Tuesday, June 18, 2013

செம்பு தரும்... தெம்பு...!

செம்பு தரும்...
தெம்பு...!

கோயில்கள்ல... பயன்படுத்தற பாத்திரங்கள், கோபுர கலசம்னு பலதும் செம்புல செய்ததான் இருக்கும். குறிப்பா பெருமாள் கோயில்ல தீர்த்தம் கொடுக்கும்போது கவனிச்சுப் பாருங்க. கோயில்ல, தங்கம், வெள்ளினு சகலவிதமான பாத்திரப் பண்டம் இருந்தாலும்... துளசியும், தண்ணியும் கலந்த தீர்த்தத்தைக் கொடுக்கறதுக்கு, செம்புப் பாத்திரத்தைத்தான் பயன்படுத்துவாங்க.

இதுல முக்கியமான நுட்பம் இருக்கு. செம்புப் பாத்திரத்துல தண்ணியை வெச்சிருந்தா, அதுல இருக்கற கெட்டது செய்யற நுண்ணுயிரிங்க தன்னால நீங்கிடும். அதனாலதான், வீட்டுலகூட செம்புப் பாத்திரத்துல தண்ணிய சேமிச்சு வெச்சு பயன்படுத்துற பழக்கம் காலகாலமா நம்மகிட்ட இருந்துச்சு. செம்புப் பாத்திரங்கள் ஒரு சொத்தாவும் இருக்கும். ஆனா, இப்போ, 'வாட்டர் ஃபில்டர்'னு ஒரு வஸ்துக்கு தண்ணியை சுத்தம் பண்றதுக்காக ஆயிரக்கணக்குல செலவழிக்கிறோம்!

No comments: