Wednesday, November 28, 2012

கண்ணாடியின் கதை

image
சுமார் எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆதி மனிதன் கண்ணாடிகளை உபயோகப்படுத்தினான். அந்தக் கண்ணாடிகள், எரிமலைக் குழம்பு காய்ந்து கெட்டியாகும்போது உண்டானவை. இந்தக் கட்டிகளைக் கத்தி செய்வதற்கும், அம்புகள் செய்வதற்கும் பயன்படுத்திக்கொண்டான். கண்ணாடிகளை மனிதனே படைக்கும் முறை கி.மு. மூவாயிரம் ஆண்டளவில் மத்திய கிழக்கு நாடுகளில் உண்டாகியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். கி.மு. ஆயிரம் ஆண்டுவாக்கில் வெட்டவெளிகளில் கண்ணாடிக் குழம்புகளை வார்த்து கண்ணாடி செய்யும் முறை எகிப்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பிறகு ரோமானியர்கள் கி.பி. முதல் நூற்றாண்டளவில் கண்ணாடிகளாலான சிறிய பொருட்களை உருவாக்கிக் கொண்டார்கள்.
பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை இஸ்லாமிய நகரங்களான பாக்தாத் மற்றும் கெய்ரோவில் கண்ணாடி செய்யும் கலை வளர்ந்தது. இதனால் தான் இந்தக் காலகட்ட கண்ணாடிகளை இஸ்லாமியக் கண்ணாடிகள் என்று அழைத்தார்கள். பன்னிரண்டிலிருந்து பதினாறாம் நூற்றாண்டுவரை வெனிஸ் நகரில் இந்தக் கலை உச்சகட்டம் தொட்டது. பாதரசத்தைப் பயன்படுத்தி முகம் பார்க்கும் கண்ணாடிகளை செயற்கையாகச் செய்யும் தொழில்நுட்பத்தையும் அவர்கள் அறிந்திருந்தனர். ஆனால், இந்த நுணுக்கங்களை அவர்கள் ரகசியமாக வைத்திருந்தார்கள். ஆனால், பதினேழாம் நூற்றாண்டளவில் இந்த ரகசியம் கசிந்து, ஐரோப்பிய நாடுகள் பலவும் கண்ணாடிகள் செய்தன. 17 முதல் 19ம் நூற்றாண்டு வரை கண்ணாடிகளால் டெலஸ்கோப், தெர்மாமீட்டர், மைக்ரோஸ்கோப் போன்ற பல அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்தன.
இதன் தொடர்ச்சியாக பார்வைக் கோளாறுக்கான கண்ணாடிகள் ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டன. 1903ம் ஆண்டில்தான் அமெரிக்காவில் ஒரு நிமிடத்தில் ஆயிரக்கணக்கான கண்ணாடிகளை தயாரிக்கும் தானியங்கி இயந்திரம் உருவானது. இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பது கண்ணாடியின் அடிப்படை மூலக்கூறு ஆகும். கொல்கத்தாவில் உள்ள ஒரு ஆய்வுக் கூடத்திலிருந்து 1959ல் இங்கு கொண்டு வரப்பட்டது என்றார் அவர். கண்ணாடியில் உள்ள சுத்தத் தன்மையை வைத்தே அது எந்தக் காலத்தில் செய்யப்பட்டது என்பதைக் கண்டுபிடிக்கலாம். நம் உருவங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகள், அந்தந்த காலகட்டத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியையும் பிரதிபலிப்பது ஒரு அழகான ஆச்சரியம்தான்.

நீரிழிவு நோய் – சில அடிப்படை உண்மைகள்

image

உலக நீரிழிவு தினம் ஆண்டுதோறும் நவம்பர் 14ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நீரிழிவு நோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கடந்த 1991ம் ஆண்டில் சர்வதேச நீரிழிவு மையம் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தால் இந்த விழிப்புணர்வு தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.
நாளை இந்த தினம் கடைப்பிடிக்கும் வேளையில், இந்நோய் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்…
இன்சுலின் என்ற முக்கிய ஹார்மோன் உற்பத்தியாவதிலும், அதன் செயல்பாடுகளில் குறை நேர்வதாலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இதை மருந்துகளின் மூலமும், உடற்பயிற்சிகள் மூலமும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்றாலும், இதனால் பலவித நோய்கள் வர வாய்ப்புள்ளதால் குறைந்த வயதில் மரணம் ஏற்பட வழி வகுக்கிறது.
நீரிழிவு நோயில் இரண்டு வகை உண்டு. முதலாம் வகை, இன்சுலினை நம்பியுள்ள நீரிழிவு நோய் என அழைக்கபடுகிறது. இது குழந்தையாக இருக்கும் போதே ஏற்படக்கூடியது ஆகும். 2ம் வகை வயதான பின் வரும் நோய். இதை பெரும்பாலும் மருந்துகள் மற்றும் உடற்பயிற்சி மூலம் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.
முதலாம் வகை, சில உடல் எதிர்ப்பு சக்தியால் பாங்கிரியாஸின் பீட்டா செல்கள் அழிக்கப்படுவதால் இன்சுலின் அளவு குறைந்தும்,
இன்னும் சிலருக்கு இன்சுலினை வீரியம் உள்ளதாக வைக்கும் சக்தி குறைவதாலும் உண்டாகிறது. இதற்கு சர்க்கரை அளவை அவ்வப்போது சரி பார்த்து இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். இது குழந்தைகளையும் இளம் வயதினரையும் தாக்கும். மரபணு குறைபாடு, சுற்றுப்புறம் மற்றும் உடலின் சுய எதிர்ப்பு தன்மை இவற்றால் வரும் இவ்வகை நீரிழிவு நோய்க்கு எந்தவித தடுப்பும் உபயோகப்படாது. நீரிழிவில் பாதிக்கப்பட்டவர்களில் 5ல் இருந்து 10% பேர் இந்த வகை நோயை கொண்டிருக்கிறார்கள்.
நீரிழிவு நோய் உள்ளவர்களில் 90% பேருக்கு இரண்டாம் வகை நீரிழிவு நோய் கொண்டிருக்கிறார்கள். இன்சுலினுக்கு எதிர்ப்பு சக்தி உண்டாவதால் இந்நோய் வருகிறது. இன்சுலினுக்கு தேவை அதிகரிக்க அதிகரிக்க பாங்கிரியாஸ் உற்பத்தியை நிறுத்துகிறது. உடல் எடை அதிகமாக உள்ளவர்கள், சர்க்கரை செரிமான குறைவு, குடும்பத்தில் ஏற்கனவே சர்க்கரை நோய் இருத்தல், அதிக உடல் இயக்கம் இல்லாதது போன்றவை இதற்கு காரணம்.
மூன்றாவது வகை நீரிழிவு நோய் கருத்தரிக்கும் போது வரும். சில பெண்கள் உடல் எடை அதிகமாக இருந்தால், அவர்களின் குடும்ப வரலாறை பொறுத்து இந்த நீழிவு நோய் வர வாய்ப்புண்டு. குழந்தை பிறந்த பின் இதில் 5% பெண்களுக்கு இரண்டாம் வகை நீரிழிவு நோய் வரக்கூடும்.

Saturday, November 17, 2012

நெஞ்சின் அலைகள்

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சனிக்கோளின் துணைக்கோள் டிடானில் பூமியில் தோன்றிய உயிரினங்களின் மூலப் பிரதிபலிப்பு


(கட்டுரை 88)
சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா
[ http://www.space.com/13180-titan-surprisingly-earth-surface-revealed-color.html  ]
சனிக்கோளின் சந்திரன்களில்
பூதச் சவ்வுருண்டை போன்ற டிடான்
பூமியை ஒத்தது !
தடம் வைத்தது ஹியூஜென்ஸ்
தளவுளவி டிடானில் !
சூழ்வெளி வாயு, ஒளிந்திருக்கும்
ஆழ்கடல் பனிச் சிகரம் கொண்டது !
சனிக்கோளின் மற்ற சந்திரன்
என்செலாடஸில்
பனித்தளம் முறியக்
கொந்தளிக்கும் தென் துருவம் !
தரைத்தளம் பிளந்து
வரிப்புலி போல் வாய்பிளக்கும் !
முறிவுப் பிளவுகளில்
பீறிட்டெழும்
வெந்நீர் ஊற்றுக்கள் !
முகில்மய வாயுக்கள் !
பனித்துளித் துகள்களும்
எரிமலை போல்
விண்வெளியில் வெடித்தெழும் !
புண்ணான பிளவுகள்
மூடும், மீண்டும் திறக்கும் !
எழுச்சியின் வேகம் தணியும் !
பிறகு விரைவாகும் !
பனித்தட்டு உருகிப் போய்
தென் துருவத்தில்
திரவமானது எப்படி ?
ஊற்று நீர் வெடித்து வெளியேற
உந்துவிசை அளிப்பது எது ?
விந்தை யான எழுச்சி !
புரிந்தும் புரியாதப்
பிரபஞ்சப் புதிர்களில் ஒன்று !

பூமியில் தோன்றிய உயிரினத் தோற்றத்தின் மூலத்தை அறிய, டிடான் துணைக்கோள் உன்னத உயிரியல் குறிப்பீடு அறிந்து கொள்ளும் ஒரு பசுஞ் சோலையாக எங்களுக்குத் தெரிகிறது.  கார்பன் மனாக்ஸைடு, மீதேன் [CO & CH4] போன்ற  சாதாரண உபரி மூலக்கூறுகள் மூலமாய் அடர்த்தியான வாயு மண்டலம் தோன்றியதாகத் தெரிகிறது.   அந்த இயக்கங்களுக்கு ஆர்கானிக் பனிமுகில் துகள்கள், [Organic Hase] எரிகற்களின் உலோகங்கள் வினையூக்கியாய்  [Catalysts] உதவியுள்ளன.
ஜோஸஃப்  டிரிகோ ராட்ரிகஸ் [Institute of Space Sciences, Barcelona, Spain]
காஸ்ஸினி விண்ணுளவி சனியின் துணைக்கோள் டிடானில் பெரும் ஏற்ற இறக்க அலையடிப்புகளைக் [Tides] கண்டது, மறைந்துள்ள ஓர் அடிக்கடலைக் காட்டுகிறது.  இப்போது சூரிய மண்டலத்தில் பூமிபோல் இத்தகைய பேரளவு நீர் நிலை இருப்பை இரண்டாவதாக அறிந்துள்ளோம்.  [முதலாவதாக நீர் பீச்சும் ஊற்றுகள் சனிக் கோளின் சந்திரன் என்செலாடஸில் இருப்பது அறியப் பட்டது]
லூஸியானோ ஐயஸ் [Cassini Spcecraft Lead Member]

டிடானில் திரவ நீரடுக்கு இருப்பது, டிடான் உட்பகுதியில் எப்படி மீதேன் வாயு சேமிப்பாகிறது, எப்படி அது மேற்தளத்துக்குக் கசிகிறது என்று அறிய எமக்கு உதவப் போகும் முக்கியமான ஒரு தகவல்.  ஏனெனில் டிடானின் தனித்துவப் பண்பாடு பேரளவுள்ள மீதேன் மூலமாகவே உண்டாகுகிறது.   ஆயினும் அந்த மீதேன் பரிமாண அளவு டிடான் சூழ்வெளியில்  நிலையற்றது.  பிறகு குறுகிய கால வரையறையில் அழிக்கப் பட்டு மறைந்து போகிறது !
ஜொனாதன் லுனைன் [Cassini Spacecraft Team Member, Cornell University Ithaca,  N.Y.]
“(சனிக்கோளுக்கு அனுப்பிய) காஸ்ஸினி விண்கப்பல் உளவித் தேடிய விண்வெளித் தளங்களுக்குள் என்சிலாடஸின் தென் துருவத்தில் கண்டு பிடித்தைப் போல் பிரமிக்கத் தக்க ஒன்று வேறில்லை !  மிகச் சிறிய கோளில், மிகக் குளிர்ந்த தளத்தில் அவ்விதம் நீர் இருப்பது வியப்ப ளிக்கிறது !  அங்கே பீறிட்டெழும் வெந்நீர் எழுச்சி ஊற்றுக்களின் குறிப்பான தடங்கள் எதுவும் அருகில் காணப்பட வில்லை.  அதாவது தென் துருவத்தில் பனித்தளப் பிளவுகள் பல்லாண்டு காலமாகத் திறந்தும், மூடியும், மேலும் கீழும் நகர்ந்தும் போனதாகக் கருத இடமிருக்கிறது.  நீர் ஊற்றுகளில் வெளிப்படும் துகள்கள் பல்லாண்டு காலமாகத் தளத்தின் மீது பெய்து கவசப்பனி மூடிப்போனவை.”
காரலின் போர்கோ, காஸ்ஸினி விண்கப்பல் படமெடுப்புக் குழுத் தலைவி [அக்டோபர் 5, 2008]

பூமியில் உயிரினதோற்றம் உருவாக நேர்ந்த ரசாயன இயக்கங்களைப் புரிந்து கொள்ள டிடான் துணைக்கோள் ஒப்பற்ற ஒரு சூழ்வெளியை அறியத் தருகிறது.   அந்த விதத்தில் டிடான் சூழ்வெளி, பூமியின் உயிரின முன்னிருப்பு ரசாயன மண்டலத்தை [Pre-biotic Atmosphere]  எங்களுக்குப் பல வழிகளில் காட்ட ஓர் இயற்கை ஆய்வகமாக உதவுகிறது.
ஜோஸஃப்  டிரிகோ ராட்ரிகஸ்.
“என்சிலாடஸிலிருந்து பீறிட்டெழும் துகள்களின் மின் அயனிகள் (Ions of the Particles) என்சிலாடஸின் சுற்றுவீதி வேகத்திலிருந்து [12.64 கி.மீ/விநாடி (7.5 மைல்/விநாடி)] சனிக்கோளின் சுற்றுவீதி வேகத்துக்கு [9.54 கி.மீ/விநாடி (6 மைல்/விநாடி)] மாறிச் சேர்கின்றன.  மென்மேலும் அயான் துகள்கள் முகில் எழுச்சியில் (Plume from the Jets) மிகையாகும் போது, சனிக்கோளுக்கு மிக்க சிரமத்தைக் கொடுத்து, புதிய துகள் அயனிகளின் வேகம் விரைவாகக் கால தாமதம் ஆகிறது.”
கிரிஸ்டஃபர் ரஸ்ஸல், கலிஃபோர்னியா பல்கலைக் கழகம், காஸ்ஸினி விஞ்ஞானக் குழு

“சனிக்கோளின் துணைக்கோள் என்சிலாடஸின் உட்தளத்தில் திரவ நீர்ச் சேமிப்புகள் தங்கி, அமெரிக்காவின் எல்லோ ஸ்டோன் பூங்கா கெய்ஸர் நீர் ஊற்றுகள் [Yellowstone Park Geysers] போல் தளத்தைத் துளைத்துக் கொண்டு வருகின்றன என்று ஊகிக்கிறோம். முதலில் எரிமலைப் பனி வெடிப்புகள் என்று கருதினோம். ஆனால் வெளியாகும் துணுக்குகளின் பரிமாணத்தைக் கண்ட போது, பேரழுத்தம் உள்ள புதைவு நீர்க்குளம் ஒளிந்திருப்பது ஆய்வுகளுக்குப் பிறகு அறியப்பட்டது!”
லிண்டா ஸ்பில்கர் [காஸ்ஸினி துணைத் திட்ட விஞ்ஞானி (மார்ச் 9, 2006)]
“சூரிய மண்டலம் எப்போது தோன்றியது, உயிரினங்கள் எவ்விதம் உதயமாகின போன்ற வினாக்களுக்குப் பதில் கிடைக்கும் ஓர் அபூர்வ வாய்ப்பை விஞ்ஞானிகளுக்கு அளிக்கப் போகிறது, காஸ்ஸினி விண்கப்பலின் குறிப்பணி”
வெஸ்லி ஹன்ட்டிரஸ் [Wesley Huntress, NASA Scientist]
american-yellowstone-park-geysers

“இதுவரை அனுப்பிய அண்டவெளி உளவுக் கப்பல்களிலே காஸ்ஸினி விண்கப்பலே மாபெரும் வேட்கை யான தொலைப் பயணக் கருவியாகக் கருதப்படுகிறது. மனித இனம் அண்டவெளியைத் தேடித் தகவல் திரட்டி, நமது எதிர்கால விஞ்ஞான அறிவுக்கு முன்னடி வைக்கும் ஆய்வுப்பணி அது”
டாக்டர் ஆன்ரே பிராஹிக் [Dr. Andre Brahic, Professor at University of Paris]
“பூகோளத்தின் கடந்த கால வரலாற்றைக் காட்டும் ஒரு ‘கால யந்திரம் ‘ [Time Machine] போன்றது, சனிக்கோளின் டிடான் துணைக்கோள்! முகில் மண்டலம் சூழ்ந்த அந்தப் பனிச்சந்திரன், உயிரினங்கள் பெருகும் ஓரண்டமாக எவ்விதம் பூர்வீகப் பூமி உருவாகியது என்பதற்கு மூல ஆதாரங்களைக் கொண்டிருக்கலாம்!”
டாக்டர் டென்னிஸ் மாட்ஸன், நாஸா காஸ்ஸினித் திட்ட விஞ்ஞானி [Jet Propulsion Laboratory, Pasadena, California]

பூமியின் சூழ்வெளியை ஒத்தது டிடானின் வாயு அடுக்கு மண்டலம், நீர் செழிப்பு

சனிக்கோளின் மிகப் பெரிய துணைக்கோள் டிடான் பல பில்லியன் ஆண்டுகளாகப் பூமியின் சூழ்வெளி வாயு மண்டலத்தை ஒத்திருந்தே வந்துள்ளது.  பூமிக்கும், டிடானுக்கும் இடையே 800 மில்லியன் மைல் தூரம் இருப்பினும் அவற்றின் ஈர்ப்பு விசையால் அடுக்கடுக்காக வாயு மண்டலமும், நீர்ச் செழிப்பும் வால்மீன்கள், முரண் கோள்கள் [Comets & Asteroids] ஆகியவற்றின் தாக்குதலால் உண்டானவை என்பது தெரிகிறது.
பூமியில் தோன்றிய உயிரினத் தோற்றத்தின் மூலத்தை அறிய, டிடான் துணைக்கோள் உன்னத உயிரியல் குறிப்பீடு அறிந்து கொள்ளும் ஒரு பசுஞ் சோலையாக எங்களுக்குத் தெரிகிறது.  கார்பன் மனாக்ஸைடு, மீதேன் [CO & CH4] போன்ற  சாதாரண உபரி மூலக்கூறுகள் மூலமாய் அடர்த்தியான வாயு மண்டலம் தோன்றியதாகத் தெரிகிறது.   அந்த இயக்கங்களுக்கு ஆர்கானிக் பனிமுகில் துகள்கள், [Organic Hase] எரிகற்களின் உலோகங்கள் வினையூக்கியாய்  [Catalysts] உதவியுள்ளன என்று ஜோஸஃப்  டிரிகோ ராட்ரிகஸ் [Institute of Space Sciences, Barcelona, Spain] கூறுகிறார்.
பூமியில் உயிரினதோற்றம் உருவாக நேர்ந்த ரசாயன இயக்கங்களைப் புரிந்து கொள்ள டிடான் துணைக்கோள் ஒப்பற்ற ஒரு சூழ்வெளியை அறியத் தருகிறது.   அந்த விதத்தில் டிடான் சூழ்வெளி, பூமியின் உயிரின முன்னிருப்பு ரசாயன மண்டலத்தை [Pre-biotic Atmosphere]  எங்களுக்குப் பல வழிகளில் காட்ட ஓர் இயற்கை ஆய்வகமாக உதவுகிறது என்றும் ஜோஸஃப்  டிரிகோ ராட்ரிகஸ் கூறுகிறார்.  சூரியனுக்கு சற்று நெருங்கிய அகக்கோள் பூமியிலும், அப்பால் உள்ள புறக்கோள் டிடானிலும் இவ்வாறு வெவ்வேறு மூலப் பொருட்களால் நேர்ந்த  இந்த உடன்பாடு, ஒரு மகத்தான நிகழ்ச்சி, என்றும் அவர் கூறுகிறார்.

சனிக்கோளின் துணைக்கோளை நெருங்கிப் படமெடுத்த காஸ்ஸினி விண்ணுளவி
2008 அக்டோபர் 5 ஆம் தேதி சனிக்கோளின் துணைக்கோள் என்செலாடஸைச் சுற்றிவரும் காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்கப்பல் (Cassini-Huygens Spacecraft) துணைக்கோளின் அருகே 25 கி.மீ. (15 மைல்) தூரத்தில் சுற்றும் போது அதன் கொந்தளிக்கும் தென் துருவத்திலிருந்து 300 மைல் உயரத்தில் பீறிடெழும் பிரமிப்பான ஊற்றுக்களையும் நீர்மயத் தூள்களையும் தெளிவாகப் படமெடுத்தது.  என்சிலாடஸ் பனித்தளத்தைப் பிளந்து பீறிடும் முகில் எழுச்சிகள் (Erupting Plumes) அமெரிக்காவின் எல்லோ ஸ்டோன் பூங்காவின் “வெந்நீர் ஊற்றுக்களைப்” (Yellowstone Park Geysers) போல் காட்சி அளிக்கின்றன.  என்சிலாடஸில் வெந்நீர் ஊற்றுக்கள் எழுகின்ற தென்புறத் தளமானது மற்ற இடங்களை விடச் சூடாக உள்ளது.  மேலும் அந்தப் பனித்தள முறிவுகள் வரி வரியாக “வரிப்புலி” (Tiger Stripe Cracks) போல் காணப்படுகின்றன,  அந்தப் பிளவுகளிலிருந்து ஓங்கி உயர்ந்தெழும் “மின் அயானிக் துகள்கள்” (Plumes of Ionic Particles) சனிக்கோளின் E வளையத்தில் விழுந்திருக்கலாம் என்று கருதுவோரும் உள்ளார்.  அதற்கு மாறாக சனிக்கோள் E வளையத்தின் தூள்கள் என்சிலாடஸ் துணைக்கோளில் படிந்திருக்கலாம் என்று நினைப்போரும் இருக்கிறார்.

சனிக்கோளின் 52 துணைக்கோள்களில் (2008 கணிப்பு) 300 மைல் விட்டமுள்ள சிறிய கோள் என்சிலாடஸை 1789 இல் கண்டுபிடித்தவர் விஞ்ஞான மேதை வில்லியம் ஹெர்செல் (William Herschel).  சனிக்கோளின் வெளி விளிம்பில் சுற்றும் மாபெரும் E வளையத்தை (Outermost E Ring) அதி விரைவில் 1.37 நாட்களில் சுற்றி வருகிறது.  சனிக்கோளைச் சுற்றும் அதே 1.37 நாட்களில் அது தன்னையும் ஒருமுறைச் சுற்றிக் கொள்கிறது.  அதாவது நமது நிலவு ஒரே முகத்தைக் காட்டிப் பூமியைச் சுற்றுவது போல் என்சிலாடஸ் துணைக்கோளும் சனிக்கோளுக்கு ஒரே முகத்தைக் காட்டிச் சுற்றி வருகிறது.  E வளையத்துக்கு அருகில் சுற்றுவதால் சனிக் கோளின் வளையத்தில் சிக்கிய தூசி துணுக்குகள் தொடர்ந்து கோடான கோடி ஆண்டுகள் என்சிலாடஸில் விழுந்து கொண்டிருக்கின்றன.  பூமிக்கு அடியில் அடிக்கடிப் புவித்தட்டு நகர்ச்சிகள் (Plate Tectonics) ஏற்படுவது போல், எரிமலைகள் வெடிப்பதுபோல் என்சிலாடஸ் துணைக் கோளிலும் நிகழ்ந்து வருவதாக விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது.  அவ்விதக் கொந்தளிப்பு அதன் தென் துருவப் பகுதில் நிகழ்ந்து வெந்நீர் எழுச்சி ஊற்றுக்கள் (Geyser Like Volcanic Eruptions) வெளிப்படுகின்றன என்று எண்ணப்படுகிறது. சூரிய மண்டலத்தில் பூமி, செவ்வாய், பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் “ஈரோப்பா” ஆகிய மூன்று அண்டக் கோள்கள் போன்று என்சிலாடஸிலும் தீவிர எரிமலைக் கொந்தளிப்புகளும், அடித்தள நீர்மயப் பகுதிகளும் இருப்பதாக அறியப் பட்டுள்ளன.  காஸ்ஸினி விண்கப்பல் 2005 ஆண்டில் முதன்முதலில் என்சிலாடஸ் அருகில் பயணம் செய்த போது வெந்நீர் ஊற்றுக்கள் கிளம்புவதைப் படமெடுத்து வானியல் விஞ்ஞானிகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது !
fig-1g-saturns-moons
என்சிலாடஸ் தென் துருவத்தில் பீறிடும் முகில் எழுச்சிகளில் உள்ளவை என்ன ?
வரிப்புலிப் பனித்தளத்தில் பீச்சிடும் ஊற்றுக்களில் உள்ளவை, வால்மீன்களின் பனித்தூள்கள் (Icy Grains) போல் தெரிகின்றன.  என்சிலாடஸ் துணைக்கோளின் ஊற்று எழுச்சிகள் வால்மீனின் வால் எழுச்சிகள் போல் தோன்றினாலும் அது வால்மீன் ஆகாது.  வால்மீனின் வால் நீட்சி பரிதியின் ஈர்ப்பு விசையால் எதிராகத் தள்ளப்படுகிறது.  ஆனால் என்சிலாடஸின் வெந்நீர் எழுச்சிகள் அதன் அடித்தட்டு நகர்ச்சிகளால் (Plate Tectonics) உந்தப் படுகின்றன.  பனித்தளங்கள் தென் துருவப் பகுதியில் நூற்றுக் கணக்கான மீடர் ஆழம்வரைப் படர்ந்துள்ளன.  சில இடங்களில் ஆழம் குறைவு.  அந்தத் தளங்களின் பிளவுகளிலிருந்து பீறிடும் ஊற்றுக்களின் உஷ்ணமும், அழுத்தமும் குன்றியே உள்ளன.
பரிதியைச் சுற்றிவரும் சனிக்கோளின் தூரம் சுமார் 1.3 பில்லியன் கி.மீடர் (800 மில்லியன் மைல்).  ஆதலால் அதன் வெளி விளிம்பு வளையத்தின் அருகில் சுற்றிவரும் என்சிலாடஸ் மிக்கக் குளிர்ச்சியுள்ள கோளாகத்தான் இருக்க வேண்டும்.  ஆனால் அப்படி மிகக் குளிர்ந்த மண்டலத்தில் வெந்நீர் ஊற்றுக்கள் எப்படித் தென் துருவத்தில் எழுகின்றன ?  பனித்தளமாக இறுகி இருக்கும் நீர்க்கட்டிகள் முதலில் எப்படித் திரவம் ஆகின்றன ?  அதற்குப் பேரளவு வெப்ப சக்தி கோளின் உள்ளே எங்கிருந்து தொடர்ந்து கிடைக்கிறது ?  இரண்டாவது அந்த திரவ நீர் வெள்ளத்தை எரிமலை போல் கிளப்பி வெளித்தள்ள எப்படிப் பேரளவு உந்துசக்தி தொடர்ந்து உண்டாகுகிறது ?
fig-3-cassini-space-probe-orbiting-saturn
பரிதி மண்டலத்தில் பூமியைப் போல் தன் வடிவுக்குள் சக்தியை உற்பத்தி செய்யும் சிறிய எண்ணிக்கைக் கோள்களில் என்சிலாடஸ் துணைக்கோளும் ஒன்று.  பூமியைப் போல் அடித்தட்டு நகர்ச்சியே உராய்வு வெப்பத்தை (Frictional Heat Generated by Tectonics Plates) என்சிடாலஸில் உண்டாக்குகிறது என்பது ஒரு கோட்பாடு.  யுரேனியம் போன்ற கதிரியக்க உலோகங்கள் தேய்வதால் எழும் வெப்பச் சக்தியால் (Radioactive Decay Heat) பனிக்கட்டிகள் திரவமாக மாறுகின்றன என்பது இரண்டாவது கோட்பாடு.  நீர் வெள்ளத்துக்கு உந்து சக்தி அளிப்பது, பூமியில் சுனாமியை உண்டாக்கும் கடல் அடித்தட்டு ஆட்ட உசுப்புகள் போன்ற நிகழ்ச்சியே.  காஸ்ஸினி விண்ணுளவியில் அமைக்கப் பட்டுள்ள “உட்சிவப்புக் கதிர்வீச்சு மானி” (Infrared Radiation Monitor) என்சிலாடஸின் தென்துருவத்தில் மிகுந்துள்ள உஷ்ணத்தை அளந்து வெப்பப் பகுதிகள் இருப்பதைக் காட்டியது.  அடுத்தொரு கருவி மற்ற பகுதியில் இல்லாத கண்ணாடிப் பனித்தளங்களைக் காட்டியது.  மேலும் காமிராக்கள் பனித்தளத்தில் உள்ள பெரும் பிளவு முறிவுகளைப் படமெடுத்தன.  மற்றுமொரு கருவி நூற்றுக் கணக்கான மைல் உயரத்தில் எழுந்திடும் நீர்ப்பனித் தூள்கள் கலந்த வாயு முகில்களைக் காட்டியது.
fig-1c-how-the-geyser-does-function
தென்துருவ ஊற்றுகளில் கசிந்து வெளியேறும் வெப்பமும் வாயுக்களும்
என்சிலாடஸின் தென்பகுதியில் உள்ள புதிரான, மர்மமான வெப்ப சக்தியைக் குளிர்மயம் சூழ்ந்த விண்வெளியில் சூரியன் அளிக்க முடியாது.  சனிக்கோளில் நேரும் கொந்தளிப்பு “இழுப்பு-விலக்கு” விசைகள் என்சிலாடஸில் வெப்பத்தை உண்டாக்கலாம்.  அந்த வெப்பம் பனித்தட்டை நீராக்கி அடித்தளதில் அழுத்ததை மிகையாக்கலாம்.  பிறகு நீர் கொதித்து வெப்ப ஆவி பனித்தளத்தைப் பிளந்து நீரெழுச்சி ஊற்றுக்கள் தோன்றிப் பனித்தூள்களுடன் பீறிட்டு எழலாம்.  என்சிலாடஸ் போன்று உட்புற வெப்பத்தைக் காட்டும் மற்ற கோள்கள் : பூமி, வியழக் கோளின் துணைக்கோள் “லோ” [LO] மற்றும் நெப்டியூன் கோளின் துணைக்கோள் டிரிடான் (Triton).  பூமியும், லோ துணைக்கோளும் வெளியேற்றும் எரிமலை எழுச்சிகளில் உருகியோடும் தாதுக்களையும் (Molten Materials), ஆவி வாயுக்களையும் காணலாம்.
தென் துருவத்தில் தெரியும் நீண்ட பனிப்பிளவுகளின் மேல்தளம் அதிக உஷ்ணத்தில் இருக்கிறது.  பிளவின் உட்புற உஷ்ணம் : 145 டிகிரி கெல்வின் (-200 டிகிரி F) அல்லது (-130 டிகிரி C)   பனித்தளத்தின் கீழ் 40 மீடர் (130 அடி ஆழத்தில்) கொதிக்கும் வெந்நீர் இருக்க வேண்டும் என்று கணிக்கப் படுகிறது.  இந்தக் கண்டுபிடிப்பு மகத்தானது.  அதுவே என்சிலாடஸில் உயிரினம் வாழ்ந்திருக்கக் கூடுமா என்று சிந்திக்கவும் அது வழி காட்டுகிறது.  வெந்நீர் எழுச்சி முகில் ஊற்றுக்களில் நீரைத் தவிர மற்றும் நைட்டிரஜன், மீதேன், கார்பன் டையாக்ஸைடு ஆகிய வாயுக்களுடன், கார்பன் கலந்த மூலக்கூறுகளும் காணப்பட்டன.  2007 மே மாதம் வெளியான ஆய்வு அறிவிப்பில் என்சிலாடஸ் பனித்தளம் 3 முதல் 5 மைல் ஆழம் வரை அல்லது பத்து கி.மீடர் ஆழத்தில் கூட ஒருவேளை அமைந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் மதிப்பீடு செய்கிறார்.
fig-4-hot-geysers-jump-upon-friction
சனிக்கோளுக்கு ஏவப்பட்ட காஸ்ஸினி விண்கப்பல்
2004 ஆண்டு ஜூலை முதல் தேதி காஸ்ஸினி விண்கப்பல் சனிக்கோளின் ஈர்ப்பு மண்டலத்தில் சிக்கி, முதன்முதலாக அதைச் சுற்றத் துவங்கி அண்டவெளி யுகத்தில் ஒரு புதிய மைல் கல்லை நாட்டியது! பிளாரிடா கென்னடி விண்வெளி ஏவுதள மையத்திலிருந்து, 1997 அக்டோபர் 15 ஆம் தேதி நாசா ஏவிய காஸ்ஸினி விண்வெளிக் கப்பல், சுமார் நான்கு ஆண்டுகளாய் 2.2 பில்லியன் மைல் கடந்து, சனிக்கோளை முற்றுகையிட ஆரம்பித்தது! தாய்க்கப்பல் காஸ்ஸினி சனிக்கோளைச் சுற்றிவர, 2004 டிசம்பர் 25 ஆம் தேதி ஹியூஜென்ஸ் சேய்க்கப்பல் பிரிக்கப்பட்டு, பாராசூட் குடை விரித்து டிடானில் 2005 ஜனவரி 15 இல் இறங்கி முதன் முதலாக நெருங்கிப் படமெடுத்தது. சனிக்கோள், அதன் வளையங்கள், அதன் காந்த கோளம், டிடான் போன்ற மற்ற பனித்தளத் துணைக்கோள்கள் ஆகியவற்றைப் பற்றி மிகையான மெய்ப்பாடுத் தகவல்களை அறியப் பதினேழு உலக நாடுகளின் திறமை மிக்க 260 விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறார்கள்! 3.4 மில்லியன் நிதிச் செலவில் உருவான காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்வெளித் திட்டம் மாபெரும் அண்டவெளிப் பயணமாகும். காஸ்ஸினி ஹியூஜென்ஸ் நூதன விண்கப்பல் புரியும் மகத்தான சனிக்கோள்-டிடான் பயணம் 40 வருட அனுபவம் பெற்ற நாசா, ஈசா விஞ்ஞானிகள் பலரின் வல்லமையால் வடிவம் பெற்றது!
fig-3-water-springs
2006 மார்ச் மாதம் 9 ஆம் தேதி சனிக்கோளைச் சுற்றிவரும் காஸ்ஸினி விண்கப்பல் அதன் துணைக் கோளான என்செலாடஸ் [Enceladus] உட்தளத்திலிருந்து பீறிட்டு எழும் நீர் ஊற்றுகளைப் [Geysers] படமெடுத்து பூகோளத்து விஞ்ஞானிகளுக்கு முதன்முதல் அனுப்பியுள்ளது! சனிக் கோளுக்கு இதுவரைக் கண்டுபிடிக்கப்பட்ட 52 (2008 வரை) சந்திரன்களில் ஒன்று என்செலாடஸ். சூரிய மண்டலத்திலே பூமிக்கு அடுத்தபடி நீர்மை யுள்ளதாகக் காட்டும் நீர்ப்பனிப் பாறைகள் கொண்ட செவ்வாய்க் கோளை விண்வெளிக் கப்பல்கள் படமெடுத்து அனுப்பின. விஞ்ஞானிகள் வியாழக் கோளின் துணைக்கோள் யுரோப்பாவில் [Europa] திரவக் கடல் ஒன்று உறைந்த பனித்தளத்தின் கீழிருக்கலாம் என்று ஊகிக்கிறார்கள். இப்போது சனிக்கோளைச் சுற்றிவரும் காஸ்ஸினி விண்வெளிக் கப்பல், அதன் துணைக்கோள் ஒன்றில் வெளியேறும் நீர் ஊற்றுக்கள் பீறிட்டு உட்தளத்தில் நீர் திரவமாகத் தங்கி யிருப்பதை நிரூபித்து உலக மாந்தரை வியப்பில் ஆழ்த்தி யிருக்கிறது !
fig-1f-cassini-huygens-mission
காஸ்ஸினி-ஹியூஜென் விண்ணுளவுத் திட்டத்தின் குறிக்கோள் என்ன ?

1970-1980 ஆண்டுகளில் பரிதியின் புறக்கோள்களை ஆராய ஏவிய பயனீயர், வாயேஜர் [Pioneer-11, Voyager-I & II] ஆகிய விண்கப்பல் பயணங்களில் தீர்க்கப்படாத புதிர்களை ஆய்ந்தறியக் காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்கப்பல் அண்டவெளியில் குறிப்பாக சனிக்கோளையும், அதன் பெரிய துணைக்கோளையும் உளவிட அனுப்பப்பட்டது. திட்டமிட்ட முக்கிய பயணக் குறிப்பணிகள் பின்வருபவை:
1. சனிக்கோளுக்குப் பரிதியிலிருந்து உறிஞ்சும் ஒளிச்சக்தியை விட 87% மிகையான சக்தி சனியின் உட்கருவுக்கு எங்கிருந்து கிடைக்கிறது ?
2. சனிக்கோளைத் தொடாமல் வெகு வேகத்தில் சுற்றிவரும் வளையங்களின் மூலப் பிறப்பிடம் எது ?
3. சனிக்கோளின் வளையங்களுக்குக் கண்கவர் நிறங்கள் எங்கிருந்து பூசப்படுகின்றன ?
4. முப்பத்தி யொன்று நிலவுகளைக் கொண்ட சனிக்கோளுக்கு, வேறு சந்திரன்கள் ஏதேனும் உண்டா ? [இப்போது காஸ்ஸினி மேலும் 21 (மொத்தம் :52) துணைக்கோள்களைக் கண்டுபிடித்துள்ளது.]
fig-5-saturns-moons
5. சனியின் சந்திரன் என்சிலாடஸ் [Enceladus Moon] எப்படி வழவழப்பான ஒரு மேனியைக் கொண்டதாய் உள்ளது ? சமீபத்தில் உருகிப் போன குழம்பு ஆழக்குழிகளை [Craters] நிரப்பியதாய்க் கருதுவது ஒரு காரணமா ?  பனித்தளமாக இருந்தால் அடித்தளத்தில் நீர்க்கடல் ஒன்று உள்ளதா ?  2005 ஆம் ஆண்டில் காணப்பற்ற வெந்நீர் எழுச்சி ஊற்றுக்கள் எப்படி உண்டாகிகின்றன ?
6. சனிக்கோளின் சந்திரன் ஐயாபீடஸ் [Iapetus Moon] ஒருபுறம் மட்டும் கரிய ஆர்கானிக் இரசாயனத்தை ஏன் பூசியுள்ளது ? அதன் மூலப் பிறப்பிடம் எது ?
7. டிடான் சூழ்வெளியில் ஏற்படும் இரசாயன இயக்கங்கள் யாவை ?
8. பூமியில் உயிரியல் நடப்புக்கு [Biological Activity] ஆதார மூலக்கூட்டான மீதேன் [Methane Compound] எப்படி டைட்டான் தளத்தில் பேரளவில் வந்தடைந்தது ?
9. டிடானில் ஏதாவது கடல்கள் [மீதேன், ஈதேன்] உள்ளனவா ?
10 மேலும் பெரும் பின்னலான ஆர்கானிக் மூலக்கூட்டுகள் [Complex Organic Compounds], உயிரியல் முன்தோற்ற மூலக்கூறுகள் [Pre-Biotic Molecules] டைட்டானில் இருக்கின்றனவா ?
fig-7-sea-floor-shape-comparision

Wednesday, November 7, 2012

எலுமிச்சை சாகுபடி

எலுமிச்சை சாகுபடி

எலுமிச்சை சாகுபடியில் பயிர்ப் பாதுகாப்பு முறைகள் :

தற்போது நிலவி வரும் தட்பவெப்ப நிலை காரணமாக,எலுமிச்சையில் அதிக மகசூல் கிடைக்கிறது. அதே நேரத்தில், 15 வகையான பூச்சிகளின் தாக்குதலால், எலும்ச்சையில் பெரும் சேதமும் ஏற்பட்டு வருகிறது. இலையைக் குடையும் புழு, சில்லிட் ஒட்டுப் பூச்சி, அசுவிணி, கறுப்பு ஈ மற்றும் தாவர நூல் புழுக்களின் தாக்குதலால், எலும்ச்சை செடிகள் சேதமடைந்துள்ளன.

இலையைக் குடையும் புழுவானது,இளம் இலைகளைக் குடைந்து புறத் தோல்களுக்கு இடையிலான திசுக்களை உள்கொண்டு சேதத்தை விளைவிக்கிறது. அதிகம் தாக்கப்பட்ட இலைகள் பலவித நெளிவு, வளைவுகளுடன் காணப்படுவதோடு, இலைகள் காய்ந்து, சிறுத்து, செடியின் நுனி வளர்ச்சி குன்றுவதுடன், பூக்கள் சரிவரப் பூப்பதில்லை.
சில்லிட் ஒட்டுப் பூச்சிகள் கூட்டம் கூட்டமாக இருந்து கொண்டு இளம் கிளைகள், துளிர் இலைகள், மொட்டுகள், பூக்கள் உள்ளிட்ட பாகங்களில் இருந்து சாற்றை உறிஞ்சி அதிக சேதம் விளைவிக்கின்றன. ஒட்டிப்பூச்சிகள் அதிகம் தாக்கப்பட்ட குருத்துப் பகுதிகள் காய்ந்துவிடும். மேலும் இலைகள் சுருண்டும், நெலிந்தும் காணப்படும்.

இந்தப் பூச்சிகளைத் தொடர்ந்து, அசுவிணி மற்றும் கறுப்பு ஈ அதிகமாகத் தாக்கி சேதத்தை ஏற்படுத்துகிறது. இந்தப் பூச்சிகள், தேன் போன்ற திரவத்தைச் சுரப்பதால், இலைகள் பிசுபிசுப்புடன் காணப்படும்.
இதனால், இலைகள் கருமையாகமாறி, கரும்படல நோயைத் தோற்றுவிப்பதோடு, ஒளிச்சேர்க்கையும் தடைபட்டு, மகசூல் குறைந்து வருகிறது. மேலும் இந்தப் பூச்சிகள் டிரிடிசா என்ற வைரஸ் நோயையும் பரப்புகின்றன.
அடுத்ததாக தாவர நூல் புழுக்கள் எலும்ச்சையின் வேர்களில் இருந்து கொண்டு திசுக்களை உள்கொள்வதால் மரத்தின் நுனி வாடி மேலிருந்து கீழாகக் காய்ந்து காணப்படும். இந்தத் தாக்குதலில் விவசாயிகள் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.

இப்போது குறைந்தபட்சம் ஒர் எலும்ச்சை பழம் ரூ-2க்கு விற்கும் நிலையில் எலுமிச்சையில் சரியான பாதுகாப்பு முறைகளை விவசாயிகள் கையாளுவதால் அதிக லாபம் பெறலாம். எலுமிச்சை செடிகளைப் பாதுகாக்க நல்ல காற்றோட்டம் அவசியம். தழைச்சத்து அதிகமாக இடுவதைத் தவிர்க்க வேண்டும்.களைகள் இல்லாமல் நன்கு பராமரிக்க வேண்டும்.
சரியான பதத்தில் நீர்ப் பாய்ச்ச வேண்டும். வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லிகளை ஒட்டும் திரவம் கலந்து 15 நாள்கள் இடைவெளியில் 3 முறை தெளிக்க வேண்டும். மரத்துக்கு மரம் வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும்.

மேலும் ஒட்டுப் பொறிகளை ஒர் ஏக்கருக்கு 5 வீதம் வைத்து தாய் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்க வேண்டும். நன்மைசெய்யும் எதிர் உயிர் பூச்சி மற்றும் பூஞ்சாணங்களை அதிகமாப் பெருகவிட வேண்டும். நெருக்கமாக இருக்கும் செடிகளைச் சரியான இடைவெளிவிட்டு நடவு செய்ய வேண்டும்.
பூச்சிகளின் பாதிப்பு பொருளாதாரச் சேத நிலையை தாண்டும் போது ரசாயனப் பூச்சிக் கொல்லியான அசிபேட் மானோகுரோட்டாபாஸ், டைமீத்தையோட், மாலத்தியான், இம்மிடாகுளோ பிரிட் போன்ற மருந்துகளில் ஏதாவது ஒன்றை ஓர் லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி என்ற அளவில் ஒட்டும் திரவத்துடன் கலந்து செடிகளைச் சுற்றி நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும். தாவர நூல் புழுக்களின் சேதம் இருக்கும்போது குருணை மருந்து இட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் எலும்ச்சை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம்.

மேலும் இதுதொடர்பான தொழில் நுட்பங்கள் தேவையெனில் தொழில்நுட்ப வல்லுநர் சி.சங்கர், தந்தை ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

ஊறுகாய் புல் தயாரிப்பு - Silage Making

ஊறுகாய் புல் தயாரிப்பு - Silage Making

  • பசுந்தீவனங்கள் அதிகமாக கிடைக்கும் காலங்களில்( மழைக் காலங்கள் ) தேவைக்கு போக மீதம் இருப்பவற்றை பதப்படுத்தி ,அவற்றை கோடைக்காலங்களில் பயன்படுத்த இது ஒரு சிறந்த முறையாகும் .
  • முற்றிபோன மற்றும் தடிமான தண்டுடைய தீவனப்பயிர்களை இதன் மூலம் பதப்படுத்தி அவற்றின் தரத்தை உயர்த்தலாம்.மேலும் இவைகள் வீணாகாமல் கால்நடைகள் உட்கொள்ளும்.
  • இதில் ஈரப்பதம் பாதுகாக்கப்படுவதால் பசுந்தீவனத்தின் தன்மை மற்றும் சத்துகள் மாறுவதில்லை.எனவே பசுந்தீவனம் கிடைக்காத கோடை காலங்களில் ஊறுகாய் புல்லை கால்நடைகளுக்கு அளித்து ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் பராமரிக்கலாம்.
  • தீவனப்பயிருடன் உள்ள களை விதைகள் இம்முறையில் அழிந்துவிடும்.
  • ஊறுகாய் புல் பல ஆண்டுகளுக்கு கெட்டுப்போகாமல் அப்படியே இருக்கும்.

செய்முறை


  • மக்காசோளம் , சோளம்,கரும்பு தோகை,  கம்பு , CO-3 மற்றும் CO-4 போன்றவை ஊறுகாய் புல் தயாரிக்க ஏற்றவையாகும்.
  • ஊறுகாய் புல் குழி - மேட்டுப்பாங்கான இடத்தில் மழை நீர் மற்றும் காற்று புகாவண்ணம் அமைக்கப்பட வேண்டும்.
  • அளவு - 1 மீ x 1மீ  x 1மீ அளவு குழியில் 500 கிலோ தீவனப்பயிரை சேமிக்கலாம்.
  • குழி அமைக்க முடியாத இடங்களில் கோபுரம் போல சிமெண்டில் அமைத்து அதில் பதப்படுத்தி தயார் செய்யலாம்.
  • தீவனப்பயிர்களை பதப்படுத்த சேர்க்கவேண்டிய பொருள்கள் -- சர்க்கரை பாகு( 4 விழுக்காடு ) , அசிடிக் அமிலம் அல்லது சிட்ரிக் அமிலம் ( 1 % ) , தவிடு அல்லது சோளம் அல்லது கம்பு அல்லது மக்காசோளம் (5 %), சுண்ணாம்புத்தூள் ( 1 %).
  • பசுந்தீவனப் பயிர்களை பூ பூக்கும் தருணத்தில் அறுவடை செய்து ஈரப்பதம் 60 விழுக்காடு வரை உலர்த்த வேண்டும். அதாவது 3 முதல் 5 மணி நேரம் வரை வயலில் அப்படியே போட்டுவிடவேண்டும்.
  • ஊறுகாய் புல் குழி முதலில் வைக்கோலை சிறிதளவு பரப்பி விடவேண்டும்.
  • பசுந்தீவனப்பயிர்களை தீவன நறுக்கிகளை ( Chaff Cutter ) கொண்டு சிறு துண்டுகளாக நறுக்கி குழியில் இடவேண்டும்.
  • ஒவ்வொரு 2 அடிக்கும் நன்றாக மிதித்து காற்றை வெளியேற்றி விடவேண்டும்.மேலும் ஒவ்வொரு 2 அடிக்கும் பதப்படுத்த தேவையான பொருட்களை சரியான அளவில் நன்றாக சேர்க்கவேண்டும்.
  • குழியை 2 நாட்களுக்குள் நிரப்பிவிடவேண்டும்.
  • மழைக்காலங்களில் மழைநீர் உள்ளே செல்லாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும்
  • நில மட்டத்திற்கு மேல் 5 - 6 அடி உயரம் வரை நிரப்பிய பின், பாலித்தீன் கொண்டு மூடி விடவேண்டும்.
  • இதன் மேல் சாணம் மற்றும் மண் கொண்டு காற்று புகாவண்ணம் பூசி மொழுகவேண்டும். இவற்றில் வெடிப்பு ஏற்பட்டால் சேறு அல்லது சாணம் கொண்டு பூசி காற்று உள்ளே புகுவதை தடுக்கவேண்டும். இல்லாவிட்டால் ஊறுகாய் புல் தீவனம் கெட்டுவிடும்.
  • 2 மாத காலத்தில் ஊறுகாய் புல் தீவனம் உபயோகத்திற்கு தயாராகிவிடும். தேவையானதை குழியின் ஒரு பகுதியிலிருந்து எடுக்கவேண்டும்.
  • ஒரு முறை குழியினை திறந்து விட்டால் எவ்வளவு விரைவில் உபயோகப்படுத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பயன்படுத்தவேண்டும்.

கன்று ஈன்றபின் மாடுகளை பராமரிப்பு


கன்று ஈன்றபின் மாடுகளை பராமரிப்பு

கன்று ஈன்றபின் பசு மற்றும் எருமை மாடுகளை பராமரிக்கும் முறைகள்
  • கன்று ஈன்றவுடன் மாடுகளின் பின்புறத்தை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கலந்த நீரைக் கொண்டு கழுவிவிட வேண்டும்.
  • கன்று ஈன்ற மாடுகளுக்கு குடிப்பதற்கு வெதுவெதுப்பான நீரைக் கொடுக்க வேண்டும்.
  • கன்று ஈனும் சமயத்தில் மடி பெருத்து காணப்படும். இந்த சமயத்தில் மடியில் காயம் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வது வசியமாகும்.
  • சில மாடுகளில் கன்று ஈனும் சமயத்திற்கு முன்பும் கன்று ஈன்ற பின்பும் மாட்டின் பின்புறம் மற்றும் மடியில் நீர்க்கோர்த்து இருக்கும். இது கன்று ஈன்ற பின்பு தானாகவே குறைந்துவிடும்.
  • பொதுவாக கன்று ஈன்ற மாடுகளில் 2-4 மணி நேரத்திற்குள் நஞ்சுக் கொடி விழுந்துவிடும். அவ்வாறில்லாமல் 8-12 மணி நேரம் வரை நஞ்சுக்கொடி விழவில்லையென்றால் கால்நடை மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம்.
  • கன்று ஈன்ற மாடுகளில் கன்றினை பால் ஊட்ட விடுவது மற்றும் žம்பால் கறப்பது போன்ற செயல்கள் நஞ்சுக்கொடி தானாக விழ வழிவகுக்கும்.
  • கன்று ஈன்ற மாடுகள் இருக்கும் கொட்டில் சுகாதாரமாக பராமரிக்கப்பட வேண்டும். இல்லையெனில் கருப்பை சம்பந்தப்பட்ட நோய்கள் எளிதில் பரவ ஏதுவாகும்.
  • கன்று ஈன்று மாடுகளுக்கு அரிசி அல்லது கோதுமை தவிட்டைக் கொடுக்கலாம். பசுந்தீவனம் கொடுப்பது நல்லது. கலப்பு தீவனத்தைப் பொருத்தவரை சிறிது, சிறிதாக மாட்டின் பால் உற்பத்திக்கு ஏற்றவாறு அதிகரிக்க வேண்டும்.
  • அதிக பால் உற்பத்தி திறன் கொண்ட மாடுகளில் கன்று ஈன்றவுடன் பால்சுரம் ஏற்பட வாய்ப்புண்டு. இதனை தவிர்க்க கால்நடை மருத்துவரின் உதவி கொண்டு தக்க மருத்துவ முறைகளை மேற்கொள்ள வேண்டும்.
  • சில மாடுகளில் கன்று ஈன்றவுடன் அல்லது ஓரிரு நாட்களில் கருப்பை வெளித்தள்ளுதல் ஏற்படும். கஷ்டப்பட்டு கன்று ஈன்ற மாடுகள், நஞ்சுக் கொடி தங்கிய மாடுகள், வயதான,  மெலிந்த மாடுகளில் கருப்பை வெளித்தள்ளுவதற்கு அதிக வாய்ப்பிருந்தால் இம்மாடுகளை கவனத்துடன் பராமரித்து இப்பிரச்சினையிலிருந்து மாடுகளை காப்பாற்ற வேண்டும்.
  • கன்று ஈன்ற 60 நாட்கள் கழித்து வரும் சினைப்பருவத்தில் மாடுகளுக்கு கருவூட்டல்
  • செய்து 90 நாட்களுக்குள் மாடுகளை மீண்டும் சினையாக்கி விட வேண்டும்.
தகவல்: முனைவர்.பி.என்.ரிச்சர்ட் ஜெகதீசன், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், புதுக்கோட்டை.

கறவை மாடுகளில் மடி நோய் Mastitis in Cow

கறவை மாடுகளில் மடி நோய் Mastitis in Cow


 மடி நோயினால் அதிகமான வருவாய் இழப்பு எப்படி ?
  • பால் பண்ணைகளில் அதிக வருவாய் இழப்பு ஏற்படுத்த கூடிய காரணிகள் மடி நோய் மிக முக்கியமானதாகும்.
  • மடி நோயின் போது மருத்துவ செலவு மற்றும்  பால் உற்த்தி இழப்பு போன்றவற்றால் மொத்தமாக ரூ.3000 முதல் ரூ.5000 வரை வருமான இழப்பு ஏற்படுகிறது.
மடி நோய் என்பது என்ன?
  • மடி நோய் என்பது கிருமிகள் காம்பின் துளை வழியாக உள்ளே சென்று மடியின் பால் சுறக்கும் திசுவில் நோயை உண்டாக்குகிறது.
  • கிருமிகள் உள்ளே நுழைய பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை
  1. அதிகம் பால் கறக்கும் பசுக்களின் காம்பு துளைகள் பொதுவாக பெரிதாக இருக்கும். அத்துளைகள் பால் கறந்த உடனே மூடுக்கொள்ள தொடங்கும். இது சுமார் 5 நிமிடங்கள் முதல் 25 நிமிடங்கள் வரை ஆகும். இக்கால கட்டத்தில் தான் கிருமிகள் உள்ளே நுழைய வாய்ப்புள்ளது. உள்ளே சிறுதளவு கிருமிகள் சென்றால் அதை பசுவின் நோய் எதிர்ப்பு சக்தி அழித்துவிடும். ஆனால் அசுத்தமான மற்றும் சேறான தரையில் வளர்ப்படும் பசுக்களில் உள்ளே செல்லும் கிருமிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும. இதை பசுவின் எதிர்ப்பு சக்தியை மீறி செயல்பட்டு நோயை உண்டாக்கும். 
  2. பசுவின் காம்பு துளை சில பசுக்களின் இயற்கையாகவே பெரிதாக இருக்கும்.
நோய் அறிகுறிகள்:
  •  முதல் கட்டத்தில் பால் நீர்த்தது போல் இருக்கும். இதை கண்டுபிடிப்பது சற்று கடினம். இதை மற்ற காம்பில் பால் கறந்து ஒப்பிட்டு கண்டுபிடிப்பது எளிது. இக்கட்டத்தில் பசுவிற்கு மருத்துவம் செய்தால் ரொம்ப நல்லது.
  • இரண்டாம் கட்டத்தில் ( அதவாது முதல் கட்டம் ஆரம்பித்து 3- 5 மணி நேரம் கழித்து ) பால் திரி திரியாகவும் கட்டி கட்டியாகவும் இருக்கும். மற்றும் அந்த பக்கத்து மடியானது வீங்கியும் , சூடாகவும் , கெட்டியாகவும் இருக்கும்.
  • மூன்றாம் கட்டத்தில் பால் வெள்ளையாக இல்லாமல் தண்ணீர் போல மங்கலான நிறத்தில் இருக்கும்.
  • சில கிருமிகளால் ஏற்படும் மடிநோயானது ரொம்ப ஆபத்தானது. அதை கண்டுபிடிப்பது எளிது. நோய் தாக்கிய 2-4 மணி நேரத்தில் ஒரு பக்க மடியானது அதிகமான வீக்கத்துடனும் பாலானது நிறம் மாறி கலங்கலான தண்ணீர் போல இருக்கும். பசு தீவனம் எடுக்காமல் காய்ச்சலுடன் காணப்படும். இந்த மாதிரி பசு நோய்வாய்படும் போது உடனே காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைக்கும் மருத்துவம் செய்யவேண்டும். இல்லையேன்றால் பல நேரங்களில் பசுக்களின் இறப்பு அதிகமாக இருக்கும்.
கண்டறிதல் :
  • மடி வீக்கமாகவோ அல்லது பால் நிறம் மாறியோ அல்லது நீர்த்து காணப்பட்டலோ உடனே கால்நடை மருத்துவரை ஆலோசிக்கவும்.
  • உடனே மருத்துவம் ஆரம்பிக்கவேண்டும். காலம் தாழ்த்துவதால் பாதிப்பு அதிகமாகுவது மட்டுமல்லாமல் சிகிச்சையால் சரியாவது காலம் தாமதமாகும்.
தடுப்பு முறைகள் :

  • பால் கறந்த 15 நிமிடங்களுக்கு பசுக்களுக்கு பசுந்தீவனம் அளித்தால் , கீழே படுப்பது குறைந்து கம்பின் துளைவழியாக கிருமிகள் உள்ளே செல்வது குறையும்.
  • பசுக்களுக்கு சரிவிகித தீவனம் மற்றும் தாது உப்புகள் சரியான அளவில் அளித்து நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்காலம்.
  • பசுக்களின் கொட்டகைகளை சுத்தமாகவும் கிருமிநாசினி கொண்டு கிருமி நீக்கம் செய்யவேண்டும்.

TAMILNADU AGRICULTURE COLLEGES

TAMILNADU  AGRICULTURE COLLEGES

1
S.No College Name Address Courses Offered University
1 Adhiparasakthi Agriculture College Melmaruvathur - 603 319 Chengalpet Tamil Nadu, India
Email : omsakthi@omsakthi.org, webmaster@omsakthi.org
B.Sc. (Ag.)
2 Adhiparasakthi College of Science Kalavai, Vellore District Biochemistry B.Sc., M.Sc. Microbiology B.Sc., M.Sc.
3 AGRICULTURAL COLLEGE AND RESEARCH INSTITUTE Killikulam, Vallanadu - 628 252 Thoothukudi District
Email : deankkm@tnau.ac.in
Phone : 04630-2461226
Website : http://www.tnau.ac.in/kkm
B.Sc (Ag) and M.Sc (Ag) graduates Tamil Nadu Agricultural University
4 Agricultural College and Research Institute Thirupparankundram Madurai-625104
Email : deanagrimdu@tnau.ac.in
Phone : 91-452-2422956
under graduate, post-graduate and doctoral levels
5 Agricultural College and Research Institute TNAU, Coimbatore – 641 003, Tamil Nadu, India
Email : deanagri@tnau.ac.in
Phone : 091-0422-6611210
B.Sc.(Agriculture) B.Tech.(Biotechnology) B.Tech.(Bioinformatics) B.S.(Agribusiness Management) B.Tech.(Agricultural Information Technology)
6 Agricultural Engineering College and Research Institute Coimbatore – 641 003, Tamil Nadu, India
Email : deancaecbe@tnau.ac.in
Phone : +91 422 5511255
Under Graduate Course B.Tech.(Food Process Engineering) B.Sc (Food Process Engineering) Post Graduate Programmes Master of Engineering and Doctoral Programmes
7 Anbil Dharmalingam Agricultural College and Research Institute Navalur Kuttappattu village,Trichy pin - 620 009
Email : deanagritry@tnau.ac.in
Phone : 0431-2690577, 0431-2690692
Website : http://www.tnau.ac.in/agtry/index.html
undergraduate B.Sc., (Ag.) degree DEPARTMENT OF PLANT BREEDING AND GENETICS. DEPARTMENT OF CROP MANAGEMENT DEPARTMENT OF CROP PROTECTION DEPARTMENT OF SOCIAL SCIENCES AND LANGUAGES Tamil Nadu Agricultural University
8 Annamalai University Annamalai Nagar 608002
Email : info@annamalaiuniversity.ac.in Phone : 91 - 4144 - 238248/263/796
Website : http://annamalaiuniversity.ac.in
Agronomy Entomology Plant Pathology Microbiology Soil Science and cultural Chemistry Agricultural Botany Horticulture Agricultural Economics Agricultural Extension Animal Husbandary Annamalai University
9 Bharthidasan University Palkalaiperur Tiruchirappalli - 620 024
Email : info@bdu.ernet.in / office @bdu.ernet.in
Phone : 0431 660392 / 660271(O)472200(R)
Website : www.bdu.ac.in
Agriculture Wild Life
10 College Of Agricultural Engineering Kumulur 621712 Tiruchirapalli
Email : deancaekum@tnau.ac.in
Phone : 0431 – 2541218, 2543 718
Website : http://www.tnau.ac.in/kumulur
Agricultural Engineering Degree Tamil Nadu Agricultural University
11 Fisheries College and Research Institute Fisheries College and Research Institute,Tuticorin- 628 008 1. Master Of Fishery Science Eligibility : Bachelor’s degree in the concerned field obtained from the recognized University Duration : 2 years Course areas : in 8 disciplines viz. Aquaculture, Fis
12 FOREST COLLEGE AND RESEARCH INSTITUTE METTUPALAYAM – 641 301 B.Sc. (Foresty), M.Sc. (For.) and Ph.D. (For.) Tamil Nadu Agricultural University
13 Home Science College & Research Institute Madurai Doctorate Degree programme in Food Science and Nutrition Madurai Tamil Nadu Agricultural University
14 Horticultural College & Research Institute Periyakulam Theni – Dindigul high Periyakulam- 625 604
Email : deanhcripkm@tnau.ac.in
Phone : 04546) 231726
B. Sc. (Horticulture) M.Sc. (Horticulture)
15 Horticultural College and Research Institute Coimbatore-641003
Email : sih@tnau.ac.in, spices@tnau.ac.in
Phone : 91-422-5511284
B.Tech. (Horticulture) B.Sc.(Horticulture) M.Sc. (Horticulture) or Ph.D. (Horticulture) Degree PH.D. (Horticulture-Fruit Sciences)
16 Madras University Chennai 600005
Phone : 044-25368778
Website : http://www.unom.ac.in
Wild Life
17 Tamil Nadu Agricultural University Coimbatore 641003
Phone : 0422-5511200 431222, 431821
Website : http://tnau.ac.in
1. M.Sc Agriculture Duration: 2 years Eligibility: B.Sc (Ag) Branches offered: Agronomy, Agril Entomology, Agril Economics, Agril Extension, Agril Marketing Management, Agril Microbiology, Crop Physi

1

பயிர்களுக்கு ஏற்ற வேர்பூசண உட்பூசண நுண்ணுயிர் உரம்

 பயிர்களுக்கு ஏற்ற வேர்பூசண உட்பூசண நுண்ணுயிர் உரம்



கண்ணுக்கு புலப்படாத மிகச்சிறிய உயிரினங்களையே நுண்ணுயிரிகள் என்கிறோம். இவை பயிர்களுக்கு பலவகையான நன்மைகளை செய்கின்றன. குறிப்பாக பயிர்சாகுபடியில் சத்துக்கள் தரவல்லவை நுண்ணுயிர் உரமாகும். இவற்றில் தாவர வேர்களில் கட்டாய கூட்டு வாழ்க்கை நடத்தும் வேர் உட்பூசணம் முக்கியமானதாகும். இந்த நுண்ணுயிர்கள் பயிர்களுக்கு மிகச்சிறந்த நுண்ணுயிர் உரமாக இருக்கின்றன.

வேர் உட்பூசணத் தாவர கூட்டு வாழ்க்கை

வேர் உட்பூசணங்கள் மண்ணில் சிதல்லித்தாகவும், பூஞ்சாண இழைத்தண்டுகளாகவும் காணப்படும். வேர் உட்பூசணம் வளர ஆதாரத் தாவரம் தேவை. அவ்வகை ஒத்த பயிர்கள் மண்ணில் பயிரிடப்படும் போது மண்ணில் இருக்கும் வேர்ப்பூசண வித்துக்கள் முளைத்து மண்ணில் வளரத் தொடங்கும் தாவரத்தின் வேரை சூழ்ந்து கொண்டு தானும் வளரத் தொடங்குகின்றன. வேரில் ஒட்டிக் கொண்டு இவ்வாறு வளரும் உட்பூசணங்கள் அப்ரசோரியா எனும் பூஞ்சாண தொகுப்பை உருவாக்குகின்றன. இதன் மூலம் வேரினுள்ளும் நுழைகின்றன. வேரிலிருந்து பூஞ்சாண இழைகள் மண்ணில் சென்று ஊட்டங்களை கிரகின்றன.

வேரினுள் நுழைந்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் பூஞ்சாண இழை முளைத்து பயிர் உயிரணுக்களின் உள்ளே சென்று அர்பஸ்குல்ஸ் என்னும் உறிஞ்சிகளை உண்டாக்குகிறது. இந்த உறிஞ்சிகள் தான் ஊட்டச்சத்தை பரிவர்த்தனை செய்யும் மையமாக செயல்படுகின்றன.

வேர் உட்பூசண செயல்பாடு

பூசணத்தின் வேர்த்தூவிகள் மண்ணில் வெகு தூரத்திற்கு சுலபமாக பரவி விடுகிறது. ஆகவே, தாவரத்தின் வேர் பரவ முடியாத இடத்திற்கு கூட இந்த பூசணங்கள் பரவி சத்தை கிரகித்து வந்து தாவரத்திற்கு கொடுக்கிறது. குறிப்பாக வேர்களுக்கு எட்டாத மணிச்சத்தை தனது இழைகளின் மூலம் பூசணங்கள் கிரகித்து தனது இழைகளின் மூலம் தான் சார்ந்திருக்கும் தாவரத்திற்கு கொண்டு வந்து தருகிறது. இவ்வாறு மணிச்சத்தை பயிர்களுக்கு கொடுப்பதுடன், கந்தகம், துத்தநாகம் மற்றும் சுண்ணாம்புச் சத்து போன்றவற்றையும் மண்ணிலிருந்து பயிர்களுக்கு எடுத்துக் கொடுக்கிறது.

வேர் உட்பூசணம் வளர்க்கும் முறை

இதர நுண்ணுயிர்களை போல் வேர் உட்பூசணத்தை சர்க்கரை கரைசல் ஊடகங்களில் வளர்க்க முடியாது. இது தாவர வேர்களிலேயே இயற்கையாக வளரக்கூடியது.  எனவே, வேர் உட்பூசணம் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வெர்மிகுலைட் அல்லது கிருமி நீக்கப்பட்ட மணல் கலந்த பாத்திகளில் வளர்க்கப்பட்ட சோளம் அல்லது புல்வகைகளின் வேரில் வளர்க்கப்படுகிறது. பூசணம் வேரில் நன்கு வளர்ந்த பின் பயிரின் வேரும் வேர் பரவிய மண்ணும் எடுக்கப்பட்டு துகள்களாக்கி பாலிதீன் பைகளில் கொடுக்கப்படுகின்றன. இந்த கலவையை வயலில் இட பரிந்துரைக்கப்படுகின்றது.

உபயோகிக்கும் முறைகள்

ஒரு சதுர மீட்டர் நிலப்பரப்பிற்கு 100 கிராம் வேர் உட்பூசணங்கள் போதுமானது. விதைப்பதற்கு முன் நாற்றங்காலில் மண்ணிற்கு கீழே 2 முதல் 3 சென்டிமீட்டர் ஆழத்தில் இடவும்.
பாலிதீன் பைகளில் வளர்க்கப்படும் நாற்றுக்களுக்கு
ஒரு பைக்கு 10 கிராம் வேர் உட்பூசணம் போதுமானது. பைகளுக்கு தேவைப்படும் மண் கலவையை தயார் செய்யும் பொழுது, 100 கிலோ மண் கலவைகளில் 10 கிலோ வேர் உட்பூசணங்கள் கலந்து பாலித்தீன் பைகளில் இடவும்.

வளர்ந்த பயிர்களுக்கு

ஒரு மரத்திற்கு சுமார் 200 கிராம் வேர் உட்பூசணம் தேவைப்படும். வேர் உட்பூசணத்தை வேர் பாகத்தில் இட்டு மண் அணைக்கவும்.

வேர் உட்பூசணத்தின் பயன்கள்

1.குறுகிய காலப்பயிர்களான பயறு வகைகள், நிலக்கடலை போன்றவற்றில் மகசூலை அதிகப்படுத்துகின்றது.
2.வேர் உட்பூசண நுண்ணுயிர் உரம் ஊட்டங்களை பயிர்களுக்கு நன்கு கொடுக்கின்றது.
3.வளர்ச்சி ஊக்கிகளை சார்ந்து பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது.
4.வேர் உட்பூசணங்கள் வேரைத் தாக்கும் பூஞ்சாண நோய்களிலிருந்து பயிர்களை பாதுகாக்கின்றது.
மண்ணின் கட்டமைப்பை அதிகரிக்கின்றது.
5.பயிர்களுக்கு வறட்சியை தாங்கும் வலிமையை தருகின்றது.
6.மண்ணின் நிறம், நிலத்தின் உலர் தன்மையை பயிர் தாங்கி வளர வழி செய்கின்றது.

தகவல்:செ.மெரினா பிரேம் குமாரி, சுப.சுந்தரம், சு.கார்த்திகேயன், நுண்ணுயிரியல் துறை, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை.

Sunday, November 4, 2012

கேட்கும் திறனை மீட்டுத்தரும் நரம்பு ஸ்டெம் செல்கள்!

கேட்கும் திறனை மீட்டுத்தரும் நரம்பு ஸ்டெம் செல்கள்!


sci2
நம் புலன்கள் ஒவ்வொன்றும் நமக்கு பொக்கிஷங்கள் போல. அவற்றில் எது பாதிக்கப்பட்டாலும் இந்த உலக வாழ்க்கை சிரமம்தான். இப்படியான சிரமங்கள் பெரும்பாலும் கண்கள் மற்றும் காதுகளால்தான் ஏற்படுகின்றன. இத்தகைய சிரமங்களை போக்கத்தான் மருத்துவம் இருக்கிறது. ஆனால், ஒரு சில குறைபாடுகளைத் தவிர்த்து மற்ற பாதிப்புகளை சரி செய்வது மருத்துவத்துறைக்கு இன்னும் எட்டாக் கனியாகவே இருப்பது துரதிஷ்டவசமானது.
உதாரணமாக, காதுகளை தாக்கும் நோய்கள் அல்லது விபத்துகளால் பாதிக்கப்படும் கேட்கும் திறனை சொல்லலாம். நம் காதுகள் ஒரு சப்தத்தைக் கேட்டு, அதை இனம்கண்டு உணர வேண்டுமானால், காதுக்குள் செல்லும் எந்திர ஒலி அதிர்வுகள் முதலில் மின்சார சமிக்ஞைகளாக மாற்றப்பட வேண்டும். பின்னர், அந்த மின்சார சமிக்ஞைகள் அர்த்தமுள்ள ஒலியாக மூளையால் புரிந்துகொள்ளப்படும்.
எந்திர ஒலி அதிர்வுகளை மின்சார சமிக்ஞைகளாக மாற்றும் முக்கியமான வேலையை மூளையிலுள்ள `ஸ்பைரல் காங்கிலியான்' நரம்புகளே செய்கின்றன. ஆனால், இந்த நரம்புகள் சேதமடைந்தாலோ அல்லது இறந்துபோனாலோ அவற்றுக்கு மாற்று என்று எதுவும் கிடையாது. இதனால், ஆடிட்டரி நியூரோபதி எனும் காது கேளாமை குறைபாடு ஏற்படும். உலக காது கேளாதவர்களில் சுமார் 10 சதவீதம் பேரையும், இங்கிலாந்தில் சுமார் 3 லட்சம் பேரையும் பாதிக்கிறதாம் இந்த ஆடிட்டரி நியூரோபதி.
காது கேளாதவர்களுடன் சேர்த்து, உலக காது மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களையும் இம்சித்து வரும் இந்த ஆடிட்டரி நியூரோபதிக்கு, ஸ்டெம் செல்கள் மூலம் ஒரு தீர்வினை கண்டுபிடித்திருக்கிறது இங்கிலாந்திலுள்ள ஷெப்பீல்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்குழு ஒன்று.
`ஜெர்பில்' என்றழைக்கப்படும் பாலைவன எலிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முதற்கட்ட ஆய்வில், சோதனைக்கூடத்தில் உற்பத்தி செய்யப்பட்ட `ஆட்டிக் நரம்பு ஸ்டெம் செல்கள்', ஜெர்பில்களின் கேட்கும் திறனை மீட்டுத் தந்துள்ளன.
இந்த ஆய்வுக்காக, ஜெர்பில் எலிகளின் கேட்கும் திறன் ஊவாபெய்ன் எனும் மருந்துகள் மூலம் முதலில் அழிக்கப்பட்டது. பின்னர், மனித கருவில் இருக்கும், உடலின் எல்லா வகையான திசுக்களாகவும் மாறும் திறனுள்ள, கரு ஸ்டெம் செல்களில் இருந்து உருவாக்கப்பட்ட 50 ஆயிரம் ஆட்டிக் நரம்பு ஸ்டெம் செல்கள், சுமார் 18 ஜெர்பில்களின் ஒரு காதுகளுக்குள் மட்டும் ஊசி முலம் செலுத்தப்பட்டது. 10 வாரங்கள் கழித்து, மூன்றில் இருபங்கு ஜெர்பில்களின் கேட்கும் திறன் சீரானது. அதாவது, ஜெர்பில்களின் கேட்கும் திறன் சுமார் 46 சதவீதம் சீரடைந்தது என்கிறார் ஆய்வாளர் மார்செலோ ரிவோல்டா.
சுலபமாக புரியும்படி சொல்வ தானால், தெருவில் வேகமான செல்லும் ஒரு லாரியினுடைய இரைச்சலை மட்டுமே கேட்கக்கூடிய மனிதர் களின் கேட்கும் திறன், ஒருவருடன் உட்கார்ந்து ஒரு விவாதத்தை மேற்கொள்ளும் அளவுக்கு முன்னேற்றமடைந்தது என்று எடுத்துக்கொள்ளலாம் என்கிறார் ரிவோல்டா.
மேலும், ஜெர்பில்களின் காதுக்குள் செலுத்தப்பட்ட ஆட்டிக் ஸ்டெம் செல்கள், ஸ்பைரல் காங்கிலியான் நரம்புகளாக வளர்ந்ததால் தான் கேட்கும் திறன் மீண்டது என்பது ஜெர்பில்களின் போஸ்ட் மார்டத்துக்குப்பின் தெரியவந்ததும் குறிப்பிடத்தக்கது.
தற்போது, காது கேளாமைக்கான முக்கியமான காரணமாக கருதப்படுவது, காதுக்குள் இருக்கும் காக்லியா பகுதியிலுள்ள ரோம உயிரணுக்கள் அழிந்து போவதுதான். இதற்கான தற்போதைய சிகிச்சைக்கு காக்லியர் உட்பொருத்திகளை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், காக்லிய பகுதி ரோம உயிரணுக்களுக்கு நிகரான ரோம உயிரணுக் களையும் சோதனைக் கூடத்திலேயே உருவாக்கி அசத்தியிருக்கிறது ரிவோல்டாவின் ஆய்வுக்குழு.
முக்கியமாக, காதுகளிலுள்ள ஸ்பைரல் காங்கிலியான் நரம்புகள் பாதிக்கப்பட்டு கேட்கும் திறனை இழப்போருக்கு, மூளைக்குள் அறுவை சிகிச்சை செய்து உட்பொருத்திகளை பொருத்த வேண்டும். மிகவும் ஆபத்தான இந்த சிகிச்சையை விட்டால் அவர்களின் கேட்கும் திறனை மீட்க வேறு வழியேயில்லை.
ஆனால், இன்னும் பல மேலதிக ஆய்வுகளுக்குப்பின், தற்போது எலிகளில் வெற்றியடைந்துள்ள இந்த ஸ்டெம் செல் சிகிச்சை மனித ஆய்வுகளிலும் வெற்றியடையும். அதன்பிறகு, நரம்புகள் மற்றும் காக்லியா பகுதி குறைபாடுகளால் கேட்கும் திறனை இழந்துபோகும் 80 முதல் 90 சதவீத மக்களுக்கு நம்மால் சிகிச்சை அளிக்க முடியும் என்று உறுதியாகச் சொல்கிறார் ஆய்வாளர் மார்சலோ ரிவோல்டா.
Thanks : முனைவர் பத்மஹரி

நாசாவின் விண்ணுளவி புலர்ச்சி [DAWN] வக்கிரக் கோள் வெஸ்டாவைச் சுற்றி விட்டு செரிஸ் குள்ளக் கோள் நோக்கிச் செல்கிறது

நாசாவின் விண்ணுளவி புலர்ச்சி [DAWN] வக்கிரக் கோள் வெஸ்டாவைச் சுற்றி விட்டு செரிஸ் குள்ளக் கோள் நோக்கிச் செல்கிறது




(NASA Space Probe Dawn is leaving Vesta to the next Asteroid Ceres)
(கட்டுரை 2)
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
நிலவினில் தடம் வைத்தார்
நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் !
செவ்வாய்க் கோள் ஆராயத்
தளவுளவி சிலவற்றை
நாசாவும்
ஈசாவும் உளவ இறக்கின !
வால்மீன் வயிற்றில் அடித்து
தூசிகளை விண்ணில் ஆராய்ந்தார்
நாசா விஞ்ஞானிகள் !
வால்மீனை விரட்டிச் சென்று
தூசியைப் பற்றிக்
காசினியில் இறக்கினார் !
வக்கிரக் கோள் ஒன்றின்
மாதிரி மண்ணை
வையத்தில் இறக்கியது
ஜப்பான் விண்ணுளவி !
அயான் எஞ்சினை இயக்கி
பில்லியன் மைல்கள்
பயணம் செய்து
முரண் கோள் வெஸ்டாவை
முற்றுகை இட்டு
நாசா விண்ணுளவி ஏகும்
செரிஸ் குள்ளக் கோள்  நோக்கி,
சூரிய மண்டலத் தோற்றம்
ஆராய் வதற்கு !
+++++++++++
“முதன்முதல் முரண்கோள் வளையத்தில் (Asteroid Belt) முக்கிய வக்கிரக் கோள் ஒன்றை நாசாவின் விண்ணுளவி சுற்ற ஆரம்பித்து விண்வெளித் தேடலில் ஓர் உன்னத மைல்கல் நட்ட இன்றைய தினத்தை நாங்கள் கொண்டாடுகிறோம்.  வெஸ்டா வக்கிரக் கோளை விண்ணுளவி ஆராய்வது மாபெரும் விஞ்ஞானச் சாதனையாகக் குறிக்கப்படுகிறது.  அது எதிர்காலப் பரிதி மண்டலக் கோள்களுக்கு மனிதர் பயணம் செய்யப் பாதை விரிக்கிறது.”
சார்லஸ் போல்டன் (NASA Administrator)
“2025 ஆண்டுக்குள் விண்வெளி விமானிகளை ஒரு வக்கிரக் கோளுக்கு அனுப்பி வைக்க நாசாவுக்கு நான் ஆணை இடுகிறேன்.  அந்தக் குறிக்கோளை நிறைவேற்றப் “புலர்ச்சி” விண்ணுளவி (Dawn Space Probe) தேவையான விபரங்களை இப்போது சேமிக்கும்.”
ஓபாமா அமெரிக்க ஜனாதிபதி
“புலர்ச்சி விண்ணுளவி வெஸ்டாவைச் சுற்றும் போது ஆராய எத்தனை தணிவாகச் செல்ல முடியுமோ அத்தனைத் தணிவு உயரத்தில் பயணம் செய்ய முயல்கிறோம்.  விண்ணுளைவி வக்கிரக் கோளில் தவறி விழுந்து முறிந்து போனால் நாசா எங்கள் மீது படுகோபம் அடையும்.”
டாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (University of California, LA)
“வக்கிரக் கோள் வெஸ்டாவில் ஓர் உலோகக் கரு (Metal Core) மையத்திலும் சிலிகேட் பாறை அதைச் சுற்றிலும் இருப்பதாக நாங்கள் ஊகிக்கிறோம்.  பரிதி மண்டல வரலாற்றில் எப்போதோ அதன் தென் துருவ முனை உடைந்து பெரும்பான்மைப் பகுதி சப்பையாகப் போனது.
அப்பகுதியின் சிதறிய சில துணுக்குகள் பூமியிலும் விழுந்திருக்கலாம்.  பூமியில் விழுந்த 20 விண்கற்களில் ஒன்று வெஸ்டாவிலிருந்து விழுந்திருக்கிறது என்பதை நிரூபித்துள்ளார்.”
டாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (UCLA)
“வெஸ்டா, செரிஸ் வக்கிரக் கோள்களை ஆராயும் போது விண்கோள்களின் முரணான தோற்றப் பண்பாடுகளை அறிய முடியும்.  முன்னது பரிதி மண்டல அகக் கோள்கள் போல் (Inner Planets) பாறைக் கட்டமைப்பில் வார்க்கப் பட்டது.  பின்னது புறக்கோள்கள் போல் (Outer Planets) பனித்தள வடிவத்தில் உருவானது.”
டாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (UCLA)
நாசா விண்ணுளவி புலர்ச்சி செரிஸ் முரண் கோள் நோக்கிச் செல்கிறது.
முதல் விண்வெளிக்  குறிக்கோள் பயணத்தை வெற்றிகரமாக முடித்து, நாசாவின் புலர்ச்சி விண்ணுளவி இரண்டாவது குறிப்பணியைத் துவங்க முரண்கோள் "செரிஸ்"  [Asteroid Ceres] நோக்கி இப்போது [2012 நவம்பர்] சென்று கொண்டிருக்கிறது.    2011 ஜூலை 15 ஆம் தேதி விண்ணுளவி புலர்ச்சி வெஸ்டா முரண் கோள் ஈர்ப்பு விசையில் இழுக்கப் பட்டு அதைச் சுற்ற ஆரம்பித்தது.   ஏறக்குறைய  ஒன்பது மாதங்கள்  புலர்ச்சி வெஸ்டாவை வலம் வந்து பல ஆய்வுத் தகவல் அனுப்பி, 2012 ஆகஸ்டு மாதத்தில் ஈர்ப்பி லிருந்து விடுபட்டு அடுத்த முரண் கோள் செரிஸை நோக்கிச் செல்லத் துவங்கியது.
2007 செப்டம்பர் 7 ஆம் தேதி விண்வெளியில் ஏவப்பட்ட புலர்ச்சி விண்ணுளவி  2008 ஆகஸ்டில் பூமி, செவ்வாய்க் கோள் கடந்து முரண் கோள்கள் நிரம்பிய வக்கிரக் கோள் வளையத்த நெருங்கி 2011 ஜூலை 15 ஆம் தேதி வெஸ்டா ஈர்ப்பு விசையில் இறங்கி  அதைச் சுற்ற ஆரம்பித்தது.   விண்ணுளவி புலர்ச்சி முரண் கோள்கள் வெஸ்டாவும், செரிஸும் போல சூரினைச் சுற்றி வருகிறது.   சூரியனிலிருந்து பூமி சுமார் 93 மில்லியன் மைல்கள் [150 கி.மீ.] சராசரி தூரத்தில் சூரினைச் சுற்றுகிறது.  இந்த தூரமே [One Astronomical Unit (1 AU)] என்று குறிப்பிடப்  படுகிறது.  இப்போது புலர்ச்சி விண்ணுளவி  வெஸ்டாவை விட்டு விலகி செரிஸ் முரண் கோளை நெருங்க தனிப்பட்ட சூரிய நீள்வட்டச் சுற்று வீதியில் பயணம் செய்கிறது.
இவ்விதம் புலர்ச்சி விண்ணுளவி பல மில்லியன் மைல்கள் எளிதாய், ஆனால் மெதுவாய்ப் பயணம் செய்ய உந்துசக்தி தருவது அதன் : அயான் எஞ்சின் [Ion Propulsion System].   அதன் உந்துசக்தி வேகம் மணிக்கு 16,300  மைல்கள்.  அதாவது வினாடிக்கு 7.3 கி.மீ.  இப்போது [2012 நவம்பர்]  புலர்ச்சி விண்ணுளவி பூமியிலிருந்து 166 மில்லியன் மைல் [267 மில்லியன் கி.மீ.] தூரத்தில் பயணம் செய்கிறது.   புலர்ச்சிக்குச் செரிஸ் முரண் கோள் 37 மில்லியன் மைல் [59 மில்லியன் கி.மீ.] தூரத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது.
நாசா விண்ணுளவி புலர்ச்சி வெஸ்டா முரண்கோளைச் சுற்றி முடித்தது.
நாசா 2007 செப்டம்பரில் ஏவிய புலர்ச்சி விண்ணுளவி புவியைத் தாண்டிப் பரிதி மண்டலத்தில் நான்கு ஆண்டுகள் பல மில்லியன் மைல்கள் பயணம் செய்து, 2011 ஜூலை 17 ஆம் தேதிமுதன் முதல் முரண் கோள் வளையத்தில் (Asteroid Belt) தடம் வைத்துப் பெரிய வடிவில் ஒன்றான வெஸ்டா வக்கிரக் கோளை (Asteroid Vesta) நெருங்கிச் சுற்ற ஆரம்பித்தது.  பரிதி மண்டல முரண் கோள் வளையத்தில் கோடான கோடி வக்கிரக் கோள்கள் செவ்வாய்க் கோளுக்கும் வியாழக் கோளுக்கும் இடையே வியாழனைச் சுற்றிக் கொண்டு வருகின்றன.  நகரும் இந்த அடர்த்தி மந்தையில் வெஸ்டாவைக் கண்டுபிடித்துப் பிற வக்கிரக் கோள்கள் மோதிச் சிதையாமல் சுற்றி வருவது ஒரு மாபெரும் விண்வெளிச் சாதனையாகவும் வரலாற்று மைல் கல்லாகவும் கருதப்படுகிறது.  விண்ணுளவி அன்றைய தினத்தில் வெஸ்டாவை 530 கி.மீ. (300 மைல்) உயரத்தில் வலம் வந்தது.  வெஸ்டாவை நெருங்கவே நான்கு வருடங்கள் கடந்து விட்டன.  ஒன்பது மாதங்கள் வெஸ்டாவை ஆய்வு செய்த பிறகு புலர்ச்சி விண்ணுளவி மேலும் நான்கு ஆண்டுகள் பயணம் செய்து அடுத்துள்ள எல்லாவற்றுக்கும் பெரிய முரண்கோள் செரிஸை (Asteroid Ceres) 2015 இல் சுற்றத் துவங்கும்.  2015 இல் செரிஸை ஐந்து மாதங்கள் ஆய்வு செய்து புலர்ச்சியின் குறிப்பணி முடியும் போது அது சுமார் 3 பில்லியன் மைல்கள் பயணம் செய்திருக்கும்.

2007 செப்டம்பர் 27 ஆம் தேதி புலர்ச்சி விண்ணுளவி அமெரிக்காவின் பிளாரிடா கெனாவரல் ஏவுகணை முனையிலிருந்து டெல்டா -2 ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.  10 கி. வாட் மின்னாற்றல் கொண்ட சூரிய சக்தி அயான் எஞ்சின் முடுக்கி மெதுவாகச் சென்று 2011 ஆண்டு ஜூலையில் வெஸ்டா முரண்கோளையும், 2015 இல் செரிஸ் முரண்கோளையும் ஆராயத் திட்டமிடப் பட்டது  2015 இல் அதன் விண்ணுளவு முடியும் போது அது சுமார் 3 பில்லியன் (5 பில்லியன் கி.மீ) தூரம் பயணம் செய்திருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது.  இந்த திட்டத் துக்குச்  செலவாகும் நிதித் தொகை 475 மில்லியன் டாலர்.  பூமியைக் கடந்த பிறகு புலர்ச்சி விண்ணுளவி செவ்வாய்க் கோளை அண்டி ‘நெருக்க ஈர்ப்பு வீச்சில்’ (Flyby Gravity Force) வேகம் மிகையாகி வெஸ்டாவை விரைவில் அடையத் திட்டமிடப் பட்டது.
வக்கிரக் கோள் வெஸ்டா 1807 ஆண்டில் பூதக் கோள் வியாழனுக்கும், செந்நிறக் கோள் செவ்வாயிக்கும் இடையே உள்ள முரண்கோள் வளையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது, வெஸ்டாவின் குறுக்கு நீளம் 326 மைல் (525 கி.மீ).  தென்புறத்தில் நேர்ந்த பெருத்த மோதலில் வெஸ்டா துருவப் பகுதியில் சிதைவடைந்து சப்பையான கால்பந்து போல் தோற்றம் அளிக்கிறது.  பூமியிலிருந்து சுமார் 117 மில்லியன் மைல் (188 மில்லியன் கி.மீ.) தூரத்தில் புலர்ச்சி வெஸ்டாவை நெருங்கி இந்த விந்தை வரலாறு நிகழ்ந்திருக்கிறது !  திட்டத்தில் அடுத்த சிறப்பு முயற்சி என்ன வென்றால் புலர்ச்சி விண்ணுளவி இத்தனை தூரப் பயண நகர்ச்சிக்கும், திசை திருப்பத்துக்கும் ஒரு புதுவித அயான் எஞ்சினைப் (Solar Electric Ion Engine) பயன் படுத்தியுள்ளது.  ஆரம்பத்தில் புலர்ச்சி 6200 மைல் உயரத்தில் பறந்து வெஸ்டாவின் ஈர்ப்பு விசையில் பிடிபட்டு சுற்றியது.  சிறிது சிறிதாகப் புலர்ச்சி வெஸ்டாவை நெருங்கி இறுதியில் 120 மைல் (200 கி.மீ) உயரத்தில் வலம் வந்து முரண்கோளின் இயற்கைத் தன்மைகளை 9 மாதங்கள் ஆராயும் திட்டம் உள்ளது
பூமி போன்ற கோள்கள் முதலில் தோன்றிய போது சிதறிய இந்த வக்கிரக் கோள்கள் பரிதி மண்டலத்தின் தோற்றத்தைத் தெரிவிக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்.  வெஸ்டா, கிரிஸ் முரண்கோள்கள் விஞ்ஞானிகளுக்குப் புதிய படைப்புக் கருத்துக்களைத் தெரிவிக்கும்.  புதன், பூமி, வெள்ளி, செவ்வாய், வியாழன் போன்ற கோள்கள் உருவான பிறகு சிதறி எஞ்சிய மிச்சத் துணுக்குகள்தான் இந்த வக்கிரக் கோள்கள்.!  முரண்கோள் வெஸ்டாவின் மையத்தில் ஓர் உலோகக் கரு உள்ள தாகவும், அதைச் சுற்றிலும் சிலிகேட் பாறைகள் மூடி இருப்ப தாகவும் விஞ்ஞானிகள் ஊகிக்கிறார்.  வெஸ்டாவின் மேற்தளம் அடித்தள எரிமலைகள் பீறிட்டு உருவாக்கப் பட்டுள்ளது.
முரண்கோள் வளையத்தில் எல்லாவற்றுக்கும் பெரிய வக்கிரக் கோள் செரிஸ்.  அதன் பூதளத்  தன்மைகளைக் கண்டறிய முதலில் உதவியது ஹப்பிள் தொலைநோக்கி.  செரிஸின் குறுக்கு நீளம் 580 மைல் (930 கி.மீ).  ஏறக்குறைய உருண்டையான கிரிஸ் புளுடோ போல் பரிதி மண்டலத்தின் குட்டிக் கோள் (Dwarf Planet) என்ற வகுப்பணியில் வைக்கப் படுவது.  செரிஸ் முரண்கோளில் 40 – 80 மைல் (60 – 120 கி.மீ) ஆழப் பனித்தளம் உள்ளதாகவும் பூமியை விட இனிப்பு நீர்ச் சேமிப்பு (Sweet Water Storage) ஆறு மடங்கு மிக்கதாகவும் அறியப் படுகிறது.
புலர்ச்சி விண்ணுளவித் திட்டத்தின் குறிக்கோள் என்ன ?
புலர்ச்சி வெஸ்டாவை 9 மாதங்கள் சுற்றி வரும்,  பிறகு செரிஸை நெருங்கி குறைந்தது 5 மாதங்கள் சுற்றி வரும். புலர்ச்சி முரண்கோளைத் திசை திருப்பி நகர்த்த 10 கி.வாட் சூரிய சக்தி அயான் எஞ்சின் (Solar Electric Ion Engine) பயன்படுத்தப் படுகிறது.  இதுவரைப் பயன் படுத்திய இரசாயன ராக்கெட்டுகள் போலின்றி அயான் எஞ்சின்கள் துடிப்புத் தள்ளு (Push by Impulse) ஆற்றல் உடையது.  உந்து சக்திக்கு எஞ்சினில் ஸீனான் அயான்கள் (Xenon Ions) வெளியே தள்ளப் படுகின்றன.
பூமியின் பெருவாரியான கடல்நீர் வெள்ளம் பற்பல முரண்கோள்களில் உள்ள பனிப்பாறையிலிருந்து மோதலின் போது பரவிச் சேமிப்பானது என்று சமீபத்தில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
புலர்ச்சி விண்ணுளவித் திட்டத்தின் குறிக்கோள் :
1. வெஸ்டா, செரிஸ் முரண் கோள்களின், மேற்தள அமைப்பு, உட்தள அமைப்பு, திணிவை ஆராய்வது.
2. முரண் கோள்களின் வடிவளவு, உட்கலவை, உருவத் தோற்றம், நிறையை அறிவது.
3. மேற்தள ஆய்வு, ஆழ்குழிகளை ஆராய்தல்.
4. முரண் கோள் வடிவ அமைப்பில் பனிநீர்ச் சேமிப்புத் தேக்கம் பற்றி அறிவது.
புலர்ச்சி விண்ணுளவி தாதுக்கள், மூலக, மூலக்கூறுகளைக் காணும் கருவிகளைச் சுமந்து செல்கிறது.  2011 ஆகஸ்டு மாதத்தில் புலர்ச்சி வெஸ்டா மீது 120 மைல் உயரத்தில் பறந்து கருவிகள் வேலை செய்யத் துவங்கும்.  பூதள வேறுபாடுகள், சூழ்வெளி அமைப்பு, மலைச் சிகரத் தோற்றங்கள், எரிமலைச் சிதைவுகள், எரிமலைக் குழம்போட்டம் ஆகியவற்றை ஆராயும்.
(தொடரும்)
************************
தகவல்:
Picture Credits: NASA, JPL, ESA, JAXA
1. Mars Exploration Rover Mission [http://marsrovers.jpl.nasa.gov./mission/status.html] (Jan 27, 2006)
2. Space Today Online – Exploring the Red Planet, Future Mars Probes from Earth
3 Science & Technology: ESA’s Mars Express with Lander Beagle-2 [Aug 26, 2003]
4 Future Space Missions to Mars By: European Space Agency [ESA]
5 http://www.thinnai.com/science/sc0925031.html [Author's Article on Mars Missions]
5 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=41006061&format=html (Plasma Rocket Engines)
6 Spacecraft Blasts off to Gather Mars Data By: Associated Press [Aug 12, 2005]
7 NASA Facts, Mars Exploration Rover By: NASA & JPL [Sep 2004]
8 From Wikipedia : Phobos (Mars Moon) (June 2, 2010)
9 Daily Galaxy : The Mystery of Mars’ Moon Phobos Deepens By : Casey Kazan via ESA (June 7, 2010)
10 From Wikipedia : Moons of Mars (June 9, 2010)
11. Space Probe Enthralls Japan, as it Heads Home By : Sagamihara (AFP) June 8, 2010
12 Scientific American Hayabusa Spacecraft Headed Back Toward Earth, Perhaps with Asteroid Dust in Hand
By : John Matson (June 11, 2010)
13 Space Flight Now – Japan Spacecraft will Plunge Back to Earth Sunday By : Stephen Clark (June 12, 2010)
14 Wikipedia : Missio Type Asteroid Sample Returned to Earth (June 13, 2010)
15 Space Flight Now : Hayabusa Completes Fiery Return to Earth (June 13, 2010)
16 Aviation Week – Japan Hayabusu Spacecraft Capsule Successful Landing (June 13, 2010)
17. Space Daily : Asteroid SampleReturn Capsule Recovered in Outback Australia (June 14, 2010)
18 Japan Seeks Guiness Record Listing for Space Probe. (June 15, 2010)
19. BBC News : Successful Launch for NASA Probe (Dawn) (Sep 27, 2007)
20 Wikipedea : http://en.wikipedia.org/wiki/Asteroid_belt (July 19, 2011)
21 BBC News : Dawn Probe Orbits Asteroid Vesta By : Jonathan Amos (July 17, 2011)
22 Space Flight Now : Dawn Asteroid Explorer Moves into Orbit ar Versa By Stephen Clark (July 17, 2011)
23 BBC News : Asteroid Vesta Reveals its Scars By : Jonathan Amos (July 19, 2011)
24 Daily Galaxy : Was Earth’s Original Water Delivered by Ice-covered Asteroids ? (July 19, 2011)
25. NASA JPL Site on Dawn : http://dawn.jpl.nasa.gov/mission/trajectory.asp [Dawn Update]
26 ANew Dawn For NASA's Asteroid Explorer [October 1, 2012]
27. http://en.wikipedia.org/wiki/Dawn_(spacecraft) [October 17, 2012]
28. Dawn Update : http://dawn.jpl.nasa.gov/mission/journal_10_31_12.asp [October 31, 2012]
++++++++++++++++++
S. Jayabarathan (jayabarat@tnt21.com) (November  2, 2012)

வாதக்காய்ச்சல் நோய் பற்றிய தகவல்கள்

வாதக்காய்ச்சல் நோய் பற்றிய தகவல்கள்

வாத காய்ச்சல் நோய் குழந்தைகளைப் பாதித்து இதயத்தின் வால்வுகளைச் சிதைக்கும் கொடிய தொற்றுநோய்களில் முதன்மையானது வாதக் காய்ச்சல் நோய் (Rheumatic Disease) நம் நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதத்துக்கு மேற்பட்டோர் இந்த நோய்க்கு ஆளாகின்றனர். சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். வாதக் காய்ச்சல் நோய், குழந்தைகளை சுமார் 5 வயது முதல் 15 வயதுக்குள் தாக்கும்.
குழந்தைகளை மட்டுமல்லாது சில சமயங்களில் பெரியவர்களையும் இந்த நோய் தாக்குகிறது.
தொண்டைப் பகுதியில் உள்ள டான்சில்ஸ் (TONSILS) என்ற உறுப்புகளின் அழற்சியாகவே குழந்தைகளிடத்தில் வாதக் காய்ச்சல் நோய் தன் தாக்குதலைத் தொடங்குகிறது. தொடக்க நிலையில் தொண்டை அழற்சி, காய்ச்சல், மூட்டு விக்கம் போன்றவை இந்த நோயின் முக்கிய அறிகுறிகளாக இருக்கின்றன. இத்தகைய அறிகுறிகளை உணர்ந்தவுடன் தொடக்க நிலையிலேயே தக்க மருத்துவ முறைகளின் மூலம், இதைக் கட்டுப்படுத்திவிட வேண்டும்.
இல்லையென்றால் இதயம் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும்.
எல்லாவகையான வைரஸ்களும், பாக்டீரியாக்களும் வாதக் காய்ச்சல் நோயை
ஏற்படுத்தக்கூடும் என்றாலும் குறிப்பாக ஸ்ட்ரெப்டோகாக்கை (Streptococci) என்ற ரத்தத்தைச் சிதைக்கும் தன்மையுள்ள நுண்ணுயிர்தான் இந்தக் காய்ச்சலை உண்டாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
மக்களின் வாழ்க்கைத்தரம், குடியிருக்கும் வீட்டின் சுகாதார நிலை, சுற்றுச்சூழலின் தன்மை, சாப்பிடும் உணவின் தன்மை போன்றவை வாதக் காய்ச்சல் நோய்க்கான முகாந்திரத்தை அமைத்துக் கொடுக்கின்றன. போதிய காற்றோட்டம், போதிய சூரிய வெளிச்சம் இல்லாத நெருக்கடியான குடியிருப்புகளில் வாழ்வது வாதக் காய்ச்சல் நோய்க்குக் காரணமான நுண்ணுயிர்களை நன்றாகச் செழித்து வளர்ந்து பெருகுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றன.
இதுபோல் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளைச் சாப்பிட முடியாத மக்களுக்கும் அவர்களுடைய குழந்தைகளுக்கும் வாதக் காய்ச்சல் நோய் வரவாய்ப்புகள் அதிகம் உண்டு.சரி, காரணங்களைப் பற்றி பேசிவிட்டோம்.
வாதக் காய்ச்சலை நுண்ணுயிரிகள் எப்படி ஏற்படுத்துகின்றன என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். மேலே சொன்ன வழிகளில் வெளியில் இருந்து உடலுக்குள் நுழைய நுண்ணுயிர்கள் முயற்சிக்கின்றன. நமது உடலில் உள்ள நுழைவாயிலில் பல வகையான தற்பாதுகாப்பு
அமைப்புகள் உள்ளன. அவை நுண்ணுயிர்கள் உள்ளே நுழையமுடியாத வகையில் அவற்றை அழிக்க முயற்சிக்கின்றன. இத்தகைய தற்பாதுகாப்புப் பணியில் தைமஸ் (Thymàv) போன்ற பலசுரப்பிகளுக்கு முக்கியமான பொறுப்பு உண்டு.
இந்தச் சுரப்பிகள் நோயை உண்டாக்கும் தீய நுண்ணுயிர்களை அழிக்கும் தன்மையுள்ள
ஆன்டிபாடிஸ் (ANTIBODIES) எனப்படும் எதிர்ப்பொருள்களை உற்பத்தி செய்கின்றன.
இவ்வகையான எதிர்ப்பொருள்கள்தான் தொண்டையில் உள்ள தீமை தரும் நுண்ணுயிர்களை அழிக்கும் போராட்டத்தில் இறங்குகின்றன. இந்தப் போராட்டத்தில் வெற்றி பெற ஒரு புத்திசாலித்தனமாக அணுகுமுறையை நுண்ணுயிர்கள் பின்பற்றுகின்றன.வாதக் காய்ச்சலை ஏற்படுத்தும் நுண்ணுயிர்களின் மூலக்கூறுகளின் அமைப்பும், நமது உடலில் உள்ள மூட்டுத் திசுக்களிலும் இதய வால்வுகளின் திசுக்களிலும் உள்ள மூலக்கூறுகளின் அமைப்பும் ஒரே மாதிரியாக அமைந்துள்ளன.
இதனால் நமது உடலில் உள்ள எதிர்ப்பொருள்கள் நுண்ணுயிர்களை மட்டும் அழிப்பதோடு அல்லாமல் அதே போன்ற மூலக்கூறு அமைப்புகளைக் கொண்ட திசுக்களையும் அழித்துவிடுகின்றன. அந்த வகையில் இதயத்தின் வதல்வுகளில் உள்ள திசுக்களையும் தவறாக அழித்துவிடுகின்றன. இதன் விளைவாக நமது உடலில் உள்ள இதயத்தின் வால்வுகள் நிரந்தரமாகப் பாதிக்கப்படுகின்றன.
குறிப்பாக வாதக் காய்ச்சல் நோயால் ஈரிதழ் வால்வும் (Miˆral Valve), மகாதமனி (Aorˆa) என்ற மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றன. இதயத்தில் உள்ள நான்கு வால்வுகள்தான் இதயத்தின் தூய்மையான ரத்தத்தின் போக்கைக் கட்டுப்படுத்த மிகவும் துணையாக உள்ளன.
இவை இரண்டு வகைகளில் பாதிக்கப்படுகின்றன. முதலாவதாக இதய வால்வுகள் நன்கு செயல்பட வேண்டும் என்றால் இந்த வார்வுகளுடன் இணைக்கப்பட்டிருக்கும் நார்த்தசைகள் நன்கு விரிந்து செயல்பட வேண்டும்.
ஆனால் வாதக்காய்ச்சல் நோயானது இந்த வால்வுகளை சிதைத்து அவற்றின் விரிந்து சுருங்கும் தன்மையைக் கெடுத்துவிடுகிறது. வால்வுகள் சிதைவடைவதால் தங்களின் நெகிழும் தன்மையை இழந்து சுருங்கிப்போய்விடுகின்றன. இதைத்தான் வால்வுகளின் குறுக்கம் (Sˆenoviv) என்கிறார்கள். இவ்வாறு வால்வுகளின் குறுக்கம் காரணமாக ரத்த ஓட்டமானது தடைபட்டு மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடுகின்றன.
சில சமயங்களில் வாதக் காய்ச்சல் நோயானது இதய வால்வுகளைச் சிதைத்து வால்வுகளின் இதழ்களை அளவுக்கு மீறி விரிவடையச் செய்கின்றன. இதனால் ரத்தக் குழாய்களுக்கு மொத்த ரத்தமும் செல்லாமல் இதய அறையில் லேசாகக் கசிந்து கொண்டிருக்கும். இதன் காரணமாக ரத்தக் குழாய்களுக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறையும். இவ்வாறு வால்வுகள் விரிவடையும் நிலையை வால்வுகளின் செயலற்ற தன்மை (INCOMPETENCE) என்பார்கள்.
இந்தியாவில் வாதக் காய்ச்சல் நோய் என்பது மிகப்பெரிய மருத்துவப் பிரச்சனையாக
உருவெடுத்திருக்கிறது. அதோடு மக்களின் வாழ்க்கைத்தரம், உணவுப் பழக்கவழக்கங்கள், சுற்றுச்சூழலின் தன்மை, தட்பவெப்ப நிலை இவற்றை அடிப்படையாகக் கொண்ட சமுதாய பொருளாதாரத் தொடர்புடைய பிரச்சனையாகவும் இன்றைக்கு மாறியிருக்கிறது. ஏனெனில் இந்த நோய் ஏற்படுவதற்கான காரணிகள் நம் நாட்டில் அதிகமாக உள்ளன. அதனால்தான் இந்தியாவில் மட்டம் ஒரு சதவீதத்துக்கும் மேற்பட்டோர் வாதக் காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நம் நாட்டில் அதிகமாக இருப்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
உலக அளவில் குழந்தைகளில் எண்ணிக்கையில் நம் நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.
பெரும்பான்மையான குழந்தைகள் போதுமான சுகாதார வசதிகளும், கழிப்பறை வசதிகளும், காற்றோட்டமும் இல்லாத, மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ள நெருக்கடியான சூழலில் வாழ்கிறார்கள். போதுமான ஊட்டச்சத்து நிறைந்த உணவும், தூய்மையான நீரும் கிடைக்காத நிலையும் அவர்களின் ஆராக்கியத்தைக் கேள்விக்குறியாக்கிவிடுகின்றன.
மேலும் பெரியம்மை, போலியோ எனப்படும் இளம் பிள்ளைவாதம், கக்குவான் இருமல் போன்ற குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்களைத் தடுக்கும் தடுப்பு ஊசிகளைப்போல், வாதக்காயச்சல் நோயைத் தடுக்கும் தடுப்பு ஊசிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இன்னொரு பிரச்சனை என்னவெனில் வெறும் மருந்து, மாத்திரைகளைக் கொடுக்கும் சிகிச்சை முறையைக் கொண்டு வாதக் காய்ச்சலை முழுமையாகத் தடுக்க முடியாது. சுகாதாரப்பராமரிப்பு, குடிநீரின் தன்மை போன்ற பலவகையான காரணங்களை அடிப்படையாகக் கொண்டு பன்முக வடிவம் கொண்ட சமூகப் பொருளாதார முகங்கள் கொண்ட சிகிச்சை முறையால்தால் இதை முழுமையாகக் குணப்படுத்த முடியும். எனவே இதைத் தடுக்க தொலைநோக்குப் பார்வை கொண்ட தேசிய அளவிலான திட்டம் மிகவும் இன்றியமையாதது.

கார்த்திகைப் பட்ட எள் சாகுபடித் தொழில்நுட்பம்

கார்த்திகைப் பட்ட எள் சாகுபடித் தொழில்நுட்பம்

Thanks வேளாண் அரங்கம்
கார்த்திகைப் பட்டத்தில் எள் சாகுபடி செய்யும் விவசாயிகள் நவீன தொழில் நுட்பங்களைப் பின்பற்றுவதன் மூலம், உயர் விளைச்சல் பெற முடியும் என்று வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
மாவட்டத்தில் நிலக்கடலைக்கு அடுத்தபடியாக அதிகப் பரப்பளவில் சாகுபடி செய்யப்படும் முக்கிய எண்ணெய் வித்துப் பயிராக இருப்பது எள் மட்டுமே. இப்போது கார்த்திகைப் பட்டத்தில் (நவம்பர் – டிசம்பர்) எள் சாகுபடி செய்வதற்காக விவசாயிகள் நிலங்களைத் தயார்படுத்தி வருகின்றனர்.
எண்ணெய் வித்துகளின் இளவரசி என்று அழைக்கப்படும் எள் சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்களைப் பின்பற்ற வேண்டியது அவசியமானது.

ரகங்கள்:
கார்த்திகைப் பட்டத்தில் சாகுபடி செய்வதற்கு
  • கோ-1,
  • டிஎம்வி-3,
  • டிஎம்வி-5,
  • எஸ்விபிஆர்-1
ஆகிய ரகங்கள் தகுதியானவை.
எள் பயிரிடுவதற்கு மணல் பாங்கான வண்டல், செம்மண், கருவண்டல் நிலங்கள் ஏற்றவை.
உழவு முறை:
எள் விதைகள் மிகவும் சிறியதாக இருப்பதால், விதைகள் நன்கு முளைக்க மண்ணில் உள்ள கட்டிகளை உடைத்து, நுண்மைப்படுத்த வேண்டும். எனவே, நிலத்தை இரு முறை டிராக்டர் கலப்பையால் உழவு செய்ய வேண்டும்.
இல்லையெனில், இரும்புக் கலப்பையால் மூன்று முறையோ அல்லது நாட்டுக் கலப்பையால் 5 முறையோ உழவு செய்ய வேண்டும். கடைசி உழவில் ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் இடவேண்டும்.
இறவை எள் சாகுபடிக்கு கிடைக்கும் நீர் மற்றும் நிலத்தின் சரிவைக் கணக்கிட்டு, 10 சதுர மீட்டர் அல்லது 20 சதுர மீட்டர் அளவுக்கு நீர் தேங்காத வகையில் நன்கு சமன் செய்யப்பட்ட பாத்திகள் அமைக்க வேண்டும்.
விதை நேர்த்தி:
ஓர் ஏக்கருக்கு 2 கிலோ விதை போதுமானது. விதை மூலம் பரவும் நோய்களைத் தடுக்க ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கான்பன்டாசிம் அல்லது 4 கிராம் திரம் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விருடி என்ற அளவில் கலந்து, 24 மணி நேரம் காற்றுப் புகாத வகையில் வைத்திருந்து, உயிர் உர விதையை நேர்த்தி செய்ய வேண்டும்.
ஒரு பாக்கெட் அசோஸ்பைரில்லம் மற்றும் ஒரு பாக்கெட் பாஸ்போ பாக்டீரியாவை ஆறிய அரிசிக் கஞ்சியில் கலந்து, ஓர் ஏக்கருக்குத் தேவையான விதையுடன் விதை நேர்த்தி செய்து நிழலில் உலர்த்திய பிறகு விதைப்பு செய்ய வேண்டும்.
விதைகள் சீராகப் பரவ 2 கிலோ விதையுடன் 8 கிலோ மணல் கலந்து நிலத்தின் மேற்பரப்பில் சீராக விதைக்க வேண்டும்.
தொழில்நுட்ப முறைகள்:
விதைத்த 15ஆம் நாள் செடிக்கு, செடி 15 செ.மீ. இடைவெளி விட்டு, செடிகளைக் கலைந்து விட வேண்டும். 30ஆம் நாள் செடிக்கு, செடி 30 செ.மீ. இடைவெளி விட்டு மீண்டும் ஒரு முறை கலைந்து விடவேண்டும். மண் பரிசோதனைப்படி உரமிட வேண்டும்.
இல்லையெனில், பொதுப் பரிந்துறையான இறவை எள்ளுக்கு ஏக்கருக்கு 14:9:9 கிலோ தலை, மணி, சாம்பல் சத்து தரும் உரங்களை இடவேண்டும். விதைப்புக்குப் பின் ஓர் ஏக்கருக்கு 2 கிலோ மாங்கனீசு சல்பேட் நூண்ணூட்டச் சத்தை, நன்கு மக்கிய 8 கிலோ தொழுவுரத்தில் கலந்து சீராக தூவ வேண்டும்.
களைகளைக் கட்டுப்படுத்த பென்டிமெத்தலின் 1.3 லிட்டர் களைக் கொல்லி மருந்தை 260 லிட்டர் தண்ணீரில் கலந்து, விதைத்த 3 நாள்களுக்குள் சீராகத் தெளிக்க வேண்டும். இல்லையெனில், 10 கிலோ மணலுடன் கலந்து சீராக தூவ வேண்டும்.
களைக் கொல்லி பயன்படுத்தாவிட்டால் விதைத்த 15 நாள்கள் கழித்து ஒரு கைக் களையும், 35 நாள்கள் கழித்து இரண்டாவது கைக் களையும் எடுத்து களைகளைக் கட்டுப்படுத்தலாம்.
நீர்ப் பாய்ச்சுதல்:
மண்ணின் தன்மை, பருவ காலம் ஆகியவற்றைக் கணக்கிட்டு 5 அல்லது 6 முறை நீர்ப் பாய்ச்ச வேண்டும். முதல் முறை விதைத்தவுடன் 7ஆவது நாள் உயிர்த் தண்ணீர், 25ஆவது நாள் பூக்கும் தருவாயில் இரண்டு முறை, காய் பிடிக்கும் தருவாயிலும், முதிர்ச்சியடையும் போதும் இரு முறையாக 6 முறை நீர் பாய்ச்ச வேண்டும். இறவைப் பயிரில் 65 நாள்களுக்குப் பின் நீர் பாய்ச்சக் கூடாது.
அறுவடை:
செடியில் கீழிருந்து 25 சதவீத இலைகள் உதிர்ந்து, காய்கள், தண்டு பாகங்கள் பழுப்பு நிறமாக மாறுவதே பயிர் அறுவடை செய்ய உகந்த காலமாகும். செடியின் அடியிலிருந்து மேலாக உள்ள 10ஆவது காயில் உள்ள விதைகள் கறுப்பாக மாறியவுடன் அறுவடை செய்தால், காய்கள் வெடித்துச் சிதறி ஏற்படும் மகசூல் இழப்பைத் தவிர்க்கலாம்.\

தினமணி செய்தி -

தருமபுரி உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குநர் ந. மேகநாதன்

மரங்கள் நடவும், உரங்கள் இடவும் ஏற்ற தருணம்

மரங்கள் நடவும், உரங்கள் இடவும் ஏற்ற தருணம்

Thanks வேளாண் அரங்கம்
 
பருவமழை தொடங்கியிருப்பதைத் தொடர்ந்து மரங்கள் நடவும், உரங்கள் இடவும் இதுவே ஏற்ற தருணம் என, தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.
பழ மரங்களை வீடுகளிலும், தோட்டங்களிலும் வளர்ப்பது சுற்றுச்சூழல் மாசையும் நீக்கி, சுவையான சத்தான கனிகளையும் தருகின்றன. இப்போது மழை பெய்து வருவதால் பழ மரங்களை நடவு செய்வதற்கும், ஏற்கெனவே உள்ள பழ மரங்களுக்கு உரமிட்டு பராமரிப்பதற்கும் இதுவே உகந்த தருணம்.
மா நடவு முறைகள்:
வரிசைக்கு வரிசை 7-10 மீ., செடிக்குச் செடி 7- 10 மீ. இடைவெளியில் நடவு செய்யலாம்.
அடர் நடவானால் வரிசைக்கு வரிசை 5 மீ., செடிக்குச் செடி 5 மீ. இடைவெளியில் நடவு செய்யலாம்.
3 அடி ஆழம், 3 அடி அகலம் அளவில் எடுக்கப்பட்ட குழிகளில் 10 கிலோ தொழு உரம், 1 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 1.3 சதவீத லிண்டேண் குருணை 100 கிராம் ஆகியவற்றை மேல் மண்ணுடன் கலந்து இட்டு, ஒட்டு மரக்கன்றுகளை குழியின் நடுவில் நடவு செய்ய வேண்டும்.

மா உர நிர்வாகம்:
முதலாமாண்டு ஒரு மரத்துக்கு 10 கிலோ தொழு உரம், 450 கிராம் யூரியா, 1250 கிராம் சூப்பர் பாஸ்பேட், 500 கிராம் மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை இடவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மரம் ஒன்றுக்கு முந்தைய ஆண்டு உர அளவுடன் 10 கிலோ தொழு உரம், 450 கிராம் யூரியா, 1250 கிராம் சூப்பர் பாஸ்பேட், 500 கிராம் மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை கூடுதலாக சேர்த்து இடவேண்டும்.
ஆறாமாண்டு முதல் ஒரு மரத்துக்கு 50 கிலோ தொழு உரம், இரண்டே கால் கிலோ யூரியா, ஆறே கால் கிலோ சூப்பர் பாஸ்பேட், இரண்டரை கிலோ மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை இடவேண்டும். இந்த உரங்களை ஆண்டுக்கு இருமுறையாகப் பிரித்து இடலாம்.
நெல்லி நடவு முறைகள்:
வரிசைக்கு வரிசை 6 மீ., செடிக்குச் செடி 6 மீ. இடைவெளியில் நடவு செய்யலாம். 2 அடி ஆழம், 2 அடி அகலம் அளவில் எடுக்கப்பட்ட குழிகளில் 10 கிலோ தொழு உரம், 1 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 1.3 சதவீத லிண்டேண் குருணை 100 கிராம் ஆகியவற்றை மேல் மண்ணுடன் கலந்து இட்டு, ஒட்டு மரக்கன்றுகளை குழியின் நடுவில் நடவு செய்ய வேண்டும்.
நெல்லி உர நிர்வாகம்:
நான்காமாண்டு காய்க்கத் தொடங்கியதும், ஆண்டுக்கு ஒரு மரத்துக்கு 50 கிலோ தொழு உரம், ஒன்றரை கிலோ யூரியா, ஒரு கிலோ சூப்பர் பாஸ்பேட், ஒரு கிலோ மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை இரு முறையாகப் பிரித்து இடவேண்டும்.
காய்களில் கரும்புள்ளிகளும், பழுப்பு நிறம் கலந்து காணப்படுவது போரான்சத்து பற்றாக்குறையாகும். 100 லிட்டர் நீரில் 600 கிராம் போராக்ஸ் கலந்து ஒரு மாத இடைவெளியில் இருமுறை தெளித்து இந்தக் குறைபாட்டை நீக்கலாம்.
சப்போட்டா நடவு:
வரிசைக்கு வரிசை 8 மீ., செடிக்குச் செடி 8 மீ. இடைவெளியில் நடவு செய்யலாம்.
அடர் நடவானால் வரிசைக்கு வரிசை 8 மீ., செடிக்குச் செடி 4 மீ. இடைவெளியில் நடவு செய்யலாம்.
3 அடி ஆழம், 3 அடி அகலம் அளவில் எடுக்கப்பட்ட குழிகளில் 10 கிலோ தொழு உரம், 1 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 1.3 சத லிண்டேண் குருணை 100 கிராம் ஆகியவற்றை மேல் மண்ணுடன் கலந்து இட்டு, ஒட்டு மரக்கன்றுகளை குழியின் நடுவில் நடவு செய்ய வேண்டும்.
சப்போட்டா உர நிர்வாகம்:
முதலாமாண்டு ஒரு மரத்துக்கு 10 கிலோ தொழு உரம், 450 கிராம் யூரியா, 1250 கிராம் சூப்பர் பாஸ்பேட், 500 கிராம் மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை இடவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மரம் ஒன்றுக்கு முந்தைய ஆண்டு உர அளவுடன் 5 கிலோ தொழு உரம், 220 கிராம் யூரியா, 150 கிராம் சூப்பர் பாஸ்பேட், 70 கிராம் பொட்டாஷ் உரங்களை கூடுதலாக சேர்த்து இடவேண்டும்.
ஆறாமாண்டு முதல் ஒரு மரத்துக்கு 50 கிலோ தொழு உரம், இரண்டே கால் கிலோ யூரியா, ஆறே கால் கிலோ சூப்பர் பாஸ்பேட், இரண்டரை கிலோ மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை இடவேண்டும். இந்த உரங்களை ஆண்டுக்கு இரு முறையாகப் பிரித்து இடலாம்.
எலுமிச்சை நடவு:
வரிசைக்கு வரிசை 5 மீ., செடிக்குச் செடி 5 மீ. இடைவெளியில் நடவு செய்யலாம்.
இரண்டரை அடி ஆழம், இரண்டரை அடி அகலம் என்ற அளவில் எடுக்கப்பட்ட குழிகளில் 10 கிலோ தொழு உரம், 250 கிராம் வேப்பம் புண்ணாக்கு, இட்டு நடவு செய்ய வேண்டும்.
எலுமிச்சை உர அளவு:
முதலாமாண்டு ஒரு மரத்துக்கு 10 கிலோ தொழு உரம், 450 கிராம் யூரியா, 600 கிராம் சூப்பர் பாஸ்பேட், 160 கிராம் பொட்டாஷ் உரங்களை இடவேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் மரம் ஒன்றுக்கு முந்தைய ஆண்டு உர அளவுடன் 10 கிலோ தொழு உரம், 450 கிராம் யூரியா, 1250 கிராம் சூப்பர் பாஸ்பேட், 500 கிராம் மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை கூடுதலாகச் சேர்த்து இடவேண்டும்.
ஆறாமாண்டு முதல் ஒரு மரத்துக்கு 30 கிலோ தொழு உரம், 1350 கிராம் யூரியா, 1250 கிராம் சூப்பர் பாஸ்பேட், 500 கிராம் ஆப் பொட்டாஷ் உரங்களை இடவேண்டும்.
இவ்வாறு இடும் உரங்களில் யூரியாவை மட்டும் மார்ச்சிலும், அக்டோபரிலும் பாதிப்பாதியாக பிரித்து வைக்க வேண்டும். எஞ்சிய உரங்களான தொழு உரம், சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ் உரங்களை அக்டோபரில் மட்டும் வைக்க வேண்டும்.
கொய்யா நடவு:
வரிசைக்கு வரிசை 6 மீ., செடிக்குச் செடி 6 மீ., இடைவெளியில் நடவு செய்யலாம்.
ஒன்றரை அடி ஆழம், ஒன்றரை அடி அகலம் அளவில் எடுக்கப்பட்ட குழிகளில் 10 கிலோ தொழு உரம், 250 கிராம் வேப்பம் புண்ணாக்கு, 1.3 சதவீத லிண்டேண் குருணை 100 கிராம் ஆகியவற்றை மேல் மண்ணுடன் கலந்து இட்டு, கொய்யா பதியன் கன்றுகளை குழியின் நடுவில் நடவு செய்ய வேண்டும்.

கொய்யா உர நிர்வாகம்:
காய்க்கத் தொடங்கிய மரங்களுக்கு மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஒரு மரத்துக்கு 50 கிலோ தொழு உரம், இரண்டே கால் கிலோ யூரியா, ஆறே கால் கிலோ சூப்பர் பாஸ்பேட், ஒன்றே முக்கால் கிலோ மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை இரு முறையாகப் பிரித்து இடவேண்டும்.
கொய்யாவில் மகசூலை மேம்படுத்த ஒரு சதவீதம் யூரியா (ஒரு லிட்டர் நீருக்கும் 10 கிராம் யூரியா) மற்றும் அரை சதம் துத்தநாக சல்பேட் (ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் துத்தநாக சல்பேட்) கலந்த கரைசலை மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களில் மரங்களின் மேல் இலைவழி உணவாகத் தெளிக்க வேண்டும்.
பழ மரக்கன்றுகளை ஒட்டுப் பகுதி தரைமட்டத்தில் இருந்து அரை அடி உயரத்தில் இருக்குமாறு நடவு செய்ய வேண்டும். ஆதரவுக்கு குச்சி ஒன்று நட்டு தளர்வாகக் கட்டிவிட வேண்டும். உரங்களை மரத்தில் இருந்து ஒன்றரை அடி தள்ளி இலைப் பரப்புக்குள் அரைவட்டமாக ஒரு அடி ஆழக்குழி எடுத்து வைத்து மூடலாம் என்றார் அவர்.

தினமணி தகவல் :

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் சு.பாலசுப்பிரமணியன்