Monday, April 2, 2012

மார்ச் 31


மார்ச் 31
மால்ட்டா - விடுதலை நாள்
1492 - ஸ்பெயினில் இருந்து அனைத்து 150,000 யூதர்களும் ரோமன் கத்தோலிக்கராக மாற வேண்டும் அல்லது அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்ற உத்தரவை இசபெல்லா மாகாராணி பிறப்பித்தார்.
1856 - உலகிலேயே 300 மீட்டர் உயரக் கொடிக் கம்பம் கொண்ட ஒரே நாடு பிரான்ஸ்தான். 21 குண்டுகள் முழங்க அக்கோபுரத்தின் உச்சியில் பிரான்சின் தேசியக் கொடியைப் பறக்க விட்டார் Eiffel
1866 - சிலியின் வல்பரைசோ துறைமுகம் ஸ்பானிய கடற்படையின் குண்டுத் தாக்குதலுக்குள்ளானது.
... 1885 - இலங்கையில் தமிழ், சிங்கள, இஸ்லாமிய வருடப் பிறப்பு நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டது.
1889 - ஈபெல் கோபுரம் தொடக்க விழா கொண்டாடப்பட்டது
1909 - பொசுனியா எர்செகோவினா மீதான ஆஸ்திரியாவின் கட்டுப்பாட்டை சேர்பியா ஏற்றுக் கொண்டது.
1917 - ஐக்கிய அமெரிக்கா டானிஷ் மேற்கிந்தியத் தீவுகளை டென்மார்க்கிடம் இருந்து $25 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்குக் கொள்வனவு செய்து அமெரிக்க கன்னித் தீவுகள் எனப் பெயர் மாற்றியது.
1918 - ஐக்கிய அமெரிக்காவில் பகலொளி சேமிப்பு நேரம் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
1942 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர்கள் கிறிஸ்துமஸ் தீவை பிரித்தானியாவிடம் இருந்து கைப்பற்றியது.
1951 - யூனிவாக் 1 என்ற முதலாவது ஐக்கிய அமெரிக்காவின் வர்த்தகக் கணினி அந்நாட்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நிறுவனத்துக்கு தரப்பட்டது.
1959 - திபெத்தின் 14வது தலாய் லாமா, டென்சின் கியாட்சோ, எல்லையைக் கடந்து இந்தியாவினுள் நுழைந்து அரசியல் தஞ்சம் கோரினார்.
1966 - சோவியத்தின் லூனா 10 விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. இதுவே சந்திரனின் சுற்றுவட்டத்தை வலம் வந்த முதலாவது விண்கலமாகும்.
1970 - 12 ஆண்டுகள் விண்வெளியில் இருந்து விட்டு எக்ஸ்புளோரர் 1 புவியின் வளிமண்டலத்துள் வந்தது.
1979 - கடைசி பிரித்தானியப் படையினர் மோல்ட்டாவை விட்டு விலகினர். மோல்ட்டா விடுதலையை அறிவித்தது.
1989 - அகமதாபாதைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் ஜானி எனும் ஆயுள் காப்புறுதி அதிகாரி உலகச் சாதனையை நிகழ்த்தினார். ஒரே நாளில் 5 கோடி ரூபாய் பெருமானமுள்ள 835 ஆயுள் காப்புறுதி மனுக்களை பதிவு செய்தார்.
1990 - இந்திய அமைதிப் படை ஈழத்தில் இருந்து முற்றாக விலக்கப்பட்டது.
1992 - சத்யஜித்ரேக்கு கல்கத்தா மருத்தவமனையில் ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது.
2004 - கூகிள் 1 ஜிகா பைட் கொள்ளளவுள்ளதான ஜிமெயிலை அறிவித்தது.
2007 - முதலாவது புவி மணி நிகழ்வு சிட்னியில் இடம்பெற்றது.

No comments: