Wednesday, March 7, 2012

ஆட்டுக்கும் மாட்டுக்கும் பூஸ்ட் விக்க நீங்க தயாரா ?

தமிழக அரசு கிராமங்களில் உள்ள ஏழை மக்களுக்கு ஆடுகள், பால் தரும் பசுக்கள் தரப்போவதாக அறிவித்துள்ளது. என்ன ஒரு அழகான திட்டம் இது என்பதை சற்று நிதானித்து பார்த்தால் தெரியும். இன்றைக்கு அழகு போய்விடும் என்ற காரணத்தால், பிறந்த குழந்தைக்கு கூட பால் கொடுக்க தயங்கும் பெண்களை கேள்விப்படுகிறோம். அதே பல வித உடலுக்கு போதிய சத்து கிடைக்காமல் நொந்து நூலாகும் ஏழைக்குழந்தைகளை மற்றொரு பக்கத்தில் பார்க்க முடிகிறது.

தாய்ப்பால் இல்லாத கட்டத்திலும், உடலுக்கு போதிய உணவுச்சத்து கிடைக்காதவர்களுக்கும் மாற்று உணவு எது? பசும பால் மட்டுமே !
ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கில் ஆட்டுக்கிடாய்களும், மாடுகளையும் வைத்திருந்தவர்கள் தான் ஊரில் பெரிய மிட்டாமிரசாக இருந்தார்கள். அதாவது இவர்கள் தான் பண்ணையார்கள். ஊரின் பெரிய செல்வந்தர்களான இவர்களுக்கு கீழ் தான் மற்ற உழைப்பாளிகள் எல்லாம். ஆனால் இன்றைக்கு ஆடு, மாடு மேய்ப்பது என்பது நாகரீக உலகில் எதற்கும் லாயக்கற்றவர்களுக்கான வேலையாக கருதப்படுகிறது.

என்ன கொடுமை பாருங்கள்!. ஆனால், ஆட்டிலும், மாட்டிலும் இருந்து கிடைக்கும் பாலிலும், தோலிலும் கிடைக்கும் லாபம் என்பது வேறெதிலும் கிடைக்காத ஒன்று என்பதை அனுபவித்து பார்த்தவர்களுக்கோ, பால் கிடைக்காமல் திண்டாடியவர்களுக்கும் தான் தெரியும். இன்றைக்கு விவசாயம் லாபமில்லாத தொழில் என்பதாலும், அதனோடு தொடர்புடைய கால்நடை தொழிலும் நசிந்து போய் இருக்கிறது. ஆனால் உண்மையில் தமிழ்நாட்டில் இருக்கும் தரிசு நிலங்களில் தீவன மரங்களை நட்டு பராமரித்தால் போதும். லட்சக்கணக்கான பசுக்களையும்,ஆடுகளையும் வளர்க்கலாம்.

இந்த நிலையில் தான் தமிழக அரசின் முதல்வர் ஜெயலலிதா, திருவரங்கத்தில் கலந்து கொண்ட நன்றி அறிவிப்பு கூட்டத்தில் கூட, தமிழகத்தில் வேளாண்மை முதன்மை பெரும் பொருட்டு விவசாயத்துக்கே முன்னுரிமை என்று அறிவித்திருக்கிறார். கூடவே திருவரங்கத்தில் பெண்களுக்கு மட்டுமே ஒரு தோட்டக்கலை கல்லூரி தொடங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார். ஆக..கண்டிப்பாக விவசாயத்தில் தமிழகம் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியை எட்டும் என்று நம்பலாம்.

இந்த நிலையில், இளைஞர்களும் வேளாண் தொடர்புடைய தொழில்களில் கவனம் செலுத்தினால் நிச்சயம் முன்னேற முடியும். தமிழக மக்களை ஆடு, மாடு மேய்க்க சொல்கிறார் என்று பேசிய வீரமணி போன்றவர்களுக்கு பாலின் அத்தியாவசியம் தெரிந்திருக்க நியாயம் இருந்தாலும் அவர்கள் அதையெல்லாம் பேசப்போவதில்லை. காரணம், அவர்களுக்கு யார் எப்படி போனாலும் பாலும், தேனும் ஓடும் வாழ்க்கை ஏற்கனவே கிடைத்து விட்டது.

ஆனால் சராசரி நடுத்தர வர்க்கத்துக்கு பால் என்பது முக்கிய உணவு. ஆகவே, அதிகரித்துக் கொண்டு போகும் மக்கள் தொகைக்கு தேவையான பால் உற்பத்தியை பெருக்க வேண்டும் என்றால், பசுக்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டியது முக்கியம். இதற்கு ஆண்டுக்கு ஒரு முறை கண்டிப்பாக பசுக்கள் கன்றுகளை ஈனவேண்டும். ஆனால் இன்றைக்கு இருக்கும் பசுக்களில் பல போதிய சத்துக்கள் இல்லாத காரணத்தால், அப்படி சரியான எண்ணிக்கையில் கன்றுகள் ஈனுவதில்லை என்பது சோகமான உண்மை.

இதற்கு காரணம், கன்றுகளை சுமக்கும் பசுக்கள் போதிய அளவு ஊட்டச்சத்து இல்லாமல் பற்றாக்குறையில் ஆங்காங்கே போஸ்டர்களை தின்று காலத்தை ஓட்டுவதால் வந்த கோளாறு. இதை தவிர்த்து பசுக்களையும், மாடுகளையும் நம்மில் ஒரு ஜீவன் என்று எண்ணி அவற்றுக்கும் சரிவிகித சத்தான தீவனத்தை அளித்து வளர்க்கும் போது மிகவிரைவில் நாட்டின் கால்நடை எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு உயரும். மக்களுக்கு பற்றாக்குறையில்லாமல் குறைந்த விலையில் பாலும் கிடைக்கும்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்றைய சூழலில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு போதிய அளவு சத்தான தீவனம் கிடைப்பதில்லை. குறிப்பாக கால்நடைகளின் நுண்ணிய உடல் உறுப்புகள் இயங்க தேவைப்படும் சத்து உப்புகள் இயற்கையாக கிடைக்கும் தீவனங்களில் இருப்பதில்லை.

இந்த நிலையில் இந்த சத்துகளை தனியாக கால்நடைகளுக்கு அளிக்கும் வகையில் ஒரு சத்து தீவனக்கட்டி ஒன்றை கோவில்பட்டியை சேர்ந்த துவாரகன் கண்டுபிடித்துள்ளார். அந்த சத்துக் கட்டி பற்றி அவர் சொல்வதை கேட்கலாம். இந்த சத்துக்கட்டியை தமிழ்நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் சுயதொழிலாக மேற்கொள்ள இந்த சத்துக்கட்டிகளின் விற்பனை வாய்ப்பை அவர்களுக்கு வழங்க தயாராகவும் உள்ளார். இனி அவர் சொல்வதை கேட்போம்.

 "இன்றைக்கு போதிய அளவு பச்சை புல் மற்றும் சத்துள்ள விவசாய கழிவுகள் கிடைக்காத நிலை உள்ளது. இதனால் வெறும் வைக்கோல், கழனி நீர், பிண்ணாக்கு ஆகியவற்றிலிருந்து தான் அதிகபட்ச சத்துக்களை பால் தரும் பசுக்கள் பெற வேண்டியதிருக்கிறது. அதிக எடை கொண்ட கால்நடைகள் தங்களின் உடல்வளர்ச்சிக்கு கூட தேவையான சத்துக்களை போதிய அளவு பெற முடியாமல் போகும் போது, உடல் ஆரோக்கிய குறைபாடு, எளிதில் நோய்வாய்படுதல், சினை பிடிக்காமல் போவது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளுக்கு உள்ளாக நேரிடுகிறது.

பசுமாடுகளின் உணவில் போதுமான உப்பு சத்து இல்லாதவிட்டால், அந்த சத்தை ஈடுகட்ட அவைகள் மண் மற்றும் தொழுவத்தின் சுவர்களை நக்கி கொண்டு அவற்றுக்கு தேவையான சத்தை பெற முயற்சி செய்யும். தொடர்ந்து உப்பு சத்து குறைந்தால் பால் சுரப்பது குறைந்து விடும். உப்பு குறைவதால் உடல் வளர்ச்சி மற்றும் வாழ்நாள் குறைந்து போகும்.

உப்பு சத்து போதிய அளவு கிடைக்கும் போது தான் கால்நடைகளில் உமிழ்நீர், இரப்பை நீர் மற்றும் குடல்நீர் சுரப்பிகள் இலகுவாக சுரக்கின்றன. உப்பு உடல் திரவத்தில், நீர்த்த கரைசலாக இருக்கிறது. இது உடலின் திசுக்களின் மிகச்சிறிய சிற்றறைக்குள் உள்ள நுண்ணுயிர் திரவத்தின் சவ்வூடு பரவுதல் அழுத்தத்தை தீர்மானிக்கிறது. சவ்வூடு பரவுதல் சிறப்பாக இருப்பதன் மூலமே உடலின் திசுக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கும்.

அத்தியாவசிய கனிமங்கள்
பொதுவாக, உப்பு கால்நடையின் உணவை ருசியாக்குகிறது. மேலும் புரதச்சத்து, மாவுப்பொருள் மற்றும் எண்ணெய் ஆகியவற்றை சரியாக ஜீரணமாக்க உதவுகிறது. உணவுப்பொருட்கள் நன்றாக ஜீரணமாகி ஆரோக்கியமான இரத்தம் உருவாக உதவுகிறது. இதனால் கால்நடைகள் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியுடனும், நல்ல சினைபிடிப்பு திறனும், அதிக பால் கொடுக்கும் திறனுடனும் விளங்குகின்றன. இந்த உப்பு சத்துடன், மிகவும் அத்தியாவசமான கனிமங்கள் நிறைந்த தாதுஉப்புகளும் உணவின் மூலம் கிடைத்தால் தான் கால்நடைகளின் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் சரியாக நடைபெறும்.

எனவே, கனிம உப்புக்களான இரும்பு, துத்தநாகம், அயோடின், கோபால்ட், தாமிரம், மெக்னீசியம் மற்றும் மாங்கனீஸ் போன்றவை தீவனத்தில் சரியான அளவில் இருக்க வேண்டும். இந்த கனிமசத்துக்கள் உடலை பல வழிகளில் சீராக வைக்கின்றன.

இரும்பு சத்து இரத்தத்தில் சிவப்பு அணுக்களை அதிகரிக்க செய்கிறது. தாமிரம் என்ற கனிமச்சத்து இரும்புடன் சேர்ந்து திசுக்களுக்கு பிராணவாயுவை எடுத்து செல்லும் ஹீமோகுளோபினை உருவாக்குகிறது. துத்தநாகம் என்ற கனிமம் உடலின் திசுக்களின் சிற்றறைகள் சிறப்பாக உருவாகவும், ரோமம் மற்றும் ஆரோக்கியமான தோல் வளர்ச்சி பெறவும் உதவுகிறது. அயோடின் சத்தானது, தொண்டை அழற்சி நோய் வராமல் தடுக்கிறது.

உயிர்ச்சத்தின் ரசாயன மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது. மாங்கனீஸ் அதிக பால் சுரப்பதற்கும், கருஉருவாவதற்கும் உதவுகிறது. கோபால்ட் என்ற கனிமசத்து ஊட்டச்சத்து பி உடன் இணைந்து பசியின்மையை போக்குகிறது. இரத்த சோகையை நீக்குகிறது. மக்னீசியம் எலும்பு உருவாகிட உதவுகிறது. இதில் எது குறைந்தாலும் அது பல வழிகளில் பிரச்சனைகளை உருவாக்குகிறது.

பால் உற்பத்தியை பெருக்கலாம். வடமாநிலங்களில் பால் உற்பத்தி குறைந்து போனதால், பாலின் விலை உயர்த்தப்படும் என்று சமீபத்தில் மத்திய அமைச்சர் ஒருவர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி பால் உற்பத்தியாளர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போராடினார்கள். பாலின் விலை அதில் அடங்கியிருக்கும் கொழுப்பு மற்றும் தாதுப்பொருட்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.

சரியான, சமவிகித சத்துக்கள் கலந்த தீவனங்களை பசுக்களுக்கு தருவதன் மூலமே கொடுப்பதன் மூலம் மட்டுமே கொழுப்பு மற்றும் இதர சத்துக்கள் நிறைந்த தரமான பாலை பெற முடியும். ஏனென்றால் காலையும், மாலையும் பால் கறப்பதால் பசுவின் உடலிலிருந்து குறிப்பிடத்தக்க அளவு கனிமசத்துக்கள் வெளியேறிக் கொண்டே இருக்கும்.
இதனை ஈடுகட்ட போதிய கனிம சத்தை மீண்டும் நாம் தீவனத்தில் வாயிலாக அவற்றுக்கு தரவேண்டும். அப்படி தராவிட்டால் பால்சுரப்பு குறைந்து ஒரு கட்டத்தில் பால் நின்று விடும் வாய்ப்பு இருக்கிறது.

இந்த கனிம கால்நடை நக்கியை பசுக்களுக்கு அளிப்பதன் மூலம் அதிக பால் சுரப்பை பெற முடியும். நோய்வாய்ப்பட்டு பலவீனமான விலங்குகள் இதனை நக்கி சாப்பிடுவதன் மூலம் இழந்த பலத்தை மீண்டும் பெறமுடிகிறது. ஆடுகளுக்கும், பன்றிகளுக்கும் இதனை தருவதனால் எடை கூடுகிறது. இறைச்சி நல்ல சுவையுடன் இருக்கிறது. குதிரைகளுக்கு தருவதனால் அவை அதிக ஆரோக்கியத்துடன், பொலிவுடனும் இருக்கும்.


பயன்படுத்தும் முறை
இது கட்டி வடிவத்தில் குச்சியில் நிறுத்தப்பட்டுள்ள ஐஸ்கீரிம் வடிவத்தில் தயாரித்துள்ளோம். இதை கால்நடைகளின் முன்னால் அவை நக்குவதற்கு தேவையான உயரத்தில் நட்டு வைத்து விடலாம். இதனை கால்நடைகள் நக்கி சுவைக்கும் போது அவற்றுக்கு தேவையான உப்பு மற்றும் கனிமம் எளிதில் கிடைத்து விடுகிறது. இந்த கட்டியை சுவைக்கும் போது அவை தண்ணீரை நன்றாக குடிக்கும். எனவே, கால்நடைகளின் அருகில் ஒரு வாளி நிறைய தண்ணீரை வைக்க வேண்டும்.

 2 கிலோ அளவில் இருக்கும் இந்த கட்டியை தினமும் பயன்படுத்தினால் ஒரு பசுமாட்டிற்கு 2 மாத அளவிற்கு வரும். இதன் விலை ரூ.300. அதாவது நாளன்றுக்கு அதிகபட்சமாக 10 ரூபாய் அளவில் பண்ணை விலங்குகளுக்கு போதிய கனிமசத்துக்கள் கிடைத்து விடுகின்றன.

இந்த கட்டி நிச்சயமாக கால்நடை விவசாயிகளுக்கு சரிசமமான தீவனச்சத்துக்களை தங்களது வளர்ப்பு விலங்குகளுக்கு அளித்து வருகிறோம் என்ற மனநிறைவை ஏற்படுத்தும்" என்கிறார் இவர். தமிழ்நாடு முழுவதும் தாலுகா வாரியாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இதனை வாங்கி விற்று சுயதொழிலில் ஈடுபட வாய்ப்பு தருகிறோம். 20 ஆயிரம் ரூபாய் இருந்தால் போதும்" என்கிறார்.

முயற்சிக்க விரும்புபவர்கள் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். தமிழக அரசு கிராம மக்களுக்கு கால்நடைகளை அளித்து கால்நடைகளில் எண்ணிக்கையை உயர்த்த முற்படும் நிலையில் இந்த கனிமகட்டிகளுக்கு மிக அதிகமான விற்பனை வாய்ப்பிருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும் நண்பர்களே!காரணம், ஆட்டுக்கும் மாட்டுக்கும் பூஸ்ட் ஆக இருக்க போகும் இது இல்லாமல் கால்நடை தொழில் இல்லை என்ற அளவுக்கு இந்த கனிம கட்டியின் விற்பனை இருக்கும்....வாங்களேன் விற்கலாம்.

No comments: