Friday, February 17, 2012

முள்ளங்கியின் சிறப்பு

முள்ளங்கியின் சிறப்பு
-----------------------------------------------------------------
சிவலிங்கத்தைக் கட்டிப் பிடித்துக்கொண்டதால் மார்க்கண்டேயன் உயிரை எடுக்க எமதர்;மனால் முடியாமல் போனதாகக் கதை படித்திருக்கிறோம்.

ஆனால் இந்த முள்ளங்கியை விடாமல் பிடித்துக்கொண்டால் சிறுநீரகக்கல் பிரச்சினை நம்மை எதும் செய்யாது என்பதை நான் என் சொந்த அனுபவத்திலேயே அறிந்திருக்கிறேன்.
...
சுமார் இருபத்தியைந்து வருடங்களுக்கு முன்பே எனக்கு இந்தப்பிரச்சினை இருந்து சிரமப்பட்டிருக்கிறேன். மருத்துவரின் உதவியால் தாற்காலிக நிவாரணம்தான் கிடைத்தது. என்னமருத்துவம் செய்தாலும் மீண்டும் வராமல் இருக்க உத்திரவாதம் கொடுக்க முடியாது என்பதுதான் அனைவரின் வாக்குமூலமாக இருந்தது.

அன்றிலிருந்து இன்று வரை நான் முள்ளங்கியைப் பிரதானமாக வாரத்துக்கு இரண்டுதடவையாவது. சாம்பாராகவோ சூப்பாகவோ சேர்த்துக்கொள்வேன்.

வாழைத்தண்டு, இளநீர் போன்றவையும் சிறுநீரகக் கல் உருவாகாமல் தடுக்கக்கூடியவை. அதையும் தொடர்ந்து சேர்த்துவருகிறேன். ஆனால் எனக்கு பிடித்ததும் விடாமல் சேர்த்து வருவதும் முள்ளங்கிதான். இதை மறக்கும்போதெல்லாம் பிரச்சினை தலையெடுக்கும். விடாமல் தொடர்வதால் நான் அதன்பின் மருத்துவரை நாடியதே இல்லை!

முள்ளங்கியை நம்பினோர் கைவிடப்படார் என்பதே உண்மை!
See More

No comments: