Thursday, May 31, 2012

உடல் வெப்பத்திலிருந்து மின்சாரம்

தற்போது பல்வேறு விதங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டாலும், நமது மின்சார தேவை மட்டும் இன்னும் முழுமையாக பூர்த்தி அடையவே இல்லை. காரணம், மின்சார உற்பத்தி ஆமை வேகத்தில் செல்கிறது. ஆனால் மக்கள் தேவையோ அசுர வேகத்தில்!
மனிதனின் இந்த தலையாய பிரச்சினைக்கு, மனிதனின் உடலில் இருந்தே ஓர் அட்டகாசமான வழியை கண்டுபிடித்து அசத்திவிட்டார்கள் வேக் பாரஸ்ட் பல்கலைக்கழகத்தின் நானோடெக் விஞ்ஞானிகள்.
மனிதனின் உடல் வெப்பத்திலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறனுள்ள அந்த அதிசய கண்டுபிடிப்புக்கு `பவர் பெல்ட்' என்று பெயரிட்டிருக்கிறார்கள்.
நானோ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த புதிய வெப்ப மின்சார கருவி, வளையும் தன்மையுள்ள பிளாஸ்டிக் பைபர்களுள் அடைக்கப்பட்ட நுண்ணிய நானோ குழாய்களால் ஆனது.
இந்த தொழில்நுட்பம் இரு அமைப்புகளுக்கு இடையிலான வெப்ப அளவு (டெம்பரேச்சர்) வித்தியாசங்களை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.
உதாரணமாக, ஓர் அறையின் வெப்பத்துக்கும் ஒரு மனித உடலின் வெப்பத்துக்கும் இடையிலான வெப்ப அளவு வித்தியாசத்தை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது பவர் பெல்ட்.
இந்த பவர் பெல்ட்டில் சுவாரசியம் என்னவென்றால், இது நாம் உடுத்திக் கொள்ளும் ஆடைகள் போன்ற உணர்வை ஏற்படுத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது என்பதுதான்.
சாதாரணமாக, உடலிலிருந்து வெப்பமாக வெளியேறி விரயமாகும் சக்தியைக் கவர்ந்து, மின்சாரம் தயாரிக்கும் பவர் பெல்ட்டின் பலன்கள் ஏராளம் என்கிறார் ஆய்வாளர் கோரீ ஹெவிட்.
உதாரணமாக,
(1) வாகனங்களின் சீட்களில் பவர் பெல்ட்டை பொருத்தி அதிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தைக் கொண்டு பாட்டரிகளை சார்ஜ் செய்யலாம்.
(2) கூரையின் டைல்ஸ்களில் பொருத்தி அதில் இருக்கும் வெப்பத்திலிருந்து மின்சாரம் தயாரித்து வீட்டின் கரண்ட் பில்லை குறைக்கலாம்.
மேலும், பவர் பெல்ட்டை பயன்படுத்தி ஒரு வானிலை ரேடியோவை இயக்கலாம், ஒரு பிளாஷ் லைட்டில் சுற்றி அதனை இயக்கலாம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, `பவர் பெல்ட்'டைக் கொண்டு ஒரு செல்போனை சார்ஜ் செய்யலாம்' என்று ஆச்சரியப்படுத்துகிறார் நானோ தொழில்நுட்ப மையத்தின் இயக்குனரான டேவிட் கேரோல்.
முக்கியமாக, மின் விபத்துகள் மற்றும் மின்சாரத் தட்டுப்பாடு காரணமாக மின்சாரம் துண்டிக்கப்படும் வேளையில் பவர் பெல்ட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார் கேரோல்.
மிகவும் அதிக விலை காரணமாக, தற்போது குறைவான எண்ணிக்கையில் பயன்படுத்தப்படும் வெப்ப மின்சாதனங்கள் பவர் பெல்ட்டின் வருகைக்கு பின்னர் மிக மிக மலிவாகக்கூடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
உதாரணமாக, தற்போதுள்ள தரமான வெப்ப மின்சாதனங்களில் வெப்பத்தை மின்சாரமாக மாற்றப் பயன்படுத்தப்படும் பிஸ்மத் டெல்லூரைடு எனும் வேதியியல் பொருளின் விலை ஒரு கிலோவுக்கு 1000 டாலராம். அதாவது சுமார் 50 ஆயிரம் ரூபாய்.
ஆனால், பவர் பெல்ட் பயன்பாட்டுக்கு வரும்போது, உடல் வெப்பத்தை கொண்டு ஒரு செல்போனை சார்ஜ் செய்யும் செல்போன் கவருக்கு தேவையான பவர் பெல்ட்டின் விலை வெறும் ஒரு டாலராகக்கூட மாறிவிடலாம் என்கிறார்கள்.
தற்போது 72 நானோ குழாய் அடுக்குகளைக் கொண்ட பவர் பெல்ட், சுமார் 140 நானோ வாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.
ஆனால், ஆய்வாளர் கோரீ ஹெவிட்டின் ஆய்வுக்குழு, தற்போதுள்ள பவர் பெல்ட்டில் மேலும் பல நானோ குழாய் அடுக்குகளை சேர்த்து, அதன் மின் உற்பத்தியை அதிகப்படுத்த முயற்சித்துக் கொண்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
`தற்போது தொடக்க நிலையில் இருக்கும் பவர் பெல்ட் சந்தைக்கு வர மேலும் ஆய்வுகள் செய்ய வேண்டி இருக்கிறது.
இந்த ஆய்வு முயற்சிகள் வெற்றியடையும் பட்சத்தில், ஒரு பவர் பெல்ட்டை கொண்டு ஒரு ஐ பாடை சார்ஜ் செய்து இயக்கலாம். நீண்ட தூர ஓட்டம் செல்பவர்களுக்கு பயனுள்ள இது மிக விரைவில் சாத்தியமே' என்று உறுதியாகச் சொல்கிறார் ஆய்வாளர் கோரீ ஹெவிட்.

பக்தியில் கலந்திருக்கும் மருத்துவம்

`இந்திரப்ரஸ்த நகரத்தின் கடைசி ஷத்ரிய அரசனான ப்ருதிவிராஜனுடைய சேனாதிபதிகளிலே `சாமின்டராய்' என்று ஒருவன் இருந்தான். வட பக்கத்து முகம்மதிய அரசர்க்கெல்லாம் அவன் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் நடுக்கம் உண்டாகும்படி அவன் அத்தனை வீரமும், யுத்தத் திறமையும் கொண்டு விளங்கினான். அவனுடைய சரீர வலிமையை நிகரற்றதாகக் கொண்டாடினார்கள்.
அவனுக்குச் சாமுண்டி உபாஸனை உண்டு. விரதங்கள், கண்விழிப்புகள், தியானங்கள், வியாயாமங்கள் இவற்றிலே தனது காலம் முழுவதும் கழித்தான்.
`அவன் உணவு கொள்ளும்போது பீமனைப் போல் அளவில்லாத பசியுடன் உண்பான்' என்று சந்தக்கவி `ப்ருதிவிராஜ் ராஸோ' என்னும் தமது காவியத்திலே எழுதியிருக்கிறார்.
பீமனுடைய பெயர்களில் `விருகோதரன்' என்பதொன்று; அதாவது `ஓநாய் வயிறுடையவன்' என்றர்த்தம். இது அவனுக்கிருந்த நேர்த்தியான பசியைக் கருதிச் சொல்லியது. இக்காலத்தில் குறைவாக உண்ணுதல் நாகரிகமென்று நம்மவர்களிலே சிலர் நினைக்கிறார்கள்.
`பெருந்தீனிக்காரன்' என்றால் அவமதிப்பு உண்டாகிறது. சிரார்த்தத்திலே சோறு தின்று முடிந்தவுடன் எழுந்திருக்க முடியாமல் கஷ்டப்படும் சில பிராமணார்த்தக்காரர்களைப் போல் சரியான பயமில்லாமல் உடம்பைக் கொழுகொழுவென்று வைத்துக் கொண்டு, நாக்கு ருசியை மாத்திரம் கருதிப் பெருந்தீனி திண்பவனைக் கண்டால் அவமதிப்புண்டாவது இயற்கையேயாம்.
புலிகளைப் போல் உடல் வலிமையும், அதற்குத் தகுந்த தீனியும் உடையவனைக் கண்டால் யாருக்கும் அவமதிப்பு உண்டாகாது. சாதாரணமாக பயம் உண்டாகும். நானாவிதமான விலையுயர்ந்த உணவுப் பொருள்களைத் தின்றால்தான் உடம்பிலே பலம் வரும் என்று சிலர் நினைக்கிறார்கள்.
இது தவறு. காரஸாரங்களும், வாசனைகளும் உண்டாக்கி ருசியை அதிகப்படுத்தும் வஸ்துகள் தேக பலத்திற்கு அவசியமில்லை. கேப்பைக்களி, கம்பஞ்சோறு இவற்றால் பலமுண்டாவது போல் பதிர்ப்பேணியிலும், லட்டுவிலும், வெங்காயச் சாம்பாரிலும் உண்டாகாது.
`சரீரத்தை வியர்க்க வியர்க்க உழைத்தால் நல்ல பசியுண்டாகும். நல்ல பசியாயிருக்கும்போது கேப்பைக்களியை வேண்டுமளவு தின்று சுத்த ஜலத்தைக் குடித்தால் போதும். விரைவில் பலம் சேர்ந்து விடும்'.
`பிள்ளைகளை இஷ்டப்படி நீஞ்சுதல், மரமேறுதல், பந்தாட்டம் முதலிய விளையாட்டுக்களிலே போகவொட்டாத படி தடுக்கும் பெற்றோர், தம்மையறியாமலேயே மக்களுக்குத் தீங்கு செய்கிறார்கள்'.
`மேலும், சரீர உழைப்பும் விளையாட்டுக்களும் மிகவும் வாலிபப் பருவத்திலேயிருக்கும் பிள்ளைகளுக்கு மாத்திரந்தான் பொருந்துமென்று ஒரு தப்பெண்ணம் சிலரிடம் ஏற்பட்டிருக்கிறது'.
`மனிதனுக்கு இயற்கை வயது நூறு. ஆகையால், ஐம்பது வயதாகும் வரை ஒருவன் இளமை தீர்ந்தவனாக மாட்டான். பிஞ்சிலேயே உடம்பை நாசப்படுத்தினால் சீர் கெட்டுக் குலைந்து போய், இருபது வயதாகுமுன் கிழத்தன்மை வந்துவிடும்.
எனினும் இயற்கை விதிப்படி ஐம்பது வயது வரை இளமை நிற்குமாகையால், அதற்குள்ளே செயற்கைக் கிழத்தன்மை பெற்றோர், தமதுடம்பைத் திருத்தி நல்ல நிலைமைக்குக் கொண்டு வர முயற்சி செய்யலாம்.'
மேலே நான் குறிப்பிட்டிருப்பது மகாகவி பாரதியாரின் கட்டுரையில் இருந்து ஒரு பகுதி.
மனிதனை அண்டி வரும் ரோகத்திற்கான அடிப்படையை இப்படி அவன் விவரிக்கின்றான்.
இதுபற்றி முன்பே நான் குறிப்பிட்டிருக்கிறேன்.
சிறு வயதில் இருந்தே, பெருந்தீனி தின்று பழக்கப்பட்டவன் நான்.
அந்நாளில், மணியாச்சியை அடுத்த ஓட்டநத்தத்தில் எங்களுக்கு ஒரு `ஜின்னிங் பாக்டரி' இருந்தது.
வாஞ்சிநாதன், ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற அந்த மணியாச்சி ஜங்ஷன், தென்னாட்டிலே பூரி கிழங்குக்குப் பிரசித்தமானது.
இரண்டாவது உலக மகாயுத்தத்தின் போதுதான், பூரி, சப்பாத்தி சாப்பிட வேண்டிய கட்டாயம் தென்னாட்டவர்க்கு வந்ததென்றாலும், அதற்கு முன்பாகவே ஹோட்டல்களில் பூரி கிழங்கு என்பது ஒரு சுவையான உணவாகக் கருதப்பட்டது.
1933-இல் எனக்கு வயது சுமார் ஆறு.
அந்த வயதில் சுமார் பதினாறு பூரிகள் சாப்பிடுவேன். உறவினர்களே கூடத் திகைத்துப் போவார்கள்.
பாரதி சொல்வது போல், கம்பும் கேழ்வரகும், கோதுமையும், உடம்புக்குச் சக்தியூட்ட வல்லன.
ஆரம்ப சக்தியே, எனக்கு உணவில் இருந்து கிடைத்தது.
ஆனால், வெள்ளைக்காரர்கள் உணவையும் சீனத்து உணவையும், சுவை பார்க்கத் தொடங்கிய பிறகு, நாக்கு ருசியேறி ஊளைச் சதைப்போடத் தொடங்கிற்று. கொழுப்புச் சத்தும் ஏறி பத்துப் படியேறினால் மூச்சு வாங்குகிற நிலைமை வந்தது.
இப்போது என்னால் அதிகம் சாப்பிட முடியவில்லை. குறைந்தபட்ச உணவிலேயே திருப்தியடைய வேண்டியது இருக்கிறது.
அந்த உணவு, `புரதச் சத்து நிறைந்ததாக இருந்தால் போதும்' என்றே நான் நினைக்கிறேன்.
உடம்பும் அளவோடிருக்கிறது.
ஆனால், மூளை `சென்சிடி'வாகி விட்டது.
எந்த ஒலியையும் அது எதிரொலிக்கிறது.
திருமூலரும், போகரும், பதார்த்தகுண சிந்தாமணியும் உணவுக்குச் சொல்லும் குணங்களை, இப்போது என்னால் உணர முடிகிறது.
கிழங்கு வகைகள், பட்டாணி, முட்டை, நண்டு, இறால்- இவற்றில் வாயு அதிகமா?
மத்தியானம் சாப்பிட்டால், மாலையிலே எதிரொலி கேட்கிறது.
மாமிசக் கொழுப்பும், உப்பும் ரத்தக் கொதிப்பை ஏற்றுமா?
இருபத்து நான்கு மணி நேரத்தில் ரிசல்ட் தெரிகிறது.
புளியிலும், எலுமிச்சம் பழத்திலும் `திரவம்' உண்டா?
அந்தத் திரவம் இப்போது கண்ணை மயக்குகிறது; தலையைச் சுற்றுகிறது.
ரத்த அணுக்களின் தாங்கும் சக்தி ஒரு குறிப்பிட்ட காலத்தோடு முடிந்து விடுகிறது.
வெள்ளை அணுக்களும், சிகப்பு அணுக்களும் பலமிழந்து, போராடக் கூடிய வல்லமையை அவை இழந்து விடுகின்றன.
இரண்டு மோட்டார் வைத்துத் தண்ணீர் இறைக்கும் கோயம்புத்தூர் கிணறு போல, ஏராளமான மாத்திரைகளைப் போட்டே அந்த ரத்த அணுக்களை உயிர்ப்பிக்க வேண்டியிருக்கிறது.
வானைத் தொடும் அளவுக்கு கால் பந்து அடித்த கால்கள், சாதாரணமாக நடந்து போவதற்குத் துணை தேடுகின்றன.
பெரிய ரதத்தைக் கூட மளமளவென்று இழுத்த கைகள், ஒரு வாளித் தண்ணீரைத் தூக்குவதற்குப் பயப்படுகின்றன.
ஏழு மாடி ஏறினாலும் வராத பெருமூச்சு, ஏழு படி ஏறினாலே வருகிறது.
எனக்கல்ல; வயதானவர்களுக்கு!
இருபது வருஷங்களுக்கு முன் அரசியலிலும், இலக்கியத்திலும், கலையிலும் என்னோடு ஈடுபட்ட சிலரை இப்போது பார்க்கிறேன்.
சிலர், `சர்க்கரை' என்கிறார்கள். சிலர் `உப்பு' என்கிறார்கள்.
சாப்பாட்டைக் கண்டால் பயப்படுகிறார்கள்; ஆஸ்பத்திரியைக் கண்டால், படுத்துக் கொள்கிறார்கள்; ஆளுக்கு ஒரு மூட்டை மாத்திரை சாப்பிடுகிறார்கள்.
`என்ன வாழ்க்கை இது? இப்படி வாழத்தான் வேண்டுமா?' என்று அலுத்துக் கொள்கிறார்கள்.
போகம் ஒரு கட்டம் வரையில்தான்; `மறு கட்டம் ரோகம்' என்பதை தேகம் நினைவுபடுத்துகிறது.
சிறு வயதில் திட்டமிட்டு வாழாத யாரும், இதற்குத் தப்ப முடிவதில்லை.
மேல் நாடுகளிலும், கீழ் நாடுகளிலும் ஒருவர் இன்னொருவரைக் கண்டால் முதலில் விசாரிப்பதே, `உடல் நிலை எப்படி?' என்று தான்.
`நோயற்ற வாழ்வே நான் வாழ வேண்டும்' என்று பிரார்த்தித்தார், இராமலிங்க சுவாமிகள்.
நோயோடு நூறாண்டு வாழ்வதை விட, நோயின்றி ஐம்பது ஆண்டுகள் வாழ்வது போதுமானது.
`நித்திய கண்டம் பூரண ஆயுசு' என்றிருப்பதில் என்ன சுகம்?
அதிலும் இன்றைய உலகத்தில் வந்துள்ள நோய்கள் இருக்கின்றனவே, அனைத்துமே வேடிக்கையானவை.
மயிலை கபாலீசுவரர் கோயிலில் ஒருநாள் பேசி விட்டு வந்தேன். அன்றிரவு நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பிராமணரும், அவரது மனைவியும் என்னைத் தேடி வந்து, `தேவர் மண்டபத்தில்' சந்தித்தார்கள்.
நானே உடல் நலமில்லாமல் தான் உட்கார்ந்திருந்தேன்.
தன் மனைவிக்கு அதிசயமான ஒரு வியாதி இருப்பதாகவும், தன் மனைவியைக் கண் போல் காத்து வந்த ஒரே மகள், திடீரென்று இரண்டு மாதங்களுக்கு முன் இறந்து விட்டதாகவும், அந்த பிராமணப் பெரியவர் கண் கலங்கக் கூறினார்.
அவர் சொன்ன வியாதி என்ன தெரியுமா?
அந்த அம்மையார் உட்கார்ந்திருக்கும் போது மெதுமெதுவாக மேலே போவது போல் தோன்றுகிறதாம்! திடீரென்று தன் கணவனையோ, மற்றவர்களையோ கூப்பிட்டுத் தோள்களை அமுக்கச் சொல்கிறாராம்; இப்படி அடிக்கடி தோன்றுகிறதாம்.
அவர் சொன்னார்:
`ஐயா! நான் கடமை தவறாத பிராமணன். அரசாங்கத்தில் பெரிய அதிகாரி. பகவான் என்னை இப்படிச் சோதிக்கிறான்! கடவுளுக்கு நான் என்ன துரோகம் செய்தேன்?'
நான் சொன்னேன்:
`இதைத்தான் இறைவனின் லீலை என்கிறார்கள். ஏற்றுக் கொண்டு அடுத்தக் கட்டத்தை எதிர்பார்ப்பதைத் தவிர நம்மால் ஆவதென்ன?'
அவர் திருப்தியடையவில்லை.
கடையிசியில் பூர்வ ஜென்ம பாவ புண்ணிய கர்மாவைக் கூறி, அவரை அமைதிப்படுத்தினேன்.
எனக்கும் என் நண்பர்கள் சிலருக்கும் ஒரு விசித்திரமான நோய் உண்டு.
பல மாடிக் கட்டடத்தில் ஏறிச் சுவரோரத்தில் நின்று பார்த்தால், கீழே குதிக்க வேண்டும் போல் தோன்றும்.
ஆங்கிலத்தில் `வெர்டிகோ' என்றும், தமிழில் `கிறுகிறுப்பு' என்றும் சொல்கிறார்களே அது அல்ல இது.
இது ஒருவகை மனநோய்.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது திடீரென்று அழுகை வரும்.
`தற்கொலை செய்து கொள்ளலாமா?' என்று தோன்றும்; சிலருக்கு அப்படி ஒரு நோய்.
ஆங்கிலத்தில் அதன் பெயர், `சிசோம்பிரினியா!'
நம்முடைய மூதாதைகளான ராஜராஜசோழன் காலத்திலோ, ராஜேந்திர சோழன் காலத்திலோ இந்த நோய்களெல்லாம் இருந்தனவா?
குதிரை ஏற்றம், வாள் பயிற்சி, மல்யுத்தம், நூற்றைம்பது படிக்கட்டுகள் மலையில் ஏறுதல், இயற்கையை வைத்தியனாகக் கொண்டு அவர்கள் வாழ்ந்தார்கள்.
இப்போதெல்லாம் அதிகக் கனமாக இருந்தால், `எடையைக் குறை' என்கிறார்கள்.
நம்முடைய மூதாதையர்கள் எல்லாம் குண்டாகத்தான் இருந்து, எண்பது வயது வரை வாழ்ந்தார்கள்.
இன்று பரவலாகக் காணப்படும் நோய், மாரடைப்பு.
ஆயிரத்தில் ஒருவருக்கு அபூர்வமாக அந்த நாளில் வரும் மாரடைப்பு, இப்போது சர்வசகஜமாகி விட்டது.
ஒவ்வொரு மனிதனும் தபால்காரனை எதிர்பார்ப்பது போல், `நமக்கு எப்போது வருமோ' என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான்.
விசித்திரமான நோய்கள் விபரீதமாகப் பெருகிவிட்ட காலம் இது.
காரணம், நாகரிகத்தின் வசதிகள் மட்டுமல்ல; தெய்வ பக்தி இல்லாமையுங் கூட.
இதைப் படிக்கின்ற உங்களில் எத்தனை பேர், தினசரி பூஜை செய்கிறீர்கள்?
எத்தனை பேர் கோயிலை நூற்று எட்டு முறை பிராகாரம் சுற்றி வருகிறீர்கள்?
எத்தனை பேர் மலை ஏறிச் சாமி கும்பிடுகிறீர்கள்?
எத்தனை பேர் குளத்தில் மூழ்கி நீராடி, ஈரத்துண்டோடு காட்டிலே நடக்கிறீர்கள்?
எந்தக் கோயிலின் அர்ச்சகராவது, சர்க்கரை வியாதிக்கு ஆளாகி இருக்கிறாரா?
உடம்பு வியாதி வந்து, கை, கால் வீங்கி இருக்கிறாரா?
எந்த அர்ச்சகராவது எழுபது வயதுக்கு முன்னால் செத்திருக்கிறாரா?
அவர்களில் எவராவது கொழுப்படைத்துச் செத்தது உண்டா?
இத்தனைக்கும் `அக்கார அடிசில்' என்னும் சர்க்கரைப் பொங்கலை, நெய் வடிய ஒரு படி சாப்பிடுகிறவர்!
நோய் இல்லாத காரணம் என்ன?
அவர் தினசரி தெய்வத்தைச் சந்திக்கிறார் என்பது ஒன்று; காற்றில்லாத மூல ஸ்தானத்தில் தினமும் நிற்பதால் உடம்பிலுள்ள உப்பும், சர்க்கரையும் வியர்வையில் வெளியேறி விடுகின்றன என்பது மற்றொன்று.
இந்து மதத்தின் பக்தித் தத்துவத்தில் மருத்துவமும் கலந்திருக்கிறது.
நிவேதனப் பொருட்களை மட்டுமே சாப்பிட்டு ஒருவன் வாழத் தொடங்கினால், தெய்வம் வாழும் காலம் வரை அவனும் வாழ்வான்.
நாட்டில் எவ்வளவோ மூலிகைகள் இருக்கின்றன. ஆனால், துளசி தலத்துக்கென்ன அவ்வளவு மரியாதை? அதை ஏன் வீட்டிலே பூஜிக்கிறார்கள்? கோயிலிலே கொடுக்கிறார்கள்?
அது பல நோய்களைக் கண்டிக்கிறது.
அண்மையில் ஒரு பத்திரிகையில் துளசியின் மகிமை பற்றி ஒரு கட்டுரை வந்தது. அது ஒரு `சர்வரோக நிவாரணி' என்று அந்தக் கட்டுரை குறிப்பிட்டது.
மாரியம்மனை வணங்கும்போது, வேப்பிலை ஏன் பிரதானமாகிறது?
அது மற்றொரு நிவாரணி.
`அலர்ஜி' என்றொரு வார்த்தை ஆங்கிலத்தில் உண்டு.
சிலருக்கு வாசனை `அலர்ஜி,' சிலருக்கு காய்கறி அலர்ஜி என்று பலவகையான அலர்ஜிகள் உண்டு.
கோயிலுக்குள் எந்த வாசனை வந்தாலும், `அலர்ஜி' கிடையாதே ஏன்?
`அந்த நோயாளிக்கு இவர் விபூதி கொடுத்தார்; நோய் தீர்ந்து விட்டது' என்கிறோம்.
அது சாமியாரின் மகத்துவமல்ல; விபூதியின் மகத்துவம்.
நோய் வரக்கூடாது.
வந்த பின் என்ன செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் சொல்ல வேண்டியது.
வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதே நான் சொல்ல வேண்டியது.
முதலில் நடக்கப் பழகுங்கள்.
திருமலைக்குப் போனாலும் சரி; பழனிக்குப் போனாலும் சரி; நடந்தே மலை மீது ஏறுங்கள்.
`கார் போகுமா? விஞ்ச் கிடைக்குமா?' என்று கேள்வி கேட்காதீர்கள். நடக்க இயலாதவர்கள் அவற்றிலே போகட்டும்.
நடக்கக் கூடியவர்கள் நடந்து செல்லுங்கள்.
ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நமக்குக் கிடைத்த சுப்ரீம் டாக்டர், ஆண்டவனே.
இளைஞர்கள் எல்லாம் கோயில்களில் அங்கப் பிரதட்சணம் செய்ய வேண்டும்.
அதை விடவா ஒரு உடற்பயிற்சி யோகாசனம் உண்டு?
காவடி எடுத்து ஆடுகிறார்களே, ஏன்?
அவர்களுக்குப் பரத நாட்டியம் தெரியாது; உடம்பில் சகல அம்சங்களும் வளைவதில் ஒரு ஆரோக்கியம்.
உடம்பையும், ஆன்மாவையும் ஒரு சேரக் கவனிக்கும் மதம் இந்து மதம்.
அது நீராடச் சொல்லுவது, உடம்பைக் காக்க.
தெய்வத்தை நம்பச் சொல்லுவது, ஆன்மாவைக் காக்க.
ஆன்மாவுக்குள்ளே, ஆண்டவன் சுடர்விட்டுப் பிரகாசிக்கிறான்.
இருபது வயதில் இருந்தே ஒருவனுக்குக் கோயிலுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது.
பணக்காரன் உடம்பு நாளுக்கு நாள் பலவீனமடைகிறது.
பரதேசியின் உடம்போ, எப்போதும் பாதுகாக்கப்படுகிறது.
பல வீட்டுச் சோறு செய்கிற வேலையை, திட்டமிட்ட சாப்பாடு செய்ய முடியவில்லை.
காரணம் என்ன?
பரதேசியின் உடம்பு நடக்கிறது; ஆன்மா ஆண்டவனை நினைக்கிறது.
பணக்காரன் உட்கார்ந்து உட்கார்ந்து கணக்கு எழுதுகிறான்; ஒப்புக்காகக் கோயிலுக்குப் போகிறான்.
மொத்தத்தில் நம்மிடமுள்ளது இரண்டே விஷயங்கள் தான்:
ஒன்று தேகம்.
இன்னொன்று ஆன்மா.
வடமொழியில் `புருஷன்' என்றால் ஆன்மா.
நீ உன் மனைவிக்கு மட்டுமே புருஷனல்ல; உன் தேகத்துக்கும் புருஷன்.
தேகம் என்று மனைவியையும், `ஆன்மா' என்ற புருஷனையும் ரோகம் இல்லாமல் காப்பாற்றுவது, இந்து மதம் ஒன்றே!

கொங்கு தமிழ்

கொங்கு தமிழ்

அக்கட்ட, அக்கட்டு. அக்கட்டாலே - அந்த இடம், அந்த இடத்திலே. (நீ அக்கட்டாலே போய் உட்காரு)
அந்திக்கு- இரவுக்கு
அங்கராக்கு - சட்டை
அட்டாரி, அட்டாலி - பரண்
அப்பச்சி , அப்புச்சி- தாய்வழித் தாத்தா
அப்பத்தா- தாய்வழித் பாட்டி (அப்பாவின் ஆத்தாள்)
அப்பு - அறை. (அவளை ஓங்கி ஒரு அப்பு அப்படா, செவுனி திரும்புகிறாற்போலே)
அம்மாயி - அம்மாவின் அம்மா
ஆகாவழி- ஒன்றுக்கும் உதவாதவன்
ஆட்டம் - போல என்று பொருள்படும் ஒரு சொல்: (அக்காளாட்டம் சும்மா இரு - அக்காளைப் போல் சும்மா இரு)
ஆயா - அப்பாவின் அம்மா
ஆம்பாடு - காலும் இடுப்பும் சேரும் மடிப்பான இடம் (ஆம்பாட்டிலே தேய்த்துக் குளி)
இக்கிட்டு - இடர்பாடு
இட்டேறி - தடம் (வயல்களினிடையே செல்லும் வரப்புப்பாதை, வண்டிப்பாதை)
இண்டம் பிடித்தவன் - கஞ்சன்
உண்டி - (sample) = உண்ணும் பதம்? - தர்பூசணியில் உண்டிபோட்டுக்கொடு; எப்படி இருக்கிறதென்று பார்க்கலாம்
உப்புசம் , உக்கரம் - புழுக்கம்
ஊக்காலி (?ஊர்க்காலி)- பெரியவர்கள் சொல் மதியாமல் தான்தோன்றித்தனமாக சுற்றுபவர்களை ஊக்காலி என்பர். ( ரவுடி )
ஊளைமூக்கு - சளி நிரம்பிய மூக்கு
எச்சு - அதிகம்.
எகத்தாளம் - நக்கல், பரிகாசம்
எரவாரம்-கூரைக்கு கீழ் உள்ள இடம்
ஏகமாக - மிகுதியாக,பரவலாக
ஒட்டுக்கா - ஒரேயடியாக, இணைந்து (இரண்டு பேரும் ஒட்டுக்காகப் போயிட்டு வாருங்கள் - இருவரும் இணைந்து சென்று வாருங்கள்)
ஒடக்கான் - ஓணான்
ஒப்பிட்டு, ஒப்புட்டு - போளி
ஒளப்பிரி - உளறு "இவன் என்ன இப்படி ஒளப்பிரிக்கிறான்"
ஒறம்பற - உறவினர் (உறவின்மு்றை) - விருந்தினர்
ஓரியாட்டம் -சண்டை: அவிய பங்காளிகளுக்குள்ள எப்பவுமே ஓரியாட்டம்தான்.
ஒருசந்தி - ஒரு வேளை மட்டும் விரதம் இருத்தல்
கட்டுத்தரை - மாட்டுத் தொழுவம்
கட்டிச்சோற்று விருந்து - கட்டிச்சாத விருந்து , வளைகாப்பு
கடைகால், கடக்கால் - அடித்தளம்
கடகோடு - கடைசி ( கோட்டுக்கடை - கடைசிக்கடை, அந்த கோட்டிலே பாரு - அந்த கடைசியிலே பாரு)
கடையாணி - அச்சாணி
கரடு - சிறு குன்று
கல்யாணம் (கண்ணாலம்) - திருமணம்
குக்கு - உட்கார்
கூம்பு - கார்த்திகை தீபம் ( கூம்பு அவிகிறதுக்குள்ளே அந்தக் காரியத்தைப் பண்ணிடு )
கூதல்- குளிர், கூதகாலம்- குளிர்காலம்
கொரவளை \ தொண்டை -குரல்வளை
கொழுந்தனார்- கணவரின் தம்பி
கோடு - "அந்தக் கோட்டிலே உட்கார்", பழைமைச்சான்று: "கோடுயர் அடுப்பு" - "பக்கம் உயர்ந்த அடுப்பு" (புறநானூறு 164)
சாடை பேசுகிறான் - குறிப்பாகத் (மறைமுகமாகத்) தாக்கிப் பேசுகிறான்
சாங்கியம் - சடங்கு
சிலுவாடு - சிறு சேமிப்பு
சீரழி - நிலைகுலைதல் (அங்கிங்கே அலைந்து சீரழியவேண்டாம்)
சீராட்டு - கோபம். (கட்டிக் கொடுத்து மூன்றுமாசம் கூட ஆகலை. அதுக்குள்ளே பிள்ளை சீராடிட்டு வந்துவிட்டது)
சுல்லான் (சுள்ளான்?) - கொசு
செகுனி, செவுனி - தாடை/கன்னம்
செம்புலிகுட்டி - செம்மறியாட்டுக்குட்டி
சோங்கு - சோலைபோலும் மரஞ்செடித்தொகுதி
சேந்துதல் - தண்ணீர் இறைப்பது (கிணற்றிலே இருந்து தண்ணீர் சேந்தி வா = தண்ணீர் இறைத்துக்கொண்டு வா )
தாரை - பாதை
தொண்டுபட்டி - மாடு/ஆடு அடைக்கும் இடம், தொழுவம் - ஆட்டைத் தொண்டுபட்டியிலே அடை
துழாவு - தேடு
திரட்டி (திரட்டு) - பெண்ணின் முதிர்ச்சி விழா, பூப்பு நன்னீராட்டு விழா
நங்கை, நங்கையாள் - அண்ணி நாத்தனார்
நலுங்கு - உடல் நலம் குன்றிய ( குழந்தைகள் உடல் நலம் குன்றி இருந்தால் மட்டுமே நலுங்கு என்ற சொல்லை புழங்குவார்கள், பெரியவர்களுக்கு இச்சொல்லைச் சொல்ல மாட்டார்கள் - அவர்கள் குழந்தை நலுங்கிவிட்டதாம்)
நசியம் - மாடுகள் சினையாகும் பருவம்
நியாயம் (நாயம்) - பேச்சு ( அவன் பேச்சு யாருக்கு வேணும் - அவன் நியாயம் யாருக்கு வேணும், அங்கே என்னடா பேச்சு - அங்கே என்னடா நாயம் )
நீசதண்ணி- பழையசோற்றுத்தண்ணி
நோக்காடு - நோய், வலி: அவனுக்கென்ன நோக்காடோ தெரியலை. இன்றைக்கு வரக் காணோம்.
நோன்பு (நோம்பி) - திருவிழா
பகவதியாயி நோன்பு (பவுதியாயி நோம்பி) - பகவதி அம்மன் திருவிழா
படு - குளம்போன்ற ஆழமில்லாத நீர்நிலை
பழமை - பேச்சு ( அங்கே என்ன பேச்சு - அங்கே என்ன பழமை )
பாலி - குளத்தை விடச் சிறிய நீர்நிலை.
பிரி - பெருகு, கொழு ("பெண்கள் மாசமாக இருக்கும்பொழுது வயிறு பிரியும்")
வட்டல் -தட்டு
புண்ணியாசனை - (< வடமொழி: புண்யாகவசனம்) புதுமனை புகுவிழா
பெருக்கான் - பெருச்சாளி
பொக்கென்று - வருத்தமாக (மிட்டாய் தரேனென்று சொல்லிட்டுத் தராமல் இருந்தால் குழந்தை பொக்கென்று போயிடும்)
பொட்டாட்டம் - அமைதியாக
பொடக்காலி - புழக்கடை
பொடனி, பொடனை - (புடனி, பிடனி, பிடரி) பின்கழுத்து
பொழுதோட- மாலைநேரம்
பொறந்தவன் - உடன் பிறந்த சகோதரர்
பொறந்தவள் - உடன் பிறந்த சகோதரரி
மச்சாண்டார் - கணவனின் அண்ணன்
கொழுந்தியாள் - கணவனின் தங்கை
மலங்காடு - மலைக்காடு
மசையன் - விவரமற்றவன்
மழைக்காயிதம் - பாலிதீன் காகிதம்
மளார் - விரைவாக, சீக்கிரம் (மளார் என்று தனியாக சொல்லமாட்டார்கள். மளாரென்று வா\போ, மளாரென்று வேலையை முடி என்று அடுத்த சொல்லோடு இணைந்து தான் இச்சொல் வரும்)
முக்கு - முனை, முச்சூடும்- முழுவதும்,. மூலை, வளைவு
வெகு - அதிக
வேளாண்மை (வெள்ளாமை) - உழவு, விவசாயம்
வேசகாலம்- வெய்யில்காலம்
வேகு வேகுன்னு- அவசரஅவசரமாய்
சீக்கு - நோய்
பன்னாடி - கணவன், முதலாளி (பண்ணைக்கு சொந்தக்காரன்)
முட்டுவழி - முதலீடு
கொழு -ஏர்மனை
கொடாப்பு ‍- கோழிகளை அடைத்து வைக்கப் பயன்படும் பெரிய கூடை (தென் மாநிலங்களில் பஞ்சாரம் என்று சொல்லப்படும்)

மங்கலவாழ்த்து

கொங்கு வேளாளர் கலியாணங்களில் நடைபெறும் மிக முக்கியமான சடங்குச்சீர்களில் ஒன்று மங்கலவாழ்த்து. குடிமகன் அல்லது மங்கலன் என்று அன்புடன் அழைக்கப்படும் நாவிதர்குலப் பெருமகன் இதனைப் பாடுவார். ஒவ்வொரு நிகழ்ச்சியாக மங்கலன் சொல்லி நிறுத்தும்போதும் மத்தளத்தில் மேளகாரர் ஒருமுறை தட்டுவார். "இது கவிச்சக்கிரவர்த்தி கம்பர் பெருமானால் பாடிக் கொடுக்கப்பட்டதென்று கொங்குநாட்டார் அனைவரும் நம்புகிறார்கள்" என்று 1913-ல் பதிப்பித்த திருச்செங்கோடு அட்டாவதானம் முத்துசாமிக் கோனாரவர்கள் குறிப்பிடுகிறார்கள். திருமண முறைகளை எளிய நாட்டு வழக்கச் சொற்களால் ஒழுங்குபெற அமைத்துப் புலவர்பிரானார் இதனை அருளினர்போலும். அதற்கேற்ப இவ்வாழ்த்தினுள் 'கங்காகுலம் விளங்கக் கம்பர் சொன்ன வாழ்த்துரைத்து' எனவரும் அடியாலும் கம்பர் குலத்தார்கள் அகவலும் தரவும் விரவிவரப் பாடினார்கள் என்று கொள்க.

கள்ளுக்கு எதற்கு தடை?

கள்ளுக்கு எதற்கு தடை?

கள் தமிழ்நாட்டின் சுதேதி பானம்

சங்க காலத்தில் உணவின் ஒரு பகுதியாக கள் இருந்து வந்துள்ளது. இதை யாரும் தவறாக எடுத்து கொள்ளவில்லை

கள்ளும், கரும்புசாறும் ஏறத்தாழ ஒன்றுதான். காலை மாலை என இருவேளை இறக்கும் கள் போதை தராது. புளித்து போனால் தான் போதை தரும். புளிக்காத கள் ஒரு சத்தான உணவு என்பது மகாத்மா காந்தி போன்ற மகான்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று

சுதந்திர இந்தியாவில் மது விளக்கை அமல்படுத்த முடியாத காரணத்தினால், குஜராத் மாநிலத்தை தவிர இந்தியா எங்கிலும் மது விளக்கு கைவிடப்பட்டு விட்டது

தமிழ்நாட்டில் கூடுதலாக கெடுதி விளைவிக்க கூடிய அயல்நாட்டு இந்திய தயாரிப்பு மது வகைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது

உலக அளவில் சுதேதி மதுவிற்கு தடையும் விதேதி மதுவிற்கு அனுமதியும் கொடுத்து இருப்பது தமிழ்நாட்டை தவிர வேறு எங்கும் இருக்க முடியாது

கள் உணவு ஊட்டதிற்கான சத்துக்களை கொண்டுள்ள ஒரு இயற்கையான பானம். சில நேரங்களில் மருந்தாகவும் பயன்படுகின்றது.உடல் நலத்திற்கு தீங்கு தராது. பக்க விளைவு இல்லாதது. இதில் போதைக்கு காரணமான அல்கஹோலின் அளவு குறைவு. அதே நேரத்தில் மதுவில் போதை ஊட்டும் அல்கஹோலை தவிர வேற எதுவும் இல்லை

கள்ளை விட மது கூடுதலான கெடுதி விளைவிக்க கூடியது என்பது விஞ்ஞானிகளாலும், மருதுவர்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை. அனைத்து மக்களுக்கும் இது தெரியும்

இனிவரும் காலங்களில் ஆவது விவசாயத்தின் நலன் காக்கவும், தேங்காய் உற்பத்தியை பாதுகாக்கவும், தென்னை நோயை கட்டுப்படுத்தவும் பயன் பட கூடிய கள் உற்பத்திக்கு அரசாங்கம் ஒரு நல்ல தீர்வு காண வேண்டும் என்பதே 2 கோடி வேளாளர்களின் எதிர்பார்ப்பாகும்.

தென்துருவத்துக்கும், வடதுருவத்துக்கும் உள்ள வித்தியாசம்!

நம்மில் பலர், தென்துருவமான அண்டார்டிக்கும், வடதுருவமான ஆர்ட்டிக்கும் ஒன்று போல இருக்கும் என்றுதானே எண்ணிக்கொண்டிருக்கிறோம்? ஆனால் உண்மை நிலை என்ன தெரியுமா?
தென்துருவம், அண்டார்டிகா என்ற நிலப்பகுதியால் ஆனது. வடதுருவப் பகுதியோ ஆர்ட்டிக் பெருங்கடலால் ஆன நீர்ப்பகுதி. இப்பெருங்கடலை வடஅமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா கண்டங்களின் முனைப் பகுதிகள் சூழ்ந்திருக்கின்றன. தென்துருவம் நிலம். வடதுருவம் நீர்.
வடதுருவப் பகுதியில் மனிதர்கள், விலங்குகள், சில தாவரங்கள் அப்பகுதியின் சூழ்நிலைக்கு ஏற்பத் தங்களை மாற்றிக்கொண்டு வாழும் நிலை இருக்கிறது. தென்துருவப் பகுதியிலோ, நிலப் பகுதி விலங்குகள் எதுவுமே கிடையாது. அங்கேயே வாழும் மனிதர்களும் இல்லை. செடி, கொடிகள் என்றால் சிலவகைப் புற்கள், பாசிகள் மட்டும்தான்.
ஆனால் இப்பகுதியில் பெங்குவின் பறவைகள் மட்டும் மகிழ்ச்சியாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. காரணம் அங்கு அவற்றுக்கு நிலத்தில் காணப்படும் எதிரிகள் கிடையாது.
தட்பவெப்பநிலை? தென்துருவத்தில் கடுங்கோடையிலும் வெப்பம் மிகக் குறைந்து குளிர் வாட்டி எடுக்கும். மழைக் காலத்திலோ கடும் பனிப்புயல் வீசிக்கொண்டேயிருக்கும்.
வடதுருவத்திலோ, கடற்பகுதியில் இருந்து காற்றலைகள் எழும்பி தட்பவெப்பத்தைச் சற்று மிதப்படுத்துகின்றன. தென்துருவத்தில் கடுங்கோடையிலும் தட்பவெப்பம் 0 டிகிரி அல்லது அதற்கும் கீழேதான். எப்போதாவது அபூர்வமாய் 30 முதல் 40 டிகிரி வரை ஏறுவதுண்டு. மழைக் காலத்திலோ கேட்கவே வேண்டாம். மைனஸ் 30 முதல் 40 டிகிரிக்கு கீழேதான்.

Monday, May 28, 2012

400 கோடி ஆண்டு விண்கல் துணுக்குகள்!

400 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியில் மோதிய விண்கல் துணுக்குகளை அமெரிக்காவில் ஒரு விண்கல் ஆய்வாளர் கண்டுபிடித்திருக்கிறார்.
இந்த 30 சிறிய விண்கல் துணுக்குகள், கலிபோர்னியாவின் சியரா மலை அடிவாரத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.
யதேச்சையாக இவற்றைக் கண்டுபிடித்த கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜான் வேஸன், ஒவ்வொரு துணுக்கும் தலா 10 கிராம் எடை இருப்பதாகக் கூறுகிறார். மேலும், இவை கார்பனேசியஸ் காண்ட்ரைட் என்ற அரியவகை விண்கற்களின் பகுதிகள் என்று தான் பார்த்தவுடனே புரிந்துகொண்டதாகவும் கூறுகிறார். இவை எல்லாம் ஒரே விண்கல்லின் பகுதிகளாக இருக்க வேண்டும் என்பது இவரது கருத்து.
எரிந்துகொண்டு வந்து பூமியில் மோதிய ஒரு விண்கல்லின் பகுதிகளான இவை, சூரியக் குடும்பம் உருவான 400 முதல் 500 கோடி ஆண்டு காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும் என்பது விண்வெளி ஆய்வாளர்களின் எண்ணம். குறிப்பிட்ட விண்கல் பூமியில் மோதியபோது, ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டைப் போல மூன்றில் ஒரு பங்கு தாக்கத்தை ஏற்படுத்தி யிருக்கக்கூடும் என்கிறார்கள்.
தற்போது ஒவ்வொரு விண்கல் துணுக்கும் தங்கத்தை விட பத்து மடங்கு மதிப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்த விண்கல் துணுக்குகள், விஞ்ஞானிகளின் சிந்தனையை புதிய திசை நோக்கித் திருப்பியுள்ளதால், ஆய்வுகள் சூடு பிடித்துள்ளன.

Saturday, May 26, 2012

கொங்கு வேளாளர் திருமண சீர்கள்

கொங்கு வெள்ளாளர் இல்லத் திருமணச்சீர்கள்

கொங்கு வெள்ளாளர் இல்லத் திருமணம் தொடர்ச்சியாக மூன்று நாள் விழாவாக நடைபெறும்.

முதல் நாள்

"நாள் விருந்து" இதை சோறாக்கி போடுதல் என்றும் கூறுவர். இன்று மணமக்களின் உறவினர்கள் மணமக்கள் வீடுகளுக்கு வந்து விருந்து வைப்பார்கள். இச்சடங்கு மணமகன் மற்றும் மணமகள் இருவர் வீட்டிலும் நடக்கும். விருந்துக்கு வேண்டிய அனைத்து பொருட்களையும் உறவினர்களே வாங்கி வருவர். நாள்விருந்தன்றே வீட்டில் பந்தலிடுவார்கள்.

இரண்டாம் நாள்

"கலியாண நாள் அல்லது முகூர்த்த கால்"
.

இன்று நாள் விருந்தன்று கட்டிய பந்தலில் வாழை, தென்னங்குருத்தோலை முதலியவற்றை கட்டுவர். அருமைப்பெரியவருடன் மூவர் சென்று முகூர்த்த கால் வெட்டி வருவர். முகூர்த்த காலாகப் பால் மரத்தில் முக்கொம்பு கிளை வெட்டப்படும். பொதுவாக ஆல மரம், அரச மரம், பாலை மரங்களில் இது வெட்டப்படும். காலை முதல் மாலை வரை விருந்து நடைபெரும் ஆனால் மணமக்கள் அன்று காலை முதல் விரதம் இருப்பர்.

இரவில் மங்கல நீராடிய பின்னரே மணமக்கள் விரத உணவு உண்பர். இரவு விருந்துக்குப் பின் பச்சைப் பந்தலில் சனி மூலையில் காலையில் வெட்டி வந்திருந்த முகூர்த்தக்காலை நடுவார்கள். நவதானியங்களை காசுடன் சேர்த்து அதில் முடிச்சிட்டு செஞ்சாந்து, மஞ்சள் பூசி முகூர்த்தக்காலில் வைப்பர். முகூர்த்தக்காலிட்டப்பின்னரே மற்ற சடங்குகளை செய்வர்.

"கங்கணம் கட்டுதல்"

அருமைப்பெரியவர் கணுவில்லாத விரலி மஞ்சளை எடுத்து அதை மஞ்சள் தோய்த்த நூலில் கட்டி விநாயகர் முன்பு வைத்து அதற்கு தூப தீபம் காட்டி மணமக்களின் வலது கையில் கட்டி விடுவார்.

"நிறைநாழி செய்தல்"

வட்ட வடிவிலான இரும்புப் படியில் நெல்லை நிறைத்து, நூல் சுற்றிய இரட்டைக்கதிரை அதில் பதித்து வைப்பர். இது நிறைநாழி எனப்படும். இதனை ஒரு பேழையில் வைப்பர், அருமைக்காரர் செய்யும் ஒவ்வொரு பூசையின் போதும் இதனை எடுத்து சுற்றிக்காட்டுவார்.

"இணைச்சீர்"

இது மணமகன் வீட்டில் மட்டும் நடைபெறும் முக்கியச் சடங்காகும். மணமகனின் சகோதரி இதில் முக்கிய பங்கு வகிப்பவர். இவர் மணப்பெண் போல அலங்கரிக்கப்பட்டிருப்பார், இவர் சும்மாட்டின் மீது மூங்கில்களால் வேயப்பட்ட பேழைமூடியை சுமந்து வருவார். இதனுல் தாலியும் குழவிக்கல்லும் இருக்கும். சொம்பு நீரைக் கொடுத்து அருமைக்காரி இவரை அழைத்து வருவார். அருமைக்காரர் வெற்றிலை பாக்கு கொடுத்து மடியில் கட்டிக்க சொல்லுவார். பின் கூறைச்சேலையை கொசுவ மடிப்பில் மடித்து ஒரு புறத்தை மணமகன் கக்கத்திலும் மறுபுறத்தை சகோதரி கையிலும் அருமைக்காரர் கொடுப்பார். பின் இருவருக்கும் அருகு மணம் செய்து வைத்து இருவரையும் திருமண வீட்டிற்குள் அனுப்பி வைப்பார். இணைச்சீரின் போது இணைச்சீர்காரி (சகோதரி) கொண்டு வரும் கூறைப்புடவையை தான் முகூர்த்தத்தின் போது மணப்பெண் அணிந்து வரவேண்டும்.

மணமகன் மணமகள் வீடு செல்லும் முன் நாட்டார் கல்லை மேள தாளங்கள் முழங்க வலம் வந்து மரியாதை செலுத்துவார். தாயை வணங்கி சீர் கூடையுடன் சுற்றம் சூழ ஊர்வலமாக மணமகள் ஊரை அடைந்து அங்குள்ள பிள்ளையார் கோயிலில் தங்குவர். மணமகன் வீட்டார் பிள்ளையார் கோயிலில் தங்கியிருப்பதை அறிந்த மணமகள் வீட்டார் தங்கள் சுற்றம் சூழ மேள தாளங்களுடன் சென்று மணமகன் வீட்டாரை வரவேற்று, மணவீடு அருகே அமைந்துள்ள மணமகன் அறையில் மணமகனை தங்க வைப்பர்.

மூன்றாம் நாள்

"முகூர்த்தம் இதை தாலி கட்டு" என்றும் அழைப்பர். அருமைக்காரர் வாழ்த்து பாடி தாலியை எடுத்துக் கொடுக்க மணமகன் மணமகள் கழுத்தில் 3 முடிச்சுப்போட்டு மங்கல் நாணை கட்டுவார்.



தம் மக்களுக்கு மணம் முடிக்க பெற்றோர் பருவம் பார்த்தல்

மணமக்களுக்கு பொருத்தம் பார்த்தல்
வாசல் கவுலி குறிப்பு கேட்டறிதல்
மாப்பிள்ளை வீட்டார் நிச்சயார்த்தம் மூலம் பெண்ணை உறுதி செய்தல்
அருமைப் பெரியவர்களுக்கு தாம்பூலம் வழங்குதல்
திருமணநாள் குறித்து பெண் மடியில் வெற்றிலை கட்டுதல்
தட்டார் பூட்டும் தாலிக்கும் பொன்னோட்டம் பார்த்தல்
மணநாள் குறித்து தேன்பனை ஓலை எழுதல் (பத்திரிக்கைக் அச்சடித்தல்)
முகூர்த்த நெல் போட்டு வைத்தல்
விறகு வெட்டி பிளந்து மூன்று கத்தையாகக் கட்டுதல்
சம்மந்திகள் உப்புச்சக்கரை மாற்றி சிகப்பு பொட்டு வைத்தல்
மாப்பிள்ளை வீட்டில் பருப்பும் சோறும் விருந்துண்ணல்
பதினெண் கட்டுக் கன்னிகளுக்ளூக்குத் தாம்பூலம் கொடுத்தல்
பெண்ணெடுக்கும் மாமனுக்குத் தாம்பூலம் வழங்குதல்
இணைச்சீர் செய்யும் சகோதரிக்கும் தாம்பூலம் வழங்குதல்
பெண் கூரைச்சேலை சோமான் உருமாலை வாங்குதல்.
பெண் வீட்டில் பந்தல் போடுதல்
மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிற்குப் புறப்படுதல்.
எழுதிங்கள்காரர், மூத்தோர் வீடுமெழுகுதல்.
எழுதிங்கள் சீர்சாமான்கள், நிறைநாழி, முக்காலி, மண்மேல்பலகை பேழைக்கூடைசீர், படி விநாயகர்பூஜை சேகரித்து வைத்தல்
விரதவிருந்து
மணமகள் வீட்டார் சீர்தண்ணீர் கொண்டுவருதல்
முகூர்த்தக்கால் வெட்டி வர மணமக்களின் வீட்டார்கள் பால் மரத்திற்கு பூஜை செய்தல்
வினாயகர் பூஜையுடன் மாப்பிளை வீட்டார் முகூர்த்தக்கால் போடுதல்
பசுமாட்டு சாணத்தில் தரைமெழுகி பிள்ளையார் பிடித்து அருகு சூடுதல்
மணமகன் வீட்டில் வெற்றிலை மூட்டை கட்டுதல்
மணமகள் வீட்டில் சீர்தண்ணீர் கொண்டு வருதல்
கணபதி பூஜையுடன் பெண் வீட்டார் முகூர்த்தக்கால் போடுதல்
வெற்றிலைக் கூடையை பேழைக்கூடையில் வைத்து பூஜை செய்து பெண் மடியில் 30 வெற்றிலை கட்டி கணபதியை கும்பிடுதல்
மணமக்கள் வீட்டார் மணநாள் குறித்தல்
மாலை வாங்கல்
சிறப்பு வைத்தல், கரகபானை புடச்சட்டி வாங்குதல்
மேல்கட்டு கட்ட கட்டுக்கன்னிக்குத் தாம்பூலம் வழங்குதல்
பிரமன் பூஜை செய்து மணமக்களை வீட்டிற்கு அழைத்து வருதல்
மணமகளுக்குத் தண்ணீர் வார்த்தல்.
மணமகனுக்கு முகவேலை செய்ய குடிமகனுக்கு தாம்பூலம் வழங்குதல், மணமகனுக்கு முகம் வழித்துத் தண்ணீர் வார்த்தல்
மணமகனுக்கு ஆக்கைப் போட்டு தண்ணீர் வார்த்தல்
மணமக்களுக்கு பட்டினி சாப்பாடு போடுதல்
குலதெய்வத்திற்கு குப்பாரி போடுதல்
கங்கணம் கட்டுதல்
நாட்டுக்கல் சீர் செய்தல்
மணமகனுக்கு செஞ்சோறு சுற்றி எரிதல்
இணைச்சீர் மணவறை அலங்காரம் மடியில் வெற்றிலை கட்டுதல்
மங்கள வாழ்த்தை குடிமகன் சொல்லுதல்
அருகுமணம் எடுத்து வாழ்த்துதல்
தாயார் மகனுக்கு தயிர் அன்னம் ஊட்டுதல்
மகன் தாயை வணங்கி, ஆசிபெற்று பூங்கொடிக்கு மாலை சூடல்
மணமகன் குதிரைமேல் செல்ல மடத்தான் குடைபிடித்தல்
நாழி அரிசிக்கூடை
மாப்பிள்ளையை விடுதி வீட்டிற்கு அழைத்துச் செல்லல்
பொன்பூட்ட வந்தவருக்கு பூதக்கலம் தான் படைத்தல்
தாய்மாமன் பால்பழம் உண்ணல்
மாமன் பொட்டிட்டு பொன்முடித்து பட்டம் கட்டி பெண் எடுத்தல்
வாசல் படியில் நெல் போடுவது
மணவறை அலங்காரம்
மணமக்களை அலங்கரித்தல்
மணமக்களை மணவறைக்கு அழைப்பது
சூரிய நமஸ்காரம் செய்து மணமகள் மணமகனின் கால் கழுவுதல்
மண்மேல் பணம்
ஓமம் வளர்த்தல்
மாங்கல்யத்திற்கு கணபதி பூஜை செய்தல்
வெண்சாமரம் வீசுதல்
தாசி சதுராடுதல்
மணமகன் மணமகளுக்கு மாங்கல்யம் அணிவித்தல்
பெரியோர்கள் ஆசிகூறல்
மைத்துனர் கைகோர்வை
மங்கள வாழ்த்து குடிமகன் சொல்லுதல்
அருகுமணம் எடுத்து வாழ்த்துதல்
மணமகளுக்கும் மணமகனுக்கும் கங்கணம் அவிழ்த்தல்
பாத பூஜை
தாரை வார்த்தல்
குங்குமம் இடுதல்
ஆரத்தி எடுத்தல்.
மணமக்கள் மணவறையைச் சுற்றி வருதல்
மணமக்களை இல்லத்திற்கு அழைத்தல்.
உள் கழுத்துதாலி அணிதல்.
மொய்காரி.
பரியம் செல்லுதல்.
ஊர்பணம்.
கூடைச்சீர்.
பந்தல்காரி செலவு.
மணமகனுக்கும் மணமகளுக்கும் தண்ணீர் வார்த்தல்.
மணமக்களுக்கு புதுப்புடவை, சோமன் உருமாலை தரல்.
மணமகனுக்குச் மணமகள் தட்டுவாச்சாதம் போடுதல்.
மணமன் மோதிரத்தை மைத்துனன் பிடுங்குவது.
கரகம் இறக்குதல்
மாப்பிள்ளை வீட்டில் பெண் காண்பது.
மணமக்களு தாயார் பால் அன்னம் ஊட்டல்.
மணமக்கள் விநாயகர் கோயிலில் வழிபடல்.
மணமக்களுக்கு மிதியடி அணிவித்தல்.
பெரியோர்களை தம்பதிகள் கும்பிட்டு மஞ்சள் நீராடுதல்.
வினாயகருக்கு மடக்கில் பானைப்பொங்கள் வைத்தல்.
வினாயகர் கோயிலில் சம்மந்தம் கலக்குவது.
மணமகள் எடுத்தமாமனுக்கு விருந்து வைத்தல்.
புலவர் பால் அருந்துதல்
மாமன் சீர்வரிசை.
பெற்றோர் மணமக்களுக்கு சீர்வரிசை
மணமக்களை மணமகன் வீட்டிற்கு அழைத்துச்செல்லல்
மணமகள் ஊர் கிணற்றில் தாம்பூலம் விட்டு தண்ணீர் கொண்டு வருதல்
மணமக்களுக்குத் தண்ணீர் வார்த்தல்
மணமகள் விளக்கு ஏற்றுதல்
மணமக்களை பெண்வீட்டிற்கு அழைத்து வருதல்
சாந்தி முகூர்த்தம்
மாக்கூடை கொண்டு செல்லுதல்
மணமகன் சகோதரி மணமக்களை மணமகன் வீட்டிற்கு அழைத்து வருதல்
குலதெய்வ கோயிலுக்கு கல்யாணபடி கொண்டு செல்லுதல்
மணமகள் வீட்டில் மணமகனுக்கு எண்ணெய் நீர் குளிப்பாட்டி விருந்து வைத்தல்
மணமகன்
சகோதரி மணமக்களுக்கு விருந்து வைத்தல்

கொங்கு வேளாளர் திருமண சீர்கள்

திருமணம் என்பது ஒருவர் வாழ்வில் நடைபெறும் மிக முக்கியமான நிகழ்வாகும். திருமணம் ஆனவர்கட்கு மாங்கிலிய வரி வாங்கும் கொங்குச் செப்பேடு ஒன்று திருமணம் ஆகாதவர்களைப் ‘பயலாள்’ என்று குறிக்கிறது. திருமணமே ஒருவரை முழுமையாக்குகிறது. சமூகத்தில் அவர்களுக்கு மதிப்பை அளிக்கிறது.

தொன்மையான கொங்கு வேளாளர் சமூகத்தின் திருமணச் சீர்கள் தனித்தன்மை வாய்ந்தது என்றும், மிகப் பழமையான பண்பாட்டுக்கு உரியது என்றும் மானிடவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வேகமாகச் செல்லும் இயந்திரமயான உலகில் இன்று மூன்று நாள் திருமணம் மிக அருகி வருகிறது. நெருங்கிய உறவினரை அழைத்துக் கோயிலில் திருமணத்தை முடித்து ஒரு மண்டபத்தில் மூன்று மணி நேர வரவேற்போடு திருமணத்தை முடித்து ஒரு மண்டபத்தில் மூன்று மணி நேர வரவேற்போடு திருமணத்தை முடித்து விடுகின்றனர்.

காதல் மணத்துடன், பெற்றோர் சம்மதத்தோடு நடைபெறும் பிற மத, இன, மொழி, சாதித் திருமணங்கள் பெருகி வருகின்றன. எனவே, திருமணச் சீர்கள் குறைந்தாலும், மறைந்தாலும் சமுதாயப் பண்பாட்டைக் காக்கும் எண்ணத்தோடு சீர்களின் சிறப்புக்கள் இங்கு தொகுத்து வழங்கப்படுகின்றன. இன்னும் விரிவாக இவைகளைப் படத்துடன் ஆவணப்படுத்த வேண்டும். அதற்கு முன் முயற்சியே இச்சீர்கள் பற்றிய தொகுப்பாகும்.

சீர்கள் தொடக்கம்

சங்க அகப்பொருள் இலக்கணங்களில் கூறப்பெறும் ‘களவு’ மணத்தில் சீர்கள் இல்லை. தொன்மை ஆய்வாளர்கள் பண்டைச் சமுதாய வாழ்வில் சீர்கள் இல்லை என்றே கூறுகிறார்கள். முல்லை நில ஆயர் மகள் காளையை அடக்கியவனுக்கு மாலையிட்டார். அங்கும் சீர்கட்கு இடம் இல்லை.

முன்பு வாழ்ந்த இல்லற வாழ்வில் நாளடைவில் ‘பொய்’ ‘வழு’ இவை தோன்றின. எனவே, சமூகப் பெரியவர்கள் அவை ஏற்படா வண்ணம் பலர் சாட்சியோடு, பலர் கூடிச் செய்யும் சில சீர்களை ஏற்படுத்தினர் என்று கூறுகிறார் தொல்காப்பியர்.

‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்ப’

என்பது தொல்காப்பிய நூற்பா. ஐயர் என்பது சான்றோராகிய பெரியவர்களைக் குறிக்கும். கரணம் என்பது சீர்களாகும்.

திருமண முன் ஏற்பாடு

மணமகன், மணமகளின் பெற்றோர் தங்கள் மக்களுக்குத் திருமண வயது வந்தவுடன் திருமணம் செய்வதற்கு ஏற்ப ‘குருபலன்’ வந்துவிட்டதா? என்று தெரிந்து கொள்வர். முன்பு பெரும்பாலும் கொங்கு வேளாளர் சமுதாயத்தில் மணமகன் அத்தை, தாய்மாமன் வீட்டுப் பெண்களையே திருமணம் முடிப்பது வழக்கம். அப்பெண்ணை ‘உரிமைப் பெண்’ என்று அழைப்பர்.

அந்நாளில் சாதகப் பரிவர்த்தனை நிறுவனங்கள் எதுவும் கிடையாது. மணமகன்-மணமகள் வீட்டாரிடையே செய்திகள் பரிமாறிக் கொள்ள இடையில் இருப்பவரை ‘தானாவதிக்காரர்’ என அழைப்பர். அவர் மூலம் சாதகம் பெற்றுப் பொருத்தம் பார்க்கச் செல்லும் போதே நல்ல நாள், நல்ல நேரம் பார்த்துச் ‘சகுனம்’ வழியில் நன்றாக இருக்க வேண்டும் என விரும்புவர். பூனை குறுக்கே போகக் கூடாது. விறகுக்கட்டு எதிரே வரக்கூடாது. வண்ணான் அழுக்கு மூட்டை எதிர்வருவது, கழுதை கத்துவது நல்லது; பறவை- விலங்கு வலம் போக வேண்டும் என பலவற்றை எதிர்கொண்டு அதன்படி நடப்பர்.

ஒரே குலத்தில் பெண் எடுக்கும் ‘அகமணம்’ கொங்கு வேளாளரிடை இல்லாத காரணத்தால் முதலில் கூட்டத்தை (குலத்தை) விசாரித்து அறிவர். பொருத்தம் பொருந்தி வந்தால் கூடச் சிலர் குலதெய்வக் கோயிலில் ‘பூவாக்கு’ கேட்டோ அல்லது ‘பல்லி சகுணம்’ கேட்டோதான் மேற்கொண்டு செயல் செய்யத் தொடங்குவர்.

‘பல்லியும் பாங்கொத்து இசைத்தன

நல்எழில் உண்கண ஆடுமால் இடனே’

என்று சங்க இலக்கியத்திலேயே சகுணம் பற்றிய குறிப்பு வருகிறது.

பெண் பார்த்தல்

சாதகம் பொருந்தியவுடன் பெண் பார்க்கும் நிகழ்வை கொங்குச் சமுதாயம் அண்மைக்காலம் வரை வெளிப்படையாகச் செய்வது இல்லை. பத்துப்பேர் கூடிக் சென்று பெண்ணை சிற்றுண்டி, காப்பி கொடுக்கச் செய்து, நடக்கச் செய்து, பாடச் சொல்லிப் பின்னர் பெண் பிடிக்கவில்லை என்று கூறுவதைக் கொங்குச் சமுதாயம் நாகரிகமுடையதாகக கருதவில்லை என்பதே இதற்குக் காரணம் ஆகலாம்.

கோயிலுக்கு அழைத்துச் சென்றோ, கிராமம் ஆயின் தண்ணீர் எடுக்கச் செல்லும்போதோ அல்லது ஏதாவது திருவிழவின்போதோ பெண்ணை செய்யும்போதோ பெண்ணைப் பார்க்குமாறும் செய்வர்.

‘காட்டுக்குக் களை வெட்டினது போலவும் இருக்கணும்

வீட்டுக்குப் பெண் பார்த்தது போலவும் இருக்கணும்’

‘ஆடு மேச்ச மாதிரி

அண்ணனுக்குப் பெண் பார்த்த மாதிரி’

என்ற பழமொழிகளும் இதனை விளக்கும். இருவீட்டார் சம்மதம் ஆனவுடன் அருமைக்காரருக்குச் சொல்லச் செல்வர்.

நிச்சயதார்த்தம்

ஒரு நல்ல நாளில் நிச்சயதார்த்தப் புடவை, நகை, மங்கலப் பொருள்களுடன் மணமகன் வீட்டார் தங்கள் நெருங்கிய சுற்றமுடன் மணமகள் வீடு செல்வர். மாத்து விரிக்கப்பட்ட தரையின் இடையில் மங்கலப் பொருள் முன் அருமைக்காரர் அமர்ந்திருப்பார்.

அவர் முன் எதிர் எதிராக இரு வீட்டாரும் அமர்வர். மணமகன் வீட்டுச் சார்பில் பெண் கேட்க வந்ததாகக் கூறப்படும்.

பெண் வீட்டார் சார்பில் சம்மதம் தெரிவித்தபின் இரு வீட்டாரும் வெற்றிலை-பாக்கு மாற்றிக் கொள்வர்.

அருமைக்காரர், பெண் வீட்டு மங்கலப் பெண்களிடம் நீர் விளாவி தூபம் காட்டி மணமகன் வீட்டுத் தட்டத்தைக் கொடுப்பார். மணப்பெண் மணமகன் வீட்டார் கொண்டு வந்த நகையை அணிந்து சேலையை உடுத்தி வெற்றிலை, பாக்கு, மஞ்சள், எலுமிச்சம் பழம் இவைகளை மடியில் கட்டி வந்து சபையில் அமர்ந்து எல்லோரையும் கும்பிடுவாள். பெரியவர்களை வணங்குவாள். மணமகன் வீட்டுப் பெண்கள் மணமகளுக்குச் சந்தனம் பூசிப் பூ வைப்பர். முடிவு செய்த திருமணத் தேதியை சபையில் அனைவருக்கும் அறிவிப்பர்.

இப்போது சிலர் மேற்கண்ட நிகழ்வை ‘உறுதிவார்த்தை’ என்று சுருக்கமாக முடித்து விட்டு அழைப்பிதழ் அச்சிட்டு திருமண மண்டபத்தில் நிச்சயதார்த்தத்தை நடத்துகின்றனர். இது ‘நிச்சய தாம்பூலம்’ என்றும் கூறப்படும்.

நிச்சயதார்த்தத்தில் திருமண நாள் குறித்து அறிவிப்பது மிக முக்கியம். நிச்சயம் முடிந்து உறுதியாகும்வரை ஒருவர் வீட்டில் மற்றவர் சாப்பிட மாட்டார்கள். ‘உறுதியாகும் வரை கை நனைக்கக் கூடாது’ என்பர். நிச்சயதார்த்தத்தில் விருந்து உவசாரம் முதலில் நடைபெறுவதால் ‘பருப்புச்சாத விருந்து’ என்றும் அழைப்பர். மங்கல வாழ்த்தில் இந்நிகழ்ச்சி

‘உரியவர் வந்திருந்து உங்களுக்கு என்று சொல்லி

நாளது குறித்து நல்விருந்து உண்டு’

என்று கூறப்படுகிறது. நிச்சயதார்த்தத்திற்கு மணமகன் செல்வது முன்பு வழக்கம் இல்லை.

மாங்கல்யத்திற்குப் பொன் கொடுத்தல்

நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் மணமகன் வீட்டார் கொண்டு வந்த மாங்கல்யம் செய்வதற்குரிய தங்கத்தை மங்கலப் பொருள்களோடு அழைக்கப்பட்டுள்ள ஆசாரியாரிடம் கொடுப்பர். சில இடங்களில் ஆசாரியார் அங்கேயே உலை வைத்துப் பணியைத் தொடங்குவதும் உண்டு. ஆசாரியார்க்குப் பால் கொடுத்து அருந்தச் செய்வர். பால் சாப்பிட்ட வீட்டுக்குப் பாதகம் செய்யக் கூடாது என்பது பழமொழி அல்லவா?.

இதனை மங்கல வாழ்த்து ‘பூட்டு தாலிக்குப் பொன்னது கொடுத்து’ என்று கூறுகிறது. கொங்கு வேளாளர் தாலி முப்பிரிவு உடையதாய் நடுவே உயர்ந்திருக்கும். முப்பிரிவு சிவன், திருமால், பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளைக் குறிக்கும் என்பர். நிச்சயதார்த்தம் முடிந்தபின் இரு வீட்டாரும் அமங்கல நிகழ்ச்சிகட்குச் செல்ல மாட்டார்கள்.

உப்புச் சர்க்கரை மாற்றுதல்

நிச்சயதார்த்தம் முடிந்தபின் சில நாட்களில் இரு வீட்டாரும் கூடைகளுடன் கடைக்குச் சென்று தனித்தனியாக உப்பும், சர்க்கரையும் வாங்கி இருவரும் பரிமாறிக் கொள்வர். ‘நன்மையிலும், தீமையிலும் நாம் இனிமேல் ஒருவருக்கொருவர் பங்கு கொள்ள வேண்டும்’ என்பது இதன் குறிப்பாகும். ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்பது பழ மொழியல்லவா? இதனை ‘உப்பு சத்தியம்’ என்றும் சில இடங்களில் அழைப்பர். உப்பு சர்க்கரை வாங்கி வந்து பிள்ளையார் கோயிலிலும் பரிமாறிக் கொள்வது உண்டு.

விறகு வெட்டல்

அருமைக்காரருடன் அருகில் உள்ள காட்டுக்குச் சென்று ஆல், அரசு, பாலை முதலிய பால் உள்ள மரத்திற்குப் பூசை செய்து ஒரு கிளையை வெட்டி மூன்று சிறு கட்டுக்களாகக் கட்டி எடுத்து வந்து வீட்டுக் கூறைமேல் வைப்பர். இதனை எரிக்கப் பயன்படுத்தக்

கூடாது. இதன் பின்னர்தான் சமையலுக்கு வேண்டிய பிற மரங்களை விறகுக்காக வெட்டுவர். பூசை செய்து வெட்டுவது, வெட்டுவதால் மரத்தினிடம் மன்னிப்புக் கேட்பதற்குச் சமம் என்பர்.

நெல் குத்துதல் அல்லது நெல் போடுதல்

மணமகள் வீட்டில் எழுதிங்கள் செய்த பெண்கள் ஒரு மிடாவில் 5 வள்ளம் நெல்போடுவர். அந்நெல்லை மணமகள் தந்தை வழிப் பெண்கள் வேக வைத்துக் காய வைத்துக் குத்தி அரிசி யாக்கி வைப்பர். இது சீர் அரிசி என்று கூறப்படும்.

கூறைப்புடவை எடுத்தல்

இரு வீட்டுப் பெண்களும் சில ஆடவர்களும், கூட்டமாக ஜவுளிக் கடைக்குச் சென்று மணமகளுக்கு மணமகன் வீட்டுச் செலவில் கூறைப்புடவை எடுப்பர். மணமகனுக்குரிய ஆடைகளை மணமகள் வீட்டார் எடுப்பர். இணைச்சீர், மாமன்மார், கைக்கோர்வைக்காரர் போன்ற சீரோடு தொடர்புடைய அனைவருக்கும் உரியவற்றை எடுப்பர். கூட்டமாகச் செல்லுவது இப்போது குறைந்து விட்டது.

திருமண அழைப்பு

முன்பு பனை ஓலையில் திருமண அழைப்பை கணக்கர் அல்லது புலவரைக் கொண்டு எழுதி அதன் மூலம் நேரில் அழைப்பவர்களையும், மங்கலன் (நாவிதர்) மூலம் அழைப்பவர்களையும் அழைப்பர். முக்கியமானவர்களை நேரில் அழைப்பர். இதனை மங்கல வாழ்த்து

‘கற்றோர் புலவர் கணக்கரை அழைத்து

தேன்பனை ஓலை சிறக்கவே வாரி

திசைதிசை எங்கும் தென்னவரை அனுப்பி

கலியாண நாளைக் கணித்து அறிவித்தார்’

என்று கூறுகிறது.

விருந்து அல்லது சோறாக்கிப் போடுதல்

திருமணத்திற்கு முதல் நாள் நடைபெறும் விருந்து புதுவிதமானது. திருமணத்தன்று திருமண வீட்டார் இருவரும் எல்லோருக்கும் விருந்தளிப்பார்கள். இந்த விருந்து மணமகளின் சகோதரிகளும், சகோதரி முறை ஆகின்றவர்கள் அனைவரும் மணமகன் வீட்டாருக்கும், மணமகளின் அத்தை, மாமன் முறை ஆகின்றவர்கள் மணமகள் வீட்டாருக்கும் அளிக்கும் விருந்தாகும். விருந்தின் எல்லாப் பொருள்களையும் அவர்கள் வாங்கி வருவர்; அல்லது எல்லாச் செலவுகளையும் ஏற்றுக் கொள்வர். பெரிய கூட்டத்தை ஒருவரே சமாளிக்க முடியாது என்று உறவினர் செய்யும் உதவியாகும். இந்த விருந்தை ‘சோறாக்கிப் போடுதல்’ என்றும் குறிப்பர்.

பட்டினிச் சாதம்

மேற்கண்ட விருந்தின் போது மணமகன், மணமகள் உண்ணும் உணவை ‘ஒரு சந்திச் சாப்பாடு’ என்று கூறுவர். முகூர்த்தத்திற்கு முன் இந்த ஒரு வேளை உணவே அவர்கட்கு வழங்கப்படும். இதைப் ‘பட்டினிச்சாதம்’ ‘விரத விருந்து’ என்றும் கூறுவர். அவர்கள் விரதத்தின் பயனை அறியவும் திருமண நாளில் வயிற்றுக்கோளாறு எதுவும் ஏற்படாதிருக்கவும் இவ்வழக்கம் அவசியமானதாகும். இந்த நிகழ்விற்குப் பின் அவர்கள் வெளியில் வேறு எங்கும் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தோழனும், தோழியும்

திருமண நாட்களில் மணமகன், மணமகள் இருவரும் தோழன், தோழி பொறுப்பில் இருப்பர். மணமகனின் சகோதரி கணவன்மார்களும், மணப்பெண்ணின் நங்கை, கொழுந்திமார்களும் பெரும் பாலும் தோழன், தோழியாக இருப்பர். மணமகன், மணமகளின் எல்லாத் தேவைகளையும் இவர்களே கவனித்துக் கொள்ளுவார்கள். இது சங்க காலத் தலைவி, தலைவர்மார்களின் பாங்கி, பாங்கன் பாத்திரத்தை நினைவூட்டுகிறது.

முகூர்த்தக்கால் போடுதல்

திருமண நாளின் முதல் நிகழ்ச்சி முகூர்த்தக்கால் போடுவதாகும். அருமைக்காரருடன் மூன்று பேர் சென்று பால்மரமான ஆல், அரசு, பாலை, பாச்சான் ஆகிய மரங்களில் ஏதாவது ஒன்றுக்குப் பூசை செய்து முக்கவர் (கிளை) உள்ள சிறு கொம்பை வெட்டி வந்து தோலைச்சீவி மஞ்சள் பூசி வைத்திருப்பர். அதை மணப்பந்தலில் நீர் மூலை அல்லது ஈசானிய மூலை எனப்படும் வடகிழக்கில் பந்தல்காலில் ஆண்களும், பெண்களுகமாக ஐந்து அல்லது ஏழுபேர் பிடித்துக் கொள்ள மஞ்சள் தோய்ந்த துணியில் நவதானியத்தைக் கட்டி அருமைக்காரர் பால் வார்த்துப் பூசை செய்து கட்டுவார்கள்.

படைக்காலம் வைத்தல்

முன்பே வெற்றிலை பாக்கு வாங்கி உறுதி பெற்று மண் பாண்டங்கள் செயது குயவர் திருமண வீட்டு முற்றத்தில் கொண்டு வந்து வைப்பார். மதுக்கரைப் பட்டயம் மிடா 4, தண்ணீர்ச்சால் 1, பெரிய சால் 2, தண்ணீக்குடம் 4, தாளி 4, கரிச்சட்டி 4, உரிச்சட்டி4, நெய்க்கலயம் 2, பெரிய தடச்சட்டி 1, தண்ணீர்க் கலயம் 4 என்று கூறுகிறது.

குருவர்கட்கு 2 வள்ள அரிசி, 1 வள்ளம் பருப்பு, 8 வட்டுக் கருப்பட்டி, 1/2 படி நெய், 1 பணம் அளிக்க வேண்டும்.

மடைக்கயப் பானைப் பொங்கலுக்கும் தேவையான மண்பாத்திரமும் அளிப்பர். சுண்ணாம்பு, செஞ்சாயம் பூசி அலங்கரிக்கப்பட்ட அவை ‘எழுத்துப்பானை’ எனப்படும்.

ஆசாரிமார்களும் தேவையான இரும்புப் பாத்திரம், கருவிகள் கொடுப்பர். இவை படைக்காலம் வைத்தல் எனப்படும்.

பிறைமண் எடுத்தல் – பேய்க் கரும்பு நாட்டல்

குலதெய்வக் கோயிலுக்குச் சென்று புற்றுமண் கொண்டு வர இயலாது ஆகையால் அருகில் உள்ள புற்றுக்கு அருமைக்காரருடன் சென்று பால்வார்த்ததுப் பூசை செய்து மூன்று கூடைகளில் மண் எடுத்து வருவர். மங்கலன் ஆகிய குடிமகன் கல்நீக்கி மேடை போல அமைப்பான். அதில் பச்சை மூங்கிலையும் பேய்க்கரும்பு என அழைக்கப்படும் வேர்க்கரும்பினையும் நடுவான். அரசு இலையும் நவதானிய முடிச்சும் கட்டி அதற்குப் பூசை செய்வர். இது மண மேடையில் அமைக்கப்படும்.

நாற்சதுர மேடை படைப்புக் கடவுளாகிய நான்முகனைக் குறிக்கும் என்பர். அதனால் இதனை பிரமத்தானம் – அல்லது பிரம்மாவை எழுந்தருளச் செய்தல் என்பது பொருளாகும். கரும்பு வான் பயிர் எனக்குறிக்கப்பெறும் நன்செய்ப் பயிர்களில் முக்கியமானது, இனிமையுடையது.

ஒரு காலத்தில் கொங்கு மன்னன் அதியமான கரும்புப் பயிரைத் தமிழ் நாட்டில் அறிமுகப்படுத்தினான் என்பது புறநானூற்றுச் செய்தி. அது மட்டுமல்ல கரும்பு மன்மதனின் வில்லாகவும் பயன்படுகிறது என்பர். இதற்காகவே கரும்பு நடப்படுகிறது.

மங்கல வாழ்த்து, ‘பேய்க்கரும்பை நாட்டிப் பிறை மண்ணும் தான்போட்டு’ என்று கூறுகிறது. புற்று வணக்கத்திற்கு உரியது மாரியம்மன் தோற்றத்திலும் புற்று இடம் பெறுகிறது. வால்மீகி புற்றிலிருந்து வெளிப்பட்டார் என்பது வரலாறு. சில இடங்களில் சிவ பெருமான் புற்றிடங்கொண்டீசுவரர் என அழைக்கப்படுகிறார்.

காப்புக் கட்டுதல்

மணமகனுக்கும், மணமகளுக்கும் காம்பு இல்லாத சிறு விறலி மஞ்சளை மஞ்சள் தோய்த்த நூலில் இணைத்து அருமைக்காரர் மண மகனுக்கு வலக்கையிலும், மணமகளுக்கு இடக்கையிலும் கட்டுவார். எந்த இடையூறு ஏற்படினும் மண நிகழ்வை இனிதே முடிப்பேன் என்பதற்காகவும், ஏற்படும் இன்னல்களிலிருந்து பாதுகாப்புக்காகவும் காப்புக் கட்டப்படுகிறது. மங்கல நாண் பூட்டிய பின்னரே இவை அவிழ்க்கப்பெறும். ‘காப்புடன் கங்கணம் கனமதாய்க் கட்டி’ என்பது மங்கல வாழ்த்துத் தொடர். ‘முங்கையில் கடிகை நூல் கட்டுதல்’ என்று நெடுநல்வாடையில் காப்புக் கட்டுதல் குறிக்கப்படுகிறது. மஞ்சள் கிருமி நாசினியாகும்.

சீர்த்தண்ணீர் கொண்டு வருதல்

எழுதிங்கள் சீர் முடித்த பெண்களோ அல்லது சுமங்கலிப் பெண்களோ ஐந்து அல்லது ஏழுபேர் குடங்களுடன் அருமைக்காரரை வணங்கித் தாம்பூலம் பெற்றுக் குடங்களுடன் பெண் வீட்டின் அருகில் உள் நீர்நிலைக்கு மேள தாத்துடன் சென்று சீர்த்தண்ணீர் கொண்டு வரச் செல்வர். தண்ணீர்க் குடங்களைப் பிள்ளையார் கோயிலில் வைத்து பூசை செய்து நடைபாவாடையில் நடந்து வீட்டுக்கு எடுத்து வருவர்.

அத்தண்ணீரைக் கொண்டு முகூர்த்த நெல்லைக் குத்திய அரிசியைச் சமைத்து மணமக்களுக்கு அளிப்பர். மீதித் தண்ணீரைச் சீருக்குப் பயன்படுத்துவர். மணமகன் இல்லத்துப் பெண்களே சீர்த் தண்ணீர் கொண்டு வரும் சடங்கைச் செயவதால் ‘பெண்வீட்டுத் தண்ணீருக்குப் போகுதல்’ என்றும் இது அழைக்கப்பெறும். பெண் வீட்டு நீர் நிலையை அறிந்து கொள்வதும், புதிய தண்ணீரைப் பயன்படுத்துவதும் இதன் நோக்கமாக இருக்கலாம்.

மங்கலன் முகம் துடைத்தல்

அருமைக்காரர் பூசை செய்து கொடுத்த பாலைப் பெற்றுக் கொண்டு நாவிதர் மணமகனை முக்காலியில் அமர வைத்து முகச் சவரம் செய்வார். மணமகன் வீட்டு நாவிதர் செய்யும் இந்தச் சடங்கைப் பிரமச்சரியம் கழித்தல் என்று கூறுவர். இதன் பின்னர் மணமகன் உப்பில் பல் துலக்குவார். இதனை மங்கலவாழ்த்து ‘தெள்ளிய பாலால் திருமுகம் துடைத்து அரும்பு மீசையை அழகுற ஒதுக்கி’ என்று கூறுகிறது.

ஆக்கை சுற்றிப் போடுதல்

ஆக்கை என்பது புளிய மரத்து விளார். மூன்று ஆக்கைகளைக் கொண்டு வந்து இரண்டிரண்டாகப் பிளப்பர். பிளந்த ஆக்கையின் முனையை இருவர் பிடித்துக் கொள்ள இடையில் மணமகனை கிழக்கு நோக்கி நிறுத்துவர். அந்த இரண்டு ஆக்கைகளையும் சீர் செய்யும் பெண் தலையைச் சுற்றி எறிவார். மூன்றாவது ஆக்கையை மணமகன் காலடியில் போட்டு மிதித்து நிற்பார். இச்சீரை ‘ஆக்கை சுற்றிப் போடுதல்’ என்று கூறுவர்.

ஆக்கையின் இடையில் மணமகனை நிறுத்துவது இனி அவர் ஒரு கட்டுக்கோப்புக்குள் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கும். புளிய மரத்து விளார் மிக உறுதியானதாகும். ‘பிடித்தாலும் புளியங் கொம்பாகப் பிடித்தார்’ என்பது பழமொழி. அதனால், உருதியாக இருக்க வேண்டும் என்பதனையும் குறிப்பதாகலாம். ஆககையைத் தாண்டச் செய்வதும் உண்டு.

செஞ்சோறு அஞ்சடை கழித்தல்

குளிக்கும் போது முக்காலியில் அமர்ந்துள்ள மாப்பிள்ளைக்கு செஞ்சோறு அஞ்சடை கழிக்கும் சீரைச் செய்வது. சுண்ணாம்பு, மஞ்சள் கலந்துள்ள சோற்றைப் பிசைந்து, நாவிதன் ஐந்து அல்லது ஏழு உருண்டைகளாகச் செய்து வைத்திருப்பான். சீர்க்காரப் பெண் அதனை வாங்கி மணமகன் தலை, இரு தோள், இரு பாதம் ஆகிய ஐந்து இடங்களில் வைத்து நிறைநாழியில் உள்ள தார்க்கருது மூலம் எடுத்து எறிவாள். இது திருஷ்டி கழிப்பதாகும். மங்கல வாழ்த்து செஞ்சோறு அஞ்சடையும் சிரமதைச் சுற்றி திட்டிக் கழித்து சிவசூரியனைத் தொழுது என்று கூறுகிறது. மணமகளுக்கும் இவ்வாறு செய்வர்.

உருமால் கட்டுதல்

நீராடல் முடிந்த மணமகனுக்குத் தாய்மாமன் புத்தாடைகள் கொடுப்பதுடன் தலையில் உருமால் குஞ்சம் விட்டுக் கட்டி விடுவார். மோதிரம், சங்கிலி போன்ற அணிகலன்கள் ஏதேனும் கொடுப்பார். மணமகன் வேறு இடத்தில் பெண் எடுத்தாலும் தாய் மாமனின் உறவைக் காட்ட இச்சீர் செய்யப்படுகிறது எனலாம்.

கோயில் மாலை பெறுதல்

மணமகனின் காணி ஊரைச் சேர்ந்த சிவங்கோயில், பெருமாள் கோயில், குலதெய்வக் கோயில், பிற கோயில்கள் ஆகியவற்றில் அர்ச்சகர்களான சிவாச்சாரியார்களும், பண்டாரங்களும், பிற பூசாரிகளும் அந்தந்தக் கோயிலுக்குரிய மாலையைக் கொண்டு வந்து அளிப்பர். காணித் தெய்வங்கள் அனைத்தும் மணமக்களை வாழ்த்துகின்றன என்பது இதன் அடையாளமாகும்.

குப்பாரி கொட்டல்

மணமகன் தான் மணமகளை மணக்கப்போகும் செய்தியை ஊரார் அனைவரும் அறிய முழ்ங்கும் கருவிகளாகிய பெரிய மேளம், தப்பட்டை ஆகியவற்றைக் கொட்டி அறிவித்தல் குப்பாரி கொட்டல் எனப்படும். இந்நிகழ்ச்சிக்கு இலக்கியச் சான்றுகளும் உண்டு. குலதேவதையை வணங்கி இச்சீர் செய்வர். மங்கல வாழ்த்து ‘குப்பாரி கொட்டிக் குலதேவதையைத் தான் அழைத்து’ என்று கூறுகிறது.

நிறைநாழி

ஒரு இரும்பு வட்டப் படியில் நிறைய நெல்லை நிரப்பி தக்கிளி போன்ற ஒரு கம்பியில் வெண்மையான நூலைச் சுற்றி வட்டப்படியில் உள்ள நெல்லில் குத்தி வைத்திருப்பர். அநேகமாக எல்லாச் சீர்களிலும் சீர்க்காரிப் பெண் அதை எடுத்து மணமக்களின் தலையை மூன்று முறை சுற்றுவாள். அவ்வப்போது செய்யும் நிறைநாழிச் சீரில் நெல் மாற்றப்படும்.

நெல் வட்டப்படியில் நிறைந்திருப்பது போல் அவர்கள் வாழ்வு நிறைவாக இருக்க வேண்டும் என்பதும். கதிரும், நூலும் இரண்டறக் கலந்து சுற்றியிருப்பது போல் மணமக்களும் இணை பிரியாமல் இருக்க வேண்டும் என்பதும் அதன் கருத்தாகும். ‘நீர்மை பொருந்த நிறைநாழி வைத்து’ என்று மங்கல வாழ்த்துக் கூறுகிறது.

கணபதி வணக்கம்

பல சீர்களின் தொடக்கத்தில் விநாயகரை வழிபட்டுச் சீரைத் தொடங்குவர். மஞ்சள் பொடியில் பிள்ளையாரைப் பிடித்து அருகம் புல்லையோ அல்லது மலரையோ சூட்டினால் அங்கு விநாயகர் எழுந்தருளிவிடுவார். சில சந்தர்ப்பங்களில் மஞ்சளுக்குப் பதிலாகப் பசுஞ்சாணத்தைப் பயன்படுத்துவதும் உண்டு. இதனை மங்கல வாழ்த்து ‘சாணாங்கி கொண்டு தரைதனை மெழுகி கணபதி தன்னைக் கருத்துடன் நாட்டி அறுகது சூட்டி’ என்று கூறுகிறது.

குலதெய்வ வழிபாடு

குல தெய்வக் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வருவது இயலாது. குல தெய்வக் கோயில் தூரமாக இருக்கலாம். அதற்காகக் குழவிக் கல்லை ஓரிடத்தில் வைது நீர் வார்த்து வெற்றிலை வைத்துக் கட்டி விபூதி, சந்தனம், குங்குமம் வைத்து குல தெய்வமாக வழிபடுவர். மங்கல வாழ்த்திலும் இது இடம் பெற்றுள்ளது.

நாட்டுக்கல் வழிபாடு

திருமணச் சீர்களில் நாட்டுக்கல் வழிபாடு என்பது மிக முக்கியமான சீராகும். மேளதாளம் முழ்ங்க மணமகனும், மணமகளும் தனித்தனியாக நாட்டுக் கல்லுக்கு வழிபட வருவர். கொங்கு 24 நாடுகளின் தலைவர்கள் ‘நாட்டார்’ எனப்படுவர். திருமணத்திற்கு அவர்கட்கு அழைப்பு அனுப்பப் பெறும். ஆனால், நாட்டார் எல்லாத் திருமணங்கட்கும் வர இயலாது.

எனவே, திருமண வீட்டின் அருகில் சாலையில் ஒரு கல்லை நட்டு மஞ்சள் பூசிய நூலில் வெற்றிலையைக் கட்டுவர். அந்தக் கல்லில் 24 நாட்டார்களும் எழுந்தருளிருப்பதாக ஐதீகம். மணமகனும், மணமகளும் மேள தாளத்துடன் அங்கு வந்து வழிபடுவர். நாட்டார் கல்லுக்கு வழிபாடு நடத்தி மணமக்களுக்கும் ஆலாத்தி சுற்றி அதைப் பாதகத்தின் அருகில் ஊற்றுவர். எனவே, 24 நாட்டார் வழிபாடே நாட்டுக்கல் வழிபாடு என்பர். இது ஒரு கருத்து.

வேறு சிலர் நாட்டுக்கல் வழிபாட்டுக்கு வேறு காரணமும் கூறுகின்றனர். நடுகல் அல்லது வீரக்கல் (Hero Stone) என்பதை இப்போது நினைவுக்கல் என்று கூறுகின்றனர். அக்கல் பெரும்பாலும் வீதி ஓரங்களில்தான் நடப்பட்டிருக்கும்.

நடுகல் வழிபாட்டுக்கு உரியது. நடுகல் வழிபாடு மட்டுமே தமிழநாட்டில் முன்பு இருந்தது என்று இலக்கியம் கூறுகிறது.

‘நெல் உகுத்துப் பரவும்

நடுகல் அல்லது தெய்வம் இல்லை’

என்பது புறநானூற்றுத் தொடர்களாகும். நடுகல் வழிபாடு முன்னோர் வழிபாடு. வள்ளுவர் உபசரிக்க வேண்டியவர்களைக் கூறும்போது ‘தென்புலத்தார்’ என்று முன்னோர்களைத்தான் முதலாவதாகக் கூறுகிறார். எனவே, மணமக்கள் தங்கள் முன்னோர்களை நடுகல் வடிவில் வழிபடுகின்றனர். அதுவே நாட்டுக்கல் வழிபாடாகும். உயிர்ரோடு இருப்பவர்கட்குக் கல் நடுவது வழக்கம் இல்லை. ஆதலால் இது 24 நாட்டார் கல் அல்ல. முன்னோர் வழிபாடான நடுகல் வழிபாடு என்று கூறுவர்.

வெற்றிலை கட்டுதல்

மணப்பந்தலில் அருமைக்காரர் அமர்ந்துள்ள நிலையில் அவர் முன் மணமகன் வீட்டார் அமர்ந்திருப்பர். அருமைக்காரர் முன் முக்காலி ஒன்று போடப்பட்டிருக்கும். அதன்மீது போடப்படும் வண்ணான் மாத்தில் வெற்றிலை 15 கட்டு, 4 படிபாக்கு, தேங்காய் ஐந்து, பழம் ஒரு சீப்பும் வைத்துக் கட்டுவார். அதனோடு கூறைப் புடவை, கண்ணாடி, சீப்பு, பூ, சந்தனம், எலுமிச்சம்பழம், விரலி மஞ்சள் உள்ள கட்டையும் வைத்துக் கட்டுவார். நிறை செம்பில் நீர் இருக்கும். பூசை செய்வார்.

மேற்கண்டவைகள் அடங்கிய மூட்டையை மேள தாளத்தோடு விநாயகர் கோயிலுக்கு எடுத்துச் சென்று வழிபாடு செய்து கொண்டு வருவர். அருமைக்காரர் ஐந்து பேருடன் அவைகளை மணமகள் வீட்டுக்கு எடுத்துச் செல்வார். அருமைக்காரர் இரு வீட்டாருக்கும் வெற்றிலை, பாக்கு அளிப்பார். மூட்டையை அவிழ்த்துச் சரிபார்த்து மீண்டும் கட்டுவார். அப்போது முகூர்த்த நேரம் அறிவிக்கப்படும்.

வெற்றிலைக் கட்டும், மூட்டையும் இணைத்துக் கூறப்புடவை, நகை ஆகியவைகளும் இணைத்துக் கட்டப்படும். சீருக்குப்பின் வெற்றிலை கட்டிய முட்டையைப் பெண் வீட்டார் பெறுவர். நகை அணிவிக்கக் கொண்டு வந்த மாப்பிள்ளை வீட்டாருக்குப் புதுக் கலங்களில் விருந்தளிப்பர். தாம்பூலம் அளிப்பார். ‘பொன்பூட்ட வந்தவர்க்குப் பூதக்கலம் தான் அனுப்பி அன்பாக வெற்றிலை அடைவாகத் தான் கொடுத்தார்’ என்று மங்கல வாழ்த்துக் கூறுகிறது. புதுக்கலம் என்பது ‘பூதக்கலம்’ என ஆகிவிட்டது என்பர்.

இணைச்சீர்

திருமண நிகழ்ச்சிகளில் மிக முக்கியமானது ‘இணைச்சீர்’ என்பதாகும். ‘இணை உடுத்துதல்’ என்றும் கூறுவர். திருமணத்திற்கு இணையான சீர் என்றும், மணமகனுக்கும், மணமகன் சகோதரிக்கும் இணைப்பை உறுதிப்படுத்தும் சீர் என்றும், மணமகன், மணமகளோரு இணைவதற்குச் சகோதரி அனுமதியளிக்கும் சீர் என்றும் பலவாறாகக் கருதலாம்.

சில இடங்களில் மணமகன் அமரும் இருக்கையில் சகோதரி முன்னர் வந்து அமர்ந்து கொள்வார். ‘உனக்குப் பிறக்கும் பெண்ணை என் பையனுக்குத் திருமணம் செய்து கொடுப்பதாக உறுதியளித்தால் தான் உனக்கு இடம் கொடுப்பேன்’ என்பாள். மணமகன் உறுதியளித்தவுடன் எழுந்து மணமகன் அமர இடம் கொடுப்பாள்.

திருமணப் பந்தலின் ஒரு பகுதியில் மணவறை போலவே அலங்கரிக்கப்பட்ட இடத்தில் மாப்பிள்ளை அலங்காரத்துடன் மணமகன் வந்து அமர்வார். மணமகனின் சகோதரிக்கு மணப்பென் போலவே அலங்காரம் செய்து அழைத்து வருவர். பேழை ஒன்றைச் சகோதரி சுமந்து வருவாள். அதில், கூறைப்புடவை, வெற்றிலை பாக்கு, மஞ்சள், தேங்காய், பழம், கண்ணாடி, சீப்பு ஆகியன இருக்கும். இடக்கை பேழையைப் பிடித்துக் கொண்டிருக்க வலக்கையில் ஒரு செம்பு நீர் எடுத்து வருவாள். மணமகனையும், மண அறையையும் சுற்றி வந்து பேழையை மணமகனுக்கு வலப்புறம் வைப்பாள். பேழையில் உள்ள பொருள்கலை அகற்றி அதனுள் சகோதரியை நிறுத்துவர். பேழையில் இருந்த கூறைப் புடவையில் ‘இணைப்பவுன்’ அல்லது தன் சக்திக்கு ஏற்றதை சகோதரி முடிந்து வைத்திருப்பாள்.

இணைச்சீர் மண அறையில் மண் கலசத்தின்மேல் தேங்காய் வெற்றிலை பாக்கு வைத்து அதன் முன் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்திருப்பர். நவதானிய முளைப்பாரியும், அணையா விளக்கும் இருக்கும். பிள்ளையாருக்கு முன் தட்டில் அரிசி நிரப்பி அதன்மேல் வெற்றிலை பாக்கும், வெல்லமும் வைக்கப்பட்டிருக்கும். அருமைக்காரர் மணமகனின் சகோதரிக்கு வெற்றிலை பாக்குக் கொடுத்து அதனை மடியில் கட்டச் சொல்வார். பின் கூறைப்புடவையைக் கொசுவமாக மடித்து ஒரு முனையை மணமகன் கககத்திலும் மறுமுனையைச் சகோதரி கையிலும் கொடுப்பார்.

அருமைக்காரர் மணமகனின் கையை அரிசியில் பதிய வைப்பார். விநாயகருக்குப் பூசை செய்து அரிசியை அள்ளி வெற்றிலையில் வைத்து நாவிதரிடம் கொடுத்து மங்கல வாழ்த்து இசைக்கக் கூறுவார். அருமைக்காரர் பிள்ளையார், மணமகன், சகோதரி ஆகியோருக்கு அருகு மணம் எடுத்துபின் பேழையைத் தலையில் வைத்துத் திருமண வீட்டுக்கு அனுப்பி வைப்பார். இணைச்சீர் பற்றி மங்கல வாழ்த்தி விரிவாகக் கூறுகிறது. ‘ஆடையாபரணம் அழகுபெறத் தான்பூண்டு கூறை மடித்து வைத்தார் குணமுள்ள தங்கையரும் பிறந்தவரைச் சுற்றிப் பேழை மூடி சுமந்து இந்திரனார் தங்கை இணையோங்க வந்த பின்பு பின்னே ஒரு தரம் பிறந்தவர்க்கு இணையோங்கி மின்னனையார் முன்னே விநாயகர்க்கு இணையோங்கி’ என்பது மங்கல வாழ்த்து.

மணமகன்- சகோதரி தொடர்பு திருமணத்தால் குறையாது; சீர்வரிசையில் சம பங்கு அளிப்பேன் என்பதைக் குறிக்கவே இணைச் சீர் செய்யப்படுகிறது. பெண்ணுக்குச் சம உரிமை இல்லாத அந்தக் காலத்திலேயே கொங்கு வேளாளர்கள் பெண்களுக்குச் சம உரிமை கொடுத்தனர். ஆணிற்கு இணையாகப் பெண்ணுக்கும் உரிமையுண்டு என்பதை உணர்த்தும் சடங்கே – சட்ட விதியே இணைச்சீர் எனலாம்.

தாயுடன் உண்ணல்

முன்பு இணைச்சீர் வரை அனைத்துச் சீர்களும் மணமகன் இல்லத்திலேயே நடைபெறும். பின் திருமணத்திற்கு வேண்டிய பொருள்களுடன் தன் உறவினர், குடிபடையுடன் மணமகன் மணமகள் இல்லம் செல்வார். இப்படிச் செல்வதைக் ‘கட்டிலேற்றிச் செல்லுதல்’ என்பர். அப்படிச் செல்லும் மணமகன் தாயுடன் ஒரே கலத்தில் உணவு உண்பார். மணமகளை மணம் முடிக்கச் செல்ல மணமகனுக்குத் தாயார் அனுமதியளித்து ‘பூங்கொடிக்கு மாலையிடப் போய்வா மகனே’ என்று அனுப்பி வைப்பாள். தாயார் ‘கட்டளை ஏற்றுச் செல்லல்’ என்பது கட்டிலேற்றிச் செல்லல்’ என மாறிவிட்டது. தாயோடு உண்ணலைத் ‘தயிர்ச் சோறு உண்ணல்’ என்றும், தாயார் கையால் உண்ணும் கடைசி உணவு என்றும் சிலர் கூறுவர்.

‘மாதாவுடனே மகனாரும் வந்திருந்து

போதவே பால்வார்த்துப் போசனமும் தான்அருந்தி’

என்று மங்கல வாழ்த்துக் கூறுகிறது.

கூடைச்சீர் அல்லது நாழியரிசிக் கூடை

திருமாங்கல்யம், கூறைப்புடவை, பிற அணிகலங்கள், நெல், அரிசி, பழம், வெல்லம், தேங்காய், வெற்றிலைபாக்கு, விளக்கெண்ணெய், நெய், எலுமிச்சம்பழம், விறலி, மஞ்சள், சீப்பு, கண்ணாடி, பொட்டு, குங்குமம், திருநீறு, சந்தனம், பூக்கள் இவை போன்ற திருமணத்திற்கு இன்றியமையாமல் வேண்டப்படுகின்ற அனைத்துப் பொருள்களையும் ஒரு கூடையில் வைத்து மணமகன் இல்லத்தார் மணமகள் இல்லத்திற்கு நாவிதர் தலையில் வைத்து எடுத்து வருவர். இவர்கள் அனைவரும் மணமகள் இல்லத்திற்கு அருகேயுள்ள பிள்ளையார் க�

கறிவேப்பிலை சாப்பிட்டால் புற்றுநோய் வராதாம்!


கறிவேப்பிலை சாப்பிட்டால் புற்றுநோய் வராதாம்!

பொதுவாக கறிவேப்பிலை உணவில் வாசனையை தர பயன்படுகிறது என்று தான் அனைவருக்கும் தெரியும். அதனால் தான் என்னவோ சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டுவிடுகிறோம். இனிமேல் அப்படி செய்ய வேண்டாம். ஏனென்றால் கறிவேப்பிலை சாப்பிட்டால் புற்றுநோய் வராது என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், அஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகளும் உள்ளன. இதனால் இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதோடு, நல்ல மணத்தையும் தருகிறது.

இத்தகைய குணங்கள் நிறைந்த கறிவேப்பிலை குறித்து ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் ஆய்வு செய்தனர். இதில் கறிவேப்பிலைக்கு புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உள்ளது என்று கண்டறிந்துள்ளனர். மேலும் இது ஒரு சிறந்த ஆன்டிஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்றும் கூறுகின்றனர். கருவேப்பிலை சாப்பிடுவதால் இதய நோய் வராது, மேலும் ஞாபக சக்தியும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் நன்மை உண்டா? என்று திருவனந்தபுரத்திலுள்ள கேரளா பல்கலைக்கழகத்தில் மருத்துவ குழுவினர் ஆராய்ந்தனர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்றும், பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுக்கிறது என்றும் கண்டுபிடித்துள்ளனர். மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால் தான் டி.என்.ஏ. பாதித்து செல்களிலுள்ள புரோட்டின் அழிந்து, அதன் விளைவாக புற்றுநோய், வாதநோய்கள் வருகின்றன என்றும் கண்டறிந்துள்ளனர்.

இது தவிர நீரிழிவு நோயாளிகள் தினமும் கறிவேப்பிலை இலையை மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவு பாதியாக குறையும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

நன்றி - தமிழ் சமூகம்

பூலாம்வலசு சேவல்கட்டு

பூலாம்வலசு சேவல்கட்டு




இந்த முறை பொங்கலன்று அரவக்குறிச்சி அருகில் இருக்கும் பூலாம்வலசு சேவல்கட்டு பார்க்க வேண்டும் என போன வருடமே திட்டமிட்டு இருந்தேன். சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இந்த சேவல் கட்டு தமிழ் நாட்டில் மிகவும் பிரசித்தம். இப்பொழுது உலக அளவில். உபயம் சன் மற்றும் விஜய் டிவி.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே அவர்கள் வந்து பார்க்கும் அளவிற்கு நடந்துள்ளதாக அறிந்தேன். தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளில் இருந்தும் இந்த போட்டிகளை காணவும் பங்கேற்கவும் மக்கள் வருகிறார்கள். ஒரு வாரம் நடக்கும் இந்த போட்டிகள் வருடாவருடம் பொங்கல் சமயத்தில் மட்டுமே நடக்கிறது. ஒரு நாளைக்கு சுமார் 30000 முதல் 40000 சேவல்கள் வரை போட்டியில் பங்கேற்கின்றன. இதனை காண வரும் கூட்டம் ஒரு நாளில் மட்டும் லட்சத்தை தாண்டுகிறது என்பது சிறப்பம்சம். வாகன நிறுத்துமிடம் 4 இடங்களில் பிரித்து வைக்கப்படுகிறது. ஒரு வண்டிக்கு 15 ரூபாயும் காருக்கு 50 ரூபாயும் வாங்குகிறார்கள். ஒரு நாளைக்கு 2 இலட்சத்திற்கும் மேல் வருமானம் வருகிறது. இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு மட்டும் 5 இடங்களில் பார்க்கிங் வசதி.

ஒரு சேவல் போட்டியில் பங்கேறக 2 ரூபாய் கட்டணம். போட்டியில் வெல்லும் சேவலின் முதலாளிக்கு தோற்றுப்போன இறந்த சேவலே பரிசு. பணமெல்லாம் இல்லை. சூதாட்டமும் பெரிய அளவில் இல்லை. மறைமுகமாக நடக்கிறதா தெரியவில்லை.

இதிலும் நிறைய ரூல்ஸ் இருக்கிறது. எந்த ஒரு சேவலையும் எந்த ஒரு சேவலுடனும் மோத விட முடியாது. ஜாதிக்கு ஜாதிதான். பொறிச்சேவல், வல்லூறு, செவலை, பேடை (அலிச்சேவல்) என ஜாதி பிரித்து வைத்திருக்கிறார்கள். சேவல் சண்டை ஆரம்பிக்கும் முன்பு கத்தி வைக்காமல் ஒரு முறை மோதிப்பார்க்கிறார்கள். இரண்டும் மோத முனைந்தால் போட்டிக்கு ரெடி. பின்பு சேவலின் பின்னாங்காலில் ஒரு கத்தியை வைத்து கட்டிவிடுகிறார்கள் .மிகவும் கூரான கத்தியில் இரண்டு முறை அடிபடும் சேவல் இறப்பது சர்வ நிச்சயம். அதிக பட்சம் 10 நிமிடத்தில் ஒரு சேவல் வெற்றி பெற்று விடுகிறது. ஒவ்வொரு சேவலும் சுமார் 6லிருந்து 7கிலோ வரை இருக்கிறது! கிட்டத்தட்ட ஒரு குட்டி ஆட்டின் எடை!

ஒரு போட்டியாளர் 4 அல்லது 5 சேவலுக்கு மேல் ஜெயித்துவிட்டால் இறந்த அந்த சேவல்களை விற்றுவிடுகிறார். ஒரு சேவலின் விலை ஜஸ்ட் 2000ம் தான். 4000 ரூபாய் வரை விலையும் போகும். இத்தனை லட்சம் பேர் இருக்கும் இந்த ஏரியாவில் வெரும் 10 போலீஸ்தான் என்பது சுவராசியமான விசயம். மொத்த கூட்டத்தையும் விழா அமைப்பினரே சமாளிக்கின்றனர். ஒரு சிறு சண்டை கூட நடக்காமல் போட்டி நடக்கிறது என்பது கலியுலக ஆச்சரியம்! சேவலுக்கு சாரயம் கொடுப்பது இல்லை. கத்தியில் விஷம் வைப்பதும் இல்லை. ஒரு சிறு சண்டை வருவது போல் இருந்தாலும் போட்டி அமைப்பாளர்கள் சொல்வதை நாட்டாமை தீர்ப்பு போல் அனைவரும் கேட்டுக்கொள்கிறார்கள். சுருக்கமாக சொல்வதானால் போலீஸுக்கு அங்கு பெரிய அளவில் வேலையே இல்லை.

30 குழுக்களுக்கும் மேலாக பிரிந்து போட்டி நடக்கிறது. குழுவிற்கு 100 பேருக்கும் மேல் நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். வேடிக்கை பார்க்கும் நபரில் 10ல் 7 பேரிடம் போட்டிக்கு ரெடியாக ஒரு சேவலை கையில் வைத்திருக்கிறார்கள். இதுபோல ஒவ்வொரு போட்டி நடக்கும் பகுதியிலும் கூட்டம் இருக்கிறது. சபரி மலைக்கு வருவதுபோல் கூட்டம் வருவதும் போவதுமாகவே இருக்கிறது. வேடிக்கை பார்க்க வருபவர்கள் 3 மணி நேரத்திற்கு மேல் நிற்பதில்லை. அவ்வளவு புழுதிப்படலமாக இருக்கிறது. மேலும் சாப்பாட்டுப் பிரச்சனை.

பஸ் வசதி கூட இல்லாத இந்த குக்கிராமத்தில் இப்படி ஒரு போட்டி பிரபலமாகி இருப்பது என்னை பெரிதும் யோசிக்க வைக்கிறது. கரூர் மாரியம்மன் பண்டிகை மற்றும் வீரப்பூர் திருவிழாவிற்க்கு வரும் கூட்டத்தை விட இங்கு வரும் கூட்டம் அதிகம். ஆனால் பெண்கள் சிறுமிகள் கூட்டம் மிகக்குறைவு. ஆண்களின் சாம்ராஜ்யம் இது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் நடுத்தர ஆண்களே அதிகம். இந்த பூலாம் வலசில் சாப்பிட உணவகங்கள் இல்லை. குச்சி ஐஸும் போண்டா வடையும் மட்டுமே கிடைக்கிறது .அருகில் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் அரவக்குறிச்சிக்குதான் சாப்பிட வரவேண்டும்.

நான் பார்த்தவரை கரூர் தவிர திருச்சி, புதுக்கோட்டை, சேலம், பொள்ளாச்சி, ஈரோடு, திண்டுக்கல், மதுரை, வத்தலகுண்டு, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, முசிறி வண்டிகள் அதிகம் இருந்தன. நிறைய போட்டியாளர்கள் யூனிபார்மில் இருந்தார்கள். உதாரணம் “வத்தலகுண்டு சேவல் பாய்ஸ்”.

முறையான குடிநீர் வசதிகள் இல்லை. கழிப்பிட வசதிகளும் இல்லை. இதை எல்லாவற்றையும் முறையாக செய்து கொடுத்து சரியான விளம்பரம் கொடுத்தால் பூலாம்வலசு இன்னுமொரு அலங்காநல்லூர் என்பதில் ஐயமில்லை.

கருவேல் மரம்

கருவேல் மரம்


விவசாயிகளுக்கு மிகவும் நெருக்கமான மரம் கருவேல் மரம்.
எல்லாவகையான மண்வகையிலும் வரட்சியைத் தாங்கி நின்று வளரக்கூடியது.
இதன் அடிமரத்தில் இருந்து நுனிக் கிளைவரை கெட்டியான தன்மை உடையது. எளிதில் புழுக்காமலும் இற்றுப்போகாமலும் நீண்ட காலம் பயன்படக்கூடியது.
கிராமங்களில் புஞ்சைக் காடுகளிலும் வயல் வரப்புகளிலும் ஏரிக்கரைகளிலும் தரிசு நிலங்களிலும் சாலையோரங்களிலும் ஏரிகளின் உட்பகுதிகளில்கூட இவற்றைக் காணலாம்.
சாதாரணமாக ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்பார்கள். அது நூற்றுக்கு நூறு உண்மை! வேலாங்குச்சியால் பல்துலக்கினால் ஆயுள்முழுவதும் உறுதியான பற்களுடன் வாழலாம்.
கால்நடைகளுக்கு நிழல்தரும் என்பதைத் தவிர இந்த மரத்தின் இலைகளும் காய்களும் ஆடுகளுக்குத் தீனியாகப் பயன்படும். அதன்காய்களை உண்டு செல்லும் ஆடுகள் இடும் புழுக்கைகள்மூலம் இது பரவக்கூடியது.
விவசாயிகளுக்கும் கருவேலமரத்துக்கும் இருக்கும் பிணைப்பு பிரிக்கமுடியாதது. காரணம் அதன் பாகங்கள் ஒவ்வொன்றும் விவசாயிகளின் பல கருவிகளுக்கும் வேலைகளுக்கும் தேவையானவை.
அதன் கெட்டியான அடிமரத்தால்தான் உழுகின்ற கலப்பைகள் செய்யப்படுகின்றன. ஒரு அதிசயமான ஆனால் மறுக்கமுடியாத உண்மை என்னவென்றால் இன்றளவும் உழும் மரக்கலப்பை கருவேலமரத்தைக் கொண்டே செய்யப்படுகிறது என்பதும் வேறுமரங்கள் பயன்பாட்டில் இல்லை என்பதும்தான்! காரணம் அதன் உறுதித் தன்மையும் கனமும்தான். உழும் கலப்பைகள் உறுதியாக இருந்தால்தான் உடையாமலும் தேயாமலும் நீண்ட நாட்கள் பயன்படுத்தமுடியும். தவிர கனமாக இருப்பதால் நிலத்தில் ஆழ உழுவதற்குத் துணைசெய்கிறது.
கலப்பையில் பொருத்தப்படும் மேழியும் கருவேல மரத்தால் தான் செய்யப்படுகிறது. அதனால் ஒரு முதிர்ந்த கருவேல மரத்தைப் பார்த்தாலே அதைக்கொண்டு இத்தனை கலப்பைகள் செய்யலாம் இத்தனை மேழிகள் செய்யலாம் என்று கணக்கிடுவது விவசாயிகளின் வழக்கம்!
அதுபோலவே கருவேலமரத்தின் கிளைகளும் அவற்றின் கனத்துக்கு ஏற்றபடி மண்வெட்டி,  களைக்கொத்துகள், கோடாரிகள், மற்றும் பல விவசாயப் பாரம்பரியக் கருவிகளுக்கான கைப்பிடிகள் செய்யப்படுகின்றன. 
அதேபோல முன்னர் பயன்பாட்டில் இருந்த இப்போது மறைந்து வருகின்ற விவசாயிகளின் மற்றும் மக்களின் போக்குவரத்து மற்றும் பாரம் சுமக்கும் வாகனமான கட்டை வண்டி செய்யவும் கருவேலமரம் தவிர்க்கமுடியாத தேவையாகும்.
கட்டை வண்டிகளின் முக்கியப்பாகமான சக்கரத்திற்கான அனைத்துப் பாகங்களுக்கும் கருவேலமரம் பயன்படுகிறது. தேக்கு, வாகை போன்ற மரங்கள் பயன்படுத்தப்பட்டாலும் உறுதியில் இதற்கு இணை வேறு எதுவும் இல்லை!
வண்டிச் சக்கரத்தின் முக்கியப் பாகங்களான சுற்றுப்பகுதியான வட்டை, அவற்றை மையத்துடன் இணைக்கும் ஆரக்கால்கள், மத்தியில் அமைந்துள்ள கும்பக்கட்டை என்று சொல்லக்கூடிய மத்தியபாகம், மக்கள் உட்காரவும் சாமான்கள் ஏற்றவும் பயன்படும் வண்டியின் உடல்பாகத்தின் அனைத்துப்பகுpகளும் பலகைகளும் கரவேலமரத்தால் செய்து பயன்படுத்தப்பட்டது. 
உட்காருமிடத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் தட்டிகளைத் தாங்கியிருக்கும் வண்டிமுளை என்று சொல்லக்கூடிய ஒரு அங்குலத்துக்குக் குறையாத நீளக் குச்சிகளும் கருவேலங் குச்சிகளே!
அதேபோல் வண்டியின் முன்பாகம் நிலத்தில் ஊன்றி வைக்கக்கூடிய பூமி தாங்கிக்கட்டை என்று சொல்லக்கூடிய ட வை தலைகீழாகப் போடும்படியான வடிவிலான உறுதியான கட்டையும் கருவேலமரக் கட்டைகள்தான் ஆகும்.
கட்டை வண்டியைப் பொருத்தவரைக்கும் ஏர்க்கால் மரம் என்று சொல்லக்கூடிய மையத்தில் நீளமாக நுகத்தில் இருந்து பின்புறக் கடைசிவரை அமைந்திருக்கும் ஏர்க்கால் மரமும் இரண்டு சக்கரங்களுக்கும் இடையில் குறுக்காக இரும்பு அச்சின்மேல் பிணைக்கப்பட்டு முழு வண்டியையும் தாங்கிக்கொண்டிருக்கும் தொப்பக்கட்டை என்று சொல்லக்கூடிய பகுதியும் மாடுகளின் கழுத்தில் பூட்டப்படும் நுகமும் நாம் அமரும் இடத்தில் நாம் பக்கவாட்டில் சாய்ந்துவிடாமல் இருப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் சவாரித் தப்பைகள் என்று சொல்லப்படும் பகுதிகளும் நீங்கலாக மற்றவேலைகளுக்குக் கருவேல மரம் பயன்படுகிறது.
சக்கரத்தைச்சுறறி உறுதியாகச் சேர்த்துப்பிடிக்கும் பட்டாக்களும் கடையாணிகளும் கயிறுகட்டப்பயன்படும் வளையங்களும் மட்டுமே இரும்பால் ஆனவை.
மின்சார மோட்டாரும் வேறு நீரிரைக்கும இயந்திரங்களும் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்னர் மாடுகளின் துணைகொண்டு கமலை(கவலை என்றும் சொல்வார்கள்) என்று சொல்லக்கூடிய நீரிறைக்கும் முறைக்கும் பிரதானத் தேவையாகக் கருவேலமரம்தான் பயன்பட்டது.
அதன் குத்துகால்களும் கவலை எண்டி என்று சொல்லக்கூடிய மர உருளைம் அந்த மர உருளை பொருத்துப்படும் பக்கவாட்டில் உள்ள காதுப் பலகைகளும், அந்தக் காதுப்பலகையுடன் கூடிய உருளையைப் பொருத்தும் ஆள் உயரத்துக்கும் மேலே குத்துக்கால்களுக்கு இடையே அமைந்திருக்கும் பெரிய உறுதியான தோரணப்பலகையும் அது தவிர சால், பரி இவற்றுடனும் மாடுகளின் கழுத்தில் உள்ள நுகத்துடனும் பிணைக்கப்பட்டுள்ள வடம், வால் கயிறு என்று சொல்லப்படும் கயிறுகள் நிலத்தில் உராய்ந்து அறுந்து போகாமல் தாங்கி உருண்டு கொடுக்கும் பண்ணைவாய் உருளை முன்னுருளை ஆகியவை செய்யவும் இத்தனையும் கொண்ட நீரிறைக்கும் அமைப்புக்கு முட்டு;க்கொடுக்கும் உதைகால் மரம் என்று சொல்லக் கூடிய கவட்டை மரங்களும் கருவேலமரத்தால் செய்யப்படுபவையே!
இதுதவிர கால்நடைகளைக் கட்டுவதற்கான பட்டிகள் அமைக்கும்போது அந்தப்பட்டிகளைத் தாங்கிநிற்கும் ஒதுக்குக்கால்களாகவும் கால்நடைகளைக்கட்டும் முளைகளாகவும் கால்நடைத் தீவனம் அவற்றின் கால்களால் மிதிபடாத வகைக்கு கால்நடைகளின் முன்னால் போடப்படும் காடி மரங்களாகவும் கருவேல மரங்கள் பயன்படுகிறது.
வயலில் நெல்நாற்று நடும்போது சேற்றுழவு செய்தபின் மட்டமடிக்கப்பயன்படும் பரம்பு என்கிற சமப்படுத்தும் மரமும் கருவேலமரத்தால் செய்யப்படும்.
சுருக்கமாகச் சொன்னலால் கருவிகள் செய்யும் போது செதுக்கி எறியப்படும் பாகங்களும் மரத்தின் நுனியில் இருக்கும் சிறு சிறு குச்சிகளும் தான் அடுப்பெரிக்கப் பயன்பட்டது. பயனற்றது முட்கள் மட்டும்தான். 
இன்னும் எண்ணற்ற பயன்கள் கருவேல மத்தால் இருந்தன.
இப்போதும் வீடுகட்டும் பணிகளுக்கு கதவு நிலவு போன்றவற்றுக்கு கருவேல மரத்தைப் பயன்படுத்த மாட்டார்கள். கேட்டால் அது ஆகாது என்பார்கள். 
உண்மைக் காரணம் விவசாயப் பயன்பாடு பெரும்பாலும் கருவேல மரத்தினைச் சார்ந்து இருந்ததால் அதை வீட்டுக்கும் பயன்படுத்தினால் கருவேல மரங்கள் அழிந்து தட்டுப்பாடு வந்துவிடும் என்ற எச்சரி;ககை உணர்வுதான் ஆகும்.
இத்தனை சிறப்புடைய கருவேல மரத்தின் பயன்பாடுகள் விவசாயத்தில் பெரும்பாலும் குறைந்து விட்டதால் இப்போதைய தலைமுறையினருக்கு அதன் அருமை தெரியாமல் போய் அதை அநேகமாக ஒழித்துவிட்டார்கள். இப்போது ஒரு பல் குச்சிக்காகக்கூட நெடுந்தூரம் சென்றால்தான் வேலங்குச்சி கிடைக்கும் என்ற நிலை உருவாகிவிட்டது.
வாத்தகமயமான உலகில் தாய்தந்தையர் கூட அந்நியப்பட்டுப்போன நிலையில் இந்தக்கருவேல மரத்தின் பயன்பாடும் விவசாயிக்கு அது செய்த சேவையும் வரலாற்றில் படித்துத்தான் வருங்காலத்தில் தெரிந்து கொள்ளமுடியும்!

இயற்கைத் தாயின் மடியில் நாம் தவழ்ந்து விளையாடிய எதைத்தான் அழித்தொழிக்காமல் விட்டுவைத்தோம்!...

தொலைக்காட்சி உருவான கதை - John Logie Baird

தொலைக்காட்சி உருவான கதை - John Logie Baird

உலகில் எந்த மூலையிலும் ஒரு சம்பவம் நிகழும்போது அதனை அப்படியே நேரடியாக உடனடியாக நம் கண்களுக்கு கொண்டு வரும் சாதனம் தொலைக்காட்சி. தத்ரூபமாகவும் மிகைப்படுத்தாமலும் காட்டக்கூடிய மகிமையும் சிறப்பும் தொலைக்காட்சிக்கு உண்டு. 1922 ஆம் ஆண்டில் வானொலி உலகுக்கு கிடைத்தபோது ஒரு பெட்டியில் குரலைக் கேட்க முடியுமா?! என்று அதிசயித்த உலகம் அடுத்த நான்கே ஆண்டுகளில் ஒரு பெட்டியில் குரலைக் கேட்பதோடு உருவங்களையும் பார்க்க முடியும் என்பதை கற்பனை செய்துகூட பார்த்திருக்காது. ஆனால் கற்பனை செய்பவர்கள்தானே கண்டுபிடிப்புகளையும் செய்கிறார்கள். ஒரு பெட்டிக்குள் ஒலியையும், ஒளியையும் காட்ட வேண்டும் என்று கற்பனை செய்து கனவு கண்டு தொலைக்காட்சி என்ற உன்னத சாதனத்தை உலகுக்குத் தந்த ஒருவரைத்தான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். அவர் பெயர் John Logie Baird. வானொலியின் தந்தை Marconi என்றால் தொலைக்காட்சியின் தந்தை Baird.

1888 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் 13ந்தேதி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகருக்கு அருகில் ஹெலன்ஸ்பர்க் என்ற இடத்தில் பிறந்தார் ஜான் லோகி பேர்ட். நான்கு பிள்ளைகளில் அவர்தான் கடைக்குட்டி. அவரது தந்தை ஒரு பாதிரியார் குறைந்த வருமானத்தில் பெரிய குடும்பத்தை நிர்வகித்து வந்தார். பேர்ட் சிறுவயது முதலே ஆரோக்கியம் குன்றியிருந்தார். அதனாலோ என்னவோ அவருக்கு விளையாட்டு, பொழுதுபோக்கு போன்றவற்றில் அதிக நாட்டம் இல்லை. வீட்டுக்கு அருகில் இருந்த தொடக்கப்பள்ளியில் ஆரம்பக்கல்வியைக் கற்றார் பேர்ட். பேர்ட்க்கு சிறுவயதிலிருந்தே புகைப்படங்களின் மீது அதிக ஆர்வம் இருந்தது. அந்தக்காலக் கட்டத்தில் இங்கிலாந்து பள்ளிகளில் பல இணைப்பாடங்கள் கற்பிக்கப்பட்டன. அவற்றுள் ஒன்று புகைப்படக்கலை பேர்ட் அதில் அதிக ஆர்வம் காட்டி புகைப்படக்கலை சங்கத்தின் மாணவர் தலைவராகவும் செயல்பட்டார். அறிவுக்கூர்மையும் கைகொடுக்க பேர்ட் தனது பணிரெண்டாவது வயதிலேயே சில நண்பர்களுடன் சேர்ந்து படங்கள் காட்சிகள் பற்றியும், நகரும் காட்சிகள் பற்றியும் சோதனைகளை செய்தார்.

17 ஆம் வயதில் லண்டன் ராயல் தொழில்நுட்பக் கழகத்தில் மின்பொருளியல் துறையில் சேர்ந்து முதல் நிலையில் தேறினார். பின்னர் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோதே செலினியம் செல்களைக் கொண்டு ஒளியை மின் சமிக்ஞைகளாக மாற்ற முடியும் என்று நம்பிய பேர்ட் பல்கலைக் கழகத்தில் அதற்கான ஆய்வுகள் செய்ய முடியாததால் வீட்டிலேயே ஆய்வுகளை மேற்கொண்டார். மின்சாரம் மூலம் ஒளியையும் பேசும் படத்தையும்கூட அனுப்ப முடியும் என்ற நம்பிக்கை அவரிடம் எப்போதுமே இருந்தது. பட்டம் பெற்ற பிறகு ஒரு நிறுவனத்தில் உதவிப் பொறியாளராக வேலைக்குச் சேர்ந்தார். 26 ஆவது வயதில் மின்னணுத்தொழிற்சாலை ஒன்றில் பணி கிடைத்தது. அவற்றிலெல்லாம் மன நிறைவடையாத பேர்ட் முற்றிலும் மாறாக காலுறை உற்பத்தி செய்யும் சொந்தத் தொழில் ஒன்றை தொடங்கினார். ஆனால் அதில் அவ்வளவு இலாபம் கிட்டவில்லை பின்னர் ரொட்டியில் தடவும் ஜாம் மற்றும் ச்சாஸ் தயாரிப்பில் இறங்கினார். உடல் ஆரோக்கியம் குன்றியதால் அந்தத் தொழிலையும் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

அந்தச் சமயத்தில் ட்ரினிடேடில் இருக்கும் தன் நண்பரை பார்க்க கப்பல் பயணம் மேற்கொண்டார் பேர்ட். அப்போது கப்பலில் வானொலி இயக்கும் ஊழியரிடம் அவருக்கு நட்பு ஏற்பட்டது. வானொலி ஒலியை ஒலிபரப்புவதுபோல் படங்களை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எவ்வாறு ஒலிபரப்பலாம் என்பதுபற்றி இருவரும் நிறைய விவாதித்து கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர். 1922 ஆம் ஆண்டில் தனது 34 ஆவது வயதில் லண்டன் திரும்பினார் பேர்ட். வேலையில்லாத காரணத்தால் அவர் வறுமையில் வாடினாலும் தொலைக்காட்சிப் பற்றிய கனவு மட்டும் அவரைவிட்டு நீங்கவில்லை. தொலைக்காட்சிப் பெட்டியின் செயல் முறைக்கான வரைப் படத்தை உருவாக்கி அட்டைப்பெட்டி, மின்மோட்டார், புரொஜ்க்ஸன் விளக்கு, மின் கலங்கள், நியான் விளக்கு, வானொலி வால்வுகள் போன்றவற்றை வைத்து பல வகையான ஆராய்ட்சிகளை செய்து பார்த்தார்.

இரண்டு ஆண்டுகள் அவர் உழைத்த உழைப்புக்கு 1924 ஆண்டு பலன் கிட்டுவதுபோல் தெரிந்தது. ஒரு சிலுவையின் நிழலை பத்து மீட்டர் தூரத்திற்கு அவரால் ஒலிபரப்ப முடிந்தது. மேற்கொண்டு ஆய்வைத் தொடர அவருக்கு பொருளாதார வசதி இல்லை உண்மையில் தனது ஆய்வுக்கருவிகளின் பாகங்களை விற்று சாப்பிடும் நிலைக்குக்கூடத் தள்ளப்பட்டார் அப்படியிருந்தும் மனம் தளரவில்லை பேர்ட். எப்படியாவது மனித முகத்தையும், நகரும் காட்சியையும் ஒரு பெட்டிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று முயன்றுகொண்டே இருந்தார். ஆராய்ட்சிக்கு பணமில்லாததால் உதவிகேட்டு செய்தித்தாள்களில் விளம்பரம் செய்தார். அதில் கிடைத்த உதவியைக் கொண்டு அடுத்த ஆண்டே தொலைக்காட்சியின் ஆரம்ப மாதிரியை இயக்கிப் பார்த்தார். எந்தக் குறையுமின்றி முழுப்படமும் திரையில் துல்லியமாகத் தெரிந்தது பேர்ட் மலைத்துப்போனார்.

அந்த நாள்தான் அதாவது 1925 ஆம் ஆண்டு அக்டோபர் 2ந்தேதிதான் உலகுக்கு தொலைக்காட்சி கிடைத்த நாள். அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் வண்ணத் தொலைக்காட்சிப் பற்றியும் ஆய்வு செய்து அதனையும் வெற்றிகரமாக உருவாக்கினார். 1929ல் பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கழகத்திற்காக கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சி சேவையைத் தொடங்கினார். இன்று தொலைக்காட்சி இல்லாத ஒரு உலகை நினைத்துப் பார்ப்பது சற்று சிரமம்தான். ஆனால் 85 ஆண்டுகளுக்கு முன்புவரை அது ஒரு கற்பனையாகவே இருந்தது. ஜான் லோகி பேர்ட் முயன்றதால் அந்தக் கற்பனை நிஜமானது. நமது வரவேற்பறைக்குள் உலகத்தைக் கொண்டு வர உதவிய அந்த முன்னோடி 1946 ஆம் ஆண்டு ஜூன் 14ந்தேதி தமது 58 ஆவது வயதில் காலமானார். ஜான் லோகி பேர்ட் 12 ஆவது வயதிலேயே தொலைக்காட்சிப் பற்றிய பல்வேறு சோதனைகளை செய்து பார்த்தார் என்று கட்டுரையின் தொடக்கத்தில் பார்த்தோம்.

இதே வயதில் உங்கள் பிள்ளைகளும் சிறுவயதிலேயே எதாவது சோதனைகளை செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்களா!! அவர்களைத் தட்டிகொடுத்து ஊக்கப்படுத்துங்கள். அவர்களைப் போன்றொர்களுக்குதான் வரலாறும் இடம்தர காத்திருக்கிறது

Monday, May 21, 2012

Today's Mandi Prices

For more queries on Prices and Arrivals
  All India Level Price
  Range (Rs./Quintal) on
       
21/5/2012
Markets Reported :  392
(till 4:06 PM)
NR:அறிக்கை சமர்ப்பிக்கப்படாதது     *-MSP
பொருட்கள் அதிகபட்ச குறைந்தபட்ச
இதர பயிர்வகைகள்
குருணை அரிசி
கைக்குத்தல் அரிசி 700 700
தேங்காய்
தேங்காய் 4500 2400
ரப்பர்
RSS-4 19300 19100
வெல்லம்
Nizamabad 2840 2610
Pathari 2700 2600
Unde 2600 2200
Yellow 2850 2600
Achhu 3000 1800
கருப்பு 2591 1400
நெ.3 1600 1400
உலர்கனிகள்
முந்திரி கொட்டை
நாட்டு ரகம் 8200 5000
எண்ணெய் வித்துப்பயிர்கள்
ஆமணக்கு வித்து
ஆமணக்கு விதை 2935 2755
எள் 3400*
கருப்பு 4200 3400
வெள்ளை 6980 6405
கடுகு 2500*
Yellow (Black) 3600 3580
Lohi Black 3600 3050
கடுகு 3800 3350
சூரியகாந்தி
Sunflower 3000 2600
கலப்பினம் 3100 2700
நாட்டு ரகம் 3500 2700
சூரியகாந்தி விதை 2800*
Sunflower Seed 3750 2900
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் 6900 6000
தேங்காய் கொப்பரை Milling:4525 Ball:4775
கொப்பரை 5100 3900
நடுத்தரம் 3800 3700
நிலக்கடலை 2700*
Gejje 4721 2910
ஜி-20 5475 5425
ஜே.எல்-24 4750 3000
டீ.எம்.வி-2 3400 3200
நாட்டு ரகம் 4685 3000
விதை 5300 4400
நிலக்கடலை விதை
நிலக்கடலை விதை 6600 4600
நிலக்கடலை(உடைத்தது)
நிலக்கடலை(உடைந்தது) 5416 5300
காய்கறிகள்
Amphophalus 1700 1500
Jyoti 1100 950
உருளைக்கிழங்கு 2500 700
உள்நாட்டு ரகம் 1500 500
எப்.எ.க்யூ 1100 950
சந்தர் முகி 1000 800
சிகப்பு 1100 1050
சி்ப்ஸ் 2800 2000
டெசி 1200 800
கத்தரி
உருண்டை 1900 600
உருண்டை / நீளம் 2300 700
கத்தரி 3000 200
காராமணி / தட்டைப்பயிறு(பச்சை)
தட்டைப்பயிறு 4000 1200
காலி பிளவர் / பூங்கோசு
காலிபிளவர்/ பூக்கோசு 3500 700
நாட்டு ரகம் 2000 1000
குடை மிளகாய்
Chilly Capsicum 2500 1000
கேரட்
கேரட் 4600 1000
கொத்தமல்லி
கொத்தமல்லி 3000 1400
நாட்டுரகம் 6000 5000
கொத்தவரை
கொத்தவரை 4200 1400
சாம்பல் பூசணி
சாம்பல்பூசணி 2000 800
சுரைக்காய்
சுரைக்காய் 1500 200
தக்காளி
Tomato 2600 116
கலப்பினம் 2500 500
டெசி 900 400
நாட்டு ரகம் 2800 300
தண்டு கீரை
தண்டுக்கீரை 2300 1000
பச்சை அவரை
பச்சை அவரை 3500 3000
பச்சை இஞ்சி
பச்சை இஞ்சி 4000 800
பச்சை மிளகாய்
பச்சை மிளகாய் 5000 700
பட்டாணி
பட்டாணி 5500 1600
பட்டாணி (பச்சை)
Peas Wet 3000 2000
பீட்ரூட் கிழங்கு
பீட்ரூட் 2600 1300
பீர்க்கங்காய்
Ridgeguard 3000 900
பரங்கிக்காய்
Pumpkin 2000 200
பாகற்காய் / பாகல்
பாகற்காய் 4000 700
புடலங்காய்
Snakeguard 2000 800
மரவள்ளிக்கிழங்கு
Tapioca 1500 1000
மாங்காய்
Mango - Raw-Ripe 1800 1000
மிளகாய்
மிளகாய் 5000 800
முட்டை கோசு / இலை கோசு
முட்டைகோஸ் 4000 400
முருங்கைக்காய்
முருங்கைக்காய் 3000 400
முள்ளங்கி
Raddish 1200 300
வாழைக்காய்
பச்சை வாழை 4000 400
வெங்காயம்
Medium 900 550
Nasik 700 425
உள்நாட்டு ரகம் 1200 140
சிகப்பு 700 200
சிறியது 2600 1500
பெரியது 1600 900
பெல்லாரி-சிகப்பு 1000 700
வெங்காயம் 2500 300
வெண்டைக்காய்
வெண்டை 3000 800
வெந்தயம்
Methi 2505 2380
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய் 2200 200
தானியங்கள்
அரிசி
Coarse 1700 1245
Super Fine 4985 2660
Sona Coarse 1700 1625
Coarse 1525 1400
Super Fine 3300 3200
Mataa Parboiled 2600 1850
Coarse 1800 1700
1009 கார் 2000 1500
III 1900 1540
எச்.ஒய்.வி 1700 1600
ஏ.பி பச்சரிசி 5293 2000 1900
ஐ.ஆர் 8 2200 1850
குருணை அரிசி 1300 1100
சிறந்தது 3200 1660
சிறந்தது (பாசுமதி) 2900 2800
சோனா 2500 2300
சோனா 2100 1800
சோனா புதிது 2200 2000
சோனா மன்சூரி பாசுமதி அல்லாதது 2700 1900
ஜெயா 2750 2225
பாசுமதி 8000 5400
பி.பி.டீ 3000 1800
புழுங்கலரிசி 2600 2400
பொன்னி 2100 1950
மசூரி 2450 2150
வெள்ளை புழுங்கலரிசி 2500 2350
ஹன்ஸா 2100 1800
கம்பு 980*
கலப்பின கம்பு 1350 950
பெரியது 990 960
கேழ்வரகு 1050*
உள்நாட்டுத்தரம் 833 800
கோதுமை 1285*
Lok-1 1285 1285
Milbar 1285 1285
Rajasthan Tukdi 1285 1285
Lokwan 1285 1070
Lok-1 2050 1850
சோனா 1070 1050
தாரா 1285 1050
சோளம் Hybrid:980 Maldandi:1000
Jowar ( White) 1350 950
கலப்பின சோளம் 1400 1300
வெள்ளை 1600 1250
நெல் Common:1080 Grade-A:1110
Paddy Medium 1385 1080
Paddy Coarse 1465 1080
Paddy fine 1575 1120
Paddy Medium 1310 1120
Paddy Dappa 1100 1100
Paddy Coarse 1050 950
Paddy Dappa 1000 1000
Paddy Medium 1260 1260
Paddy fine 1250 1150
Paddy Coarse 1082 1082
Paddy fine 1060 1040
Paddy Medium 1110 1050
Paddy Coarse 1100 1000
Molagolukulu (New) 1150 1100
1001 1110 1050
எ.டீ.டி 37 986 880
எ.டீ.டி 39 1109 631
எம்.டீ.யு-1001 1110 1050
எம்.டீ.யு-1010 1200 1000
ஐ.ஆர்.36 1040 850
ஐ.ஆர்.64 1000 1000
சம்பா மசூரி 1300 1000
சின்ன பொன்னி 1057 919
சுவர்ணா மசூரி(பழையது) 945 935
சுவர்ணா மசூரி(புதியது) 1100 900
சோனா 1350 1050
சோனா மக்சூரி 1200 1000
நெ.2716 1150 1100
நெல் 1300 870
பி.ஒய்.01 1110 1080
பி.பி.டீ 2600 1000
மசூரி 1275 1100
ரத்னா 1108 1092
ஹன்சா 1125 1007
மக்காச்சோளம் 980*
Yellow 1086 950
Fine 980 980
கலப்பினம் 1100 1000
கலப்பினம்/நாட்டு ரகம் 1160 940
சிகப்பு 1000 940
தேசி வெள்ளை 1150 1000
நாட்டு ரகம் 1215 980
பிரகாஷ் 1050 900
நறுமணப்பயிர்கள்
கொத்தமல்லி விதை
முழு பச்சை 3430 2505
தேங்காய்
தேங்காய் 6000 2400
நடுத்தரம் 2500 1500
பூண்டு
பூண்டு 4500 1950
மஞ்சள்
கிழங்கு மஞ்சள் 4000 2000
நாட்டு ரகம் 6500 3700
மஞ்சள் உருண்டை 6000 5000
விரலி மஞ்சள் 4000 2000
மிளகு / குரு மிளகு
தெக்கான் 38000 38000
மலபார் 35500 35500
நார்பயிர்கள்
சணல் 1675*
சணல் 2350 2250
டிடி-5 2350 1975
பருத்தி Medium staple:2800 Long staple:3300
அமெரிக்கன் 4167 2600
என்-44 3350 3250
எம்சியு 5 4040 2800
சங்கர் 6 (பி) 30மிமீ சிறந்தது 3600 3400
பருத்தி 3750 3100
பயறு வகைப்பயிர்கள்
உளுந்து 3300*
உளுந்து (முழுமையானது) 3400 3100
தேசி 3900 2800
நாட்டு ரகம் 3500 3400
உளுந்து பருப்பு
உளுத்தம் பருப்பு 5500 5000
கொண்டைக் கடலை 2800*
குலாபி 4000 3400
கொண்டைக்கடலை ( உடைந்தது) 5400 5300
சராசரி ( முழுமையானது) 4000 3500
தேசி ( எஃப். ஏ. கியூ. உடைந்தது) 4300 3560
தேசி ( முழுமையானது) 4600 3650
கொண்டைக் கடலைப்பருப்பு
கொண்டைக்கடலை பருப்பு 4800 4650
துவரை
உள்நாட்டுத்தரம் 3700 3238
டேசி(முழுமையானது) 3700 3500
முழுத்துவரை 4000 2605
முழுமையானது 3300 3100
துவரைப்பருப்பு
Tur Dal 5500 5450
பச்சைப்பயிறுகள் 3500*
Medium 3500 3400
நாட்டு ரகம் 4330 3200
பச்சை(முழுமையானது) 2900 2700
பீன்ஸ்
அவரை (முழுமையானது) 3500 2500
மசூர் பருப்பு
Masuri Dal 6450 6200
பழங்கள்
Karbhuja 1200 600
Pine Apple 2200 1500
ஆப்பிள்
ஆப்பிள் 14000 4000
ஆரஞ்சுப் பழம்
Medium 7075 7000
ஆரஞ்சு 3000 2500
நாக்பூரி 5300 3400
இளநீர்
Tender Coconut 4000 4000
சப்போட்டா பழம்
Sapota 1500 1100
சாத்துக்குடி
Mousambi 2750 2000
தர்பூசணி
Water Melon 2200 200
திராட்சை
கருப்பு 4200 3200
பச்சை 7050 2500
பப்பாளிப்பழம்
Papaya 1600 1400
பலாப்பழம்
பலாப்பழம் 1000 800
மாதுளை
Pomogranate 12000 5500
மாம்பழம்
Hapus(Alphaso) 6000 3000
Safeda 3500 2500
Totapuri 2000 1600
Safeda 3200 2700
Totapuri 3000 2000
Safeda 3800 3000
Totapuri 3000 2500
Safeda 3000 2500
நீலம் 4200 4000
வாழைப்பழம்
Palayamthodan 2000 950
ஏலக்கிப்பழம் 2000 2000
செவ்வாழை 4000 2500
நடுத்தரம் 3600 NR
பூவன் 3800 1600
பெரியது 3000 3000
ரசக்கதளி 2700 2500
ரொபஸ்டா 1700 900
வாழைப்பழம் 4800 1800
மருந்து மற்றும் மத்துப்பயிர்கள்
பாக்கு / கமுகு
சிப்பிகொடு 13559 12700
சுபாரி 12000 12000
பச்சைக்காய் 1500 1300
மலபார் 13000 12500
வனப்பொருட்கள்
புளிய விதை
Tamarind Seed 1600 1200
புளியம்பழம்
Non A/c Flower 5000 3500
Tamarind Fruit 3000 2200
சப்பாத்தி 6000 5000