Saturday, February 8, 2014

சம்பங்கி

இரகங்கள் :

ஓரடுக்கு : மெக்ஸிகன் சிங்கிள், ‚ங்கார், ப்ரஜ்வார்

இரண்டடுக்கு : பியர்ல்டபுள், சுவாளினி, வைபவ்



மண் மற்றும் தட்பவெப்பநிலை : சுமார் 6.5 முதல் 7.5 கார அமில நிலையுடன் நன்கு வடிகால் வசதியுடைய மண்ணில் நன்கு வளரும்.

இனவிருத்தி மற்றும் நடவு : ஜுன் - ஜுலை மாதங்களில் 25 முதல் 30 கிராம் எடையுள்ள கரணைகளை 45 x 20 செ.மீ இடைவெளியில் 25 செ.மீ ஆழத்தில் எக்டருக்கு 1,12,000 கரணைகள் தேவைப்படும். கரணைகளை அறுவடை செய்து 30 நாட்கள் வைத்திருத்தபின்பே பயன்படுத்தவேண்டும். நடவுக்கு முன் 5000 பிபிஎம் சிசிசியில் (5 கிராம் / லிட்டர்) மூழ்கச்செய்த பின்பு கரணைகளை நடவு செய்தால் மகசூல் அதிகரிக்கும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை :

தழை, மணி மற்றும் சாம்பல் சத்து 200:200:200 கிலோ / எக்டர் என்ற விகிதத்தில் 25 டன் தொழு உரத்துடன் இடவேண்டும். (இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி) நிலையத்தால் பரிந்துரைக்கப்பட்ட உர அளவு.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

நூற்புழு : நூற்புழுக்கள் மண்ணில் இருந்தால செடிகளின் வளர்ச்சி குன்றி இலைகள் வெளிறி மகசூல் பாதிக்கப்படும். இதனைக் கட்டுப்படுத்த வேர்ப்பகுதியில் கார்போஃப்யூரான் குறணை மருந்தினை ஒரு செடிக்கு ஒரு கிராம் என்ற விகிதத்தில் இட்டு உடனடியாக நீர்ப்பாய்ச்சவேண்டும்.
பயிர்க்காலம் : இரண்டு வருடங்கள் சிறந்த மேலாண்மை முறைகளைக் கையாண்டால் மேலும் ஒரு வருடத்திற்குப் பராமரிக்கலாம்.

அறுவடை : கரணைகள் முளைத்த பின்பு 80 முதல் 95 நாட்களில் பூக்களை அறுவடை செய்யலாம். பூக்கள் நாள்தோறும் அறுவடை செய்யப்படவேண்டும்.

மகசூல் : 14 முதல் 15 டன் மலர்கள் / எக்டர் , 8 முதல் 10 கிலோ கான்கிரீட் / எக்டர்

No comments: