Saturday, April 6, 2013

சர்க்கரை நோயை கட்டு படுத்தும் கோவைக்காய் !!!

சர்க்கரை நோயை கட்டு படுத்தும்
கோவைக்காய் !!! Coccinia cordifolia

நம்முடைய உணவுப் பழக்க
முறைகளில் கூடுதல் கவனம்
செலுத்தினால் நீரிழிவு நோய்
வராமல் தப்பித்துக் கொள்ளலாம்.
சாதாரணமாக
எல்லா காய்கறி அங்காடிகளிலும்
தாராளமாகக் கிடைக்கக்
கூடியதுதான் கோவைக்காய்.
நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில்
வைக்க நாம் சாப்பிட
வேண்டி உணவு பற்றி பார்க்கிறோம்.
சர்க்கரை நோயை கோவக்காய்
கட்டுப்படுத்துகிறது :
கோவக்காய் சாப்பிட்டால்
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த
முடிகிறது என்று ஆராய்ச்சியாளர்க
ள் கண்டு பிடித்துள்ளனர்.
நீரிழிவு நோய்யை உடற்பயிற்சி மற்றும்
உணவு முறைகளால் இதைக்
கட்டுப் படுத்த முடியும்.சர்க்க
ரை நோய் கட்டுப் பாட்டுக்குள்
இருந்தால் எந்தப் பிரச்சினையும்
இல்லை. ஆனால் கட்டுப்பாட்டுக்
குள் வைக்க முடியாவிட்டால்
அதைப் போன்ற ஆபத்தான நோய்
வேறு எதுவுமில்லை.
நோயாளிகள் பாகற்காய்,
வேப்பிலைச்சாறு ஆகியவற்றில்
ஏதாவது ஒன்றை அடிக்கடி சாப்பிட்டால்
சர்க்கரையின்
அளவு குறைந்துவிடுகிற
து என்று சாப்பிட்ட பலர்
கூறுகிறார்கள். ( ஆனால்
அது ரொம்ப ரொம்ப கஷ்டம்.
சாப்பிடுவர்களை பார்த்தால்
அவர்கள் முகம்
எத்தனை கோணத்தில் போகும்
என்று பார்ப்பவருக்கு மட்டும் தான்
தெரியும்.இந்த நிலையில்
கோவக்காய் சாப்பிட்டால்
சர்க்கரை நோய்
குணமாகிறது என்று ஆராய்ச்சியாளர்க
ள் கண்டுபிடித்துள்ளனர்.
கோவைக்காய் ரத்தத்தில் உள்ள
சர்க்கரையின் அளவைப்
பரிசோதித்ததில் சர்க்கரையின்
அளவு மிகவும்
குறைந்து இருந்ததைக்
கண்டுபிடித்தனர். தினமும் 50
கிராம் சமைத்த கோவக்காய்
சாப்பிட்டால் சர்க்கரை நோய்
குறையும் என்று அந்த ஆய்வுக்
குழு தெரிவித்துள்ளது.
ரகம்- 2 சர்க்கரை நோயாளிகள்
தினமும்
கோவக்காயை சமைத்து சாப்பிட்டால்
சர்க்கரை அளவைக்
கட்டுப்படுத்தலாம். அனைத்துக்
கடைகளிலும் மிக எளிதாகக்
குறைந்த விலையில் கிடைக்கும்
கோவக்காய் நார்ச்சத்து நிரம்பியது.
அதை சமைத்தும் பச்சையாகவும்
சாப்பிடலாம்.
கோவைக்காய் பற்றி சில துளிகள்:
மருத்துவப் பயன்பாடுடைய
தாவரமாகும். இக் கொடித் தாவரம்
பற்றைக் காடுகள், வேலிகளில்
வளர்கிறது. இதன் இலையின்
பிளவு அமைப்பைக்
கொண்டு மூவிரல் கோவை,
ஐவிரல் கோவை என்ற பிரிவுகள்
உண்டு. இதன்
பூ வெள்ளை நிறமானதாகும்.
இலை, காய், தண்டு, வேர் என
எல்லாப் பாகங்களும் மருத்துவ
குணமுடையனவாகும்.
இலைக்கஞ்சியில் இதன்
இலை சேர்க்கப்படுவது
ண்டு.கொஞ்சமாய் துவர்ப்புச்
சுவையுடைய இந்த
கோவைக்காயில் பொரியல், வற்றல்,
கூட்டு, சாம்பார் செய்து உணவில்
சேர்த்துக் கொள்வதுண்டு.மற்றும்
கோவைக்காய் பச்சடி சிறந்த
மருத்துவ குணமுள்ள உணவு.
நாக்கு சுவையை மட்டுமே கருதாமல்
உடல் நலத்தையும் கருத்தில்
எடுத்துக் கொண்டால்
எல்லா உணவுகளுமே விருப்ப
முடையதாகத்தான் ஆகும். இதனைப்
பொதுவாக
எல்லோருமே சாப்பிடலாம்.பரம
்பரை காரணமாக நீரிழிவு நோய்
இருப்பவர்கள் கோவைக்காயை 35
வயது முதலே உணவில் சேர்த்துக்
கொண்டால் நல்லது. நீரிழிவு நோய்
வராமல் தடுக்கலாம்.
கோவைக்காயின் சத்துக்கள்:
வைட்டமின் ஏ 156 மைக்ரோ கிராம்,
போலிக் அமிலம், கால்ஷியம்,
பாஸ்பரஸ், இரும்பு ஆகிய
தாதுப்பொருள்கள் உள்ளன.
கண்குளிர்ச்சியை உண்டாக்கும்.
இலைச்சாற்றுடன் வெண்ணெய்
சேர்த்து சிரங்குகளுக்குப் பூசலாம்.
இதன் இலைச்சாற்றைப்
பருகி வந்தால் நீரழிவு நோய்
கட்டுப்படும். கொவ்வங்காய்
கோரோசனை மாத்திரை செய்யப்
பயன்படுகிறது.நாக்கில் உள்ள
வெடிப்பு, நாக்குப் புண்,
வாய்ப்புண் நீங்கும்.
கோவக்காயில் வைட்டமின் ஏ
சத்து உள்ளது. வயிற்றுப்புண்
இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள்
கோவைக்காயை சேர்த்துக்கலாம்
.இக்காய் கொஞ்சாம் சூடு. அதனால்
உதடு வெடிப்பு, வயிற்றுப் புண்
ஏற்ப்படும்.ஆனால் நாம்
( நீரிழிவு நோய்யாளிகள் நீர் மோர்,
எலுமிச்சை சாறு என்று எடுத்துக்
கொள்ளுவதால் இந்த சூடு அதிகம்
ஏற்ப்படாது.ஒரே
ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன்
அரைத்து குடித்தாலும்
மேற்சொன்ன
பலன்களை பெறலாம்.முக்கிய
மா முற்றின கோவைக்காய்
வாங்ககூடாது.
பிஞ்சு காயா பார்த்து வாங்கணும்.
பிஞ்சு காய் இளம்பச்சை நிறத்தில்
இருக்கும்.இக்கா
ய்யை நீரிழிவு நோயாளிகள் மட்டும்
அல்லாமல் எல்லரும் சாப்பிட்டலாம்.

No comments: