Thursday, August 23, 2012

தண்ணீரில் நடக்கும் பல்லி

பல்லிகள் நம் வீட்டுச்சுவர்களில் தலைகீழாக நடக்கும். தரையிலும் தனது பூச்சி உள்ளிட்ட இரைகளை துரத்திப் போய் பிடிக்கும். ஆனால் இதே பல்லிகள் தண்ணீரைக் கண்டால் மட்டும் கப்சிப்பாகி விடும்.


  ஆனால் ஒருவகைப் பல்லிகள் தண்ணிரிலும் சர்வ சாதாரணமாக நடந்து பயணிக்கின்றன.
இந்த பல்லியின் நீளம் ரெயில் பெட்டி மாதிரி கொஞ்சம் நீளம். (சுமார் 2 அடி) ஒல்லியான இதன் உடல் வாகும் இது தண்ணீரில் பாய்ந்து செல்ல உதவுகிறது.
எதிரிகளிடம் இருந்து தப்பிக்க வேண்டிய சூழ்நிலை வரும்போது இந்த பல்லிகள் தண்ணிரில் வேகவேகமாக நடப்பதை வழக்கத்தில் வைத்திருக்கின்றன.
இந்தப் பல்லி தண்ணிரில் நடக்கும் ரகசியம், இதன் அகன்ற பின்புற கால்கள். ஒவ்வொரு விரலுக்கும் இடையில் உள்ள ஜவ்வு தண்ணீரில் நேராக நடக்க உதவுகிறது. அப்படி தண்ணீரில் இவ்வகைப் பல்லிகள் நடக்கும்போது தன் பின்னங்கால்களையே பயன் படுத்துகிறது.
மத்திய அமெரிக்காவில் தண்ணீர் கரையோரங்களில், ஏரிகளில், கால்வாய்களில் இந்த பல்லிகள் தண்ணீரில் நடப்பதை முதன்முதலாக பார்ப்பவர்கள் பிரமித்துப் போவார்கள்.
பூச்சிகள், பழங்கள், சிலவகை இலை தழைகள் இந்த பல்லிகளின் விருப்ப உணவு.
ஒரு இரவு நேரத்தில் நடுக்கடலுக்குள் இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் படகில் சென்று கொண்டிருக்க, அவர்களின் எதிரே தூரத்தில் இயேசு கிறிஸ்து கடலில் நடந்து வந்து கொண்டிருந்தார். இதைப் பார்த்ததும் முதலில் அவரது சீடர்கள் தங்களை நோக்கி வரு பவர் இயேசு தான் என்பதை அறியாமல் பயத்தில் அலறினார்கள். பிறகு இயேசு அவர்கள் அருகில் வந்து அவர்கள் பயத்தை போக்கினார் என்கிறது, பைபிள்.
தண்ணீரில் நடக்கும் இந்த பல்லிக்கு `ஜீசஸ் லிசார்டு' என்று பெயர். முந்தின பாராவை படித்ததுமே பல்லிக்கான பெயர்க் காரணம் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

No comments: