Thursday, May 31, 2012

கள்ளுக்கு எதற்கு தடை?

கள்ளுக்கு எதற்கு தடை?

கள் தமிழ்நாட்டின் சுதேதி பானம்

சங்க காலத்தில் உணவின் ஒரு பகுதியாக கள் இருந்து வந்துள்ளது. இதை யாரும் தவறாக எடுத்து கொள்ளவில்லை

கள்ளும், கரும்புசாறும் ஏறத்தாழ ஒன்றுதான். காலை மாலை என இருவேளை இறக்கும் கள் போதை தராது. புளித்து போனால் தான் போதை தரும். புளிக்காத கள் ஒரு சத்தான உணவு என்பது மகாத்மா காந்தி போன்ற மகான்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று

சுதந்திர இந்தியாவில் மது விளக்கை அமல்படுத்த முடியாத காரணத்தினால், குஜராத் மாநிலத்தை தவிர இந்தியா எங்கிலும் மது விளக்கு கைவிடப்பட்டு விட்டது

தமிழ்நாட்டில் கூடுதலாக கெடுதி விளைவிக்க கூடிய அயல்நாட்டு இந்திய தயாரிப்பு மது வகைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது

உலக அளவில் சுதேதி மதுவிற்கு தடையும் விதேதி மதுவிற்கு அனுமதியும் கொடுத்து இருப்பது தமிழ்நாட்டை தவிர வேறு எங்கும் இருக்க முடியாது

கள் உணவு ஊட்டதிற்கான சத்துக்களை கொண்டுள்ள ஒரு இயற்கையான பானம். சில நேரங்களில் மருந்தாகவும் பயன்படுகின்றது.உடல் நலத்திற்கு தீங்கு தராது. பக்க விளைவு இல்லாதது. இதில் போதைக்கு காரணமான அல்கஹோலின் அளவு குறைவு. அதே நேரத்தில் மதுவில் போதை ஊட்டும் அல்கஹோலை தவிர வேற எதுவும் இல்லை

கள்ளை விட மது கூடுதலான கெடுதி விளைவிக்க கூடியது என்பது விஞ்ஞானிகளாலும், மருதுவர்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை. அனைத்து மக்களுக்கும் இது தெரியும்

இனிவரும் காலங்களில் ஆவது விவசாயத்தின் நலன் காக்கவும், தேங்காய் உற்பத்தியை பாதுகாக்கவும், தென்னை நோயை கட்டுப்படுத்தவும் பயன் பட கூடிய கள் உற்பத்திக்கு அரசாங்கம் ஒரு நல்ல தீர்வு காண வேண்டும் என்பதே 2 கோடி வேளாளர்களின் எதிர்பார்ப்பாகும்.

No comments: