Wednesday, March 7, 2012

மார்ச் 3


மார்ச் 3
1575 - இந்தியாவின் முகலாயப் பேரரசர் அக்பர் வங்காளப் படைகளைத் தோற்கடித்தார்.
1833 - அகிலத்திரட்டு அம்மானையின்படி, நாராயணனின் அவதாரமாக அய்யா வைகுண்டர் திருச்செந்தூரில் பிறந்தார்.
1857 - பிரான்சும் ஐக்கிய இராச்சியமும் சீனா மீது போரை அறிவித்தன.
1878 - ஓட்டோமான் பேரரசின் கீழ் பல்கேரியா விடுதலை அடைந்தது.
... 1905 - ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட சபையை (டூமா)வை ஏற்படுத்த இணங்கினான்.
1918 - முதலாம் உலகப் போரில் ரஷ்யாவின் பங்களிப்பை முடிவுக்குக் கொண்டுவர ஜேர்மனி, ஆஸ்திரியா மற்றும் ரஷ்யா ஆகியன உடன்பாட்டிற்கு வந்தன.
1923 - Henry Luce என்பவரும் Briton Hadden என்பவரும் இணைந்து நியூயார்க்கில் Time சஞ்சிகையின் முதல் பிரதியை வெளியிட்டனர்.
1933 - ஜப்பானில் ஹொன்ஷூ என்ற இடத்தில் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 3,000 பேர் வரையில் இறந்தார்கள்.
1938 - சவுதி அரேபியாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.
1939 - மும்பாயில் மகாத்மா காந்தி ஆதிக்கவாதிகளுக்கு எதிராக உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.
1942 - இரண்டாம் உலகப் போர்: மேற்கு ஆஸ்திரேலியாவில் புரூம் என்ற நகரில் ஜப்பானின் பத்து போர் விமானங்கள் குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டதில் 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனார்.
1943 - இரண்டாம் உலகப் போர்: லண்டனில் விமானக் குண்டுத்தாக்குதலின் போது சுரங்கத் தொடருந்து நிலையத்தில் ஒதுங்கிய 173 பேர் நெரிசலில் சிக்கி இறந்தனர்.
1945 - இரண்டாம் உலகப் போர்: முன்னர் நடுநிலையாக இருந்த பின்லாந்து அச்சு நாடுகளுக்கெதிராக போரை அறிவித்தது.
1969 - நாசாவின் அப்பலோ 9 விண்ணில் ஏவப்பட்டது. 1971 - இந்தோ-பாகிஸ்தான் போர் ஆரம்பமானது.
1974 - ரோமன் கத்தோலிக்கம் மற்றும் லூத்தரன் ஆகிய கிறிஸ்தவ மதப்பிரிவுகள் இரண்டும் இணைந்தன
1992 - பொஸ்னியா என்ற நாடு உருவாக்கப்பட்டது.
2002 - சுவிட்சர்லாந்து ஐநாவில் இணைவதற்கு ஆதரவாக சுவிட்சர்லாந்தில் மக்கள் வாக்களித்தன

No comments: