Tuesday, February 14, 2012

என் முதல் காதலிக்கு எழுதிய கவிதை...



காதல் , love , பிரேமம் etc etc...
உலக மொழிகளே
உங்களை பழிக்கிறேன்
என் காதலை சொல்லும் திறமை
உங்கள் சொற்களுக்கு இல்லை..
விரல் கோர்ப்பு , ஸ்பரிசம், முத்தம் etc etc...
இயற்கையே உன்னை பழிக்கிறேன்
என் காதலை காட்டும் திறமை
உன் வழி முறைகளுக்கு இல்லை...
கடவுளே காதலில்
உன் அனுபவமின்மை
தெரிகிறது....
ஆகையால்
காதல் கவி
என் சாபம் பலிக்கட்டும்
பிரபஞ்சம் பின்னோக்கி பயணிக்கட்டும்
மீண்டும் புதிய பரிணாமம் நிகழட்டும்
அந்த புதிய பரிணாமத்திலாவது
என் காதலை
சொல்லும் திறமையோடு
இயற்கையும் அதன் வழிமுறைகளும்
படைக்கப்பெறட்டும்...
அன்பார்ந்த கடவுளே
இந்த மறு பரீட்சையில்
நீ தேறுவாய் என்கிற நம்பிக்கையுடன்
வாழ்த்துகிறேன்...
பரீட்சைக்கு முன் ஒருமுறை
எங்கள் காதலை படித்து போ..

No comments: