Monday, April 23, 2012

ஏப்ரல் 18

ஏப்ரல் 18
1930: அன்றைய தினம் செய்திகள் இல்லையென பி.பி.சி. வானொலி அறிவித்தது.
1945: ஜேர்மனியின் ஹேலிகோலன்ட் தீவின்மீது சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான விமானங்கள் தாக்குதல் நடத்தின.
1954: எகிப்தில் கமால் அப்துல் நாசர் ஆட்சியைக் கைப்பற்றினார்.
1955: புகழ்பெற்ற பௌதிகவியல் விஞ்ஞானி அல்பர்ட் ஐன்ஸ்டீன் அமெரிக்காவில் காலமானார்.
1955: இந்தோனேஷியாவின் பான்டூங் நகரில் நடைபெற்ற முதலாவது ஆசிய-ஆபிரிக்க மாநாட்டில் 29 நாடுகள் பங்குபற்றின.
1983: லெபனானின் பெய்ரூத் நகரில் அமெரிக்கத் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டனர்.
1988: ஈரானிய கடற்படைக்கு எதிராக அமெரிக்கா பாரிய கடற்படைத் தாக்குதலை ஆரம்பித்தது. 1992: ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதி மொஹமட் நஜிபுல்லாவின் அரசாங்கத்திற்கு எதிரகா ஜெனரரல் அப்துல் ரஸித் டோஸ்டம், அஹமட் ஷா மசூத்துடன் இணைந்து காபூல் நகரை கைப்பற்ற கிளர்ச்சி செய்தார்.
1996: லெபனானின் ஐ.நா. வளாகத்தில் இஸ்ரேலிய படைகள் ஷெல் தாக்குதல் நடத்தியதால் 106 பொதுமக்கள் உயிரிழந்தனர்.
2007: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களினால் 198 பேர் கொல்லப்பட்டதுடன் 251 பேர் காயமடைந்தனர்.

No comments: