Thursday, March 29, 2012

நாயைக் கட்டிவைத்து…..

நான் சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பாக எனது சகோதரியின் வீட்டுக்குப் போயிருந்தேன். அப்போது புதிதாக ஒரு வாடகை வீட்டில் குடியேறியிருந்தார்கள். நல்ல அழகான வீடு. புறக்கடையில் வீட்டுத்தோட்டம். அதன் மத்தியில் அழகான ஒரு கிணறு. தெட்டத் தெளிவான தூயதண்ணீர். ஆனந்தமான குளியல்.

சரியாக இரண்டு வருடம் கழித்து அதேவீட்டுக்கு மீண்டும் ஒருமுறை போயிருந்தேன். அதிர்ந்துதான் போய்விட்டேன்! வீட்டுத்தோட்டம் அழிந்துபோய் பொட்டலாக இருந்தது. கிணற்றை எட்டிப் பார்த்தேன். பேரதிர்ச்சி! ஆம் கோகோ கோலாவை கிணற்றில் நிரப்பிவைத்திருந்த மாதிரி இருந்தது. அருகில் இருந்த காகித ஆலையின் கழிவு நீரைக் கிணற்றுக்கு அருகே செல்லும் ஓடையில் விட்டதன் பலன்!

அடிப்படை வாழ்வியல் ஆதாரங்களான உணவையும் நீரையும் காற்றையும் கூட நஞ்சாக்குமளவு முன்னேறியிருக்கும் நிலையில் நம் மேல்தட்டு மக்கள் காசுக்காக எத்தகைய பஞ்சமா பாதகங்களையும் செய்யக்கூடிய அளவு சமூகப் பொறுப்பு வாய்ந்தவர்கள் ஆகிவிட்டார்கள்.

இந்த நிலையில் நாயைக் கட்டிவைத்து அடிப்பது போல விவசாயி நச்சுப்பொருட்களை நம்பித்தான் விவசாயம் செய்யவேண்டும் என்ற நிலைமையை உருவாக்கிவிட்டு நஞ்சில்லா உணவைக் கேட்டால் எப்படிக் கொடுப்பான்?

No comments: