
பொதுவாக பருத்தி, பட்டு, பாலியஸ்டர்
போன்றவற்றைக் கொண்டுதான் ஆடைகள் தயாரிப்பது நமக்குத் தெரியும். ஆனால்,
வாழை நாரி லிருந்து துணிகளை தயாரித்து வருவது பலருக்கும் தெரியாது.
வாழை நாரிலிருந்து ஆடைகள் தயாரிக்கும் சேகரை சந்தித்தோம். ''ஆரம்பத்தில் எல்லாரையும் போலவே நாங்கள் பருத்தி, பட்டு போன்றவற்றைக் கொண்டு ஆடைகள் தயாரித்து வந்தோம். கடந்த 2006-ம் ஆண்டுதான் முதன் முதலாக வாழை நாரை வைத்து ஆடை செய்ய முயற்சி செய்தோம். அது நன்றாகவே வந்தது. இதை பயன்படுத்திய பலரும் நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள். அது எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. இயற்கைக்கு உகந்த, நம் உடலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத இந்த வாழை நார் ஆடை தயாரிக்க ஆகும் செலவு மிக மிகக் குறைவு'' என்ற சேகர் தொடர்ந்து பேசினார்.

''பருத்தி
நூல் ஆடைகளைப் போன்றதுதான் வாழை நாரிலிருந்து தயார் செய்யப்படும்
ஆடைகளும். பொதுவாக, பருத்தி நூல் நீளமாக வரும். ஆனால், வாழை நாரிலிருந்து
எடுக்கப்படும் நூல் நீளமாக இருக்காது. பல வாழை நார் நூல்களை ஒன்றாக
இணைத்துதான் ஆடைகளைத் தயாரிக்க முடியும்.இப்படி வாழை நூல் பயன்படுத்தி ஆடைகள் தயாரிப்பதால் இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது. தவிர, பருத்தி ஆடைகளைப் போல இந்த ஆடைகளையும் நன்கு சாயமேற்ற முடியும். இதனால் நாம் விரும்பிய வண்ணத்தில் சேலை, சட்டை துணி போன்றவற்றை உருவாக்கலாம். பருத்தி நூலைவிட குறைந்த செலவே இதற்கு ஆவதால், இது குறைந்த விலையிலும் கிடைக்கிறது'' என்றார்.



''அடுத்து, மூலிகைகளைக் கொண்டு புடவை தயாரிக்கும் எண்ணத்திலும் இருக்கிறோம். வாழை நார் மூலம் புடவைகள் மட்டுமல்லாமல் சுடிதார், சர்ட்டு கள் தயாரிக்கும் வேலையிலும் கூடிய விரைவில் இறங்கப் போகிறோம்'' என்றார் சேகர்.
இயற்கைக்கு உகந்ததாக இருக்கும் இத்தொழில் வருங் காலத்திற்கு ஏற்றது என்பதில் சந்தேகமே வேண்டாம்!
No comments:
Post a Comment