் தேனீக்களும், எறும்புகளும் முதல் இடத்தை வகிக்கின்றன. இதில் இந்த தேனீக்கள் பல அம்சங்களை விதிவிலக்கான அம்சமாக அமையப் பெற்றுள்ளன. இவற்றைப் பற்றி மிக விரிவான அளவில் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட பல அதிசயத் தக்க விஷயங்கள் நம்மை வியப்படைய வைக்கின்றன.

தேனீக்கள் ஆறுகால்கள் கொண்ட பறக்கும் சிறு பூச்சி இனத்தில் ஒன்றாகும். இவை பூவில் இருந்து பூந்தேனை உறிஞ்சி சேகரித்து தேனடையில் தேனாக சேகரித்து வைக்கின்றன.இவை ஈ பேரினத்தில் ஒரு வகை ஆகும். ஈ பேரினத்தில் இன்று ஏறத்தாழ 20000 வகைகள் அறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஏழு இனங்கள்தான் தேனீக்கள் ஆகும். இந்த தேனீக்களில் மொத்தம் 44 உள்ளினங்கள் உள்ளன. அறிவியலில் தேனீக்கள் ஏப்பிடே (Apidae) என்னும் குடும்பத்தில் ஏப்பிஸ் (Apis) என்னும் இனத்தைச் சேர்ந்தவை

தேன் கூடு என்பது மூன்று வகையான தேனீக்களின் கூட்டணியாகும். ஒவ்வொன்றும் வெவ்வேறான உடல் அமைப்பைப் பெற்று விளங்குகின்றன. இதுவே இவற்றின் பிரதான வேறுபாட்டு அம்சமாகும்.

1. இராணித் தேனீ (Queen-Productive Female)
2. ஆண் தேனீக்கள் (Drone)
3. வேலைக்காரத் தேனீக்கள் (Workers Bee-Non Productive Female)

ஒரு நல்ல ஆரோக்கியமான கூட்டில் 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் தேனீக்கள் வரை இருக்கும். இத்தகைய பிரம்மாண்டமான எண்ணிக்கையில் இருப்பினும் கூட இவற்றிற்கிடையே எந்த விதமான நிர்வாகக் கோளாறுகளோ அல்லது குளறுபடிகளோ வருவதில்லை. ஒரு நல்ல கூட்டின் சுற்றளவு 3 மீட்டர் வரை கூட இருக்கும்.

இவற்றின் கூடு அதிகமான தேனீக்களின் எண்ணிக்கையினால் ஏற்படும் அதிக படியான எடையால் விழுந்து விடாமல் இருப்பதற்காக வேலைக்கார தேனீக்கள் மரங்களின் பிசினைக் கொண்டு அவற்றில் சில நொதியங்களைச் சேர்த்து புரொபோலிஸ் என்னும் பிசின் போன்ற பொருளைக் கொண்டு உறுதியாக ஒட்டப்படுகின்றது. மேலும் இவற்றைக் கொண்டு கூடுகளில் ஏற்படும் விரிசல் போன்ற பழுதுகளைச் சரி செய்யப்படுகின்றன.

இராணித் தேனீ

இராணித் தேனீ மற்ற தேனீக்களைக் காட்டிலும் பெரியதாக இருக்கும். இவை 16 மி.மீ நீளம் முதல் 20 மி.மீ நீளம் வரை இருக்கும். இவை 16 நாட்களுக்குப் பிறகு முழு வளர்சியடைந்து கூட்டிலிருந்து வெளி வந்தவுடன் ஏறக்குறைய 10 முதல் 18 ஆண் தேனீக்களுடன் பறந்து வெளியில் செல்கின்றது. தரை மட்டத்திலிருந்து 1000 அடி உயரத்திற்கு மேல் பறந்த நிலையிலேயே ஆண் தேனீக்களுடன் உறவு கொள்கின்றது.

அதன் மூலம் மில்லியன் கணக்கான ஆண் உயிர் அணுக்களை பெற்றுக் கொள்கின்றது. அதன் பின்னர் அவை இறக்கும் காலம் வரை உறவில் ஈடுபடுவதில்லை. அவை ஆண் ஈக்களிடமிருந்து பெற்ற அந்த உயிரணுக்களைக் கொண்டே அது இறக்கும் காலம் வரை முட்டையிட்டுக் கொண்டிருக்கும். இனப்பெருக்கத்தில் ஈடுபட்டதன் பின்னர் 10 நாட்கள் கழித்து முட்டையிட ஆரம்பிக்கின்றது. ஒரு இராணித் தேனீ ஒரு நாளைக்கு 1500 முதல் 3000 முட்டைகளையும் வருடத்திற்கு இரண்டு லட்சம் முட்டை வரையிலும் இடக்கூடிய திறன் பெற்றதாகும்.

இவை இடைவிடாது பணியில் ஈடுபடுவதால் இவற்றிற்கு ஓய்வு என்பதே இல்லை என்று சொல்லுமளவிற்கு பணியில் ஈடுபடுகினறது. இராணித் தேனீயின் உணவுத் தேவையை கவனிப்பதற்கென்றே 5 முதல் 10 தேனீக்கள் வரை அமர்த்தப்படுகின்றன. 20 முட்டை வரை இட்டதன் பின்னர், முட்டை இட்ட களைப்புத் தீர ஒரு முறை இவற்றிற்கு ஆகாரம் அளிக்கப்படுகின்றது.

ஆண் தேனீக்கள் (Drone)

ஆண் தேனீ பொதுவாக செயலற்ற நிலையில் பெரும்பகுதி நேரத்தைக் கழிக்கக் கூடியதாகும். ஒரு கூட்டில் இவற்றின் எண்ணிக்கை நூற்றுக் கணக்கில் அமைந்திருக்கும். இவை தேன் சேகரிக்க வெளியில் செல்வதுமில்லை. தங்கள் கூட்டிற்கு ஆபத்து வரும் போது அவற்றைக் காக்கும் பொருட்டு எதிரியை கடிக்கும் திறனையும் பெற்றிருக்கவில்லை. ஏனெனில் இவற்றிற்கு கொடுக்கு அமைப்பு இல்லை.

நான் ஆண் என்று வீரவசனம் பேச இவற்றிற்கு கூட்டிற்குள் எந்தத் தகுதியும் இல்லை என்பதை இவை உணர்ந்து சமர்த்தாக நடந்து கொள்கின்றன. இவை தங்கள் உணவுத் தேவை மற்றும் பாதுகாப்புத் தேவைக்கு வேலைக்காரத் தேனீக்களைச் சார்ந்து வாழ்கின்றன
இவை செய்யக் கூடிய உருப்படியான காரியம் என்னவென்றால் புதிதாகப் பொரித்து வெளிவரும் இராணித் தேனீக்களுடன் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு உயிர் விடுவதுதான். இந்த ஒரு இனப்பெருக்கக் காரணத்திற்காகவே இவை மற்றவைகளினால் சகித்துக் கொள்ளப்படுகின்றன.

வேலைக்காரத் தேனீக்கள்

மலரின் மது தேனீக்களினால் உறிஞ்சி உட்கொள்ளப்பட்டு பின்னர் அவற்றின் வயிற்றிலிருந்து வெளிவருவதுதான் இனிய நலன் பயக்கும் தேன் ஆகும். முட்டையிட்டு சந்ததிப் பெருக்கம் செய்ய இயலாத மலட்டுப் பெண் தேனீக்களே வேலைக்காரத் தேனீக்கள் ஆகும். இவைதான் அதிசய ஆற்றலும் தகவமைப்பும் பெற்று விளங்கக் கூடியவை. இந்த வேலைக்காரத் தேனீக்களால்தான் கூட்டில் இருக்கும் இராணித் தேனீ, லார்வாக்கள் மற்றும் ஆண் தேனீக்களுக்கு உணவு அளிக்கப் படுகின்றது. இவற்றின் உள்ளுறுப்புகளில் ஒன்றான மெழுகு சுரப்பியிலிருந்து (wax gland) சுரக்கும் மெழுகைக் கொண்டுதான் கூடுகள் கட்டப்படுகின்றன. மேலும் இவற்றின் வயிற்றில் அமைந்த தேன் பைகளினால் (honey sac) மலரின் குளுகோஸ் இரசாயண மாற்றம் செய்யப்பட்டு தேனாக மாற்றப்படுகின்றது.

தேனின் மருத்துவக் குணங்கள்

பல்வேறு நோய்களைத் தீர்க்கும் அருமருந்தாக தேன் விளங்குகிறது

உடல் பருமனாக குளிர்ந்த நீரில் தேனை கலக்கி குடித்துவர உடல் எடையை கூட்டலாம்

உடல் பருமனைக் குறைக்க மிதமான வெந்நீரில் தேனை கலக்கி குடித்துவர உடல் எடையை குறைக்கலாம்.

வெற்றிலைச்சாற்றுடன் தேனை கலக்கி குடிக்க சளிஇ இருமல் போன்றவை நீங்கும்.

தேனீயை சுறுசுறுப்பு, கூட்டு முயற்சி, தலைமைக்கு கட்டுப்படுதல் போன்றவற்றிற்கு உதாரணமாய் கூறுவார்கள்.இவை வா‌ழ்நா‌ளி‌ல் பற‌க்கு‌ம் மொ‌த்த தூர‌ம், பூ‌மியை 4 முறை வல‌ம் வ‌ந்தத‌ற்கு சமமானதாகு‌ம்.

புகைப்பழக்க போதையை தடுக்க புதிய ஜீன் தெரபி!

புகைப்பழக்க போதையை தடுக்க புதிய ஜீன் தெரபி!


OK

இந்த புகைப்பழக்கம் இருக்கிறதே அதுவும் ஒரு வகையில் கழுதை மாதிரிதான்! புகைபிடித்து போதை ஏறும்போது `அட நல்லா யிருக்கே' என்று தொடர்ந்தால் புற்றுநோயில் கொண்டு சேர்த்துவிடும். `ஐயய்யோ, புகைபிடித்தால் புற்றுநோய் வருமா?' என்று புகைபழக்கத்தை விட்டாலும் சில பின் விளைவுகள் வந்து சேரும். ஆக மொத்தத்தில், முன் னாடியும் போக முடியாது பின்னாடியும் வர முடியாது.
இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண முயன்ற ஆய்வாளர்கள் இதுவரை பல்வேறு சிகிச்சை முறைகளை உருவாக்கினார்கள். ஆனால் இந்த முறைகள் மூலமாக உடலுக்குள் செல்லும் நிக்கோடின் ஏற்படுத்தும் பாதிப்புகளும் அதிகம் என்பதால் மிக சமீபத்தில் நிக்கோடின் வாக்சின் (தடுப்பூசி) கண்டுபிடிக்கப்பட்டது.
துரதிஷ்டவசமாக, நிக்கோடின் தடுப்பூசியும் பெரிதாக பலனளிக்கவில்லை. ஆக, நிக்கோடின் விஷயத்தில் இந்த இரண்டுமே சாத்தியப்படவில்லை. சரி, நிக்கோடினுக்கு எதிரான ஆன்டிபாடிகளை உடலுக்குள் ஊசி மூலம் செலுத்தினால் பலன் இருக்கிறதா பார்ப்போம் என்றும் பரிசோதித்தார்கள். இப்படி செலுத்தப் படும் ஆன்டிபாடிகள் நீண்ட நேரம் திடமாக இல்லாமல் போகவே, இந்த சிகிச்சை முறை மிகவும் காஸ்ட்லியாக மாறி பலனளிக்காமல் போனது.
இப்படியெல்லாம் தட்டுத்தடுமாறிய புகைப்பழக்க பாதிப்புகளுக்கான மருத்துவ முயற்சிகளை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல வந்துவிட்டது ஜீன் தெரபி.
நிக்கோடின் ஆன்டிபாடிகள் உடலுக்குள் நீண்ட நேரம் இருந்து தொடர்ச்சியாக நிக்கோடினை அழித்துக்கொண்டிருக்க வேண்டுமானால், உடலுக்குள் ஆன்டிபாடி உற்பத்தியும் தொடர்ச்சியாக நிகழ வேண்டும். இந்த பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க, உடலுக்குள் நிக்கோடின் ஆன்டிபாடியை உற்பத்தி செய்யும் ஒரு மரபணுவை பொருத்துவது சிறந்த வழி என்று முடிவு செய்தார் நியூயார்க்கில் உள்ள வெய்ல் கார்னெல் மருத்துவ கல்லூரியின் ஆய்வாளர் ரொனால்டு கிரிஸ்டல்.
இதற்காக நிக்கோடினுக்கு எதிரான மிகவும் வலிமையான ஒரு ஆன்டிபாடியையும், அதனை உற்பத்தி செய்யும் மரபணுவையும் ஒரு எலியில் இருந்து கண்டெடுத்தனர். பின்னர் அந்த மரபணுவை ஜீன் தெரபிக்கு பயன்படும் கேரியர் எனும் அடினோ அசோசியேட்டட் வைரஸுக்குள் பொருத்தினர். அதன் பிறகு அந்த வைரஸ், நிக்கோடின் போதைக்கு அடிமையான ஒரு எலியின் உடலுக்குள் ஊசி மூலம் செலுத்தப்பட்டது.
எலியின் உடலுக்குள் செலுத்தப்பட்ட வைரஸ் அதன் கல்லீரலுக்குள் பொருந்திய பின்னர் நிக்கோடினுக்கு எதிரான ஆன்டிபாடி கல்லீரலில் உற்பத்தி ஆனது. பின்னர் இந்த ஆன்டிபாடிகள் ரத்த ஓட்டத்துக்குள் கலந்தன. இந்நிலையில் இரண்டு சிகரெட்டுக்குள் இருக்கும் அளவு நிக்கோடின், வைரஸ் புகுத்தப்பட்ட எலியின் உடலுக்குள் செலுத்தப்பட்டது. எலியின் உடலுக்குள் உற்பத்தியான நிக் கோடின் ஆன்டிபாடிகள் சுமார் 83 சதவீதம் நிக்கோடினை அழித்தது தெரியவந்தது. முக்கியமாக, இந்த நிக்கோடின் மூளைக்குச் செல்வதற்கு முன்பு அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக, நிக்கோடின் போதைக்கு அடிமையான எலிகள் மந்தமாக இருக்கும். ஆனால் ஜீன் தெரபி செய்யப்பட்ட பின் நிக்கோடின் கொடுக்கப்பட்ட எலிகள் மிகவும் உற்சாகமாக இருந்தன. மேலும், இந்த எலிகளின் இதய துடிப்பும் மிகவும் சீராக இருந்தது. ஜீன் தெரபிக்கு பிந்தைய சுமார் 18 வாரங்கள் கழித்த பிறகும், எலிகளின் கல்லீரல்கள் நிக்கோடினுக்கு எதிரான ஆன்டிபாடிகளை தொடர்ந்து உற்பத்தி செய்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆக, நிகோடின் போதைக்கு எதிரான ஜீன் தெரபி செய்துகொண்டால், நிக்கோடினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிரான பாதுகாப்பு நீண்ட காலத்துக்கு உடலுக்குள் நீடிக்கும் என்பது இந்த ஆய்வு மூலம் நிரூபணமாகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
அதெல்லாம் சரி, இந்த ஜீன் தெரபி மூலம் மனித குலத்துக்கு உடனடி பலன் எதுவும் இருக்கிறதா?
தற்போது எலிகள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஆய்வு மனிதர்களைக் கொண்டு நடத்தப்படும் முன்னர், குரங்குகள் மீது மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம். மேலும், ஜீன் தெரபியில் பயன்படுத்தப்படும் அடினோ அசோசியேட்டட் வைரஸ்கள் எய்ட்ஸ் மற்றும் இறுதி நிலை புற்று நோய் ஆகிய நோய்களுக்கான ஜீன் தெரபியில் மனிதர்கள் மீது பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் ஆபத்துகளுடன் ஒப்பிடும்போது அதிகமான பலன்கள் கிடைத்துள்ளன என்றாலும் நிக்கோடின் போதைக் கான இந்த ஜீன் தெரபியை மனிதர் கள் மீது பரிசோதிக்க 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகுமாம்.
அதனால் ஆபத்தான ஜீன் தெரபியை கொண்டு நிக்கோடின் போதை அல்லது புகைப்பழக்கத்துக்கான சிகிச்சையை மேற்கொள்வதற்கு முன்பு, புகைப்பழக்கத்தை துறக்க முயற்சி செய்வதே சாலச் சிறந்தது என்கிறார் பேய்லர் மருத்துவக் கல்லூரியின் மூத்த ஆய்வாளரான தாமஸ் கோஸ்டன்.

முனைவர் பத்மஹரி

`டிசைனர்' தக்காளி ரெடி!

`டிசைனர்' தக்காளி ரெடி!



Tomato
`வாரக் கணக்கில் வைத்திருந்தாலும் அழுகிப்போகாத, காய்ந்து சுருங்கிப்போகாத, பார்ப்பதற்கு அழகான, சுவை மிகுந்த பழங்களும், காய்கறிகளும் இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்' என்று நம்மில் பலரும் கற்பனை செய்து பார்த்திருப்போம். ஆனால் யதார்த்தத்தில் கடைகளில் கிடைக்கும் பழங்களும் காய் கறிகளும் பரவாயில்லை ரகம்தான்.
உதாரணமாக, தக்காளியை எடுத்துக்கொள்ளலாம். இயற்கையில் தக்காளிகள் காய் பருவத்திலிருந்து பழமாக மாறும்போது சமமாக முற்றுவது இல்லை. அதனால் ஒரு தக்காளி பழத்தில் அங்கங்கு திட்டு திட்டாக பச்சை நிறம் மீதமிருக்கும். அதாவது ஒரு பழத்தில் சில பகுதிகள் காயாகவே இருக்கும்.
தக்காளிகளில் உள்ள இந்த பிரச்சினை கடந்த 1920 களில் ஒரு முடிவுக்கு வந்தது. சமமாக முற்றி பழம் முழுவதும் சிவப்பாக, ஒரே வண்ணமாக இருக்கும் ஒரு வித்தியாசமான, ஆனால் இயற்கையான தக்காளி ரகத்தை வியாபாரிகள் கண்டறிந்தனர். அதன்பிறகு அந்த ரகத்தை மட்டுமே உற்பத்தி செய்தனர்.
இந்த தக்காளி ரகம் சமமாக முற்றி ஒரே வண்ணத்தில் இருப்பதற்கு, இதில் உள்ள ஒரு மரபணு மாற்றம் (மியூட்டேஷன்) தான் காரணம் என்று தாவரவியல் விஞ்ஞானிகள் கண்டறிந்தார்கள். இதற்கு காரணமான மரபணு `சமமாக முற்றும்' மரபணு என்று அழைக்கப்பட்டது.
சமமாக முற்றி, பழம் முழுவதும் சிவப்பாக, அழகாக இருக்கும் இந்த தக்காளியில் ஒரு முக்கியமான பிரச்சினையும் இருக்கிறது. அதாவது நன்றாக முற்றி, சிவப்பாக, அழகாக இருந்தாலும் இந்த தக்காளி ரகம் ஏனோ சுவையாக இருப்பதில்லை. இந்த பிரச்சினைக்கான காரணத்தையும், தீர்வையும் கண்டறிய முற்பட்டார்கள் அமெரிக்க மற்றும் ஸ்பெயின் நாட்டு தாவரவியல் ஆய்வாளர்கள்.
`பொசிஷனல் குளோனிங்' என்னும் பிரத்தியேகமான மரபணுவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, `சமமாக முற்றும்' மரபணு இந்த தக்காளியின் மரபணுக் கோப்பில் உள்ள 10-வது குரோமோசோமில் இருப்பதை கண்டறிந்தார் முனைவர் பட்ட மாணவர் குவாங் கையென். அதன்பிறகு தக்காளியின் உணவு உற்பத்தியை கட்டுப் படுத்தும் புரதத்துக்கு காரணமான மரபணுவையும் கண்டுபிடித்தது இந்த ஆய்வுக்குழு.
பொதுவாக, ஒரு தாவரத்தின் உணவு உற்பத்தி அல்லது ஒளிச் சேர்க்கை முழுவதையும் அதன் இலைகளே கவனித்துக்கொள்கின்றன. ஆனால் தக்காளியை பொறுத்தவரை, அதன் உணவு உற்பத்தியில் சுமார் 20 சதவீதம் வளரும் தக்காளி பழத்தி லிருந்து கிடைக்கிறது. இதனால் தக்காளி பழத்தில் அதிக அளவு சர்க்கரையும், ஊட்டச் சத்துகளும் உற்பத்தி ஆகின்றன.
ஆனால், சமமாக முற்றும் மரபணுவில் ஏற்படும் மரபணு மாற்றம் காரணமாக தக்காளியில் உள்ள அதிகமான சர்க்கரை மற்றும் ஊட்டச் சத்துகளை உற்பத்தி செய்யும் புரதம் அழிக்கப்படுகிறது. அதனால் தான், சமமாக முற்றும் மரபணுவில் மாற்றம் உள்ள தக்காளி ரகத்தில் குறைவான அளவு சர்க்கரையும், ஊட்டச் சத்துகளும் உள்ளன என்கிறார் ஆய்வுக்குழுவின் தலைவர் ஜியோவானோனி.
சமமாக முற்றும் மரபணு மாற்றம் உள்ள தக்காளி ரகத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம் சுவையான மற்றும் ஊட்டச் சத்து நிறைந்த தக்காளிகளை வியாபாரிகள் இழந்து விடுகிறார்கள். இதன் காரணமாக, தக்காளியின் சிவப்பழகில் மயங்கி அதனை வாங்கிச் செல்லும் வாடிக்கையாளர்களும் பெரிதாக பயனடைவது இல்லை. மிகவும் பயனுள்ள இந்த அறிவியல் உண்மையை தக்காளி தொடர்பான இந்த புதிய ஆய்வு வெளிக்கொண்டு வந்திருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
இந்த கண்டுபிடிப்பின் மூலம் பல நன்மைகள் உண்டு என்கிறார் கள் ஆய்வாளர்கள். உதாரணமாக, கண்ணைக் கவரும் சிவப்பு வண்ண பழங்கள்தான் எங்களுக்கு வேண்டும் என்று அடம்பிடிக்கும் வியாபாரிகள், முற்றிய தக்காளி பழம் வரும்வரை தாவரங்களை வளரவிட்டு பின்னர் அவற்றை தேர்ந்தெடுத்து பயிர் செய்ய வேண்டியதில்லை. மாறாக, தக்காளி செடிகள் முளை பருவத்தில் இருக்கும்போதே அவற்றில் சமமாக முற்றும் மரபணு மாற்றம் இருக்கிறதா என்பதை டி.என்.ஏ பரிசோதனை மூலம் கண்டறிந்து மரபணு மாற்றமுள்ள செடிகளை தேர்ந்தெடுத்துவிடலாம்.
மற்றொருபுறம், `தக்காளியின் சிவப்பழகைப் பற்றியெல்லாம் எங்களுக்கு கவலையில்லை. அவற்றில் அதிக சுவையும், ஊட்டச் சத்துகளும் இருந்தால் போதும்' (அதாவது சமமாக முற்றும் மரபணு மாற்றம் இருக்கக் கூடாது) என்று விரும்புபவர்கள், சமமாக முற்றும் மரபணு மாற்றம் இல்லாத தக்காளி பயிர்களை தேர்ந்தெடுத்து பயிர் செய்துகொள்ளலாம்.
அடடா இதுவல்லவோ தொழில்நுட்பம், இனி தக்காளிகளில் நாம் எந்த தரத்தை விரும்புகிறோமோ அதை தேர்ந்தெடுத்து பயிர் செய்துகொள்ளலாம். புதுயுக டிசைனர் தக்காளி ரெடி, பயிர் செய்து பயனடைய நீங்க ரெடியா என்கிறார்கள் தாவரவியலாளர்கள்.

செவ்வாய்க் கிரகத்தில் நிறைய தண்ணீர்?

செவ்வாய்க் கிரகத்தில் நிறைய தண்ணீர்?




planet
செவ்வாய்க் கிரகத்தில் பூமி அளவுக்கு தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் தங்களுக்குக் கிட்டியிருக்கின்றன என்று விஞ்ஞானிகள் சிலர் கூறியிருப்பது சுவாரசியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பூமியின் உட்புறப் பகுதியைப் போல செவ்வாய்க் கிரகத்திலும் பெரும் தேக்கங்களாய் தண்ணீர் காணப்படலாம் என்கிறார்கள்.
செவ்வாயில், புறக்கணிக்கத்தக்க மிகச் சிறிய அளவிலேயே தண்ணீர் காணப்படக்கூடும் என்று முந்தைய ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அதுகுறித்து வாஷிங்டனின் கார்னகி நிறுவன ஆய்வாளர் எரிக் ஹாரி கூறுகையில், “செவ்வாயின் உள்பகுதி மிகவும் காய்ந்து போயிருக்கும் என்று முந்தைய ஆய்வுகளில் எப்படி முடிவு செய்யப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் தற்போதைய ஆய்வு முடிவு அர்த்தமுள்ளதாகத் தோன்றுகிறது. செவ்வாய்க்கிரகத்தின் மேற்பரப்புக்குத் தண்ணீரைக் கொண்டு வந்ததில் அக்கிரகத்தின் எரிமலைகள் முக்கியப் பங்கு வகித்திருக்கலாம்” என்கிறார்.

2030ல் புகைப்பதால் இறப்பவர்களின் எண்ணிக்கை 8 மில்லியன்?

2030ல் புகைப்பதால் இறப்பவர்களின் எண்ணிக்கை 8 மில்லியன்?



வளர்ந்து வரும் நாடுகளில் 40 சதவீத ஆண்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் புகை பழக்கத்துக்கும், புகையில்லாத போதை பழக்கத்துக்கும் அடிமையாகி உள்ளனர் என மருத்துவ ஆய்வு கூறுகிறது.
புகை பிடிப்பது, தன்மை தாமே அழித்து கொள்வதற்கு சமமாகும். நாட்டில் தற்போது புகை பிடிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும், இதே நிலை நீடிக்குமானால் 2030ம் ஆண்டில் சுமார் 8 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் புகை பழக்கத்தினால் பாதிக்கப்பட்டு இறக்க நேரிடலாம் என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.
இந்தியாவில் ஆண்களுக்கு சமமாக பெண்களும் புகைப் பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பதால் புற்று நோய் அதிகமாக தாக்கி வருகிறது. புகைப்பவர்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதம்  பேருக்கு நுரையீரல் புற்றுநோய் தாக்குகிறதென்றும் மருத்துவ ஆய்வு கூறியுள்ளது.
உலகில் புகை பிடித்தல் மற்றும் புகையிலை தொடர்பான பொருட்களை அதிகம் பயன்படுத்துவதில் சீனா முதலிடத்திலும்,  இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பாவம், ஈமு கோழிகள்!

பாவம், ஈமு கோழிகள்!



சென்ற ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில் உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் ஓர் அறிவிப்பு செய்தார்: "ஈமு கோழி வளர்ப்பு தொடர்பாக நாசிக் வட்டாரத்தில் சுமார் 2,000 விவசாயிகள், ரூ.200 கோடி அளவுக்கு ஏமாற்றப்பட்டுள்ளதாக வந்த புகார்களை விசாரிக்க சிஐடி போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்பதுதான் அது.
இதேபோன்று சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு, ஈமு கோழி வளர்ப்பு தொடர்பான விளம்பரத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களது படத்தைப் பயன்படுத்தியதாக, தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ஈமு கோழி நிறுவனத்தின் மீது வழக்குத் தொடரப்பட்டது. இது தவறுதலாக நடந்துவிட்டதாக அந்த நபர் மன்னிப்புக் கோரிய செய்தியும் வெளியாகியது.
இந்த இரண்டு சம்பவங்களையும் பத்திரிகைகள் மூலம் அறியவந்தவர்களுக்கு, இதில் ஏதோ குளறுபடி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள அதிக அறிவும் ஆழ்ந்த அனுபவமும் தேவையில்லை. ஆனாலும் தமிழ்நாட்டில், பணம்படைத்த படித்தவர்களும் படிக்காத விவசாயிகளும் பல கோடி ரூபாயை ஈமு கோழி வளர்ப்பு திட்டத்தில் இழந்து நிற்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது, ""……..மூடர் "விதிவசம்’ என்கிறார்கள். ஆமடா விதிவசம்தான். அறிவில்லாதவனுக்கு இன்பம் இல்லை என்பது ஈசனுடைய விதி”, என்கிற பாரதியாரின் வசனக் கவிதைதான் நினைவுக்கு வருகிறது.
தற்போது பெருந்துறை சுசி ஈமு கோழிப்பண்ணை விவகாரத்தில் மட்டும் 12,000 பேர் சுமார் ரூ.200 கோடி முதலீடு செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. கூட்டம் கூட்டமாக வந்து புகார் மனுக்களைக் கொடுக்கிறார்கள். இவர்கள் ரூ.1.5 லட்சம் முதல், ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்துள்ளனர்.
முதலீடு செய்தவர்களுக்கு ஈமு கோழிகள் தரப்படும். அதை வளர்த்துக் கொடுக்க வேண்டும். இதற்காக மாதம்தோறும் கோழிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஊக்கத் தொகை, போனஸ் என்றெல்லாம் ஒவ்வொரு நிறுவனமும் ஒரு தொகையைச் சொல்லி, மக்களைக் கவர்ந்துள்ளன. இப்போது ஊக்கத்தொகை கிடைக்கவில்லை என்கின்றபோது முதலீட்டைத் திரும்பக் கேட்கின்றனர் பணம் கொடுத்தவர்கள். ஆனால், முதலீடு வாங்கியவர்களையும் காணோம், முதலீடாகப் பெற்ற தொகை எங்கே போனது என்பதும் தெரியவில்லை. பாவம்,
ஈமு கோழிகள் தீனி போடக்கூட ஆள் இல்லாத நிலையில் தவிக்கின்றன. ஆனால் கால்நடைத்துறை சொல்கிறது, அவை 20 நாள்களுக்கு வெறும் தண்ணீரை மட்டுமே அருந்தி வாழும் என்று!
இதேபோன்று மக்கள் ஏமாந்துபோன சூழ்நிலை, அதிக வட்டி தருவதாக வாக்குறுதி அளித்த நிறுவனங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது. உறுதி அளித்தபடியே அதிக வட்டியை தொடக்கத்தில் இந்நிறுவனங்கள் கொடுத்தன. ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் முதலீடு முழுவதையும் இழக்க நேரிட்டது. இந்த நிறுவனங்கள் வேறு தொழில்களில் முதலீடு செய்வதாகச் சொல்லிக்கொண்டாலும், உண்மையில் அவ்வாறு செய்யவில்லை. மக்கள் கொடுத்த பணத்தை அப்படியே அவர்களுக்கு வட்டிக்காகத் திருப்பிவிட்டன. கடைசியில் மொத்தமாகச் சுருட்டிக்கொண்டன.
ஈமு கோழி வளர்ப்பில், முதலீட்டுக்கு இணையான ஈமு கோழிகள் முதலீட்டாளர் வசம் இருந்தாலும், அதனால் எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை. ஈமு கோழிக்கான சந்தை இந்தியாவில் இல்லை. இந்தியாவில் ஈமு கோழிக்கறி உண்பாரும் யாரும் கிடையாது.
ஈமு கோழியை உயிருடன் ஏற்றுமதி செய்வதோ அல்லது வெட்டுவதோ கூடாது என்று ஆஸ்திரேலிய அரசு தடை விதித்தபோது, ஈமு கோழி வளர்ப்பு வெளிநாடுகளில் நடைபெறத் தொடங்கியது. அமெரிக்காவிலும்கூட இந்த முயற்சிகள் நடந்தன. ஆனால், ஈமு கோழியை வளர்த்து அதன் இறைச்சியில் கிடைக்கும் பணத்தைவிட, மாட்டிறைச்சி மூலம் அதிக வருவாய் கிடைப்பதை நடைமுறையில் உணர்ந்த அமெரிக்கர்கள் இத்திட்டத்தைக் கைவிடத் தொடங்கினர். கடைசியாக இந்தியாவில் இந்தத் திட்டத்தை இறக்குமதி செய்தார்கள்.
ஈமு கோழியின் விலை அதிகம் என்பதும், இதன் இறைச்சி, எண்ணெய், நகங்கள் எல்லாமும் விலை போகும் என்பதும் உண்மைதான். ஆனால், இதை யார் வாங்குகிறார்கள், சந்தையின் தேவைஅளவு என்ன என்று எந்த உண்மைகளையும் தெரிந்துகொள்ளாமல், முதலீடு செய்தவர்களின் அறியாமைதான் மோசடி செய்தவர்களின் முதலீடு.
"விவசாயத்தில் நஷ்டம். ஆகவே இதிலாவது கொஞ்சம் பணம் பார்க்கலாம் என்றுதான் ஈமு கோழி வளர்ப்புக்கு ஆட்பட்டோம்’ என்று அப்பாவித்தனமாக மக்கள் சொல்கிறார்கள். விவசாயம் பொய்த்தது என்பதற்காக பொய்யான திட்டங்களில் முதலீடு செய்யலமா? வானம் ஒருமுறை பொய்த்தாலும் மறுமுறை அள்ளிக்கொடுக்கும். இந்த மோசடிக்காரர்கள் இருந்த அனைத்து முதலீட்டையும் அல்லவா துடைத்துச் சென்றுவிட்டனர்.
தேக்கு மரம் வளர்த்து, 20 ஆண்டுகளுக்குப் பிறகு அதை வெட்டிப் பணம் தருகிறோம் என்கிற திட்டத்தில் ஒரு கன்றுக்கு சிறிய தொகை செலுத்தினால் போதும் என்றார்கள். 20 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த மரம் இருக்குமா, நாம் இருப்போமோ, அல்லது அந்த நிறுவனம்தான் இருக்குமா என்று எதையுமே யோசிக்காமல் முதலீடு செய்தார்கள் தமிழர்கள்.
வட்டியைக் காட்டி, மரத்தைக் காட்டி, தங்கத்தைக் காட்டி, இறைச்சியைக் காட்டி ஏமாற்றியவர்கள் இப்போது மண்ணைக் காட்டியும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இது வேளாண் நிலமா, வீட்டுமனைக்கான அங்கீகாரம் பெற்றிருப்பது உண்மையானதுதானா? என்கின்ற எந்தக் கேள்விமுறையும் இல்லாமல் மனைகளை விற்கிறார்கள். "மண்ணுல போட்டா வீண் போகாது’ என்பது விவசாயத்துக்கான பழமொழி. வீட்டுமனைக்கானது அல்ல.
ஆசைக்கோர் அளவில்லை என்பார்கள். அறிவும் இல்லை!

கைப்பேசி என்கிற எட்டப்பன்!

கைப்பேசி என்கிற எட்டப்பன்!


உனக்கு ஒரு பரம ரகசியமான விஷயம் சொல்லப் போகிறேன். தப்பித் தவறிக்கூட நீ அதை வேறு யாரிடமும் சொல்லிவிடக் கூடாது?” என்று நீங்கள் கைப்பேசி மூலம் உங்களுடைய நண்பரிடம் குசுகுசுவென்று ஒரு செய்தியைச் சொல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால், அந்தப் பரம ரகசியத்தை இந்தியாவிலிருந்து மட்டுமன்றி, அகில உலகத்திலிருந்தும் பல நூறு பேர் ஒட்டுக் கேட்டுக்கொண்டும் பதிவு செய்துகொண்டுமிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது!
வனவிலங்குகள், கடல் ஆமைகள், திமிங்கிலங்கள் போன்றவற்றின் கழுத்தில் ஓர் அலைபரப்பிக் கருவியைப் பொருத்திவிட்டு, வானில் சுற்றி வரும் புவியியல் இடமறியும் செயற்கைக் கோளின் உதவியுடன் அந்த விலங்குகளின் நடமாட்டத்தை உயிரி ஆய்வர்கள் கண்காணிப்பார்கள்.
கைப்பேசி உண்மையில் உங்கள் கழுத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு ரேடியோ காலர். நீங்கள் நடந்தாலும் நின்றாலும் பறந்தாலும் எங்கே இருக்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள், யார் யாருடன் தகவல் பரிமாறிக் கொள்கிறீர்கள் என்பன போன்ற விவரங்களை அக்கணமே கைப்பேசி நிறுவனங்களின் ஆவணங்களில் பதிவு செய்யும் எட்டப்பன். அதைக் கொண்டு அழைக்கவும் அழைக்கப்படவும் முடிவது உங்களுக்கு ஆசை காட்டும் தூண்டிற் புழு.
கடந்த ஆண்டில் அமெரிக்கக் காவல் துறையினரும் பாதுகாப்புத் துறையினரும் கைப்பேசி நிறுவனங்களிடமிருந்து 13 லட்சம் கைப்பேசி உரையாடல்களைப் பற்றிய பதிவுகளைக் கோரிப் பெற்றிருக்கிறார்கள். பல சமயங்களில் உளவுத்துறையினர் உரிய வாரண்டுகள் ஏதுமில்லாமலேயே கைப்பேசி நிறுவனங்களின் ஆவணங்களை அலசி ஆராய்ந்திருக்கிறார்கள்.
ஜிபிஎஸ் மூலம் புவிப்பரப்பில் துல்லியமாக இடம் அறியும் தொழில்நுட்பமும் கைப்பேசிகளின் பரிணாம வளர்ச்சியும் எதையும் யாரிடமிருந்தும் மறைக்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளன. ஐஃபோன், ஸ்மார்ட்ஃபோன் என்று பற்பல பயன்பாடுகளுடன் அதிநவீனக் கருவிகள் சந்தைக்கு வந்துள்ளன. அவற்றைக் கைப்பேசி என்று அழைப்பதுகூட இன்றளவில் பொருத்தமில்லை. அவற்றின் மூலம் கைப்பேசி நிறுவனங்கள் கடவுள் நிலைக்கு உயர்ந்து உங்களுடைய ஒவ்வோர் அசைவையும் மேலேயிருந்து பார்த்துக் கொண்டிருக்கின்றன.
காரிருளும் பனிமூட்டமும் அவற்றின் பார்வையைத் தடுக்க முடியாது. ஆழ்கடலுக்கு அடியிலும் சுரங்கங்களுக்குள்ளும் அடர்ந்த வனாந்தரங்களுக்குள்ளும்கூட அவற்றால் பார்க்க முடியும்.
ஸ்மார்ட் ஃபோன் போன்ற அதிநவீனமான கருவிகள் பற்பல பயன்பாடுகளை உள்ளடக்கியுள்ளன. அவற்றை ஒருவர் பயன்படுத்தும்போதெல்லாம் அவரைப் பற்றிய தன்னிலை விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. எந்த எந்தக் கடைகளில் என்ன என்ன பொருள்களை எப்போதெல்லாம் வாங்குகிறார்; அவருடைய வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது; என்று எப்போது எவ்வளவு பணத்தை வங்கியிலிருந்து எடுக்கிறார் அல்லது வங்கியில் செலுத்துகிறார்; மின்னஞ்சல் மூலம் யார் யாருடன் எப்போதெல்லாம் தொடர்பு கொள்கிறார்; எந்த இணைய தளங்களைப் பார்வையிடுகிறார்; எந்தவிடத்துக்கு, எந்த நேரத்தில், உறங்கப்போய் எப்போது கண் விழிக்கிறார்; இத்யாதித் தகவல்களை அவர் தன்னையும் அறியாமல் கைப்பேசி நிறுவனங்களில் உள்ள கருவிகளில் பதிவு செய்து கொண்டேயிருக்கிறார்.
பல கைப்பேசி நிறுவனங்கள் இத்தகைய தகவல்களைச் சேமித்து வைத்துக்கொண்டு அவற்றை வர்த்தக நிறுவனங்களுக்கு விற்பனை செய்கின்றன. உங்களுக்கு ஓர் அயல்நாட்டு அல்லது உள்நாட்டு ஓட்டலிலிருந்து அழைப்பு வந்தால் வியப்படைய வேண்டாம். அந்த ஓட்டல் இருக்கும் ஊருக்கு நீங்கள் அலுவல் நிமித்தம் அடிக்கடி செல்கிறீர்கள் என்பதையும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் அங்கு சென்று பத்து நாள்கள் தங்கத் திட்டமிட்டுள்ளீர்கள் என்பதையும் அது கைப்பேசி நிறுவனத்தின் மூலம் தெரிந்துகொண்டது என எளிதாய் ஊகிக்கலாம்.
சுற்றுலாப் பயணிகள் ஒரு புதிய ஊரிலுள்ள முக்கியமான இடங்களுக்குச் செல்லும் பாதையறிய வரைபட வசதியுள்ள கைப்பேசிகளைப் பயன்படுத்துகிறார்கள். அது ஒவ்வொரு கணமும் அவர்களுடைய நடமாட்டத்தைக் கண்காணிக்க உதவுகிறது.
ஒவ்வோராண்டும் தனியார் வர்த்தக நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்களின் போக்குவரத்துகள், உரையாடல்கள், நிதி நிலவரங்கள் மட்டுமன்றி, சிந்தனைப் போக்குகளைக் கூடக் கண்டறியவும் கண்காணிக்கவும், தொகுத்து வைக்கவும், தமக்குள் பரிமாறிக் கொள்ளவும் உதவுகிற புதிய சேவைகளைக் கொண்ட கைப்பேசிகளை உருவாக்குவதற்குப் பல மில்லியன் டாலர்களைச் செலவழிப்பதாகக் கொலராடோ பல்கலைக் கழகத்தில் சட்டப் பேராசிரியராக உள்ள பால் ஓம் கூறுகிறார்.
இதையறியாத மக்கள் தேனில் வந்து விழும் ஈக்களைப்போல ஆவலுடன் ஸ்மார்ட் ஃபோன், ஐ போன் என அதிநவீனக் கருவிகளை வாங்கிப் பயன்படுத்தி உணர் கருவிகள் மற்றும் இணையச் சுற்றுகளின் இடையறாத கண்காணிப்பு வலையில் வலுவில் வந்து சிக்குகிறார்கள்.
அதிநவீனக் கைப்பேசிகளின் உதவியால் பூமியில் எந்தவொரு பொருளின் இருப்பிடத்தையும் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் மூலம் புள்ளி துல்லியமாகக் கண்டுபிடித்துவிட முடியும். ஒருவர் எந்த இடத்தில் இருக்கிறார் என்று தெரிந்தால், அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை ஓரளவு ஊகித்துவிட முடியும்.
ஒரு கைப்பேசி நிறுவனத்திலுள்ள கருவிகள் அதன் வாடிக்கையாளர்களின் கைப்பேசிகள் எந்த இடங்களிலுள்ளன என்பதை இடையறாது பதிவு செய்து கொண்டே இருக்கின்றன. பல சமயங்களில் காவல் துறையினர் அப்பதிவுகளைக் கோரிப் பெறுவதுண்டு. குறுந்தகவல் செய்திகள் மூலம் விளம்பரம் செய்வோரும் இப்பதிவுகளைக் கோருவார்கள்.
இப் பதிவுகள் ஓராண்டுக் காலத்துக்குப் பராமரிக்கப்பட்ட பின் அழிக்கப்படுவது வழக்கம். ஆயினும், அரசு, நீதிமன்றங்கள் அல்லது காவல்துறையின் கோரிக்கைகளுக்கு இணங்கச் சேமிப்புக் காலம் நீட்டிக்கப்படும். ஒருவரது நடமாட்ட விவரங்களிலிருந்து அவருடைய ஜாதகத்தையே கணித்துவிட முடியும். அவர் நாள் தவறாமல் அலுவலகம் சென்று காலை முதல் மாலை வரை அங்கேயே தங்கி இருக்கிறாரா; இடையிடையே வெளியே சென்று சொந்த வேலைகளை முடிக்கிறாரா; மாலையில் அலுவலகத்திலிருந்து நேராகச் சொந்த வீட்டுக்குப் போகிறாரா அல்லது வேறு வீட்டுக்குப் போகிறாரா; அல்லது பார், சூதாட்ட விடுதி என்று பொழுது போக்குகிறாரா; ஜிம் அல்லது பீச்சில் நடை பயின்று உடல் நலத்தை அக்கறையுடன் பேணிப் பராமரிப்பவரா; எந்த மருத்துவரிடம் எந்த நோய்க்குச் சிகிச்சை பெறுகிறார்? எந்தப் பொழுதுபோக்கு கிளப் அல்லது தொழிற்சங்கம் அல்லது அரசியல் கட்சியில் உறுப்பினராயிருக்கிறார்? சிக்கனமானவரா அல்லது செலவாளியா; இன்னோரன்ன ஏராளமான தன்னிலைத் தகவல்களைக் கைப்பேசிகள் மூலம் திரட்ட முடியும்.
கைப்பேசிகளை ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள மட்டுமே பயன்படுத்திய காலம் மலையேறிவிட்டது. அதிநவீனக் கைப்பேசிகளின் பயன்படு நேரத்தில் 20 சதவிகிதம்தான் தகவல் பரிமாற்றத்துக்குப் பயன்படுவதாக ஓர் இங்கிலாந்து ஆய்வு தெரிவிக்கிறது. மீதி நேரமெல்லாம் இணைய தளத்தில் மேய்வது, விளையாட்டு, இசை, சமூக வலைத்தளங்களைப் பார்வையிடுவது எனச் செலவழிக்கப்படுகிறது.
அதிநவீனக் கைப்பேசியை வைத்திருப்பவருக்கு கைக்கடிகாரம், கேமரா, கால்குலேட்டர், சிடி பிளேயர், பண்பலை ரேடியோ போன்ற சாதனங்களே தேவையில்லை. அவற்றின் பணிகளையெல்லாம் ஓர் அதிநவீனக் கைப்பேசியால் நிறைவேற்றிக் கொள்ள முடியும். கடன் அட்டைகள், வங்கிக் கணக்கு வரவு செலவுகள், மின் கட்டணம், தொலைபேசிக் கட்டணம் ஆகியவற்றைச் செலுத்துவது எல்லாமே கைவிரல் முனைகளில் சாத்தியமாகிவிட்டன.
சினிமா டிக்கெட் முதல் ரயில் அல்லது பஸ் டிக்கெட் வரை கைப்பேசி வாங்கித் தரும். ஒரு மடிக்கணினிக்குச் சமானமாகச் செயல்படக்கூடிய கைப்பேசிகள் சந்தைக்கு வந்துவிட்டன.
கண்காணிப்பு வலையில் சிக்க விரும்பாத கிளர்ச்சியாளர்கள், பயங்கரவாதிகள், கடத்தல் மன்னர்கள் போன்ற சட்டவிரோதிகள் பொய் முகவரி கொடுத்து அல்லது அனாமதேயமாக ரொக்கப் பணம் தந்து பிரீபெய்டு முறையில் கைப்பேசி இணைப்பு பெறுவார்கள். ஓரிரு நாள்கள் அவற்றைப் பயன்படுத்திவிட்டு கைப்பேசிகளை உடைத்து நொறுக்கி விடுவார்கள். அவை இருக்குமிடம் தெரிந்தாலும் அவற்றை அந்த நபர்களுடன் தொடர்புபடுத்த முடியாது. பல நாடுகளில் பிரீபெய்டு முறையில் ரொக்கமாகக் கட்டணத்தைச் செலுத்தினால் பெயரையும் முகவரியையும் தெரிவிக்க வேண்டாம். அரபு நாடுகளிலும் பர்மாவிலும் கிளர்ச்சியாளர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கண்காணிப்பிலிருந்து தப்பிவிடுகிறார்கள். நம் நாட்டில் அது முடியாது.
நம்மைப் போன்ற சாமானியர்கள் அழைப்பு அனுப்பவும் பெறவும் மட்டுமே வசதி செய்யும் கைப்பேசிகளை வாங்கி வைத்துக்கொண்டு கண்காணிப்பாளர்களின் கவனத்தை அதிக அளவில் கவராமல் பயன்படுத்தலாம். நாம் போகுமிடம் அவர்களுக்குத் தெரியக் கூடாது என்பதற்காகக் கைப்பேசியை வீட்டிலேயே வைத்துவிட்டுப் போவதில் அர்த்தமில்லை. கைப்பேசியைப் பயன்படுத்தாதபோது அதை அணைத்து வைக்கலாம். ஆனால், நம்மை யாராவது அழைத்தால் தெரியாமல் போகும். பாட்டரியை வெளியே எடுத்து வைத்தாலும் போதும். ஆனால், மீண்டும் உள்ளே பொருத்துவதற்குத் தனித்திறமை வேண்டும். கைப்பேசியே இல்லாமலிருப்பது உத்தமம். ஆனால், அது அசாத்தியம். உண்மையை ஒப்புக் கொள்வோம். கைப்பேசி ஓர் இன்றியமையாத இன்னல், விலக்க முடியாத வில்லன், ஒதுக்க முடியாத ஒற்றன்தான் என்றாலும் அது இல்லாமல் வாழ்க்கை பூரணம் பெறாது!
நன்றி -தினமணி

Monday, August 13, 2012

முள்ளங்கியின் மருத்துவ குணங்கள் :-

முள்ளங்கியின் மருத்துவ குணங்கள் :-

முள்ளங்கி சமைத்து உண்ணக் கூடிய கிழங்கு இனமாகும். நீண்ட வெண்ணிறக் கிழங்காகக் காய்கறிக் கடைகளில் கிடைக்கும். கிழங்கு, இலை, விதை மருத்துவக் குணம் உடையவை. கிழங்கு சிறுநீரைப் பெருக்கும். குளிர்ச்சியை உண்டாக்கும். இலை பசியைத் தூண்டி சிறுநீரைப் பெருக்கித் தாதுவைப் பலப்படுத்தும். விதை காமத்தைப் பெருக்கும். பொதுவாக கிழங்குகளை இரவில் உண்பது உடலுக்கு நல்லது கிடையாது. இதில் அதிகமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. கர்ப்பிணிப் பெண்கள் கிழங்கைத் தவிர மற்றவற்றை உண்ணக் கூடாது. தமிழகம் எங்கும் பயிரிடப்படுகின்றது.
வேறு பெயர்கள்: முளா, தசணாக்கியா, முலகஞ்சாமியம், விசுறுகுபந்தம்

வகைகள்:

வெள்ளை முள்ளங்கி:

இதன் கிழங்கு நீண்ட வெள்ளை நிறத்தில் இருக்கும். இதையே நாட்டு முள்ளங்கி என்று கூறுவார்கள். இதில் பிஞ்சு முள்ளங்கியே மருத்துவத்திற்கு மிகவும் சிறந்தது.

சிவப்பு முள்ளங்கி:

இதன் கிழங்கு நீண்டு சிவப்பு நிறத்தில் இருக்கும். இதைச் சமையலுக்குப் பயன்படுத்துவார்கள்.

நீலம் கலந்த மஞ்சள் முள்ளங்கி:

இதன் கிழங்கு நீண்டு நீலம் கலந்த மஞ்சள் நிறத்தில் காய்கள் இருக்கும். இதைப் பெரும்பாலும் சமையலுக்கே பயன்படுத்துவார்கள்.

ஆங்கிலத்தில்: Raphanus sativus; Linn; Brassicaceae

இனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்:


முள்ளங்கி இலைச் சாற்றை 5 மி.லி. அளவு எடுத்து 3 வேளை தொடர்ந்து சாப்பிட்டு வர மலச்சிக்கல், சிறுநீர்க்கட்டு, சூதக்கட்டு, எளிய வாத நோய்கள் குணமாகும்.

முள்ளங்கிக் கிழங்குச் சாறு 30 மில்லி 2 வேளை குடித்து வர சிறுநீரகக் கோளாறு, நீர்த்தாரைக் குற்றங்கள் குணமாகும்.

முள்ளங்கியை உணவுடன் சேர்த்து வர சூட்டைப் பெருக்கி உடம்பை சமச்சீராக வைத்துக் கொள்ளும். எனவே தாராளமாக சிறுநீர் வெளியேறும். பசியை உண்டாக்கி, மலச்சிக்கலைப் போக்கும். அதி மூத்திரம், நீர்த்தடை, வயிற்று எரிச்சல், ஊதின உடம்பு, குடைச்சல், வாதம், வீக்கம், சுவாசக்காசம், கபநோய், இருமல் குணமாகும்.

முள்ளங்கியை சிறுசிறு துண்டுகளாகச் சீவி உலர்த்தியது ஒரு கைப்பிடியளவு எடுத்து, அத்துடன் நெருஞ்சில் முள் காய், சீரகம், கொத்தமல்லி, ஏலரிசி, சோம்பு, வாலுளுவை, கார்போக அரிசி, வாயுவிடங்கம் இவற்றை வகைக்கு அரை கைப்பிடியளவு எடுத்து சேர்த்து இடித்துப் பொடியாக்கி, 25 கிராம் பொடியை 200 மி.லி. நீரில் போட்டு 50 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 2 வேளை 25 மில்லியளவாக குடித்து வர மூத்திரம் மிகவும் குறைந்ததாகவும், மாவு கலந்தாற் போலவும், பால் போன்றும் போகும். இதனால் உடம்பிலும், முகத்திலும், வயிற்றிலும் உள்ள வீக்கங்கள் குறையும். மூத்திரம் வெள்ளையாகப் போவதோடு வீக்கம் வற்றிவிடும்.

முள்ளங்கியைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி உலர்த்தியது, கைப்பிடியளவு எடுத்து கஞ்சி செய்து குடித்துவர வீக்கம், சுவாசக் குறைபாடுகள் குணமாகும்.
பச்சை முள்ளங்கியை சாறு பிழிந்து சிறிது இந்துப்புச் சேர்த்து பொறுக்கும் அளவிற்கு காய்ச்சி வடிகட்டி காதில் 2 சொட்டுவிட காது குத்தல், காது வலி, காதில் சீழ் வடிதல் குணமாகும்.

முள்ளங்கியை தினமும் உணவில் சாப்பிட்டு வர மூலம், மூத்திரக் கல்லடைப்பு குணமாகும்.

முள்ளங்கி சமூலத்தை சாறுபிழிந்து 200 மில்லியளவு எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து 3 வேளை குடிக்க நீர்ச்சுருக்கு நீங்கும்

Saturday, August 11, 2012

தொடர் காய்கறி சாகுபடி..!!!!!!!!

தொடர் காய்கறி சாகுபடி..!!!!!!!!




எந்தெந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள் பயிரிட்டால் அதிக மகசூல் பெற்று கூடுதல் லாபம் ஈட்டலாம் என்பது குறித்து விழுப்புரம் மாவட்ட தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.

நமது அன்றாட வாழ்வில் முக்கிய பங்கு காய்கறிகள் வகிக்கிறது. பெரியவர்களுக்கு 85 கிராம் பழமும், 300 கிராம் காய்கறிகளும் அன்றாடம் தேவை என ஆய்வுகள் கூறுகின்றன. தற்சமயம் உற்பத்தியாகும் காய்கறிகள் பெரியவர்களுக்கு சராசரியாக 220 கிராம் மட்டுமே கிடைக்கக் கூடியதாக உள்ளது.

காய்கறிகள் சாகுபடி குறுகிய காலத்தில் அதிக மகசூல் மற்றும் அதிக வருமானம் தரக்கூடியதாக உள்ளதால், வர்த்தக ரீதியில் காய்கறி சாகுபடி செய்வது தற்போதைய தேவையாக உள்ளது.

காய்கறிகளில் சாதாரண ரகங்கள் சாகுபடிக்கு கீழ்கண்டவாறு பருவங்களும் மாதங்களும் முன்னர் கடைபிடிக்கப்பட்டது.
  • தைப்பட்டம்: (டிசம்பர்-ஜனவரி) மாதத்தில் கத்தரி, பூசணி, புடல், பீர்க்கன்.
  • மாசிப்பட்டம்: (பிப்ரவரி, மார்ச்) மாதங்களில் தக்காளி, வெண்டை, காராமணி, மிளகாய், பூசணி, புடல், பீர்க்கன்,வெள்ளரி,
  • ஆடிப்பட்டம்: (ஜூன், ஜூலை) மாதங்களில் தக்காளி, வெண்டை, காராமணி, மிளகாய், பூசணி, புடல், பீர்க்கன், வெள்ளரி

என அந்தந்த பட்டங்களில் அதற்குரிய காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு வந்தனர்.

தற்சமயம் வீரிய ஒட்டுரக காய்கறிகள் அறிமுகமான பின்னர், என்னவகையான காய்கறிகளை சாகுபடிக்கு தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து கோலியனூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் க. வீராசாமி கூறியது:

  • ஜனவரி: (மார்கழி, தை) கத்தரி, மிளகாய், பாகல், தக்காளி, பூசணி, சுரை, முள்ளங்கி, கீரைகள்.
  • பிப்ரவரி: (தை,மாசி) கத்தரி, தக்காளி, மிளகாய், பாகல், வெண்டை, சுரை, கொத்தவரை, பீர்க்கன், கீரைகள், கோவைக்காய்.
  • மார்ச்: (மாசி, பங்குனி) வெண்டை, பாகல், தக்காளி, கோவை, கொத்தவரை, பீர்க்கன்.
  • ஏப்ரல்: (பங்குனி, சித்திரை) செடி முருங்கை, கொத்தவரை, வெண்டை.
  • மே: (சித்திரை, வைகாசி) செடி முருங்கை, கத்தரி, தக்காளி, கொத்தவரை.
  • ஜூன்: (வைகாசி, ஆனி) கத்தரி, தக்காளி, கோவை, பூசணி, கீரைகள், வெண்டை.
  • ஜூலை: (ஆனி, ஆடி) மிளகாய், பாகல், சுரை, பூசணி, பீர்க்கன், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை, தக்காளி.
  • ஆகஸ்ட்: (ஆடி, ஆவணி) முள்ளங்கி, பீர்க்கன், பாகல், மிளகாய், வெண்டை, சுரை.
  • செப்டம்பர்: (ஆவணி, புரட்டாசி) செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி, கீரை, பீர்க்கன், பூசணி.
  • அக்டோபர்: (புரட்டாசி, ஐப்பசி) செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி.
  • நவம்பர்: (ஐப்பசி, கார்த்திகை) செடிமுருங்கை, கத்தரி, தக்காளி, முள்ளங்கி, பூசணி.
  • டிசம்பர்: (கார்த்திகை, மார்கழி) கத்தரி, சுரை, தக்காளி, பூசணி, முள்ளங்கி, மிளகாய் ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

இங்கு குறிப்பிட்டவைகளில் அந்த காலகட்டத்தில் எந்த காய்கறிக்கு மார்க்கெட் விலை அதிமகமாக உள்ளது என்பதை அறிந்து பயிரிட்டால் கூடுதல் லாபம் பெறலாம் என்றார் வீராசாமி.

தோட்டக்கலைத் துறையில் உள்ள துல்லிய பண்ணைத் திட்டத்தின் கீழ் 65 சதவீத மானிய விலையில் சொட்டு நீர்ப்பாசன உதவிகள் மற்றும் ரூ. 15,000 மதிப்பில் நீரில் கரையும் உரம் ஆகிய இடுபொருள்களுக்கான மானிய உதவிகளைப் பெற்று காய்கறி சாகுபடி செய்ய முன்வருமாறு பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

நன்றி: தினமணி

நாம் உட்கொள்ளும் உணவு

நாம் உட்கொள்ளும் உணவு வாயுனுள் ஆரம்பித்து ஆசனவாய் வழியாக சக்கையாக வெளிவரும் நிகழ்வுகளின் முழுமையான தகவல்கள். நேரம் கிடைக்கும் படித்து அறிந்துகொள்ளுங்கள் .

வாயிலே உணவைப்போட்டுக் கொள்கிறோம். திடப்பொருளானால் அதை மெல்கிறோம். திரவமானால் விழுங்குகிறோம். அது தொண்டையில் இறங்குகிறது. இந்த உணவுக்கு என்ன நேர்கிறது? ஜீரணமாதல் என்னும் சுவையான நிகழ்ச்சியைப் பற்றி இப்போது கவனிப்போம். நல்ல உணவுப் பழக்கங்களின் தேவையை உணரவும் இந்த விவரங்கள் பயன்படும்.

வாயிலே நேர்வது என்ன?

வாயிலே உணவை மெல்லும்போது அது சின்னஞ்சிறு துகள்களாக நொறுங்கி உமிழ்நீருடன் நன்றாகக் கலக்கிறது. வாயிலே எப்போதும் சுரக்கும், நிறமற்ற திரவமே உமிழ்நீர். உமிழ்நீர் வெறும் நீர்தானே என்று நினைக்கலாம். அப்படியல்ல அதிலுள்ள நுட்பமான என்ஸைம்கள் உணவை செரிக்கின்றன. உமிழ்நீரிலுள்ள என்ஸைம் பொருளாக மாற்றுகிறது.

சொல்லப்போனால். செரித்தல் என்பது இந்த இயக்கம்தான். இந்த மாற்றம் தான். எத்தனையோ விதமான உணவுப் பொருள்களை உடல் ஈர்த்துக் கொள்ளும் வண்ணம் பலவகை என்ஸைம்கள் மாற்றுவதும், அந்தச் சத்து உடலின் தேவைக்குப் பயன்படுவதுமே செரித்தல் என்னும் இயக்கம். என்ஸைம்களை உடலின் பல உறுப்புகள் தயாரிக்கின்றன. உணவை ஜீரணிக்க ஏற்ற இடங்களில் இந்தச் சாற்றைச் செலுத்துகின்றன. கடைசியாக, செரித்ததுபோக எஞ்சிய பொருளே மலமாக வெளியேறுகிறது. ஜீரண இயக்கத்தை படிப்படியாக தொடர்ந்து பார்ப்போம்.

சாப்பிடத் தொடங்கும் போது, ஏன், நல்ல உணவு மணக்கும் போதே, வாயிலே நீர் சுரக்கிறது. வாயிலுள்ள மூன்று ஜோடி உமிழ்நீர்ச் சுரப்பிகளிலிருந்து உமிழ்நீர் சுரக்கிறது. இரண்டு காதுகளுக்கும் கீழ், முன்புறத்தில் ஒரு ஜோடி; கீழ்த்தாடையின் பின்புறம் ஒரு ஜோடி; நாக்கின் அடியில் மூன்றாவது ஜோடி. தினமும் நமது வாயில் சுரக்கும் உமிழ்நீர் சுமார் பத்து கப் இருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். உமிழ்நீரிலிருக்கும் என்ஸைம், கார்போஹைடிரேட்டைப் பொடிப்பொடி யாக்கி, எளிதில் கரையும் சர்க்கரைப் பொருளாக மாற்றுகிறது என்று பார்த்தோம். உணவைக் கடித்து மென்றால். உமிழ்நீர் தன் வேலையைச் செய்ய உதவியாக இருக்கும். அதனால் தான் ஒவ்வொரு கவளத்தையும் முப்பத்திரண்டு முறை – எத்தனை பற்கள் உண்டோ அத்தனை முறை – கடித்து மெல்ல வேண்டும் என்று வேடிக்கையாகச் சொல்வதுண்டு.

அடுத்து, உணவு தொண்டையில் இறங்குகிறது. விழுங்கும்போது தொண்டையிலே தளரும் குரல்வளை மூடி, சரியாக வழிவிட்டு, உணவுக் குழாய்க்குள் உணவு செல்லுமாறும் அதற்கு அருகிலேயே உள்ள காற்றுக் குழாய்க்குள் போகாமலும் பார்த்துக் கொள்கிறது. எப்போதாவது இந்த மூடி உடனுக்குடனே மூடிக்கொள்ளாமல் ஒரு சிறு பருக்கையோ, ஒரு துளி திரவமோ காற்றுக் குழாய்க்குள் நுழைந்துவிடும். அப்போது நாம் என்ன பாடுபடுகிறோம். இருமல் வருகிறது. புரை ஏறுகிறது. கண்ணிலே நீர் வந்துவிடுகிறது.

இரைப்பை

விழுங்கப்பட்ட உணவு, உணவுக்குழாய் வழியாக இறங்கி, இரைப்பை என்னும் முக்கியமான உறுப்புக்குள் வந்து சேர்கிறது. இது ஒரு பை போன்றது. ஓயாமல் சுருங்கி, விரிந்து இயங்கிக் கொண்டேயிருக்கும் பை. இந்த அசைவினால் உள்ளே இருக்கும் உணவு நன்கு அரைக்கப்படுகிறது. இரைப்பைக்குள் பல புதிய என்ஸைம்கள் சேர்கின்றன. இரைப்பையின் உட்சுவரில் உள்ள சுரப்பிகள் சுரக்கும் என்ஸைம்கள், இவை இவற்றிலே ஒன்று ரென்னின்; நாம் பால் அருந்தியிருந்தால். அதிலுள்ள புரோட்டீனை மெத்தென்ற தயிராக்குவது இதுவே. மற்றொரு என்ஸைம், பெப்சின். இது புரோட்டீன் வகைகளை பெப்டோன் என்னும் எளிதில் கரையும் ஜீரணப் பொருளாக மாற்றுகிறது.

பெரிய அளவில் ஹைடிரோகுளோரிக் அமிலத்தைத் தயாரிக்கிறது. இரைப்பை. இரசாயனச் சோதனைச் சாலைகளில் கண்ணாடிக் குப்பியில் வைத்திருக்கும் அதே அமிலம் தான். இந்த அமிலம் செய்யும் வேலைகள் பல. ஒன்றோடொன்று இணைந்திருக்கும் புரோட்டீன் துகள்களை இது வளரச் செய்து தகர்க்கிறது. இந்த புரோட்டீன்களை பெப்டோனாக மாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ள பெப்சின் என்னும் என்ஸைமுக்கு ஒரு வலுவைத் தருகிறது. பலவகை உணவுகளில் கலந்துள்ள கனிமச்சத்தைப் பிரித்தெடுப்பதும் இந்த அமிலம்தான்; உணவுடன் வந்து சேர்ந்துவிடும் பாக்டீரியா நுண் கிருமிகளை அழிப்பதும் இதுவே. வாயிலே உணவு இருப்பது சில நிமிட நேரம் தான்.

ஆனால் இரைப்பையிலே அது பல மணிநேரம் தங்குகிறது. நன்றாகச் சாப்பிட்ட பின்னர் சுமார் இரண்டு மணி நேரம் வரை ரென்னின், பெப்சின், ஹைடிரோ குளோரிக் அமிலம் மூன்றும் இரைப்பையில் மிக அதிகம் சுரக்கின்றது. ஜீரணப் பணி வெகு தீவிரமாக நடைபெறுகிறது. இரைப்பையில் நிகழ்வது என்ன என்பதைச் சுருக்கமாகச் சொல்வதானால், பெரும்பாலும் புரோட்டீன் பண்டங்கள் துகளாகி, இரண்டும் என்ஸைம்கள் மற்றும் ஹைடிரோ குளோரிக் அமிலத்தின் உதவியுடன் பெப்டோன்களாக மாறுகின்றன எனலாம். மருத்துவர்கள் இரைப்பை நிகழ்ச்சியை ‘காஸ்ட்ரிக் ஜீரணம்’ என்கிறார்கள்.

அவ்வப்போது இரைப்பையின் அடிவாய் மூடி சிறிது திறந்து கொள்ளும்; ஓரளவு ஜீரணமான உணவு – கூழாய், பசையாய் விளங்கும் உணவு – அதன் வழியே செல்லும் மூடி உடனுக்குடன் மூடிக்கொள்ளும். நமது உடலுக்குள் நிகழும் அற்புத இயக்கங்களிலே இதுவும் ஒன்று. இரைப்பையிலே உணவு நெடுநேரம் தங்கிச் சிறிது சிறிதாக வெளியேறுவதால் நாம் தினம் மூன்று நாலுமுறை உணவு உண்டால் போதும். இரைப்பை ஒரேடியாகக் காலியாகிவிட்டால், அப்புறம் பசி நம்மை எப்போதும் வாட்டிக் கொண்டே இருக்கும்!

சிறுகுடல்

கூழான, பாதி செரித்த உணவு எடுத்துச் செல்லும் பகுதியே சிறுகுடல். இதன் மேல் பகுதிக்கு டியோடினம் என்று பெயர். இது ஓரடி நீளம் இருக்கும். சிறுகுடலின் பிற பகுதியைவிட அகன்றது இந்தப் பகுதி. இந்த டியோடினத்திற்குள் சொட்டுச் சொட்டாகக் கொட்டுகிறது ஓர் என்ஸைம் சாறு. இது இரண்டு பொருள்களின் கலவை. ஒன்று பித்தச் சாறு, கல்லீரலிலிருந்து வரும் காடியான சாறு. இரைப்பைக்கும் குடலுக்கும் இடையிலுள்ள கணையம் என்னும் உறுப்பிலிருந்து வருவது மற்றொரு சாறு. இந்த உறுப்புகள் எங்கே உள்ளன என்பதை அறிய உதவுகிறது. வரைபடம் மூன்றாவது பொருள் ஒன்றும் ஜீரணத்துக்கு உதவுகிறது. இதுவே குடல்சாறு, குடலில் வழியெங்கும் சுரக்கும் சாறு இது. நமது சிறுகுடல் மெல்லியதாக இருந்தாலும் மிகவும் நீண்டது; நம் உயரத்தைப்போல் ஐந்தாறு மடங்கு இருக்கும்! அதனால் அது பக்குவமாக, கச்சிதமான மடிப்புகளுடன், வயிற்றுக்குள், தொப்புளுக்குப் பின்னே உள்ளது. இந்த நீண்ட சிறுகுடலுக்குள்ளே தான் ஜீரண இயக்கத்தின் பெரும் பகுதி நிகழ்கிறது.

ஜீரண இயக்கம் என்பது சற்றுச் சிக்கலான பணி. கணையம் அனுப்பும் சாற்றில் பல என்ஸைம்களும் உள்ளன. ஹார்மோன் என்னும் ஊக்குவிக்கும் சாறுகளும் உள்ளன. இவை எல்லாமாகச் சேர்ந்து, முன்னரே பெட்டோனாக மாறிய புரோட்டீன் உணவுகளை மேலும் தகர்க் கின்றன. தனித்தனி அமினோ அமிலங்களாக மாற்றுகின்றன. கணையச்சாறு, கார்போஹைடி ரேட் மற்றும் கொழுப்புச் சத்தை ஜீரணித்து விடுகிறது. கார்போ ஹைடிரேட் மாவுச் சத்தைச் கணையச் சாறு எளிதில் கரையும் குளுக்கோஸ் பொருளாக மாற்றுகிறது. கொழுப்பை இன்னும் எளிய பொருளாக மாற்றுகிறது. இந்த மாற்றத்தை நிகழ்த்த கல்லீரல் ஒரு பொருளைத் தயாரிக்கிறது.

மனித உடலில் கல்லீரல் தான் இரசாயன சோதனைச்சாலை. லிவர் என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு கல்லீரல் என்றும் பொருள்; வாழ்பவர் என்றும் பொருள். இதை வைத்து, வாழ்க்கை எப்படி இருக்கிறது? லிவரைப் பொறுத்து இருக்கிறது என்ற சிலேடையாகச் சொல்வதுண்டு. இரண்டு பொருளிலும் இது உண்மையான வாசகம். கல்லீரலுக்குள் இதயத்திலிருந்து இரத்தம் வருகிறது. இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவையும், தசைகளில் இவற்றின் சேமிப்பையும் சீராக வைத்துக் கொள்வது கல்லீரலின் பொறுப்பு. இது இரத்தத்திலிருந்து அமினோ அமிலங்களை எடுத்து புரோட்டீன் மாற்றி, சேகரித்து வைத்துக் கொள்கிறது. உடலில் வேறு எங்கேயாவது தேவைப்படும் போது இந்த புரோட்டீனை இரத்தத்தில் வழியாக அங்கே அனுப்புகிறது. உடலிலே விஷப்பொருள் ஏதாவது வந்துவிட்டால் இந்த விஷத்தை முறிப்பது கல்லீரலே. பல வைட்டமின்களையும் கனிச்சத்துகளையும் சேகரித்து வைத்துக் கொள்வதும் அதுவே.

கல்லீரல் தயாரிக்கும் பொருள்களில் ஒன்று பித்தச்சாறு. இது பசுமை கலந்த மஞ்சளான, காடியாபன ஒரு சாறு. அதிலே என்ஸைம் சத்து ஒன்றும் இல்லை. ஆனால் பல பயனுள்ள இரசாயனப் பொருள்கள் இதிலே உள்ளன. இவற்றின் வேலை, உணவை நுட்பமான சின்னஞ்சிறு துகள்களாக்கிக் கலவைச் சாறில் மிதக்கச் செய்து. இந்தச் சாற்றுக்கு எம்ல்ஷன் என்று பெயர். பால் இத்தகைய ஓர் எம்ல்ஸன்தான். உணவு இவ்வாறு எம்ல்ஸன் நிலைக்கு வந்துவிட்டால் என்ஸைம்கள் அதனை ஜீரணிப்பது எளிது. முக்கியமாக, கொழுப்புப் பொருளைப் பித்தநீர் இந்தப் பக்குவத்துக்குக் கொண்டு வந்தால் தான் குடலிலே இது ஜீரணமாகும்.

இவ்வாறு நாம் உண்ட உணவெல்லாம் நீரிலே கரையும் பல வகைத் துகள்களாகத் தகர்க்கப்பட்டுப் பல பொருள்களாக மாறுகின்றன. இதற்கு என்ன நேர்கிறது? இந்தச் சத்துக்கள் உடலிலே ஈர்க்கப்பட வேண்டும். இது நிகழ்வது சிறுகுடலிலேதான். சிறு குடலின் உட்சுவரிலே பல உள்ளன. இவற்றுக்கு ‘வில்லி’ என்று பெயர். ஜீரணமான உணவிலிருக்கும் சத்தை இவை உறிஞ்சிக் கொண்டு நேரே இரத்தத்தில் கலக்கச் செய்கின்றன. உடனே இரத்தம், தனது சுற்றோட்டத்தில் இந்தச் சத்துக்களை எடுத்து உடலெங்கும் பரப்புகிறது. ஜீரணமாக கொழுப்புச் சத்து நிணநீர் நாளத்தின் வழியாகத் தனியே எடுத்துச் செல்லப்படுகிறது. பிறகு கழுத்தின் அருகே இரத்தத்தில் அந்தச் சத்து கரையச் செய்கிறது. இவ்வாறு நாம் உண்ணும் உணவு இரத்தத்தை அடைகிறது. இரத்தத்தின் மூலம் உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் செல்கிறது. உடலுக்குச் சக்தி தரவும், உடல் வளர்ச்சிக்கும், உடலின் இயக்கங்களை நிறைவேற்றவும் உதவுகிறது.

வைட்டமின்களும் கனிச்சத்தும் சாதாரணமாக நீரில் கரையக் கூடியன. இல்லாவிட்டாலும் இரத்தத்தில் கரையும் வகையில் அவற்றுக்குத் தேவையான மாற்றம் தரமுடியும். வைட்டமின் ஏ மட்டும் விதிவிலக்கு. அது கொழுப்பில் கரைவது. சிறுகுடலில் கொழுப்பு போலவே இது உறிஞ்சப்படுகிறது. வைட்டமின்களும் கனிச்சத்தும் செரிமானத்தின் போது நுண்துகள்களாக உடைபடுவதில்லை இதர சத்துப் பொருள்கள் ஜீரணமானதும் இவை அப்படியே உடலிலே கரைந்து கலந்து விடுகின்றன.

பெருங்குடல் :

சிறுகுடலைத் தொடர்ந்துள்ள பெருங்குடல் வழவழப்பானது. சிறுகுடலில் உள்ளதுபோல அதற்குள்ளே உறிஞ்சுகுழாய் ஒன்றும் இல்லை. தடிமனான சைக்கிள் ட்யூபைப் போன்றது அது. படத்தைப் பார்த்தால் ‘ப’ எழுத்தைக் கவிழ்த்தது போன்று இது விளங்கக் காணலாம். ஜீரணமான உணவு இதன் வழியே செல்லச் செல்ல அதன் உட்சுவர் வழியே உணவிலுள்ள நீரேல்லாம் இரத்தத்திலே உறிஞ்சப்படுகிறது. இதனால் உணவு திரவநிலை குறைந்து திடப் பொருளாக மாறுகிறது. ஜீரணமான உணவிலே வேறு சில மாற்றங்களும் நேர்வதால் சற்று துர்நாற்றம் வருவதற்கும் காரணமாகிறது. ஜீரணமாகாத பொருளெல்லாம் சேர்ந்து ஆசன வாய் என்னும் வெளியேற்ற வழியாக மலமாக வெளியேறுகிறது

கோவிலில் தீபம் காட்டுவது ஏன்?

கோவிலில் தீபம் காட்டுவது ஏன்?
---------------------------------------------------
தீப வழிபாடு நம் தமிழகத்தில் பழங்காலத்தொட்டு நடைபெற்று வருகிறது.கோவிலில் தெய்வத்திற்கு செய்யப்படும் பதினாறு உபச்சாரங்களில் தீப ஆராதனையும் ஒன்று.கோவிலில் காட்டப்படும் தீபம் ஞானத்தின் அறிகுறியாகும்.

தீபத்தை இறவனுக்கும் காட்டுவதற்கு முன்னால்,ஒரு திரை போடப்படுகின்றது.தீபத்தை காட்டும்பொழுது திரை விலக்கப்படுகிறது.இதன் தத்துவம் என்னவென்றால்,நம்முடைய ஆணவம் என்கின்ற திரையை விலக்கினால் மனதில் ஞான ஒளி பிறந்து.நம்முடைய மனம் தெய்வ நிலையை அடையும் என்பதாகும்.

தெய்வத்திற்கு மூன்றுமுறை தீபம் காட்டப்படுகிறது,முதலில் காட்டுவது உலக நன்மைக்காவும்,இரண்டாவது காட்டுவது ஊர் நன்மைக்காகவும்,மூன்றாவது காட்டுவது பஞ்ச பூதங்களின் நன்மைக்காகவும் ஆகும்.

பூசைக் காலத்தில் பலவித தீபங்கள் காட்டப்பெறுகின்றன. தீபாராதனைக் காலத்தில் தெய்வங்கள் பலவும் தீபங்களில் வந்து அமர்ந்து இறைவனைத் தரிசித்துச் செல்வார்கள் என்பது மரபு. பல அடுக்குகளைக் கொண்ட நட்சத்திர தீபம் முதல் பல தீபங்கள் காட்டப் பெறுகின்றன.

நட்சத்திரங்கள் இறைவனை வழிபட்டு ஒளி பெறுகின்றன என்ற கருத்தில் நட்சத்திர தீபம் காட்டப் பெறுகின்றது. ஒன்பது தீபங்கள் நவசக்திகளைக் குறிக்கும்.

ஏழு தீபங்கள் சப்தமாதர்களைக் குறிக்கும். ஐந்து தீபம் – நிவிர்த்திகலை, பிரதிட்டாகலை, வித்தியாகலை, சாந்திகலை, சாந்தி அதீதகலை என்ற ஐந்து கலைகளைக் குறிக்கும். மூன்று தீபம் சந்திரன், சூரியன், அக்னி என்ற மூன்று ஒளிகளைக் குறிக்கும். ஒற்றைத் தீபம் சரசுவதியையும், சுவாகாதேவியையும் சுட்டும்.

அறிவியல் பூர்வமாக பார்த்தால் அந்த காலத்தில் மின்சார வசதி இல்லாததால் இறைவனின் முகம் தெளிவாக தெரிவதற்கு தீபம் காட்டபடுவதாக சிலரின் கருத்தாக இருக்கும்.எது எப்படி இருந்தாலும் பஞ்சபூதங்களில் ஒன்றான அக்னியை தீபமாக காட்டுவதில் நிறைய தத்துவங்கள் அடங்கிருப்பது என்பதே உண்மை.

காப்பீடு… கவனம்!

காப்பீடு… கவனம்!


நம்மில் சிலர், காப்பீட்டு விண்ணப்பப் படிவத்தில் கொடுக்கும் தகவல் குறித்து அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. அதனால் பெரிதாக என்ன பாதிப்பு ஏற்பட்டுவிடப் போகிறது என்ற அலட்சியம். அது சரிதானா?

உதாரணத்துக்கு இதைப் பாருங்கள்... 3 லட்ச ரூபாய் வருடாந்திர வருமானம் கொண்டவர் ராஜேஷ். இவர் பல்வேறு காப்பீட்டு நிறுவனங்களில் மொத்தமாக ரூ. 25 லட்சத்துக்குக் காப்பீடு செய்திருக்கிறார். மீண்டும் ரூ. 1 கோடிக்கு காப்பீடு பெறுவதற்கு ஒரு புதிய டெர்ம் இன்சூரன்ஸுக்கு ராஜேஷ் விண்ணப்பித்தார்.

அப்போது, மேலும் கூடுதலாக ரூ. 50 லட்சத்துக்கு மட்டுமே காப்பீடு பெற முடியும் என்று கூறி ராஜேஷின் விண்ணப்பத்தைக் குறிப்பிட்ட காப்பீட்டு நிறுவனம் நிராகரித்து விட்டது.

ஏன் அவ்வாறு செய்தது?

ராஜேஷ் தனது பணிவாழ்க்கைக் காலம் வரை (58 வயது) வாழ்வார் என்றால் அவர் மொத்தமாக ரூ. 75 லட்சம் சம்பாதிப்பார். அதாவது, ரூ. 3 லட்சம் * 25 ஆண்டுகள். ஆண்டுதோறும் ராஜேஷின் சம்பளம் உயரும் என்றாலும், வருடங்கள் குறையும் என்பது போன்ற காரணங்களால் உத்தேசமாகத்தான் இந்தக் கணக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ராஜேஷ் ஏற்கனவே ரூ. 25 லட்சம் காப்பீடு பெற்றிருக்கிறார். புதிதாக ரூ. 1 கோடிக்கு காப்பீடு பெற்றால் அவரது மொத்தக் காப்பீடு ரூ. 1.25 கோடியாக உயரும். ராஜேஷ் உயிரோடு இருந்தால் எவ்வளவு சம்பாதிப்பாரோ அதைவிட அதிகமாக அவரது மரணத்துக்குப் பின் பெறும் நிலை ஏற்படும்.

எளிமையாகக் கூற வேண்டும் என்றால், ராஜேஷின் வாரிசுதாரர்கள் அவர் உயிரோடு இருந்தால் எவ்வளவு பெறுவார்களோ, அதைவிட அதிகமாக அவர் இறந்தால் பெறுவார்கள். இந்த `லாஜிக்'கின் அடிப்படையில்தான் புதிய காப்பீட்டு நிறுவனம் ரூ. 1 கோடிக்கான அவரது விண்ணப்பத்தை நிராகரித்தது.

நீங்கள் லாபம் அடைவதற்கான அமைப்பல்ல, காப்பீட்டுத் திட்டம். ஒருவர் உயிரோடு இருப்பதைவிட, காலமானால் அதிகப் பயன் கிட்டும் என்ற கருத்து ஏற்பட்டால், காப்பீடு தவறாகப் பயன்படுத்தப்படலாம். காப்பீட்டுத் திட்டம் எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த அடிப்படை நோக்கமே அடிபட்டுப் போகும். ஏற்கனவே காப்பீடு தொடர்பான பல குற்றங்கள் உலகளவில் காணப்படுகின்றன.

ஒருவர் தான் ஏற்கனவே பெற்றிருக்கிற காப்பீடுகளை தெரிவிக்காமல் அல்லது ஒன்றிரண்டு காப்பீடுகளை மட்டும் தெரிவித்தால், அவர் காலமாகும்போது அவருக்கான `கிளெய்மை' நிராகரிக்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உரிமை உண்டு. புதிய காப்பீடைப் பெறுவதே பலனளிக்காமல் போகும்.

எனவே உங்களின் காப்பீட்டு முகவர், அனைத்துத் தகவல்களையும் அளிக்கும்படி வற்புறுத்தினால் எரிச்சல்பட்டு, `எனக்குக் காப்பீடே வேண்டாம்' என்று மிரட்டாதீர்கள். முழுமையான தகவல்கள் இல்லாமலே அவர் விண்ணப்பத்தை அனுப்பிவிடக்கூடும். ஆனால் அதனால் நஷ்டமடையப் போவது உங்கள் குடும்பம்தானே தவிர, முகவர் அல்ல.

Wednesday, August 8, 2012

நிச்சயமற்ற மழையைச் சமாளிக்க சம்பா பருவத்தில் நேரடி புழுதி நெல் விதைப்பு

நேரடி புழுதி நெல் விதைப்பு பணி
நேரடி புழுதி நெல் விதைப்பு பணி


மாறிவரும் கிராம சமூக பொருளாதார காரணிகளால் வேளாண்மைக்கு பணியாளர்கள் கிடைப்பது ஒரு பிரச்னையாக மாறி வருகிறது.

இதை சமாளிக்க தமிழக அரசு வேளாண்மையில் இயந்திர மயமாக்கலை ஊக்குவித்து வருகிறது. மேலும் டெல்டா மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை குறைந்து குறுவை சாகுபடி குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் போதுமான நீர் இல்லாமையால் எதிர்வரும் சம்பா பருவமும் நிச்சயமற்ற சூழல் விவசாயிகளிடையே எழுந்துள்ளது.


இந்நிலையில் சம்பா பருவத்தில் நேரடி புழுதி விதைப்பு செய்தால் வெற்றிகரமான சாகுபடி செய்யமுடியும் என்கிறார் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை வேளாண் உதவி இயக்குநர் எஸ்.ரமேஷ். நேரடி புழுதி விதைப்பு குறித்து அவர் தெரிவித்தது:
சம்பா பருவத்துக்கு நாற்று விடும் பருவமான ஆகஸ்ட் மாத இறுதியில் அல்லது செப்டம்பர் மாத முதல் வாரத்தில் பாசனத்துக்கு மேட்டூர் நீர் கிடைக்காது என்ற சூழ்நிலை ஏற்பட்டால் புழுதி நேரடி விதைப்பு முறை ஒரு சிறந்த தீர்வாகும். இம்முறை கடந்த 2004-ல் இதேபோன்ற நிச்சயமற்ற காலநிலையில் வேளாண் துறையால் இம்முறை பரிந்துரைக்கப்பட்டு விவசாயிகளால் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட ஒன்றாகும்.
புழுதி விதைப்பு செய்வது எப்படி?

அவ்வப்போது கிடைக்கும் மழைக்கேற்ப நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை புழுதி உழவு செய்துகொள்ள வேண்டும். செப்டம்பர் 5 லிருந்து 15 தேதிக்குள் விதைப்பு செய்து படல் இழுத்து விதைகளை மூட வேண்டும். இதை டிராக்டரைக் கொண்டு செய்ய முடியும். இவ்வாறு புழுதி விதைப்பு செய்யப்பட்ட விதைகள் மழை மூலமோ, பாசனம் செய்தோ போதுமான ஈரப்பதம் கிடைக்கும்போதோ முளைத்து வரும். வாரக்கடைசியில் மழை இல்லாவிட்டாலும் விதைகள் பாதிக்கப்படுவதில்லை. சில சமயம் மழை போதுமானதாக அமையாவிடில் வயலில் மேலாக உள்ள விதைகள் மட்டும் முளைத்துவரும். அடுத்து வரும் மழைக் காலங்களில் மீத விதைகள் முளைக்கும். இதனால் ஏற்படும் நாற்றின் வயது வேறுபாட்டை உர மேலாண்மை மூலம் சரிபடுத்திக் கொள்ள முடியும்.

விதை அளவு:

சம்பா பருவத்துக்கு நாற்றங்காலுக்கு பரிந்துரைக்கப்படும் அளவான ஏக்கருக்கு 16 கிலோவை போல இருமடங்கு அளவு விதையளவு நேரடி புழுதி விதைப்புக்கு பயன்படுத்த வேண்டும். அதாவது ஒரு ஏக்கருக்கு 30 லிருந்து 35 கிலோ வரை விதைகளை, விதைப்பு செய்யலாம். நேரடி புழுதி விதைப்புக்கு விதை டிரம் அல்லது விதைக் கருவி (நங்ங்க் ஈழ்ண்ப்ப்) கொண்டு விதைப்பு மேற்கொள்ளலாம். இவ்வாறு செய்யும்போது ஏக்கருக்கு 12 அல்லது 15 கிலோ விதையே போதுமானதாக இருக்கும். இம்முறையை கடைபிடித்தால் வேளாண்மைத்துறை வழங்கிவரும் திருத்திய நெல் சாகுபடிக்கான மானிய உதவிகளை பெற முடியும்.

நேரடி விதைப்புக்கு ஏற்ற ரகங்கள் மற்றும் வயது விவரம்:

காவித்திரி (இத-1009)- வயது 160 நாள், மேம்படுத்தப்பட்ட வெள்ளை
 பொன்னி – 140 நாள், அஈப-38- 135 நாள், இஞ-43 – 135 நாள், இஞ(த)-48, இஞ (த)-50 , ஆஆப-5204 – 135 நாள். செப்டம்பர் 15 தேதியிலிருந்து 30 வரை விதைப்பு செய்யும்போது அஈப-39 (125 நாள் பயிர்) ரகத்தை விதைப்பு செய்யலாம்.
 
களை நிர்வாகம்:

நேரடி புழுதி விதைப்பின் பிரச்னையாக கருதுவது களை எடுக்கும் பணி. இதற்கு விவசாயிகள் ரசாயன களைக்கொல்லிகளைப் பயன்படுத்தி தீர்வு காணலாம். பயிர் முளைத்து 15 நாட்களிலிருந்து 25 நாட்களுக்குள் வயலில் எம்மாதிரியான களைகள் முளைத்துள்ளன என்பதற்கேற்ப களைக் கொல்லிகளை தேர்வு செய்து களைகளை கட்டுப்படுத்தலாம். வயலில் கோரைகள் மட்டும் இருப்பின் 2,4 ஈ கலைக்கொல்லியை ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம். வயலில் புல் வகை களைகள் மட்டும் இருப்பின் ஃபெளோக்சா புரோப்பாரிதல் 9.3 சதவீத நஇ களைக் கொல்லியை ஒரு லிட்டர் நீருக்கு 2.5 மி.லி என்ற அளவில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம். வயலில் கோரைகள், புற்கள் என இரண்டு விதமான களைகளும் இருப்பின் பிஸ்பைரிபேக் சோடியம் 10 சதவீதம் நஇ களைக் கொல்லியை ஒரு லிட்டர் நீருக்கு 1 மி.லி என்ற அளவில் சேர்த்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம். இந்த களைக்கொல்லியைப் பயன்படுத்துகையில் வயலில் நீர் தேங்கி நிற்கக்கூடாது.

உர நிர்வாகம்:

பயிர் முளைத்தலிலிருந்து 30-ம் நாள் வயலில் நீர் நிறுத்தி அடியுரம் இட வேண்டும். அடியுரம் இட்டதிலிருந்து 20 நாட்கள் இடைவெளியில் மேலுரம் இட வேண்டும்.

பயிர் எண்ணிக்கை பராமரித்தல்:

நேரடி விதைப்பில் பயிர் எண்ணிக்கை சரியான முறையில் பராமரிக்க முடியும். நடவு செய்யும்போது ஆட்கள் பற்றாக்குறையால் பயிர் எண்ணிக்கை சரியாக பராமரிக்க முடிவதில்லை. நேரடி விதைப்பில் பயிர் எண்ணிக்கை ஒரு சதுரமீட்டருக்கு 60-ஐ விட அதிகமாக இருப்பின் களைத்து விட வேண்டும். பயிர் எண்ணிக்கை மிக குறைந்துவிட்டால் திருத்திய நெல் சாகுபடி செய்வது போன்று மேட்டுப்பாத்தி நாற்றாங்கால் விட்டு 12 முதல் 16 நாள் வயதுடைய நாற்றுகளை விட்டு பயிர் எண்ணிக்கை பராமரிக்க வேண்டும்.
நேரடி புழுதி விதைப்பின் நன்மைகள்: இதன் மூலம் சாகுபடி செலவு குறைவு. நாற்றங்கால் தயாரித்தல், நாற்று பறித்தல், நடவு செய்தல் ஆகிய பணிகள் இல்லாமையால் ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வரை சாகுபடி செலவு மிச்சமாகிறது. நெற்பயிரின் வயது 10 நாட்கள் வரை குறைகிறது. பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்படுவதால் கூடுதல் மகசூல் கிடைக்கிறது. எனவே டெல்டா மாவட்ட விவசாயிகள் நீர் நிச்சயமற்ற காலநிலையில் நம்பிக்கை இழக்காமல் வரும் சம்பா பருவத்தில் நேரடி புழுதி விதைப்பின் மூலம் சாதனை படைக்கலாம்

தினமணி செய்தி
ஜி.சுந்தரராஜன்
பரங்கிப்பேட்டை வேளாண் உதவி இயக்குநர் எஸ்.ரமேஷ்.

பயறு வகை பயிர்களைத் தாக்கும் பூச்சிகளும் கட்டுப்படுத்தும் வழிகளும்

பயறுவகை பயிர்களைக் தாக்கும் பூச்சிகளும், அதை கட்டப்படுத்தும் என்.பி வைரஸூம்.
விவசாயிகள் பயிரிடும் பயறு வகை பயிர்களை பல்வேறு வகையான பூச்சிகள் தாக்குகின்றன. குறிப்பிட்ட சில வைரஸ்களை கொண்டு தயாரிக்கப்படும் உயிர்ரக மருந்துகளைக் கொண்டு இவ் வகையான பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
புதுச்சேரி மாநில விவசாயிகள் நிலக்கடலை, உளுந்து, பச்சைப்பயிறு, துவரை, சோயா பீன்ஸ், சூரியகாந்தி போன்றவற்றை பயிரிடுகின்றனர். இப் பயிர்களில் பச்சை புழு சேதத்தை உருவாக்கி மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது.
இந்த பச்சைப் புழுக்களை வைரஸ் உயிரிகளைப் பயன்படுத்தி அழிக்கலாம். இப் பூச்சிகளை அழிக்க என்.பி.வைரஸ் என்ற உயர்ரக பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்படுகிறது.
பயறுவகை பயிர்களைக் தாக்கும் பூச்சிகளும் அதை கட்டப்படுத்தும் என்பி வைரஸ்
பயறுவகை பயிர்களைக் தாக்கும் பூச்சிகளும் அதை கட்டப்படுத்தும் என்பி வைரஸ்
பச்சைப் புழு:
கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பயிர்கள் மற்றும் இயற்கையாக வளரும் தாவர இனங்களைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட இந்த பச்சைப் புழு பல பயிர் உண்ணும் பூச்சியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுவாக பச்சைப் புழுக்கள் தமது ஒரு மாத கால வாழ்க்கை சுழற்சியில் 30-45 நாள்கள் வயதுடைய பயிர்களைத் தாக்கி சேதப்படுத்துகின்றனர். சேதப்படுத்தப்படும் பயிர்களில் பச்சைப் புழுக்களின் அந்துப்பூச்சிகள் (தாய்ப் பூச்சிகள்) நடமாட்டம் பரவலாக இருக்கும்.
இந்த அந்துப் பூச்சிகள் இலைகளின் மீது முட்டைகள் இடுகின்றன. மூன்று அல்லது நான்கு நாள்களில் முட்டையிலிருந்து வெளிவரும் இளம் புழுக்கள் பயிர்களின் மொட்டு, காய், விதை, மற்றும் மலர் ஆகிய பாகங்களில் தலையை உட்செலுத்தி எஞ்சிய பாகங்களை வெளியே வைத்து தாக்குலை ஏற்படுத்துகின்றன. இளம் புழுவானது ஒரு நாளைக்கு 30-40 பயிர் பாகங்களை அழிக்கும் தன்மை உள்ளது. பச்சைப் புழுவானது சில சமயங்களில் பழுப்பு கலந்த பச்சை நிறத்திலும் 35 மி.மீ. நீளமுடையதாகவும் இருக்கும்.
இது தனது புழுப் பருவத்தை 18-25 நாள்களில் நான்கு நிலைகளை கடந்து முடிக்கிறது. பருமனான அந்துப் பூச்சியானது மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் இருப்பதோடு அதன் முன் இறக்கையில் சாம்பல் நிற அலை போன்ற கோடுகளுடன் நடுவில் சிறுநீரக விதை போன்ற கருப்பு புள்ளி இருக்கும்.
என்.பி.வைரஸ் உயிரி:
என்.பி.வைரஸ் உயர்ரக பூச்சிக் கொல்லிகள், கண்ணுக்குப் புலப்படாத வைரஸ் நுண்கிருமிகளால் ஆன நன்மை செய்யும் உயிரினக் கட்டுப்பாடு காரணியாகும், வைரியான் என்ற உட்கருவைக் கொண்ட இந்த வைரஸ் கிருமிகள் முறையற்ற வடிவமைப்பில் அறுகோண செல்களால் ஆனது.
இவ் வைரஸ் கிருமிகள் பச்சைப் புழுக்களை மட்டுமே கொல்லக் கூடிய ஆற்றல் பெற்றவை. என்.பி.வைரஸ் உயர்ரக பூச்சிக்கொல்லி மருந்தைப் பயிர்களில் தெளித்தவுடன் புழுக்கள் பயிர்களின் பாகங்களை உண்ணும் போது வைரஸ் கிருமிகள் புழுக்களின் வயிறு, குடல் பகுதிகளுக்கு செல்கின்றன. அங்கு அவை அதிகமாக உற்பத்தியாகி இரத்தத்தில் கலக்கிறது. வைரஸ் தெளித்த 5-7 நாள்களில், வைரஸ் துகள்கள் புழுக்களின் அடிபாகத்தில் நோயை உண்டாக்கும்.
பின்னர் புழுக்கள் பயிர்களில் தலைகீழாக தொங்கி இறந்துவிடும். வைரஸ் கிருமிகளால் தாக்கப்பட்ட புழுவின் அடிப்பாகத்தில் ஊதாநிற வண்ணம் காணப்படும். இந்த என்.பி.வைரஸ் எனும் புதிய உயிரினக் கட்டுப்பாடு காரணி புதுச்சேரி குரும்பாப்பட்டில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராசர் வேளாண் அறிவியல் திரவ வடிவில் பிளாஸ்டிக் குடுவைகளில் 100 மிலி மற்றும் 250 மிலி அளவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
உபயோகிக்கும் முறை:
என்.பி.வைரஸ் கரைசலை ஒரு ஏக்கருக்கு 250 மிலி என்ற அளவில் எடுத்துக் கொண்டு அதனுடன் 5 சதவீத வெல்லச் சர்க்கரை, 5 சதவீத கிரானைட் பாலிஷ் கழிவு, ஒட்டுத் திரவமான டீபால் (அல்லது) ரானிபால் 100 மிலி, ராபின் நீலம் 100 மிலி மற்றும் போரிக் அமிலம் (அல்லது) டானிக் அமிலம் 25 மிலி சேர்த்து இளம் புழுக்களின் தாக்குதல் தோன்றியவுடன் இலைகள், தண்டுகள், காய்கள், கதிர்கள் முழுவதும் நனையும்படி மாலை வேளையில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
இதை மாலைப் பொழுதில் மட்டுமே தெளிக்க வேண்டும். பயிர்களின் அனைத்து பாகங்களிலும் படுமாறு தெளிக்க வேண்டும். நல்லத் தண்ணீரை தெளிப்பதற்கு பயன்படுத்த வேண்டும்.
எக்காரணம் கொண்டும் உப்பு நீர், கலங்கல் நீர், நுரைப்பு நீர் ஆகியவற்றை தெளிப்பதற்கு பயன்படுத்தக் கூடாது. இளம் புழுக்கள் தோன்றியவுடன் தெளிக்க வேண்டும். வைரஸ் கரைசலை எக்காரணம் கொண்டும் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளுடனும், வேப்ப எண்ணெய்யுடனும் கலக்கக்கூடாது.
வைரஸ் கரைசலைப் பயிர்களின் மீது தெளித்தவுடன் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளின் உபயோகத்தை 10 நாள்களுக்கு தவிர்க்க வேண்டும்.
இந்த வைரஸ் உயிர் ரக மருந்தை பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். செலவும் குறைவாகும். இதனால் விவசாயிகள் கூடுதல் லாபம் பெற முடியும்.
மேலும் இந்தப் பூச்சிகள் பயறு வகைகள் மட்டுமின்றி தக்காளி, வெண்டை, பச்சைமிளகாய், பூசணி, கனகாம்பரம் மற்றும் கேந்தி போன்றவற்றிலும் தாக்கும். அதற்கும் இந்த என்.பி. வைரஸ் உயர்ரக மருந்து கரைசலை உபயோக்கிகலாம் என்றார்.
தினமணி செய்தி
ஆர்.ஜெயபிரகாஷ்
புதுச்சேரி வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியியல் வல்லுநர் நி.விஜயகுமார்

நாட்டுக் கோழிகளை தாக்கும் நோய்களும், கட்டுப்படுத்தலும்…

நாட்டுக் கோழிகளை அதிகளவில் தாக்கக் கூடிய நோய்கள் குறித்தும், அதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாட்டுக் கோழிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் இருப்பதால் இந்தக் கோழிகளை குறைந்த அளவே நோய்கள் தாக்குகின்றன. இவற்றில் வெள்ளைக் கழிச்சல், அம்மை நோய், ஒட்டுண்ணி நோய்கள், பற்றாக்குறை நோய்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.
நாட்டுக்கோழி
நாட்டுக்கோழி
வெள்ளைக் கழிச்சல்:
நாட்டுக் கோழிகளைத் தாக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த வெள்ளைக் கழிச்சல் நோய், கோடை மற்றும் குளிர் காலப் பருவ மாற்றத்தின் போது தாக்கக்கூடியதாகும்.
நோய் பாதிக்கப்பட்ட கோழிகளின் எச்சம், சளி, காற்று மூலமாகவும், பண்ணையாள்கள், தீவனம் மற்றும் தண்ணீர் மூலமாகவும் பரவுக்கூடியது. இதைக் கொக்கு நோய் என்றும் கூறுவார்கள்.
நோய் தாக்கப்பட்ட கோழிகள் தீவனம், தண்ணீர் எடுக்காது. வெள்ளை மற்றும் பச்சையாகக் கழியும். எச்சமிடும் போது ஒரு காலை மட்டும் தூக்கிக் கொள்ளும். ஓர் இறகு மட்டும் செயலிழந்து தொங்கும். தலையை முறுக்கிக் கொண்டு விரைவில் இறந்து விடும்.
பண்ணையில் ஒரு கோழியை நோய்க் கிருமி தாக்கினால் ஏறத்தாழ எல்லாக் கோழிகளும் இறக்கக் கூடும். எனவே, வெள்ளைக் கழிச்சல் நோய்க்கு தடுப்பூசி போடுவது அவசியம்.
அம்மை நோய்:
கோழிகளின் இறகு அற்ற பகுதிகள், உறுப்புகளைப் பாதிக்கும் நச்சுயிரி நோயே அம்மை நோயாகும். முதலில் பரு உண்டாகி, பிறகு அதில் சீல் கட்டி நீர் கோர்த்த கொப்பளங்களாகி உடைந்து விடும்.
இந்தச் சமயத்தில் உடல் வெப்பம் அதிகரிக்கும், சோர்ந்து அசைவற்ற நிலையில் இருக்கும். உடல் எடையும், முட்டை உற்பத்தியும் குறையும். பண்ணைகளில் 20-30 சதம் வரை இறப்பு ஏற்படக்கூடும்.
கோடைக் காலங்களிலேயே ஏற்படக்கூடிய இந்த நோய், அம்மையின் காய்ந்த உதிர்ந்த பொடுகுகள், கொசுக்களின் வழியாகப் பரவுகிறது. இந்த நோய் பரவாமல் இருக்கத் தடுப்பூசி போடுவது அவசியம்.
ரத்தக் கழிச்சல்:
மூன்று வார வயதுக்கு மேலான குஞ்சுகள், கோழிகளை ஈரமான இடத்தில் அடைத்து வைக்கும்போது ரத்தக் கழிச்சல் அதிகளவில் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட கோழிகளின் குடல் வீங்கி ரத்தக் கசிவு ஏற்படுவதால் எச்சத்தில் ரத்தக் கசிவு காணப்படும். இதைத் தடுக்க கொட்டகையைச் சுத்தமாகவும், ஈரமின்றியும் பாதுகாக்க வேண்டும்.
ஒட்டுண்ணி நோய்கள்:
ஒட்டுண்ணி நோய்கள் அக ஒட்டுண்ணி, புற ஒட்டுண்ணி என இரு வகைப்படும். திறந்த வெளியில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளை அதிகளவில் அக ஒட்டுண்ணிகள் தாக்குகின்றன.
உருண்டை, நாடாப் புழுக்கள் கோழிகளைத் தாக்கி உணவு செரிமானக் கோளாறு, கழிச்சலை உண்டாக்குவதோடு இறப்புகளையும் ஏற்படுத்தும்.
இதனால், ஆழ்கூள முறையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு மாதம் ஒரு முறையும், கூண்டு முறையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு 3 மாதத்துக்கு ஒரு முறையும் குடல்புழு நீக்கம் செய்வது அவசியம்.
புற ஒட்டுண்ணி நோய் என்பது பேன், உண்ணி, நுண் உண்ணி மற்றும் தொள்ளுப் பூச்சிகளால் ஏற்படுகின்றன.
இந்த ஒட்டுண்ணிகள் கோழிகளைக் கடித்து அரிப்பை உண்டாக்கி ரத்ததை உறிஞ்சுவதால் உடல் எடையும் முட்டை உற்பத்தியும் குறைந்து விடும்.
பற்றாக்குறை நோய்கள்:
தோல் முட்டையிடுதல், கால்வாதம் மற்றும் கோழிகள் ஒன்றையொன்று கொத்துதல் ஆகியவை பற்றாக்குறை நோய்களாகும்.
வெயில் காலங்களிலும், கூண்டு முறை கோழி வளர்ப்பிலும் அதிகமாகக் காணப்படும் தோல் முட்டையிடுதல் நோயைத் தவிர்க்கத் தீவனத்தில் கால்சியம், வைட்டமின் டி, பாஸ்பரஸ் சத்துகள் மற்றும் கிளிஞ்சல் தூளை அதிகப்படியாகக் கலந்து கொடுக்க வேண்டும்.
கூண்டு முறையில் கோழிகளை வளர்க்கும் போது கோழிகளின் கால்கள் வலுவிழந்து நிற்க முடியாமலும், உண்ண முடியாமலும் இறப்பதே கால் வாதமாகும். இந்த நோய் தாக்கிய கோழிகளைக் கூண்டிலிருந்து வெளியே எடுத்து ஆழ் கூளத்தில் சில நாள்கள் விட வேண்டும்.
குடிநீரிலும், தீவனத்திலும் கால்சியம் அதிகமுள்ள சத்து மருந்துகளை சில நாள்கள் கொடுக்க வேண்டும். வைட்டமின் பி12 உயிர்ச்சத்து மருந்தை ஊசி மூலம் செலுத்துவதன் மூலமும் இந்த நோயைத் தவிர்க்கலாம்.
தீவனத்தில் நார்ச்சத்து, புரதம், அமினோ அமிலங்களும், காற்றோட்ட வசதி, இடவசதி, தீவனம் மற்றும் தண்ணீர் தொட்டிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், புற ஒட்டுண்ணிகள் இருந்தாலும் கோழிகள் ஒன்றையொன்று கொத்திக் கொள்ளக்கூடும்.
இதற்கான காரணத்தைக் கண்டறிந்து நிவர்த்தி செய்வதன் மூலம் இந்தப் பாதிப்பை தடுக்க முடியும் என்றனர்.
தினமணி செய்தி
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியின் விரிவாக்கத் துறைத் தலைவர் என்.நர்மதா மற்றும் அலுவலர்கள்

நெற்பயிரில் பூச்சிகளை அழிக்க முட்டை ஒட்டுண்ணிகள்

நெற்பயிர்களில் தாக்கும் பூச்சிகளை அழிக்க டிரைக்கோகிராமா ஜப்பானிக்கம் எனும் முட்டை ஒட்டுண்ணிகள் பயன்படுத்தப்படுகின்றன.

புதுச்சேரி மாநில விவசாயிகள் ஆண்டுக்கு மூன்று பருவங்களில் (சொர்ணவாரி, சம்பா, நவரை) நெல் பயிடுகின்றனர்.
அதில் தோன்றும் குருத்துப் புழுவைக் கட்டுப்படுத்த டிரைக்கோகிராமா ஜப்பானிக்கம் எனும் முட்டை ஒட்டுண்ணிகளைப் பயன்படுத்தலாம் என்று புதுச்சேரி காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
 நெல் குருத்துப் புழு:
நாற்று நட்ட 20-30 நாள்கள் வயதுடைய நெல் வயலில் குருத்துப் புழுக்கள் அதிகம் காணப்படும். இதன் தாய்ப் பூச்சிகள் நடமாட்டமும் பரவலாக இருக்கும். ÷இவ் வகையான தாய் அந்துப் பூச்சிகள் இலைகளில் குவியல் குவியலாக முட்டைகளை இடுகின்றன. முட்டை குவியலிலிருந்து வெளிவரும் இளம் புழுக்கள் நெற்பயிரின் நடுக்குருத்தைத் துளையிட்டு உட்புகுந்து செல்கின்றன.
அவை மெதுவான தண்டுப் பகுதிகளைத் தின்று நடுக்குருத்தை செயலிழக்க செய்து விடுகின்றன. இந்த தாக்குதலுக்கு உள்ளான நடுக்குருத்துகள் காய்ந்து வெள்ளை சோகையாக மாறிவிடுகின்றன. கதிர் பிடிக்கும் பருவத்தில் கதிர்களை தாங்கி நிற்கும் தண்டுகளையும் இப்புழுக்கள் துளையிட்டு சேதப்படுத்துகின்றன. இதனால் நெற்கதிர்கள் நெல் மணிகளாக மாற இயலாமல் சாவிக் கதிர்களாக அல்லது வெள்ளைக் கதிர்களாக மாறிவிடுகின்றன.
 டிரைக்கோகிராமா:
இந்த டிரைக்கோகிராமா முட்டை ஒட்டுண்ணிகள் குளவி இனத்தைச் சார்ந்தவை. இவை எறும்பைவிட சிறியதாக இருக்கும். இக் குளவிகள் சேதம் விளைவிக்கும் குருத்துப் புழுவை முட்டை பருவத்திலேயே அழித்துவிடும்.
குறிப்பாக நெற்பயிரைத் தாக்கும் குருத்துப் புழுவின் தாய்ப்பூச்சிகள் இடும் முட்டைகளை டிரைக்கோகிராமா ஜப்பானிக்கம் குளவிகள் தேடிச் சென்று, அம் முட்டைகளுக்குள் தனது முட்டையை உட்செலுத்தி விடுகின்றன. இதனால் குருத்துப் புழுக்களின் முட்டை கருக்கள் அழிக்கப்டுகின்றன.
அதே நேரத்தில் அப் புழுக்களின் முட்டைகளில் ஒட்டுண்ணிகளின் சந்ததிகள் வளரும். அந்த ஒட்டுண்ணிகள் முட்டைகளை துளையிட்டு வெளிவந்து அக் கால கட்டத்தில் காணப்படும் மேற்கூறிய புழுக்களின் முட்டைகளையும் தேடிக் கண்டுபிடித்து அழிக்கும்.
இம் முறையை கையாண்டால் குறிப்பிட்ட அளவு ஒட்டுண்ணிகள் எப்போதும் வயிலில் காணப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த டிரைக்கோகிராமா ஜப்பானிக்கம் என்ற வீரிய ஒட்டுண்ணிகளின் முட்டைகள் டிரைக்கோ அட்டைகளில் ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
 உபயோகிக்கும் முறை மற்றும் அளவு:
இந்த டிரைக்கோ ஒட்டுண்ணி அட்டைகளை ஒரு ஏக்கருக்கு 2 அட்டைகளை (72,000 ஒட்டுண்ணிகள்) நாற்று நட்ட 25, 40 மற்றும் 55-ம் நாட்களில் இலையின் கீழ்ப்பரப்பில் கட்டி உபயோகிக்க வேண்டும்.
இந்த ஒட்டுண்ணி அட்டையை 6 பாகங்களாக பிரித்துக் கொண்டு அவற்றை காகித டம்பளரினுள் தலைகீழாக வைத்து நூல் கட்டி பயிரில் பயன்படுத்தலாம்.
அவ்வாறு செய்யும்போது இந்த அட்டைகளிலிருந்து ஒட்டுண்ணிக் குளவிகள் 3-7 நாள்களுக்குள் வெளிவந்து குருத்துப் புழு முட்டைகளை அழிக்கும்.
டிரைக்கோ அட்டைகளைப் பயன்படுத்தும்போது ஒட்டுண்ணிகள் நிறைந்த பகுதியை அழுத்திப் பிடிக்காமல் வெற்றிடப் பகுதியை மட்டுமே கையால் பிடிக்க வேண்டும். மேலும் இந்த அட்டைகளை காலை அல்லது மாலை வேளைகளில் மட்டுமே கட்ட வேண்டும்.
டிரைக்கோ அட்டைகளை வயலில் கட்டியப் பின் 7-10 நாள்களுக்கு ரசாயனப் பூச்சி மருந்து தெளிக்கக் கூடாது. பூச்சி மருந்து தெளித்திருந்தால் 7-10 நாள்களுக்குப் பிறகே உபயோகிக்க வேண்டும்.
 நன்மைகள்:
இதைப் பயன்படுத்துவதால் பூச்சி மருந்துகளுக்கு ஆகும் செலவைவிட குறைவான செலவே ஆகும். உபயோகிக்கும் முறைகள் எளிதானது. சுற்றுப்புற சூழ்நிலைகளை மாசுப்படுத்தாது. பூச்சிகளைத் தவிர இதர உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்காது என்றார்.
தினமணி செய்தி
புதுச்சேரி காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் பூச்சியல் வல்லுநர் நி.விஜயகுமார்