Tuesday, June 5, 2012

'எலுமிச்சை - முட்டைக் கரைசல் பற்றி கேள்விப் பட்டேன். அதைத் தயாரிப்பது எப்படி? எந்தப் பயிர்களுக்கு இதைத் தெளிக்கலாம்?''

'எலுமிச்சை - முட்டைக் கரைசல் பற்றி கேள்விப் பட்டேன். அதைத் தயாரிப்பது எப்படி? எந்தப் பயிர்களுக்கு இதைத் தெளிக்கலாம்?''

கரூர் மாவட்ட முன்னோடி இயற்கை விவசாயி பணிக்கம்பட்டி, கோபாலகிருஷ்ணன் பதில் சொல்கிறார்.
''பயிர்களில் நுண்ணூட்டச் சத்துப் பற்றாக்குறை ஏற்பட்டால், வெளுத்து இருக்கும். அந்த மாதிரியான சமயத்தில், எலுமிச்சை- முட்டைக்கரைசலை பத்து லிட்டர் நீருக்கு 200 மில்லி என்கிற அளவில் கலந்து பயன்படுத்தலாம். சத்துக்குறைபாடு இல்லாத சமயங்களாக இருந்தாலும், வளர்ச்சி ஊக்கியாக அனைத்துப் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.

பெரிய அளவு மூடியுடன் கூடிய பிளாஸ்டிக் வாளி அல்லது பிளாஸ்டிக் டிரம் எடுத்துக் கொள்ளவும் (உலோக வாளி பயன்படுத்தக் கூடாது). அதில் 10 முட்டைகளை உடைக்காமல் அப்படியே வைக்க வேண்டும். அவை மூழ்கும் அளவு எலுமிச்சைச் சாறைப் பிழிந்து காற்றுப் புகாமல் இறுக்கி மூட வேண்டும். கோழி, வாத்து போன்ற பறவைகளின் முட்டைகளைப் பயன்படுத்தலாம். குஞ்சு பொரிக்காத கூமுட்டைகளையும் பயன்படுத்தலாம். ஆனால், முட்டை ஓடு உடையாமல் முழுமையாக இருக்க வேண்டும்.

இப்படியே 10 நாட்கள் வைத்திருந்தால், எலுமிச்சைச் சாறின் வீரியத்தில் முட்டை ஓடுகள் கரைந்துவிடும். முட்டையை அழுத்தினால், ரப்பர் பந்தை அழுத்துவது போல் இருக்கும். இந்த முட்டைகளை மட்டும் எடுத்து, கையால் பிசைந்தோ அல்லது மிக்சி மூலமாகவோ கூழாக அரைக்க வேண்டும். ஏற்கெனவே, முட்டையை ஊற வைத்த எலுமிச்சைக் கரைசலில் கால் கிலோ வெல்லம் அல்லது மொலாசஸ் (கரும்பு கழிவு) சேர்த்து, அரைத்த முட்டைக் கூழையும் ஊற்றி, காற்றுப் புகாமல் மூடி வைத்தால், 20 நாட்களில் எலுமிச்சை-முட்டைக் கரைசல் தயாராகி விடும். இதை பாட்டில்களில் அடைத்து மூன்று மாத காலம் வரை வைத்திருந்தும் பயன்படுத்தலாம். இதிலிருந்து வாயு வெளியேறும் என்பதால், மூடியில் சிறிய துளையிட்டு வைக்க வேண்டும்.''

No comments: